Sunday, January 8, 2012

நாட்டு சரக்கு - உலக சரக்கு

முன்பு ’நாட்டு சரக்கு’ என்றொரு வகையில் பதிவு எழுதிகள் வந்தேன். கிட்டத்தட்ட வாரமலர் ‘பாகேப’ டைப் பதிவுகள். பெரும்பாலும் நான் வாசித்த சுவாரஸ்யமான விஷயங்களாக இருக்கும். பதிவை வாசிக்கும் நண்பர்கள் நன்றாக இருப்பதாக சொன்னாலும், ‘எல்லோரும் பேப்பரில், இணையத்தில் வாசிக்கும் விஷயங்கள் தானே? இதில் என்ன இருக்கிறது’ என தோன்றி அதை எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

இப்போது பழைய பதிவுகளை வாசிக்கும் போது, குறிப்பாக நாட்டு சரக்கு பதிவுகள் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதாக தோன்றுகிறது. அதனால், அவ்வகை பதிவுகளை திரும்பவும் எழுதலாம் என்று இருக்கிறேன். ஒன்றரை வருடங்களுக்கு பிறகு, மீண்டும் நாட்டு சரக்கு.

இப்ப உள்ளூர் சரக்கும், உலக சரக்கும் மிக்சிங்கில். கிக்காக இருக்கும் என்ற நம்பிக்கையில்.

----

எனக்கு சீனர்களையும், ஜப்பானியர்களையும் பார்க்கும் போது, பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியாது. அப்படித்தான் பலருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், சீனர்களிடம் போய் நீங்க ஜப்பானா? என்றோ, நீங்க ஜப்பானியர் மாதிரி இருக்கீங்க! என்றோ சொன்னால், அவர்களுக்கு பிடிக்காதாம்.

இப்படி இருக்கையில், எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர், ஒரு சீனரிடம் கேட்டாராம்.

“உங்களுக்கெல்லாம் கண் சின்னதாக இருக்கிறதே? எங்களைப் போல முழுவதும் தெரியுமா? இல்ல, பாதி தான் தெரியுமா?”

எப்படி இருந்திருக்கும்? டோங்க்லீ மாதிரி முறைத்ததில் ஓடி வந்துவிட்டாராம்.

---

’கொலவெறி’ இளையத்தலைமுறைக்கு பிடித்திருந்தாலும், போன தலைமுறை கலைஞர்களுக்கு பிடிப்பதில்லை என்று தெரிகிறது. இந்தி பாடலாசிரியர் ஜாவத் அக்தர் பாடலை முன்பு விமர்சித்திருந்தார். (அனிருத், அவர் கேட்டதே எங்களுக்கு கௌரவம் என்றார்.) இப்போது, பாடகர் ஜெயசந்திரன் ஒரு பாட்டு போட்டி நிகழ்ச்சியின் போது, போட்டியாளர் ஒருவர் அப்பாடலை பாட, எழுந்து வெளியே சென்று விட்டார்.

ரொம்ப பீல் பண்ணி எழுதுறவுங்களுக்கு, பாடுபவர்களுக்கு, இப்படி ’ஜஸ்ட் லைட் தட்’ எழுதி, பாடி, பிறகு அதற்காக பிரதமர் கூட போய் டின்னர் சாப்பிட்டுட்டு வந்தா, கஷ்டமாக தான் இருக்கும்.

---

ஆனால், அதற்கான பிராயசித்தம், 3 படத்தின் மற்ற பாடல்களில் இருக்கிறது. இந்த படத்தில் இருக்கும் மற்ற பாடல்களின் வரிகளில், இசையில் ஏன் ‘கண்ணழகா’ பாடலில் இருக்கும் தனுஷின் குரலில் கூட எந்த குறையையும் காண முடியாது.

So, they deserve it என்றே எனக்கு தோன்றுகிறது.

---

இதை இங்குள்ள ஒரு காரில் பார்த்தேன். என்ன தான், இது பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், இந்த ஸ்டிக்கரையும், அந்த காரில் இருந்த பெண்ணையும் பார்த்த போது, உணர்வு ரீதியாக புரிந்துக்கொள்ள முடிந்தது.



---

என்ன தான் அமெரிக்கர்கள் ராக்கெட் விட்டாலும், பாதாள சாக்கடை மூடிகளை நம்மூரில் இருந்து தான் வாங்குகிறார்கள். இதை பல இடங்களில் பார்த்தேன்.



நம்ம ஊர் தான் சீப்பாக இருக்கும் போல. இருக்காதா பின்ன? நம் நாட்டு வளங்கள் முறையில்லாத வழிகளில் தானே, வெட்டியெடுக்கப்படுகிறது? சீப்பாக தான் இருக்கும்.

---

இன்னொன்று கேள்விப்பட்டேன். அமெரிக்காவில் வளங்கள் இல்லாமல் இல்லை. ஆனால், காசு கொஞ்சம் அதிகம் செலவானாலும், அவர்கள் இறக்குமதியே செய்வார்களாம்.

இங்கிருக்கும் அனைத்து வீடுகளும் மரத்தினாலேயே கட்டப்பட்டிருக்கும். அந்த மரங்கள், இங்கு நிறைய காடுகள் இருந்தாலும், வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுமாம். உள்ளூர் சுற்றுசூழலை பாதுகாக்க, இந்த ஏற்பாடாம். கேள்விப்பட்ட செய்தி. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.

---

போன பதிவில் இருக்கும் வீடியோவை யூ-ட்யூபில் அப்லோட் செய்த பிறகு, யூ-ட்யூபில் இருந்து ஒரு மெயில் வந்தது. 'உங்கள் வீடியோவில் சோனி நிறுவனத்திற்கு சொந்தமான படைப்பு இருப்பதாக தெரிகிறது’ என்று. என்னங்கடா, நான் ஊரு சுத்துன வீடியோவில் சோனிக்கு என்ன சம்பந்தம்?

அப்புறம் தான் தோன்றியது. அந்த வீடியோ பின்னணியில் காரில் இசைக்கப்படும் ‘வேலாயுதம் - மாயம் செய்தாயோ’ பாடல் இருக்கிறது. வேலாயுதம் பட பாடல்கள், சோனியால் வெளியிடப்பட்டது.

இது யூ-ட்யூபின் மென்பொருளால் கவனிக்கப்பட்டு, எனக்கு மெயில் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதுதான் விஷயம் என்றால், ரொம்ப ஆச்சரியப்படுத்தும் தொழில்நுட்பம் எனலாம்.

.

5 comments:

சேலம் தேவா said...

சுவாரஸ்யமான பதிவு..!!

சரவணகுமரன் said...

நன்றி சேலம் தேவா

Kartheeswaran said...

நல்ல பதிவு... உங்களின் எழுத்துநடை என்னை வசீகரித்தது! வாழ்த்துக்கள் நண்பரே..!

சரவணகுமரன் said...

நன்றி கார்த்தீஸ்வரன்

Muruganantham Durairaj said...

Youtube matter, sema.