Wednesday, May 7, 2008

தயங்காம பயப்படாம பண உதவி செய்ய ஒரு வழி...

ஓரளவுக்கு பணம் இருக்குற எல்லோருக்குமே சிறு அளவிலாவது மத்தவங்களுக்கு உதவ மனசில ஆசை இருக்கும். ஆனா அதுக்கு பல விஷயங்கள் இடைஞ்சலா இருக்கும்.


உதவனும்னு நினைக்கும் போதோ அல்லது உதவிக்கு யாரவது வந்து நிற்கும் போதோ, நம்மிடம் பணம் இல்லாமல் இருக்கலாம். பணம் இருக்கும் போது யாருக்கு உதவுவது என்று தெரியாமல் இருக்கும். கஷ்ட படுபவர்களுக்கு தானம் செய்யலாம்ன்னு நினைக்கும் போதே, நாம் அவர்களை அந்நிலையில் இருப்பதற்கே உக்குவிக்குறோமோ என்றோ, அவர்கள் உண்மையிலேயே கஷ்டபடுகிறார்களோ என்றோ, நாம் ஏமாற்றபடுகிறோமோ என்றோ பலவித எண்ணங்கள் வரும்.

தைரியமாக இணையம் மூலமாக, உண்மையிலேயே கஷ்டப்படும் முதியோர்களுக்கு, பெண்களுக்கு, குழந்தைகளுக்கு உதவ ஒரு வழி உள்ளது. அது தான் www.giveindia.org.

இவர்கள் இந்தியாவில் உள்ள பலவிதமான சேவை மையங்களை கண்டறிந்து, அவர்களின் சேவை வழிமுறைகளையும் நிர்வாகங்களையும் ஆராய்ந்து, அவர்களுக்கு இணையம் மூலமாக உதவ வழி செய்துள்ளார்கள். முக்கியமாக நாம் உதவியாக கொடுக்கும் பணம் எவ்வாறு செலவிட பட்டுள்ளது, அதனால் யார் பயனடைந்து உள்ளார்கள் என்பதை சில நாட்கள் கழித்து நமக்கு புகைப்படத்துடன் கூடிய ஒரு PDF பைலை மின்னஞ்சல் மூலமாக அனுப்பி தெரியப்படுத்துகிறார்கள்.

இது பற்றிய மேலும் பல தகவல்களை அந்த தளத்தில் காணலாம்.

வருடத்தில் சில நாட்கள் நாமே நேரடியாக இவ்வாறு உதவும் மையங்களுக்கு சென்று அங்கு உள்ளவர்களுடன் பேசி, உதவிகளை செய்யலாம். அவ்வாறு செய்ய இயலாதவர்களுக்கு இந்த தளம் உண்மையிலேயே உபயோகமாக இருக்கும். நேரில் சென்று ஆறுதல் கூறுகிறேன் என்று, அவர்களை மேலும் பரிதாபத்திற்க்கு உள்ளாக்குவது வேண்டாம் என்று நினைப்பவர்களும் இந்த தளம் மூலம் உதவிகளை செய்யலாம்.

No comments: