Thursday, January 10, 2008

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி சம்பள உயர்வு - 100% hike

நம்ம நாட்டு ஜனாதிபதிக்கும் துணை ஜனாதிபதிக்கு சம்பள உயர்வு கொடுத்துருக்காங்க. ஜனாதிபதி மாத சம்பளம் ரூபாய் 50,000 த்திலிருந்து 1 லட்சம் ஆக்கப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி மாத சம்பளம் ரூபாய் 40,000 த்திலிருந்து ரூபாய் 85,000 ஆக்கப்பட்டுள்ளது.


அதே போல் கவர்னர்கள் மாத சம்பளம் ரூபாய் 36,000 த்திலிருந்து ரூபாய் 75,000 மாக உயர்த்தப்பட்டுள்ளது.


இத எதுக்கு கொடுத்து இருக்காங்கன்ன, எம்.பி.களே சம்பளமா ரூபாய் 68,000 வாங்குறாங்க. ஆனா ஜனாதிபதி, நாட்டின் முதல் குடிமகன்(ள்), அத விட கம்மியா வாங்கிட்டு இருந்துருங்காங்க. பொதுவா, ஜனாதிபதிய ரப்பர் ஸ்டாம்புன்னு சொல்லுவாங்க. அதுக்காக சம்பளம் கூட உயர்த்தி கேட்க முடியாத அளவுக்கு அதிகாரம் இல்லாமையா இருக்காங்க? :-)


இதை அறிவித்த செய்தித்துறை அமைச்சர் திரு. தாஸ்முன்ஷி, இது சம்பந்தமான முடிவு சென்ற வருடமே எடுக்கப்பட்டதாகவும் அப்போதைய ஜனாதிபதியும் துணை-ஜனாதிபதியும் ஓய்வடைய இருந்ததால் அப்போது தள்ளிபோட்டதாக கூறிவுள்ளார்.

ஏன்? மிச்சம் பிடிக்கலாம்'னா?

No comments: