நான் பதிவு எழுதுவதற்கு முன்பு என்னை கவர்ந்த பதிவுகளை என் நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியதுண்டு.
அதேப்போல், லக்கிலுக், வெட்டிப்பயல், வினவு போன்றவர்கள் எழுதிய பதிவுகளை மின்னஞ்சலில் நான் பெற்றதுண்டு.
இன்று, நான் எழுதிய ஒரு பதிவை நண்பர் மூலம் மின்னஞ்சலில் நானே பெற்றது, மகிழ்ச்சியான தருணம் தான் எனக்கு.
இதை ஒரு அங்கீகாரமாகவும், ஊக்கமாகவும் கருதுகிறேன்.
பதிவை மின்னஞ்சல் தொடர் ஓட்டம் ஓட தொடங்கி வைத்த நண்பருக்கும், மின்னஞ்சலில் எனக்கு அனுப்பி வைத்த நண்பர் கோவிந்துக்கும் நன்றி.