Friday, May 8, 2009

பெய்யென பெய்யும் பண மழை

தேர்தல்ன்னா ஆயிரக்கணக்கில் பணம்ங்கற ட்ரெண்ட், ரொம்ப வேகமா பரவிக்கிட்டு இருக்குது. திருமங்கலம் அதுக்கு ட்ரெண்ட் செட்டர்.

முன்ன, அமைச்சர் லெவல்ல கொள்ளை அடிச்சாங்க. பிறகு, அதிகாரிகள், உதவியாளர்கள் என்று விரிவடைந்து மாவட்ட செயலாளர்கள், வட்டம் என்று வந்தது. அடுத்தக்கட்டமாக, ”எனக்கு ஓட்டு போடு, உனக்கு லஞ்சம் கொடுக்குறேன். பிறகு, நான் அத கொள்ளை அடிச்சுக்கிறேன்” என்று இப்ப மக்களுடனேயே டீலிங் வந்தாச்சு. நாடு சீரழிவதின் மற்றொரு அடையாளம்.

இந்த தேர்தல்ல வழக்கத்தை விட அதிகமா பண மழை பெய்யுதுன்னு சொல்றாங்க. மக்கள் கிட்டயும் எதிர்பார்ப்பு அதிகமா இருக்காம்.

பணத்தை தண்ணியா செலவழிக்கறதா சொல்லுவாங்க. பணமும் தண்ணிதான். புரியலைன்னா, கீழே படத்த பாருங்க.



இந்த படத்துல இருக்குற சூரியன்ல எந்த வித அரசியலும் இல்ல. இது இயற்கை. :-)

அசல் படம் எடுக்கப்பட்டது : www.sawater.com.au. நன்றி

14 பேரு கருத்து சொல்லியிருக்காங்க...:

கதிர் said...

சூப்பரப்பு!!! எங்கயோ போய்டிங்க!!! அருமையான படம் வரைந்து பாகம் குறித்தல்

Anonymous said...

wonderful

said...

நன்றி கதிர்

said...

நன்றி அனானி

said...

கலக்கலான டெபனஷன் :))

மக்கள் பணம் மக்களுக்கேன்னு ரொம்ப அற்புதமா திட்டம் தீட்டி செயல்ப்பட்டுக்கிட்டிருக்கும் நம்ம அரசியல்வாதிகளை நினைச்சு நாம பெருமைப்படத்தான் வேணும் :))))

said...

நன்றி ஆயில்யன்...

said...

கலக்கல்...
வாழ்த்துக்கள்.

said...

நன்றி அறிவன்

said...


தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009

said...

சூப்பரு :)

said...

நன்றி பட்டாம்பூச்சி

said...

புகைப்படம் அருமை தமிழ்நெஞ்சம்

said...

அருமை

said...

நன்றி திகழ்மிளிர்