Monday, November 17, 2008

அப்பா-பையன் கதை : இவர்கள் இயக்கினால்...

யாரும் இதுவரை அப்பா கதை சொன்னதில்லை என்று சேரன் 'தவமாய் தவமிருந்து' எடுத்தது போல், இப்ப கௌதம் மேனன் அவர் பாணியில் 'வாரணம் ஆயிரம்' எடுத்து தள்ளியிருக்கிறார்.

இதைப்போல் இன்னும் சில தமிழ் இயக்குனர்களுக்கு அப்பா பாசக்கதை எடுக்க ஆசை வந்தால்,

மணிரத்னம்

இவருகிட்ட பல ஐடியாக்கள் இருக்கும். வாசுதேவர்-கிருஷ்ணா, தசரதன்-ராமன் இப்படி ஏதாச்சும் புராணம் கதைய உல்டா பண்ணி எடுக்கலாம். இல்லாட்டி, ராஜிவ் காந்தி-ராகுல் காந்தி, ஷேக் - பருக் அப்துல்லா கதைகள இது அவுங்க கதை இல்லன்னு சொல்லி எடுக்கலாம். அப்படியும் இல்லாட்டி, நாசாவுல வேல பாக்குற ஒரு பையன், அவுங்க அப்பாவை அமெரிக்காவுக்கு கூட்டிட்டு போறச்சே ஏற்படுற பிரச்சனைகளை பாலஸ்தின பிரச்சனையின் பின்னணியிலோ, ஈராக்-ஆப்கான் பிரச்சனையின் பின்னணியிலோ, காட்டிடலாம். இந்திய அளவுல ஒரு பரபரப்ப உண்டு பண்ணி, டமால் பண்ற மாதிரி போக்கு காட்டி, கடைசில புஸ் ஆக்கிடலாம்.

ஷங்கர்

ஊர்ல உள்ள சில பணக்காரர்கள், நடுத்தர வர்க்க குடும்ப தலைவர்கள் திடீரென கொலை செய்யப்படுகிறார்கள். அரசாங்கமும் குழம்பி, நாமும் குழம்பி, சி.பி.ஐ. எல்லாம் விசாரிச்சிட்டு இருக்கப்ப, பேங்குல அக்கௌன்டன்ட்'ஆ வேலை பார்த்திட்டு பாசுரம் சொல்லிட்டு இருக்குற மாதவ சேஷாத்திரி என்கிற ஹீரோ தான் இதற்கெல்லாம் காரணம்'ன்னு தெரியுது. ஏன் இதெல்லாம் பண்றாருன்னு பிளாஸ்பேக் வச்சி சொல்லுறாங்க. பிளாஸ்பேக்குல அவுங்க அப்பாவோட வயதான நண்பரை அவன் பையன் முதியோர் இல்லத்துல சேர்க்க முயற்சி பண்றதையும், அதை ஹீரோ அப்பா தடுக்க முயலுவதையும், அதனால் அடிப்பட்டு சாகுறதையும் உருக்கமா காட்டுறாங்க. அதனால் வெகுண்டு எழுந்த ஹீரோ, ஊர்ல யாருலாம் தங்களோட அப்பாவை முதியோர் இல்லத்தில சேர்க்குறாங்களோ, அவுங்களையெல்லாம் கம்ப்யூட்டர்'ல லிஸ்ட் போட்டு தூக்குறாரு. இந்த கதையை இருநூறு கோடில பாரின் டூயட், கிராபிக்ஸ் எல்லாம் வச்சி அமர்க்களமா எடுத்திடுவாரு நம்மாளு. படத்தோட பேரு "அப்பன்" அல்லது "தகப்பன்". ஏன்னா, "ன்"ங்கற எழுத்துல படப் பேரு முடிஞ்சாதான் அவருக்கு லக்கு.

விக்ரமன்

ஒரு அப்பாவுக்கு மூணு பசங்க. அந்த மூணு பசங்களும் பெரிய நிலைக்கு போக அப்பா ரொம்ப கஷ்டப்படுறாரு. தன் சொத்தெல்லாம் இழந்து ஆளாக்குற அப்பாவை, மூத்த ரெண்டு பசங்களும் கண்டுக்கல. தறுதலையா இருக்குற மூணாவது பையன் மட்டும் அப்பா மேல பாசத்த கொட்டுறாரு. "நிலத்த வாழ வைக்குறது, வானத்தில இருந்து பெய்யுற மழை தண்ணீர். எங்கள வாழ வைக்குறது, உங்க கண்ணுல இருந்து வழியிற ரத்த கண்ணீரு"ன்னு லா லா முசிக்கோட வசனம் வுட்டு, அப்பாவோட சேர்ந்து ஊறுக்காய் கம்பெனி வச்சி, பெரிய தொழிலதிபர்கள் ஆகிறதுதான் கதை. தொழிலதிபர்கள் ஆனவுடன் மொத்த குடும்பமும் ஒண்ணா சேர்ந்து லா லா பாடுறாங்க.

செல்வராகவன்

இந்த கதை கொஞ்சம் வித்தியாசமா அதே சமயம் வில்லங்கமாவும், விவகாரமாகவும் இருக்கும். படத்தோட ஹீரோ ரோட்டுல போஸ்டர் ஒட்டுறவரு. எல்லா மனுஷனுக்கும் ஒரு அப்பாதான் இருப்பாங்க. ஆனா, இவருக்கு மட்டும் ரெண்டு அப்பாக்கள். எப்படிங்கறத, பிளாஸ்பேக்'ல அடி வயிறு கலங்குற மாதிரி சொல்லுறாரு. இந்த ரெண்டு அப்பாக்களுக்கும் ஹீரோ'வுக்கும் நடக்குற உணர்வுபூர்வமான பாச போராட்டம் தான் இந்த கதை. நடுவே, ரெண்டு அப்பாக்களும் ஹீரோவும் சேர்ந்து ஆட, பின்னணியில் டாக்டர், போலிஸ், பால்காரன், பேப்பர்காரன் எல்லாரும் ஆடுற குத்து பாட்டும் கண்டிப்பா இருக்கும்.

பேரரசு

ஹீரோவோட அப்பா பெரிய அரசியல்வாதி. ஊருக்கு நல்லது பண்ணுறவரு. அவரு தன்னோட பொண்ண, அதாவது ஹீரோ'வோட அக்காவ இன்னொரு அரசியல்வாதிக்கு கல்யாணம் பண்ணி வைக்குறாரு. அக்காவோட புருஷன், மாமனாரோட சொத்தையும் புகழையும் ஒரே கல்லுல ஆட்டைய போடுறதுக்காக, அவர கடத்தி ரகசிய அறையில் சிறை வைக்குறாரு. நக்சலைட் கடத்திட்டு போனதா சொல்லி, அனுதாப அலையில ஜெயிச்சி எம்.எல்.ஏ. ஆகிடுராரு. இடைவேளை வரை ஜாலியா சுத்திட்டு இருக்குற ஹீரோ, அவரு ஊரு போஸ்ட்மேன் கிட்ட விவரம் கேள்விப்பட்டு, வில்லன ரவுண்டு கட்டி அடிக்குறாரு. "ஏஞ்சலா ஏஞ்சலா, என்னை வெள்ளையாக்குன உஜாலா! ஊஞ்சலா ஊஞ்சலா, நமக்கு இடையில் யாரும் கிடையாது இடைஞ்சலா!" அப்படின்னு மட்டும் பாட்டு பாடமா, "அன்ப கொடுக்குறது அம்மா, பாசத்த கொடுக்குறது அக்கா, நட்ப கொடுக்குறது நண்பன். ஆனா, இதுக்கெல்லாம் தேவையான உயிரை கொடுக்குறது அப்பா"ன்னு டயலாக் வேற பேசுறாரு.

யப்பா... யப்பப்பா... :-)

31 பேரு கருத்து சொல்லியிருக்காங்க...:

said...

super super super

said...

நன்றி முரளிகண்ணன்

said...

மாதவ சேஷாத்திரி என்கிற ஹீரோ ////

ஐயா, தாங்கல சாமி,

said...

இவருக்கு மட்டும் ரெண்டு அப்பாக்கள்.////////////////



என்ன இது விளையாட்டு

said...

மாதவ சேஷாத்திரி என்கிற ஹீரோ //



அது சரி........

said...

இடைவேளை வரை ஜாலியா சுத்திட்டு இருக்குற ஹீரோ, ////


நீங்க பேரரசுவோட பினாமியா

said...

:))

said...

super super super

said...

சூப்பரப்பு.,நல்லருக்கு:-))

said...

வாங்க SUREஷ், வருகைக்கு நன்றி...

said...

நன்றி கப்பி

said...

நன்றி ச்சின்னப்பையன்

said...

நன்றி விலெகா

Anonymous said...

Nalla Karpanai Saravana


-arthi

said...

Thanks Arthi...

said...

கைவசம் நிறைய இருக்கும் போல இருக்கே?

said...

எல்லாம் அப்பப்ப தோன்றதுதான்...

said...

ஜூப்பரு.. ஜூப்பரு.. ஜூப்பரு..
:)))))))))))

மணி மற்றும் செல்வா கதைகள் கலக்கல்..

said...

நன்றி Saravana kumar MSK

said...

:))

said...

நன்றி surveysan

said...

சூப்பர்

said...

நன்றி உருப்புடாதது_அணிமா

Anonymous said...

Good, i appreciate ur comedy based creative knowledge. Keep it up.

said...

நன்றி

Mathi said...

Very good writting. I love to read your writtings. thanks

said...

All are மொக்க காமெடி...

ரசிக்கும்படி இல்லை... :(

said...

நன்றி mathi

said...

நேர்மையான விமர்சனத்திற்கு நன்றி, பழையபேட்டை சிவா

said...

Its very nice. especially Manirathnam, Shankar and Vikraman's direction.

said...

வித்தியாசமாக உள்ளது..

சூப்பருங்கோ..