Sunday, June 13, 2010

செம்மொழியான தமிழ் மொழியாம்

ரஹ்மான் இசையமைத்து, கௌதம் மேனன் படமாக்கியிருக்கும் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான பாடல், என்னை பொறுத்தவரை அருமையாக வந்திருக்கிறது. என்ன தான் மாநாட்டு அரசியல் மீது, ரஹ்மானின் மேற்கத்திய இசையமைப்பின் மீது, பாடலை பாடியிருக்கும் வேற்று மொழி பாடகர்கள் மீது, படமாக்கிய கௌதம் மேனன் மீது எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும், இந்த பாடலின் வீடியோ திரும்ப திரும்ப பார்க்க தூண்டும்படி இருப்பது உண்மை.



குழந்தைகளுக்கு பிடித்திருக்கிறது (பள்ளிக்கூடம் மற்றும் சிறு குழந்தைகளை காட்டுவதால் இருக்கலாம்). இளைஞர்களுக்கு பிடிக்கும் (சாப்ட்வேர் பொண்ணா அஞ்சலி வருவதால் சொல்லவில்லை). ரொம்பவும் நவீனமாக இருப்பதால், பெரியவர்களை கவர்வது கஷ்டம் தான்.

கிட்டத்தட்ட 70 பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். டி.எம்.எஸ். இல் இருந்து ஜி.வி. பிரகாஷ் வரை. வழக்கம் போல், ரஹ்மான் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இரவு கூப்பிட்டு பாட வைத்திருப்பார். எல்லாவற்றையும் வெட்டி, ஒட்டி, கிட்டத்தட்ட மூன்று மாத கால உழைப்பில் வெளிவந்திருக்கும் இறுதி வடிவத்தை கேட்கும் போது, அழகாக தொகுக்கப்பட்டிருப்பதற்கு பின்னால் இருக்கும் உழைப்பு தெரிகிறது.

---

கலைஞர் எழுதிய பாடல் வரிகள். யார் யார் எந்தெந்த வரிகள் பாடினார்கள் என்பது அடைப்புக்குறிக்குள். பாடல் எம்பி3 வடிவில்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னர், (டி.எம்.சவுந்தரராஜன்)
யாதும் ஊரே, யாவரும் கேளிர் (ஏ.ஆர்.ரஹ்மான்)
உண்பது நாழி உடுப்பது இரண்டே (ஹரிணி)
உறைவிடம் என்பது ஒன்றேயென (சின்மயி)
உரைத்து வாழ்ந்தோம்... உழைத்து வாழ்வோம்.... (கார்த்திக்)

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம் (ஹரிஹரன்)

போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே (ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்)

அமைதி வழி காட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம் (பாடகர் குழு)

செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்... (ஏ.ஆர்.ரஹ்மான்)
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்... (பாடகர் குழு)

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்... (விஜய் ஜேசுதாஸ்)

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்... (பி. சுசிலா)

ஓல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு (நரேஷ் ஐயர்)

ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும் (ஜி.வி.பிரகாஷ்குமார்)
சிந்தாமணியுடனே (பாடகர் குழு)

வளையாபதி குண்டலகேசியும் (டி.எல்.மஹாராஜன்)

செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்... (பாடகர் குழு)

கம்ப நாட்டாழ்வாரும்
கவியரசி அவ்வை நல்லாளும்
எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்தாடை அனைத்துக்கும்
வித்தாக விளங்கும் மொழி (ப்ளேஸ் குழு)

செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்... (பாடகர் குழு)

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து (டி.எம். கிருஷ்ணா)
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனியமொழி (நரேஷ் ஐயர்)

ஓதி வளரும் உயிரான உலக மொழி... (ஸ்ரீநிவாஸ்)
ஓதி வளரும் உயிரான உலக மொழி... (டி.எம். கிருஷ்ணா)
நம்மொழி நம் மொழி... அதுவே (பாடகர் குழு)

செம்மொழியான தமிழ் மொழியாம்...
தமிழ் மொழி... தமிழ் மொழி... தமிழ் மொழியாம்... (ஸ்ருதி ஹாசன்)

செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்...
செம்மொழியான தமிழ் மொழியாம்... (பாடகர் குழு)

தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்...
தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்... (சின்ன பொண்ணு)

வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே...
வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே... (ஏ.ஆர்.ரஹ்மான்)


---



எந்த நோக்கத்திற்காக, ரஹ்மானை இசையமைக்க சொன்னார்கள் என்று தெரியவில்லை. உலக அளவில் சாதனை புரிந்த தமிழன், பாடல் உலக அளவிற்கு எடுத்து செல்லபட வேண்டும் என நினைத்திருக்கலாம். ரஹ்மான் அவருக்குரிய பாணியில் இசையமைத்திருக்கிறார். பாடல் கண்டிப்பாக பெரிதாக பிரபலமடையும்.

பாடலின் இசையில், தமிழக இசை கருவிகளை சேர்த்துக்கொள்ளாமல், மேற்கத்திய தாக்கம் அதிகம் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. பாடலில் பிரதானமாக இருப்பது கீ-போர்டும், கிட்டாரும். நம்ம மேளமும், நாதஸ்வரமும் இருக்கத்தான் செய்கிறது. இல்லாமல் இல்லை. எப்போதும் சொல்லப்படும் ’வரிகளை இசை அழுத்துகிறது’ என்னும் குற்றச்சாட்டு வந்துவிடக்கூடாதென்பதில் கவனமாக இருந்திருப்பது தெரிகிறது. ஆனாலும், ஆங்காங்கே அதிரடி அதிர்வை கொடுக்க ரஹ்மான் தவறவில்லை. ப்ளேஸ் & ஸ்ருதியின் ராப் உச்சரிப்பை மட்டும், இந்த செம்மொழி பாடலில் தவிர்த்திருக்கலாம். ஆனால், அதையும் தமிழ் அனுமதிக்கும் எல்லைக்கடந்த உச்சரிப்பு வடிவமாக எடுத்துக்கொள்ளலாம். இதில் இருக்கும் கர்னாடிக், சுஃபி போல.



பாடலை படமாக்கியிருப்பது - ’விண்ணைத்தாண்டி வருவாயா’ தொழில்நுட்பக்குழு. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ததை, எடிட் செய்திருப்பது ஆண்டனி. கலை: ராஜீவன். ’காக்க காக்க’ கேமராமேனாக வந்த கணேஷ், ஸ்கூல் வாத்தியராக வருகிறார். கல்லூரி ஹீரோ அகில், புது மாப்பிள்ளையாக வருகிறார். அங்காடி தெரு அஞ்சலி, மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவராக வந்து, கூகிளில் தமிழில் தேடுகிறார்.

ஹெலிகாப்டரில் படம் பிடித்திருக்கும் தமிழகத்தின் கடலோர பகுதிகள், ஆன்மிகத்தலங்கள் பார்க்க அழகாக இருக்கிறது. மகாபலிபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை காட்டுகிறார்கள். பாடிய பாடகர்கள் அனைவரும் நடித்தும் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த பாடலுக்காக ரஹ்மானும், கௌதம் மேனனும் பணம் ஏதும் பெற்றுக்கொள்ளவில்லை என்று கேள்விப்பட்டேன். மற்றவர்களும் அப்படியாகத்தான் இருக்கும். அவர்களாக ஆர்வத்துடன் நேரத்தை செலவிட்டு பணியாற்றிய பாடலில் குற்றம் சொல்லுவதும், பணியாற்றிய கலைஞர்களின் இனம், மொழியை கொண்டு அவர்களை விமர்சிப்பதும், தமிழராகிய நமக்கு தான் கேவலம்.

பாடலில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். கூடவே நன்றியும்.

.

29 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்ல விஷயம். நிறைய புதிய விசயங்களுக்கு நன்றி

பரிசல்காரன் said...

நல்ல பகிர்வு நண்பா. நானும் இதே தலைப்பில் ஒரு பதிவெழுதி நாளைக்காக வைத்திருக்கிறேன். ஆனால் இதில் பாடகர்கள் விபரம் அற்புதமாக தொகுத்திருக்கிறீர்கள்.

நன்றி!!

அன்புடன் நான் said...

பகிர்வுக்கு நன்றி. பாடல் கேட்கவும் பார்க்கவும் நல்லாயிருக்கு.
மற்று உங்க தகவலுக்கும் நன்றி.

sasibanuu said...

///அவர்களாக ஆர்வத்துடன் நேரத்தை செலவிட்டு பணியாற்றிய பாடலில் குற்றம் சொல்லுவதும், பணியாற்றிய கலைஞர்களின் இனம், மொழியை கொண்டு அவர்களை விமர்சிப்பதும், தமிழராகிய நமக்கு தான் கேவலம்////


இப்படி விமர்சனம் செய்தால்...
முதலில் நாம் தமிழரே இல்லை.. .


அருமை ! அட்டகாசம் !!

sasibanuu said...

//அவர்களாக ஆர்வத்துடன் நேரத்தை செலவிட்டு பணியாற்றிய பாடலில் குற்றம் சொல்லுவதும், பணியாற்றிய கலைஞர்களின் இனம், மொழியை கொண்டு அவர்களை விமர்சிப்பதும், தமிழராகிய நமக்கு தான் கேவலம்../////

இப்படி விமர்சனம் செய்தால்...
முதலில் நாம் தமிழரே இல்லை .

அருமை !! அட்டகாசம் !!!

Anonymous said...

அருமையான ஒரு பதிவு.

ஒரு சின்ன விண்ணப்பம்.

தினமும் தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி

- விமல்

.

காஞ்சி முரளி said...

ரொம்ப அருமை...!

எதேச்சையாக தங்கள் பதிவை கண்டேன்... மிக..மிக... அருமை...

நான் அறிந்துகொள்ள தேடினேன்... கிடைத்தது... பதிவென்றாலே தங்கள் பதிவைப்போல இருத்தல் வேண்டும்... காரணம்... புறங்கூறாமல்... குறைகூறாமல் இருத்தலே மனிதம் என எண்ணுபவன் நான்...

இப்பாடல் குறித்து நன்கு ஆய்ந்து, குறை இருந்தாலும்... அதனை குற்றச்சாட்டாக வைக்காமல்... வருடி.. அதாவது "தவிர்த்து இருக்கலாம்" என்ற வார்த்தைகளை இட்டு.. நல்ல இடுகை... அருமை...

தங்கள் பதிவுடன்... இப்பதிவு கருத்தைக் கொண்ட மற்றோர் பதிவையும் பார்த்தேன்...

அன்னம் போல.... நான் "பாலை" மட்டுமே குடித்து... (தங்கள் பதிவு).... தண்ணீரை தவிர்த்து (மற்றோர் பதிவை) விட்டேன்...

தவறு செய்பவன்தான் மனிதன்... ஆனால்... அதனை புறந்தள்ளி... அவன் நல் இயல்புகளை போற்றுபவன்தான்.. மனிதருள் புனிதன்... மற்றோரெல்லாம் மாக்களுக்கு சமம்....!

இறுதியாய்... தங்கள்...
///அவர்களாக ஆர்வத்துடன் நேரத்தை செலவிட்டு பணியாற்றிய பாடலில் குற்றம் சொல்லுவதும், பணியாற்றிய கலைஞர்களின் இனம், மொழியை கொண்டு அவர்களை விமர்சிப்பதும், தமிழராகிய நமக்கு தான் கேவலம்////

நல்ல இடுகை...!
இப்படியே தொடருங்கள்... நண்பரே....

வாழ்த்துக்கள்....

நட்புடன்...
காஞ்சி முரளி...

Anonymous said...

எல்லாம் சரி எல்லா பாடகர்களும் பாடி இருக்கும் பொழுது ஏன் SPB மட்டும் இல்லை?

Anonymous said...

எல்லாம் சரி எல்லா பாடகர்களும் பாடி இருக்கும் பொழுது ஏன் SPB மட்டும் இல்லை?

- Subbu

பருப்பு (a) Phantom Mohan said...

இது செம்மொழி தேசிய கீதமாம்!

இதை ஒரு வெளி மாநிலத்தாருக்கோ, வெளி நாட்டவர்க்கோ காட்டினால் செம்மொழி பெருமை தெரியுமா? தமிழர் பாரம்பரியம் புரியுமா? தமிழர் கலாச்சாரம் தெரியுமா? அட இவ்ளோ ஏங்க தமிழன் எப்டி இருப்பான்னவது தெரியுமா?

உங்களுக்கு நேர் மாறா நான் ஒரு பதிவு நாலு நாளைக்கு முன்னாடி போட்டுருக்கேன், அதப் படிச்சிட்டு அதுக்கப்புறம் உங்க கருத்த சொல்லுங்க.

சரவணகுமரன் said...

நன்றி ரமேஷ்

சரவணகுமரன் said...

நன்றி பரிசல். உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன்.

சரவணகுமரன் said...

நன்றி சசி

சரவணகுமரன் said...

நன்றி விமல்... கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.

சரவணகுமரன் said...

நன்றி காஞ்சி முரளி...

சரவணகுமரன் said...

சுப்பு,

எஸ்பிபி மட்டுமல்ல, இன்னும் நிறைய பாடகர்கள் இல்லைதான். காரணம், ரஹ்மானுக்கே வெளிச்சம்.

சரவணகுமரன் said...

மோகன்,

உங்க பதிவு படிச்சேன். நல்லா ஜாலியா இருந்தது. :-)

//இதை ஒரு வெளி மாநிலத்தாருக்கோ, வெளி நாட்டவர்க்கோ காட்டினால் செம்மொழி பெருமை தெரியுமா? //

தெரியாது தான். ஏன்னா, அவுங்களுக்கு தமிழே தெரியாதே! :-)

//தமிழர் பாரம்பரியம் புரியுமா? தமிழர் கலாச்சாரம் தெரியுமா? அட இவ்ளோ ஏங்க தமிழன் எப்டி இருப்பான்னவது தெரியுமா?//

அஞ்சு நிமிசத்துல எவ்ளோ காட்டமுடியுமோ, அவ்ளோ காட்டியிருக்காங்க’ன்னு நினைக்கிறேன். ஒருவேளை, உங்கள மாதிரி ஒருத்தர் பக்கத்தில் இருந்தால், இன்னும் சிறப்பாக உங்களுக்கு பிடித்தாற்போல் வந்திருக்கலாம். ஆனால், அப்பவும் இன்னும் சில பேருக்கு பிடிக்காமல் போயிருக்கும்.

பழ. கார்த்தீஸ்வரன் said...

அருமையான பதிவு... உங்களின் எழுத்து நடை ஒவ்வொரு முறையும் என்னைக்கவர்வதில் (எல்லோரையும் தான்) ஆச்சர்யம் ஒன்றும் இல்லை... மேலும் பாடகர்களை பற்றிய தகவல்கள் அருமை...
வாழ்க தமிழ்!!!

virutcham said...

இந்தப் பாட்டில் இருக்கும் தமிழை கண்டுபிடித்து எழுதிய உங்களுக்கு மாநாட்டில் சிறப்பு பரிசே தரலாம்.
தமிழின் தேசிய கீதம் என்று சொல்லப் படும் பாடல் படமாகும் போது
தமிழர் உடை, இசை, வாத்தியங்கள், நடனங்கள், விழாக்கள், இலக்கியங்கள், தமிழ் அறிஞர்கள்
போன்ற விஷயங்களையும் வெளிபடுத்த வேண்டாமா?
பாடியவர்களை காட்ட வேண்டியதன் அவசியத்தை விட இதுவல்லவோ அவசியம். இது பாட்டை விளம்பரப்படுத்தும் சினிமா உத்தி. தமிழை அல்ல.
சிவாஜி படத்தில் தமிழ் பெண்ணை தமிழனை தமிழ் கிராமத்தை அடையாளம் கட்டும் பாட்டின் ஒளிப்பதிவில் இருந்த அபத்தம் இங்கும் எதிர் ஒலிக்கிறது

பருப்பு (a) Phantom Mohan said...

நீங்க எனக்கு எழுதி இருக்கின்ற பதிலில் நக்கல் தூக்கலாக உள்ளத்துக்கு காரணம் என்னவோ?

சரவணகுமரன் said...

நன்றி பழ. கார்த்தீஸ்வரன்

அன்பேசிவம் said...

சரியா 4.55 ல ஒருத்தர் பாடுராரே அவரு யாரு தல? அவரை பத்தி ஒண்ணுமே சொல்லலையே.... எனக்கு அவரை பார்த்தமாதிரியாக இருக்கிறது சட்டெனெ நியாபகம் வரவில்லை. அந்த ஒரு மனுஷன் போதுமே... என்ன ரியாகஷன்?

தமிழனை பாத்த மாதிரிர்யே இருந்துச்சே?

Unknown said...

ஒன்று இந்த பாடலுக்கு தமிழ் பாடகர்களை மட்டும் உபயோகித்திருக்கலாம். முக்கியமாக நமது மண்ணின் மணத்தை இசையில் வடித்த தமிழன் இசைஞானியை ஏன் மறந்தார்கள் என்று தெரியவில்லை.

இல்லை யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றால் வேற்று மொழியை தாய் மொழியாய் கொண்டிருந்தாலும் தமிழ் மொழியின் தெளிவான உச்சரிப்புக்கு தனது பாடல்களிள் பெரும் பங்களித்த பாலுவை (ஜேசுதாஸை இதில் சேர்க்கமாட்டேன்) காணோம் என்பது வருத்திற்குரியதே.

Mahi_Granny said...

இன்னொரு தளத்தின் தகவலில் வந்து தெரிந்து கொண்டேன் . அருமையான விளக்கங்களுடன் . நன்றி தம்பி

Rajalakshmi Pakkirisamy said...

Good One

Unknown said...

பகிர்வுக்கு மிக்க நன்றி ... நண்பரே ..!

மகேஷ் : ரசிகன் said...

அருமையான பாடல்!
அருமையான அலசல்.

பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ மகாதேவன், அருணா சாய்ராம், ஸ்வேதா மோகன். இவங்க பேரையெல்லாம் விட்டுட்டீங்களே! :)))))

Unknown said...

Vetrilvel

Anonymous said...

vanakam
ungal eluthil ulla manitham pidithirunthathu nanbarae