Friday, April 13, 2012

என்ன செய்ய போகிறார் கலாநிதி மாறன்?

சுபாஷ் சந்திராவின் ஜீ டிவி தான், இந்தியாவின் முதல் சாட்டிலைட் சானல். ஆரம்பத்தில் அவருடைய சானல் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது, ஸ்டாரின் சாட்டிலைட்டில். ஸ்டார், அப்பொழுது ’மீடியா சாம்ராட்’ முர்டாக் வசம் இல்லை. முர்டாக் வசம் வந்த பின்பும், ஜீயும் ஸ்டாரும் ஒன்றாகவே சில காலம் இருந்தது.



ஹிந்திக்கு ஜீ, ஆங்கிலத்திற்கு ஸ்டார் என்ற ஒப்பந்தத்தை ஸ்டார் மீறிய காரணத்தால், இரு நிறுவனமும் பிரிந்தது. முட்டல் ஆரம்பித்தது, அதன் பின்பு தான்.

ஸ்டார் ஹிந்தி நிகழ்ச்சிகள் ஆரம்பித்து பல காலம் ஆகியும், ஜீ டிவியை விட பின் தங்கியே இருந்தது. ஜீ டிவியின் நிகழ்ச்சிகளே, டாப் டென் வரிசையில் வரிசை கட்டி நின்றது. எல்லா இடங்களிலும் முன்னணியில் இருக்கும் முர்டாக்கிற்கு இந்திய நிலையைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆத்திர ஆத்திரமாக வந்தது.

அச்சமயம் ஒருமுறை அவர் இந்தியா வந்திருந்த போது, இந்திய ஸ்டாரில் பணிபுரிந்துக்கொண்டிருந்த சமீர் நாயரும், பீட்டர் முக்ரஜா தயார் செய்திருந்த ஒரு நிகழ்ச்சிக்கான விளம்பரத்தை முர்டாக்கிடம் போட்டு காட்டினார்கள்.

“Who wants to be a millionaire?" என்ற பெயரில் பிரிட்டன் போன்ற நாடுகளில் பிரபலமான நிகழ்ச்சியின் ஹிந்தி வடிவம் அது. ‘கௌன் பனேகா லக்பதி’ என்று பெயர் வைத்திருந்தார்கள்.

விளம்பரத்தை அமைதியாக பார்த்துவிட்டு, முர்டாக் கேட்டார்.

“ஒரு லட்சம் என்றால் எவ்வளவு?”

டாலரில் சொன்னார்கள்.

“கம்மியா இருக்குதே!”

“இல்லை... இந்தியாவில் ஒரு லட்சம் என்றால் பெருசுதான்” தயங்கிய படி சொன்னார்கள்.

“இருந்துட்டு போகட்டும். இன்னும் பெருசா... கேட்டா வாயை பொளக்குற மாதிரி அமௌண்ட கூட்டுங்க!”

“பத்து லட்சம்’ன்னு மாத்திரலாமா, சார்?” டவுட்டுடன் கேட்டார்கள்.

“பத்தாது. நூறு லட்சம். ஒரு கோடியா ஆக்கிடுங்க”

ஒரு கோடியா?!!!

கேட்டவர்கள் வாயை பிளந்தார்கள்.

“இது தான் வேண்டும். இது பற்றி கேள்விபடுகிறவர்கள், அனைவரும் இப்படிதான் ஆச்சரியத்தில் வாயை பிளக்கவேண்டும்” என்று திருப்தியுடன் சொல்லிவிட்டு கிளம்பினார் முர்டாக்.

ஹிந்தியில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான தினம் முதல், ஸ்டாருக்கு ஏறுமுகம்.ஜீ டிவிக்கு இறங்கு முகம்.  பட படவென்று ஸ்டார் டிவி முன்னணிக்கு சென்றது. ஜீ படு பாதாளத்திற்கு சென்றது. இந்த ஒரு நிகழ்ச்சியை வைத்தே, அதன் இடைவெளியில் விளம்பரப்படுத்தப்பட்டு, பல ஸ்டார் டிவி நிகழ்ச்சிகள் பிரபலமானது.

பிறகு, ரொம்ப காலத்திற்கு பிறகு, பல வகை முயற்சிகளுக்கு பிறகு,பல நிறுவன மாற்றங்களுக்கு பிறகு, ஜீ தலை தூக்க ஆரம்பித்தது. அது என்ன, தற்போதைய நிலை என்ன என்பதையெல்லாம் தெரிந்துக்கொள்ள ஆர்வமிருந்தால் தேடி தெரிந்துக்கொள்ளவும். சுபாஷ் சந்திராவைப் பற்றி தெரிந்துக்கொள்ள, சொக்கன் எழுதிய “சுபாஷ் சந்திரா - ஜீரோவிலிருந்து ஜீ டிவி வரை” வாசித்து தெரிந்துக்கொள்ளவும்.

இதே போன்ற நிலை தான், தற்சமயம் தமிழ் சாட்டிலைட் சேனல் உலகிலும். கலாநிதி என்ன செய்ய போகிறார்?

.

3 comments:

சிரிப்புசிங்காரம் said...

அட போப்பா...அவரு தம்பியோட சேர்ந்து உள்ளாற போவாம இருக்கிறதுக்கு என்ன வழின்னு யோசனை பண்ணிகிட்டு இருக்காரு....இந்த நேரத்துல நீவந்து......

சரவணகுமரன் said...

அதுவும் சரி தான், சிரிப்பு சிங்காரம்

Anonymous said...

IPADI NEEKA THAN KARPANAN PANEDU IRUKANUN.....