Monday, November 5, 2012

சான்டா மோனிகா பீச்

இந்த பதிவின் தொடர்ச்சி.
 
பெவர்லி ஹில்ஸ் சென்ற பேருந்து, நாங்கள் ஏறிய சான்டா மோனிகா பீச்சிலேயே வந்து இறக்கிவிட்டது.
 
காரை கொஞ்சம் தள்ளி வேறு ஒரு இடத்தில் பார்க்கிங் செய்துவிட்டு வந்திருந்தோம். இந்த பீச்சிற்கு உள்ளே சென்று விட்டு, பிறகு வெளியே வந்து, அங்கு சென்று காரை எடுக்க, எப்படியும் கொஞ்சம் அதிகமாக நேரமாகும் என்று தோன்றியது. ஏனெனில், அடுத்து நாங்கள் செல்ல வேண்டியது, லாஸ் ஏஞ்சல்ஸ் ஏர்போர்ட் தான். எங்காவது கொஞ்சம் நேரமாகிவிட்டால், சிரமமாகிவிடும் என்பதால், முதலில் காரை எடுத்துக்கொண்டு பக்கத்திலேயே வைத்துக்கொள்வோம் என்று நினைத்து காரை எடுத்து வந்தோம்.
 
பீச்சை கடந்து செல்லும்போது, பார்க்கிங் ஃபுல் என்று முன்னால் ஒரு போர்டு இருந்தது. உள்ளே பார்த்தால், நிறைய பார்க்கிங் இடங்கள் இருப்பது போல் தெரிந்தது. அங்கு இருந்த செக்யூரிட்டியிடம் கேட்டேன். அவர் அது வேறு பார்க்கிங் என்று சொன்னார். வழியை கேட்டதற்கு, வேறு ஒரு பக்கம் கையை காட்டினார்.
 
அந்த பார்க்கிங் செல்லும் வழியை, ஜிபிஎஸ்ஸில் பார்த்தால், அது இந்த மெயின் வழியை காட்டியது. இந்த மெயின் வழியில், பார்க்கிங் இல்லை என்று ஒரு போர்டு. என்னடா இது சிக்கல் என்று மொபைலை உதவிக்கு எடுத்தேன். மொபைல் சரியான வழியைக் காட்டியது. 
 

இங்கு உள்ள பார்க்கிங்கில் காரை போட்டு உள்ளே சென்றோம். இந்த பீச்சில் உள்ள சிறப்பம்சம், Pier என்றழைக்கப்படும் கடல் தண்ணீருக்கு மேல் மரத்தினால் அமைக்கப்பட்டிருக்கும் தளம் தான். ரொம்ப பழமையான மரத்தளம். நூறு ஆண்டுகளுக்கு மேலான கட்டுமானம் இது.



கடைகள், உணவகங்கள், ஒரு கேளிக்கை பூங்கா அனைத்தும் இதன் மேல் இருக்கிறது.


அப்படியே ஒரு வாக் சென்றோம். கடல் மணலில் கொஞ்ச தூரம் வரை, பலகை போட்டிருந்தால், பாப்பாவை ஸ்ட்ராலரிலேயே கூட்டி சென்றோம். அதன் பிறகு, பாப்பாவை கையில் எடுத்துக்கொண்டு, ஸ்ட்ராலரை மணலில் இழுத்துக்கொண்டு சென்றோம். பாப்பாவுக்கு முதல் கடல் அனுபவம். இதற்கு முன்பு திருச்செந்தூர் சென்றிருந்தாலும், கடல் பக்கம் சென்றதில்லை. கரையில் கால் நனைய நிற்க வைத்தோம். வித்தியாசமா இருக்கிறதே என்பது போல் பார்த்துக்கொண்டு இருந்தாள்.



இங்குள்ள மக்கள் சூரிய குளியல் எடுத்துக்கொண்டும், கடல் குளியல் எடுத்துக்கொண்டும் இருந்தார்கள்.



குழந்தைகள், மணலில் குழி தோண்டி, தங்களை தாங்களே புதைத்துக்கொண்டு இருந்தார்கள். சில பெற்றோர்கள், உதவி செய்துக்கொண்டு இருந்தார்கள். குழந்தைகளுக்கான மணல் அள்ளும் உபகரணங்கள் ப்ளாஸ்டிக்கில் கிடைப்பதால், அதனுடன் ரெடியாக வந்திருந்தார்கள்.



ஒரு ஹெலிகாப்டர் அந்த பக்கம் வட்டமிட்டுக்கொண்டிருந்தது. ஒரு பறவை அதற்கு பின்னணியில் தெரிய, இரண்டும் கிட்டத்தட்ட ஒரு அளவில் இருக்க, ஒரு க்ளிக்.


இந்த மரக்கட்டுமானத்திற்கு கீழும் சிலர் சுற்றிக்கொண்டு, விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அலைகள், தூண்களை நனைத்துக்கொண்டு இருந்தது.


 

இது நன்றாக பலமாக இருக்க வேண்டும். பின்ன, மேலே ஒரு விளையாட்டுத்தளமே இருக்கிறதல்லவா?


ஒவ்வொன்றிலும் ஏறி இறங்கவில்லை. நேரமில்லா காரணத்தால், அப்படியே சுற்றி பார்த்துவிட்டு, பக்கத்தில் இருந்த பப்பா கம்ப் என்னும் ரெஸ்டாரெண்டில் சாப்பாடு வாங்கிவிட்டு கிளம்பினோம். கடை முழுக்க ஏதாவது வாசகங்கள் எழுதிய பலகைகள். எங்கு விட்டு வைக்கவில்லை. இங்கு இறால் உணவு வகைகள் பிரபலம். இருப்பதிலேயே காரமாக இருப்பது எது என்பதை கேட்டு தெரிந்துக்கொண்டு, அதை பார்சல் கட்டிக்கொண்டோம். அப்பத்தான் இனிப்பாக இல்லாமல், நமக்கேற்ற மாதிரி மொஞ்சமாவது உப்பு காரத்துடன் இருக்கும்.


அங்கிருந்து ஏர்போர்ட் பக்கம்தான். நார்மலாக 15 ஆகலாம் என்று கூகிள் மேப்ஸ் சொல்லியது. இருந்தாலும், ஒரு மணி நேரம் என்று ஓவராக கணக்கு வைத்துக்கொண்டு கிளம்பினோம். எங்கள் ஓவர் கணக்கு, சரியாகவே ஆனது.

போன பாதை, நகரின் நடுவே இருந்ததால், ஏகப்பட்ட சிக்னல்கள். பெரிதாக ட்ராபிக் இல்லையென்றாலும், நிறைய சிக்னல்கள் இருந்ததால், நேரம் பிடித்தது. இந்த சிக்னல் கேப்பிலேயே உணவை முடித்துவிட்டோம். முதலில் காரை வாடகை எடுத்த இடத்தில் விட்டுவிட்டு, பிறகு அங்கிருந்து அவர்களுடைய பேருந்தில் ஏர்போர்ட் செல்ல வேண்டும்.

காரை விடும் இடத்திற்கு செல்லவே, ஒரு மணி நேரம் ஆனது. அங்கே கணக்கை செட்டில் செய்துவிட்டு, லைட்டாக ரெப்ஃரெஷ் செய்துவிட்டு, ஏர்போர்ட் சென்றோம். காரை வாடகை எடுக்கும் போது, எவ்வளவு ஆகும் என்று ஒரு எஸ்டிமேட் கொடுத்தார்கள். திரும்ப விடும்போது, அதை விட அதிகமாக சொன்னார்கள். அந்த எஸ்டிமேட்டை எடுத்துக்காட்டி விளக்கம் கேட்க, எஸ்டிமேட்டை விட குறைவாக பிறகு சொன்னார்கள். எப்பவும் எஸ்டிமேட் வாங்குவது முக்கியம் என்று புரிந்தது.

ஏர்போர்ட் சென்று, செக்யூரிட்டி முடித்து, ப்ளைட் டைமை பார்த்தால், ப்ளைட் திரும்பவும் லேட். இந்த Frontier எப்பவும் இப்படிதான் போலும்!!! கிளம்பும் போதும், இதே பிரச்சினைதான். டென்வரில் இருக்கும் நண்பர் போன் செய்து, ப்ளைட் டைமை கேட்டார். வந்து பிக்-அப் செய்வதாக சொன்னார். இரவு 11 மணி ஆகும் என்பதால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ப்ளைட் இன்னும் லேட்டாகியது. இரவு உணவாக ஒரு சாலடை வாங்கி, ஏர்போர்ட்டிலேயே உண்டோம்.

ப்ளைட்டில் ஏறி உட்கார்ந்தது தான் தெரியும். நல்ல தூக்கம். அவ்வளவு அலைச்சல். அவ்வளவு களைப்பு.

டென்வரில் இறங்கியபோது இரவு ஒரு மணி இருக்கும். ஒரு டாக்ஸி கிடைக்க, வீடு வந்து சேர்ந்த போது, மணி இரண்ரை- மூன்று இருக்கும். அப்படியே பெட்டில் படுத்து சுருள, லாஸ் ஏஞ்சல்ஸ் பயணம் முற்றுப்பெற்றது.

.

3 comments:

மாதேவி said...

"சான்டா மோனிகா பீச்' கண்டுகொண்டோம்.

பயணம் நன்றாக இருக்கின்றது.

Sakthipriya said...

very nice
super places

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்