புத்தாண்டுக்கு ஒன்றும் ஸ்பெஷலாக செய்யவில்லை (அட, கேசரிக்கூட செய்யவில்லையா? என்று கேட்காதீர்கள்). இங்கு புத்தாண்டுக்கு ஊருக்குள் விசேஷமாக வாண வேடிக்கை காட்டுவார்கள் என்று சொன்னார்கள். ஆனால், ரொம்ப எதிர்பார்த்து செல்லாதே என்றும் சொன்னார்கள். அங்கு சென்று, அந்த சமயத்தில் ஷூ லேஸ் அவிழ்ந்து அதை மாட்ட குனிந்தால், அந்த சமயத்திற்குள் வாண வேடிக்கை முடிந்து விடும் அளவிற்கு சுருக்கமானது அது என்று காமெடியாக சொல்லியிருந்தார்கள். அதனால், அங்கு செல்லும் ஆர்வமும் இல்லை.
ஒரு மாலுக்கு இரவு ஏழு மணிவாக்கில் சென்றோம். கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன. எங்களைப்போல் வெகு சிலரே வந்திருந்தார்கள். சாலைகளிலும் அதிக போக்குவரத்து இல்லை. நம்மை போல் இல்லாமல், இங்கு ரொம்ப அமைதியாக யாருக்கும் தெரியாமல், புது வருஷத்தை கொண்டாடுகிறார்கள்.
---
அடுத்த நாள், இரண்டாம் தேதி எனக்கு விடுமுறை. மெதுவாக எழுந்து, வீட்டிற்கு போன் செய்து, தோசை சுட்டு சாப்பிட்டு கொண்டிருந்தேன். அலுவலகம் சென்ற நண்பர் போன் செய்தார். “ரொம்ப கடமையுணர்ச்சியோடு ஆபிஸ் வந்து பார்த்தா, யாரும் இல்லை. விசாரிச்சா, எங்களுக்கும் இன்னைக்கு லீவாம். முத நாளே, இப்படி பல்ப். வாங்க, எங்காச்சும் வெளியே போகலாம்” என்றார்.
---
எங்கு செல்லலாம் என்று தெரியாமலே, வெளியே கிளம்பினோம். பனி சறுக்கு செல்ல (அதாவது வேடிக்கை பார்க்க!!!) ஆர்வம் மற்றும் திட்டம் இருந்தாலும், பாதி நாள் ஆகிவிட்டதால், இம்முறை வேறு எங்காவது செல்லலாம் என்று கிளம்பினோம்.
ஊரை கடந்து வெளியே வந்தவுடன், சுற்றி தெரியும் மலைத்தொடர்களைப் பார்க்க அழகாக இருக்கும். இந்த வீடியோவைப் பாருங்கள். புரியும்.
’இதாஹோ ஸ்பிரிங்க்ஸ்’ என்ற இடத்திற்கு எதற்கு சென்றோம் என்றே தெரியவில்லை. இது மலையின் இடையில் இருக்கும் ஒரு பழைய ஊர்.
சின்ன ஊர்தான். ஒரு கடை தெரு இருந்தது. கார் நிறுத்த இடம் கிடைக்காமல், சுற்றி சுற்றி வந்து, ஒரு வழியாக எங்கோ நிறுத்தி, அங்கு இருந்த ஒரே ஒரு தெருவான கடைத்தெருவில் இங்கிட்டும் அங்கிட்டும் ஒரு நடை நடந்தோம்.
இங்கிருந்த ஒரு ஓடையில் நீர் ஐஸ்கட்டியாகி, நடுவில் மட்டும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.
ஒரு சிறு நீர்வீழ்ச்சி, உறைந்துப்போய் நின்றிருந்தது.
அதற்கு மேல் அங்கு பார்க்க ஒன்றும் இல்லாததால், அங்கிருந்து அரை மணி தூரத்தில் இருக்கும் ஒரு ஏரி பூங்காவிற்கு சென்றோம்.
ஏரியும், ஏரிக்கு செல்லும் வழியும் பனியாக இருந்தது. கடைசியாக பனி பெய்து, இரு வாரங்கள் ஆனாலும், தினம் சூரியன் வந்து சென்றாலும், பனி அப்படியே தான் இருக்கிறது.
ஏரி முழுக்க ஐஸ் கட்டியாக இருந்தது பார்க்க அழகாக, ஆச்சரியமாக இருந்தது. அதன் மேல், ஏறி நடக்க பயமாகவும் இருந்தது (எத்தனை இங்கிலிஷ் படம் பார்த்திருக்கோம்?!).
இதிலும் ஒருவர் வந்து மீன் பிடித்துக்கொண்டிருந்தார்.
இங்கு மீன் பிடிப்பது வெறும் பொழுதுபோக்கு. பல உபகரணங்கள் கொண்டு வந்து, ரொம்ப பொறுமையாக பல மணி நேரம் மீன் சிக்கும் வரை இருந்து, பின் மீன் சிக்கிய பிறகு, அதை பார்த்துவிட்டு, மீண்டும் தண்ணீரிலேயே எறிந்துவிட்டு சென்றுவிடுவார்கள்!
சூரியன் இருக்கும் வரை தான் இருக்க முடிந்தது. சூரியன் மறைந்தவுடன் குளிர் ஆட்ட தொடங்கியதால், கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம்.
பின்குறிப்பு - வீடியோக்களின் பின்னணியில் விஜய் பாடல்கள் கேட்பது தற்செயலான நிகழ்வே. அனைத்து வித யூகங்களையும் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
.
Saturday, January 7, 2012
புத்தாண்டின் முதல் பயணம் - ஐஸ் ஏரி
வகை
அனுபவம்,
டென்வர்,
பயணம்,
புகைப்படம்,
வீடியோ
Subscribe to:
Post Comments (Atom)




6 பேரு கருத்து சொல்லியிருக்காங்க...:
//நம்மை போல் இல்லாமல், இங்கு ரொம்ப அமைதியாக யாருக்கும் தெரியாமல், புது வருஷத்தை கொண்டாடுகிறார்கள்//
Hello neenga upstate poi parkanunga... appuram mela sonnatha reconsider pannuveenga?
Tamil nattla erukira ovvoru kramathulayum .. Chennai layum, Bangalore layum kondadara madiri ya komdaduvanga.. US llayum andha madiri thaanga...
நீங்கள் சொல்வது சரிதான். ஊரின் மையப்பகுதியில் கொண்டாடுகிறார்கள். ஆனால், மற்ற இடங்களில் ஆள் நடமாட்டமே இல்லையே? அட்லீஸ்ட் இங்கே அப்படி. பிற ஊர்களில் எப்படியோ?
ஆனால், சென்னை, பெங்களூர் போன்ற இடங்களில் ஊரின் புறநகர் பகுதிகளில் கூட பனிரெண்டு மணிக்கு வெடி சத்தத்தை கேட்கலாம்.
Naan upstate nnu sonnathu.. Chicago, New York, LA, etc...
ஓ! ஓகே... ஓகே...
அருமையான வீடியோ..
நன்றி அமுதா கிருஷ்ணா
Post a Comment