Tuesday, March 3, 2009

கு.பூவும் கொ.புவும்

ஹிந்தி படங்களில் பெரிய படப்பெயரை சுருக்கி சொல்லுவாங்க. தமிழ்லயும் சில படங்கள் அப்படி சொன்னாங்க. ஏ.டி.எம்., எஸ்.எம்.எஸ். அப்படின்னு. நான் குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும், அப்படிங்கற படப்பேர சுருக்கி தலைப்பு வச்சா, அது கெட்ட வார்த்தை போலுள்ளது.

சென்னை 28 யை தொடர்ந்து எஸ்.பி.பி. சரண் தயாரிக்கும் படம். யுவன், தனது வழக்கமான இசையமைப்பில் இருந்து சற்றே விலகி இதில் இசையமைத்துள்ளார். இது போன்ற வாய்ப்புகள் தான், ஒரு இசையமைப்பாளரின் பன்முக இசை திறமையை காட்ட உதவும்.

கேசட் கவரை பார்த்தா, ஏதோ ஃபேமிலி ஆல்பம் போல இருக்கு. எஸ்.பி.பி. சரண் தயாரிப்பில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் வழங்கும் படம். யுவன் இசை. கங்கை அமரன் வாலியுடன் பாடல்கள் எழுதியிருக்கிறார். தவிர, எஸ்.பி.பி., எஸ்.பி.பி.சரண், வெங்கட் பிரபு பாடியிருக்கிறார்கள். இளையராஜாவையும் பாட வைத்திருந்தால் முழுமையடைந்திருக்கும்.

சின்னஞ்சிறுக

யுவன் பாட்டுல, இளையராஜா கொடுக்குற ஃபீலை கொடுத்திருக்காரு. அருமையான மெலடி டூயட். எனக்கென்னமோ இந்த பாட்டு ரொம்ப நாளு நிக்கும்போல தோணுது.

“அரைடிராயர் போட்ட பையன் நீ... பாடாத லாவணி...
விரல் சூப்பி நின்ன புள்ள நீ... போட்டாச்சு தாவணி...”


கடலோரம்

இந்த பாடலை ஒருமுறை யுவனும், ஒருமுறை சரணும் என்று இரு வெர்சன்கள் உள்ளது. சரண் பாடியதுதான் எனக்கு பிடித்திருக்கிறது. யுவனுக்கு மூக்கு அடைத்தது போல் உள்ளது. சரணின் குரலும், பாடலின் வரியும் உருக்குது, போங்க!

“பள்ளிக்கூட சிநேகம் பள்ளியறை பாய் வரை போகும் யோகம் நமக்கிருக்கு
கட்டுக்களை போட்டு நட்டு வைச்ச வேலிகள் தாண்டி காதல் ஜெயிச்சிருக்கு”


நான் தருமன்டா

எஸ்.பி.பி, தனது கம்பீரமான குரலில் ஆக்ரோஷமாக பாடியிருக்கிறார். இசையை மீறின ஆக்ரோஷம். கேட்க கேட்க எனக்கே தொண்டை வலிக்குது. பரத்வாஜ் ஏனோ நினைவுக்கு வருகிறார்.

”இது துள்ளிக்கிட்டு வரும் காளையடா!
என்னை தேடிக்கிட்டு வரும் மாலையடா! இவன் தென்பாண்டி நாட்டு சிங்கமடா!”


ஒரு நிமிஷம்

வேல்முருகன் என்பவர் பாடியிருக்கிறார். கானா உலகநாதன் குரல் போலுள்ளது. இது ஒரு சோகமான புலம்பல் பாடல் போல இருந்தாலும், யுவன் அடி பின்னியிருக்கிறார். தியேட்டர் சாமியாடப்போவது உறுதி. பாட்டு புது மாதிரியாயிருக்கு.

”நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா, உன் கழுத்தில் என் தாலி
ஒத்துக்கிட்டு நீ இருந்தா, உடையும்மடி பெரும் வேலி”


முட்டத்து பக்கத்திலே

வெங்கட் பிரபு பாடியிருக்கிறார். பாடினதுல ஏதும் குறை சொல்லமுடியாது. இருந்தாலும், அவருதான் பாடணுமா என்ன? யாராச்சும் வாய்ப்பு கிடைக்காம இருக்குறவுங்களுக்கு கொடுத்திருக்கலாம். சரி, அது எதுக்கு நமக்கு? கரகாட்டக்காரனில், ‘நந்தவனத்தில் ஒரு ராஜகுமாரி’ன்னு ஒரு பாட்டு இருக்குமே? அதை அப்படியே தழுவிட்டாங்க. இடையில் புல்லாங்குழலில் நல்ல மெல்லிசை.

“இது டைம்பாஸு பாட்டு இல்ல... இதுக்கு டிக்கெட்டு தேவையில்ல...
ராத்திரி ஆட்டத்துக்கு நாந்தான் பாட்டாளி... போக்கிரி கூட்டத்துக்கு ஏத்த கூட்டாளி...”


எல்லா பாடல்களையும் இணைக்கும்படி ஒரு குழல் ஓசை (சங்கு?) எல்லா பாடல்களிலும் வருகிறது. கடற்கரையோரம் இருக்கும் உணர்வை கொடுப்பது அதுதானோ?

யுவனுக்கு இசையில் இன்னொரு பருத்தி வீரன்.

4 comments:

கணேஷ் said...

ஏன் இந்த கொலைவெறி.. தலைப்பை பார்த்து பயந்து விட்டேன். சரவணகுமரன், பெயர் தான் என்னை இழுத்து வந்தது.

சரவணகுமரன் said...

ஹா ஹா ஹா...

வர வைக்க என்னலாம் பண்ண வேண்டி இருக்கு? :-)

கார்க்கிபவா said...

நானும் கேட்டேன்.. சூப்பர். உங்ககிட்ட அடி ராசாத்தி என்ற பாட்டு இல்லையா? அத கேளுங்க

சரவணகுமரன் said...

கார்க்கி, அதானே இது...

”நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா, உன் கழுத்தில் என் தாலி
ஒத்துக்கிட்டு நீ இருந்தா, உடையும்மடி பெரும் வேலி”

இல்ல... வேறயா?