Wednesday, November 9, 2011

கிப்ட் கொடுத்த அந்த வள்ளல் யாரு?

போன பதிவில் ஓசி என்பதால் ஆர்ட் மியூசியம் சென்று வந்தேன் என்று கூறியிருந்தேன் அல்லவா? அதை பற்றி சொல்ல ஒரு விஷயம் இருக்கிறது.



போரடிக்கிறது என்பதாலும், அனுமதி இலவசம் என்பதாலும், ஒரு ஆர்வ கோளாறில் சென்று விட்டோம். ஆனால், அங்கு இருக்கும் ஓவியங்களையோ, சிலைகளையோ முழுவதுமாக பொறுமையாக நின்று பார்க்கும் ஆர்வமில்லை. மொத்தம் ஏழு மாடிகள். ஆறாவது மாடியில் இருந்த போது, ‘ஹைய்யா! இன்னும் ஒரு மாடி தான்’ என்று மகிழ்ச்சியில் கூறிகொண்டோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.



ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு ரகம். எங்களை கவர்ந்தது ஆசிய கலை பொருட்கள் இருந்த தளம் தான். ஏனெனில் அங்கு தான் இந்திய கலை சிற்பங்கள், ஓவியங்கள் இருந்தன. இந்த பதிவு அதை பற்றி தான்.

நாங்கள் இங்கு வருவதற்கு முன்பே, மற்ற தளங்களில் இருந்த சில சிலைகளைப் பார்த்து, ‘இதில் என்ன இருக்கிறது? நம்ம ஊரில் இருக்கும் ஒரு சாதாரண கோவிலிலேயே எப்படிப்பட்ட சிலைகள் இருக்கிறது?’ என்று சொல்லிக்கொண்டு வந்தோம்.

நம்மூர் ஐட்டங்கள்(!) இருந்த தளத்தில் எல்லாம் சாமி சிலைகள், ஓவியங்கள், கோவில் கதவுகள். எந்த ஊர் கோவிலில் இருந்தோ பெயர்த்துக்கொண்டு வந்தது போல் இருந்தது.

ஒவ்வொரு சிலைக்கும் கீழே, அந்த சிலையைப் பற்றிய குறிப்புகள் இருந்தது. எந்த சாமி, எந்த ஊர் சிலை, யார் கொடுத்தது என்று. இதோ நீங்களே பாருங்கள்,



























சில வள்ளல்கள் அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார்கள். வள்ளல்கள், நம்மூர் சிற்பிகளிடம் ஆர்டர் கொடுத்து செய்திருப்பார்களோ? பார்த்தால், அப்படி தெரியவில்லையே!!!

அதிலும் சிலவற்றை அனானிகள் கொடுத்திருக்கிறார்கள். எப்படி மியூசியம் வாசலில் வைத்துவிட்டு பெயர் சொல்லாமல் போய்விட்டார்களோ? இல்லை, எதற்கு இந்த பெருமை என்று தன்னடக்கத்துடன் பெயர் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களோ?

எனக்கென்னமோ, எதை பார்த்தாலும், எங்கோ ஆட்டையைப் போட்டு வந்தது போல் தோன்றியது. எப்படி இருந்தாலும், நல்லா இருந்தா சரி. எங்கிருந்தாலும் வாழ்க! (அப்படி நாமே வைத்திருந்தாலும் நல்லா பராமரிச்சு இருப்போம் பாருங்க?!!!)


---

அடுத்த அறையில் சீன சிற்பங்களும், ஓவியங்களும் இருந்தது. ஒன்றைத் தேடி அலைந்தேன். ம்ஹூம்.

அங்கு போதிதர்மர் இல்லவே இல்லை. :-(

பாருங்க, சீனர்கள் போதிதர்மரை எப்படி பாதுகாக்கிறார்கள் என்று?

.

No comments: