’நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றியிருக்கிறதா? ஏறியிருக்கும் என்று தான் நினைக்கிறேன். ஆரம்ப கேள்விகளை சுலபம் என்றில்லை, காமெடி என்று சொல்லலாம். என்னை இந்த நிகழ்ச்சியில் கவரும் விஷயங்கள் என்னவென்றால் கேள்விகளும், நிகழ்ச்சிக்கு வரும் விதவிதமான மனிதர்களும்.
கேள்விகளில் எந்த அளவுக்கு காமெடியாக கேள்வி கேட்கிறார்கள் என்றும், பிறகு வரும் கேள்விகளில், நமக்கு எந்தளவுக்கு தெரிந்திருக்கிறது என்றும் கவனித்து வருகிறேன். எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்? என்று ஒரு படத்தில் விவேக் கேள்விக்கேட்டு காமெடி செய்வார். கிட்டத்தட்ட அதைப்போல் ஒரு கேள்வியை கூட, இந்த நிகழ்ச்சியில் சூர்யா கேட்டார்.
----
படத்தில் நடிப்பது மட்டுமல்ல, இம்மாதிரி நிகழ்ச்சியில் ’நடிப்பதும்’ பெரிய விஷயம் தான். அதற்கும் ஒரு திறமை தேவை தான்!
நடிகர்கள் பொதுவாக படத்தில் பேசும் போது ஒரு மாதிரியும், நிஜத்தில் வேறு மாதிரியும் பேசுவார்கள். எனக்கென்னமோ, சூர்யா எங்கும் ஒரே மாதிரி பேசுவது போல் இருக்கிறது. நடிப்பு, ரத்தத்தில் கலந்த விஷயம் என்பார்களே! இதுதானா அது?
---
விஜய் டிவியில் இருந்து சிலர் ஜெயா டிவிக்கு ஓடி வந்துவிட்டார்கள் போலும்.
புதிதாக ஜெயா டிவியில் ‘ஆட்டோகிராப்’ என்றொரு நிகழ்ச்சி போடுகிறார்கள். ஒரு பிரபலத்தை வரவழைத்து, அவருடைய வாழ்க்கை பயணத்தைப் பற்றி சொல்ல வைத்து, இடை இடையே அவர் குறிப்பிடும் சில மனிதர்களை சர்ப்ரைஸாக வரவழைத்து பிரபலத்துடன் பேசவிடுகிறார்கள்.
இந்த வாரம், கே.எஸ்.ரவிக்குமார் வந்தார். அவருக்கு பழக்கமான நிறைய பேர் வந்தார்கள். ஒன்றிரண்டு நிமிடங்கள் இருந்து பேசிவிட்டு சென்றார்கள். கே.எஸ்.ரவிக்குமாருக்கு ரொம்பவே ஆச்சர்யம். நிறைய சுவையான தகவல்களை பகிர்ந்துக்கொண்டார். கடைசியில் அவருடைய தாயார் வர, இயக்குனர் கண்கலங்கிவிட்டார். விஜய் டிவி டச்!
ஆரம்ப வாரங்கள் ஒகே. அனைவருக்கும் சர்ப்ரைஸ் எலிமெண்ட் இருக்கும். வரும் வாரங்களில், இவ்வாறான சுவாரஸ்யம் இருக்குமா என்பது சந்தேகம் தான்.
முக்கியமான விஷயம், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர், சுஹாசினி. இனி நீங்க பார்ப்பீங்களோ, என்னமோ?
----
விஜய் டிவியில் பாக்யராஜும், ஜெயா டிவியில் மதனும், ராஜ் டிவியில் ரோகிணியும் திரை விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆரம்பத்தில் பாக்யராஜ் நிகழ்ச்சியின் மேல் எதிர்பார்ப்பு இருந்தது. திரைக்கதை மன்னனான அவர், நல்லவிதமாக விமர்சனம் செய்வார் என்று நினைத்திருந்தேன். ஆனால், அவர் எதற்கெடுத்தாலும் படத்தில் காமெடி இல்லை, இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்திருக்கலாம் என்றே சொல்லி வருகிறார். சும்மா டிவியில் பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கே எரிச்சல் வருகிறது என்றால், படத்தை எடுத்த இயக்குனருக்கு எப்படி இருக்கும்? பெரிய மனுசஷனாச்சே! என்று தலையையாட்டி விட்டு வருகிறார்கள். (சமீபகாலமாக நிகழ்ச்சியை பார்க்கவில்லை. வருகிறதா?)
ரோகிணி விமர்சனத்தில் எந்த குறையும் நான் காணவில்லை. படத்தை நுணுக்கமாகத்தான் கவனித்து விமர்சனம் செய்கிறார். சொல்லும் விஷயங்களும், நியாயமாகத்தான் இருக்கிறது என்றாலும், அவர் சொல்லும் தொனி, தொகுத்து வழங்கும் விதம் என்னமோ போல் இருக்கிறது. ஆனால், அது என்னவென்று சொல்ல தெரியவில்லை.
இவ்வகை விமர்சன நிகழ்ச்சிகளிலேயே என்னை கவர்ந்தது, மதனின் நிகழ்ச்சி தான். எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும், பாராட்ட வேண்டிய விஷயங்களை பாராட்டிவிட்டு, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் குறைகளையும் சொல்லிவிடுகிறார். ஒரு நல்ல ரப்போர்ட்டுடன் வருபவர்களிடம் பேசுகிறார்.
இந்த வாரம், ‘உடும்பன்’ பட இயக்குனர் இவரிடம் மாட்டிக்கொண்டு பட்ட பாடு இருக்கிறதே! பாவமாகவும் இருந்தது. சிரிப்பாகவும் இருந்தது.
Showing posts with label நாட்டு சரக்கு. Show all posts
Showing posts with label நாட்டு சரக்கு. Show all posts
Thursday, March 8, 2012
Sunday, January 8, 2012
நாட்டு சரக்கு - உலக சரக்கு
முன்பு ’நாட்டு சரக்கு’ என்றொரு வகையில் பதிவு எழுதிகள் வந்தேன். கிட்டத்தட்ட வாரமலர் ‘பாகேப’ டைப் பதிவுகள். பெரும்பாலும் நான் வாசித்த சுவாரஸ்யமான விஷயங்களாக இருக்கும். பதிவை வாசிக்கும் நண்பர்கள் நன்றாக இருப்பதாக சொன்னாலும், ‘எல்லோரும் பேப்பரில், இணையத்தில் வாசிக்கும் விஷயங்கள் தானே? இதில் என்ன இருக்கிறது’ என தோன்றி அதை எழுதுவதை நிறுத்திவிட்டேன்.
இப்போது பழைய பதிவுகளை வாசிக்கும் போது, குறிப்பாக நாட்டு சரக்கு பதிவுகள் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதாக தோன்றுகிறது. அதனால், அவ்வகை பதிவுகளை திரும்பவும் எழுதலாம் என்று இருக்கிறேன். ஒன்றரை வருடங்களுக்கு பிறகு, மீண்டும் நாட்டு சரக்கு.
இப்ப உள்ளூர் சரக்கும், உலக சரக்கும் மிக்சிங்கில். கிக்காக இருக்கும் என்ற நம்பிக்கையில்.
----
எனக்கு சீனர்களையும், ஜப்பானியர்களையும் பார்க்கும் போது, பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியாது. அப்படித்தான் பலருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், சீனர்களிடம் போய் நீங்க ஜப்பானா? என்றோ, நீங்க ஜப்பானியர் மாதிரி இருக்கீங்க! என்றோ சொன்னால், அவர்களுக்கு பிடிக்காதாம்.
இப்படி இருக்கையில், எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர், ஒரு சீனரிடம் கேட்டாராம்.
“உங்களுக்கெல்லாம் கண் சின்னதாக இருக்கிறதே? எங்களைப் போல முழுவதும் தெரியுமா? இல்ல, பாதி தான் தெரியுமா?”
எப்படி இருந்திருக்கும்? டோங்க்லீ மாதிரி முறைத்ததில் ஓடி வந்துவிட்டாராம்.
---
’கொலவெறி’ இளையத்தலைமுறைக்கு பிடித்திருந்தாலும், போன தலைமுறை கலைஞர்களுக்கு பிடிப்பதில்லை என்று தெரிகிறது. இந்தி பாடலாசிரியர் ஜாவத் அக்தர் பாடலை முன்பு விமர்சித்திருந்தார். (அனிருத், அவர் கேட்டதே எங்களுக்கு கௌரவம் என்றார்.) இப்போது, பாடகர் ஜெயசந்திரன் ஒரு பாட்டு போட்டி நிகழ்ச்சியின் போது, போட்டியாளர் ஒருவர் அப்பாடலை பாட, எழுந்து வெளியே சென்று விட்டார்.
ரொம்ப பீல் பண்ணி எழுதுறவுங்களுக்கு, பாடுபவர்களுக்கு, இப்படி ’ஜஸ்ட் லைட் தட்’ எழுதி, பாடி, பிறகு அதற்காக பிரதமர் கூட போய் டின்னர் சாப்பிட்டுட்டு வந்தா, கஷ்டமாக தான் இருக்கும்.
---
ஆனால், அதற்கான பிராயசித்தம், 3 படத்தின் மற்ற பாடல்களில் இருக்கிறது. இந்த படத்தில் இருக்கும் மற்ற பாடல்களின் வரிகளில், இசையில் ஏன் ‘கண்ணழகா’ பாடலில் இருக்கும் தனுஷின் குரலில் கூட எந்த குறையையும் காண முடியாது.
So, they deserve it என்றே எனக்கு தோன்றுகிறது.
---
இதை இங்குள்ள ஒரு காரில் பார்த்தேன். என்ன தான், இது பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், இந்த ஸ்டிக்கரையும், அந்த காரில் இருந்த பெண்ணையும் பார்த்த போது, உணர்வு ரீதியாக புரிந்துக்கொள்ள முடிந்தது.

---
என்ன தான் அமெரிக்கர்கள் ராக்கெட் விட்டாலும், பாதாள சாக்கடை மூடிகளை நம்மூரில் இருந்து தான் வாங்குகிறார்கள். இதை பல இடங்களில் பார்த்தேன்.

நம்ம ஊர் தான் சீப்பாக இருக்கும் போல. இருக்காதா பின்ன? நம் நாட்டு வளங்கள் முறையில்லாத வழிகளில் தானே, வெட்டியெடுக்கப்படுகிறது? சீப்பாக தான் இருக்கும்.
---
இன்னொன்று கேள்விப்பட்டேன். அமெரிக்காவில் வளங்கள் இல்லாமல் இல்லை. ஆனால், காசு கொஞ்சம் அதிகம் செலவானாலும், அவர்கள் இறக்குமதியே செய்வார்களாம்.
இங்கிருக்கும் அனைத்து வீடுகளும் மரத்தினாலேயே கட்டப்பட்டிருக்கும். அந்த மரங்கள், இங்கு நிறைய காடுகள் இருந்தாலும், வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுமாம். உள்ளூர் சுற்றுசூழலை பாதுகாக்க, இந்த ஏற்பாடாம். கேள்விப்பட்ட செய்தி. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.
---
போன பதிவில் இருக்கும் வீடியோவை யூ-ட்யூபில் அப்லோட் செய்த பிறகு, யூ-ட்யூபில் இருந்து ஒரு மெயில் வந்தது. 'உங்கள் வீடியோவில் சோனி நிறுவனத்திற்கு சொந்தமான படைப்பு இருப்பதாக தெரிகிறது’ என்று. என்னங்கடா, நான் ஊரு சுத்துன வீடியோவில் சோனிக்கு என்ன சம்பந்தம்?
அப்புறம் தான் தோன்றியது. அந்த வீடியோ பின்னணியில் காரில் இசைக்கப்படும் ‘வேலாயுதம் - மாயம் செய்தாயோ’ பாடல் இருக்கிறது. வேலாயுதம் பட பாடல்கள், சோனியால் வெளியிடப்பட்டது.
இது யூ-ட்யூபின் மென்பொருளால் கவனிக்கப்பட்டு, எனக்கு மெயில் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதுதான் விஷயம் என்றால், ரொம்ப ஆச்சரியப்படுத்தும் தொழில்நுட்பம் எனலாம்.
.
இப்போது பழைய பதிவுகளை வாசிக்கும் போது, குறிப்பாக நாட்டு சரக்கு பதிவுகள் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதாக தோன்றுகிறது. அதனால், அவ்வகை பதிவுகளை திரும்பவும் எழுதலாம் என்று இருக்கிறேன். ஒன்றரை வருடங்களுக்கு பிறகு, மீண்டும் நாட்டு சரக்கு.
இப்ப உள்ளூர் சரக்கும், உலக சரக்கும் மிக்சிங்கில். கிக்காக இருக்கும் என்ற நம்பிக்கையில்.
----
எனக்கு சீனர்களையும், ஜப்பானியர்களையும் பார்க்கும் போது, பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியாது. அப்படித்தான் பலருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், சீனர்களிடம் போய் நீங்க ஜப்பானா? என்றோ, நீங்க ஜப்பானியர் மாதிரி இருக்கீங்க! என்றோ சொன்னால், அவர்களுக்கு பிடிக்காதாம்.
இப்படி இருக்கையில், எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர், ஒரு சீனரிடம் கேட்டாராம்.
“உங்களுக்கெல்லாம் கண் சின்னதாக இருக்கிறதே? எங்களைப் போல முழுவதும் தெரியுமா? இல்ல, பாதி தான் தெரியுமா?”
எப்படி இருந்திருக்கும்? டோங்க்லீ மாதிரி முறைத்ததில் ஓடி வந்துவிட்டாராம்.
---
’கொலவெறி’ இளையத்தலைமுறைக்கு பிடித்திருந்தாலும், போன தலைமுறை கலைஞர்களுக்கு பிடிப்பதில்லை என்று தெரிகிறது. இந்தி பாடலாசிரியர் ஜாவத் அக்தர் பாடலை முன்பு விமர்சித்திருந்தார். (அனிருத், அவர் கேட்டதே எங்களுக்கு கௌரவம் என்றார்.) இப்போது, பாடகர் ஜெயசந்திரன் ஒரு பாட்டு போட்டி நிகழ்ச்சியின் போது, போட்டியாளர் ஒருவர் அப்பாடலை பாட, எழுந்து வெளியே சென்று விட்டார்.
ரொம்ப பீல் பண்ணி எழுதுறவுங்களுக்கு, பாடுபவர்களுக்கு, இப்படி ’ஜஸ்ட் லைட் தட்’ எழுதி, பாடி, பிறகு அதற்காக பிரதமர் கூட போய் டின்னர் சாப்பிட்டுட்டு வந்தா, கஷ்டமாக தான் இருக்கும்.
---
ஆனால், அதற்கான பிராயசித்தம், 3 படத்தின் மற்ற பாடல்களில் இருக்கிறது. இந்த படத்தில் இருக்கும் மற்ற பாடல்களின் வரிகளில், இசையில் ஏன் ‘கண்ணழகா’ பாடலில் இருக்கும் தனுஷின் குரலில் கூட எந்த குறையையும் காண முடியாது.
So, they deserve it என்றே எனக்கு தோன்றுகிறது.
---
இதை இங்குள்ள ஒரு காரில் பார்த்தேன். என்ன தான், இது பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், இந்த ஸ்டிக்கரையும், அந்த காரில் இருந்த பெண்ணையும் பார்த்த போது, உணர்வு ரீதியாக புரிந்துக்கொள்ள முடிந்தது.

---
என்ன தான் அமெரிக்கர்கள் ராக்கெட் விட்டாலும், பாதாள சாக்கடை மூடிகளை நம்மூரில் இருந்து தான் வாங்குகிறார்கள். இதை பல இடங்களில் பார்த்தேன்.

நம்ம ஊர் தான் சீப்பாக இருக்கும் போல. இருக்காதா பின்ன? நம் நாட்டு வளங்கள் முறையில்லாத வழிகளில் தானே, வெட்டியெடுக்கப்படுகிறது? சீப்பாக தான் இருக்கும்.
---
இன்னொன்று கேள்விப்பட்டேன். அமெரிக்காவில் வளங்கள் இல்லாமல் இல்லை. ஆனால், காசு கொஞ்சம் அதிகம் செலவானாலும், அவர்கள் இறக்குமதியே செய்வார்களாம்.
இங்கிருக்கும் அனைத்து வீடுகளும் மரத்தினாலேயே கட்டப்பட்டிருக்கும். அந்த மரங்கள், இங்கு நிறைய காடுகள் இருந்தாலும், வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுமாம். உள்ளூர் சுற்றுசூழலை பாதுகாக்க, இந்த ஏற்பாடாம். கேள்விப்பட்ட செய்தி. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.
---
போன பதிவில் இருக்கும் வீடியோவை யூ-ட்யூபில் அப்லோட் செய்த பிறகு, யூ-ட்யூபில் இருந்து ஒரு மெயில் வந்தது. 'உங்கள் வீடியோவில் சோனி நிறுவனத்திற்கு சொந்தமான படைப்பு இருப்பதாக தெரிகிறது’ என்று. என்னங்கடா, நான் ஊரு சுத்துன வீடியோவில் சோனிக்கு என்ன சம்பந்தம்?
அப்புறம் தான் தோன்றியது. அந்த வீடியோ பின்னணியில் காரில் இசைக்கப்படும் ‘வேலாயுதம் - மாயம் செய்தாயோ’ பாடல் இருக்கிறது. வேலாயுதம் பட பாடல்கள், சோனியால் வெளியிடப்பட்டது.
இது யூ-ட்யூபின் மென்பொருளால் கவனிக்கப்பட்டு, எனக்கு மெயில் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதுதான் விஷயம் என்றால், ரொம்ப ஆச்சரியப்படுத்தும் தொழில்நுட்பம் எனலாம்.
.
Wednesday, September 1, 2010
நாட்டு சரக்கு - சேவைகளும் தேவைகளும்
எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடும்போது, ஒரு குற்ற உணர்வுடனேயே சாப்பிட வேண்டி இருக்கும். எந்த டாக்டர் எழுதிய கட்டுரை என்றாலும், எண்ணெய் உடம்புக்கு நல்லதல்ல, கொலஸ்ட்ரால், நெஞ்சு வலி என்று சொல்லிக்கொண்டே போவார்கள். இருந்தாலும், இதற்காக சாப்பிடாமலா இருக்க முடியும்? என்று ஒரு பயத்துடனேயே சாப்பிட்டுக்கொண்டிருப்பேன். அதிலும் தேங்காய் எண்ணெய் கூடவே கூடாது என்பார்கள். எங்கூர் பக்கம் ’மஸ்கோத் அல்வா’ என்றொரு தேங்காய் எண்ணெயில் செய்யப்பட்ட அல்வா பேமஸானது. தேங்காய் எண்ணெய் எச்சரிக்கையால் அதையும் பயத்துடனே சாப்பிடுவேன்.
இப்ப என்ன சொல்கிறார்கள் என்றால், தேங்காய் எண்ணெய் ரொம்ப நல்லதாம். பாக்டிரியா, வைரஸ் ஆகியவற்றை எதிர்க்கும் சக்தியையும், காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களை எதிர்க்கும் சக்தியையும் தேங்காய் எண்ணெய் நம் உடலுக்கு அளிக்குமாம். கொலஸ்ட்ரால், ஹார்ட் அட்டாக் எல்லாம் இதனால் வராதாம். இந்த பயத்தையெல்லாம் கிளப்பிவிட்டது, சோயா எண்ணெய் குரூப் என்கிறார்கள். எதை நம்புவது? இவர்கள் அமெரிக்காவில் 99% சதவித சோயாக்கள், மரபணு மாற்றம் செய்யப்பட்டது என்கிறார்கள். அய்யோடா!!!
எது எப்படியோ, இதையெல்லாம் படிப்பதைவிட்டு விட்டு, இட்லிபொடிக்கு எண்ணெய் ஊற்றி சாப்பிடலாம் என்றிருக்கிறேன்.
---
இந்த போன் செய்யும் அட்டூழியங்கள் தாங்க முடியவில்லை. புதிதாக ஆப்பிள் ஐபோனில், ‘ஐ-ஸ்டதஸ்கோப்’ என்றொரு அப்ளிக்கேஷனை உருவாக்கியிருக்கிறார்கள். இதன் மூலம் ஸ்டதஸ்கோப் இல்லாமலே, வெறும் ஐபோன் வைத்துக்கொண்டு இதயத்துடிப்பை பரிசோதிக்க முடியுமாம்.
விளையாட்டுக்காக லண்டனை சேர்ந்த பீட்டர் என்பவர் செய்த கண்டுபிடிப்பு, மருத்துவ உலகில் இப்ப செம ஹிட். 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இதை டவுன்லோட் செய்திருக்கிறார்கள். நீங்களும் டவுன்லோட் செய்ய, இங்க போங்க.
இன்னும் இதை வச்சு என்னவெல்லாம் கண்டுப்பிடிக்க போறாங்களோ? வருங்காலத்தில் போனை காதில் மட்டும் வைக்காமல், வாயினுள், அக்குளில் எல்லாம் மக்கள் வைத்திருப்பார்கள். எந்த சந்தேகமும் வேண்டாம்! காய்ச்சல் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.
---
மால்களில், ஜவுளிக்கடை வாசலில், கடை தெருவில், உதிர்த்த சோளத்தை மசாலாவுடன், மிளகுடன், எலுமிச்சை சாறுடன் கிண்டி ஒரு கப்பில் வைத்து விற்பார்களே? அது ரொம்பவும் லாபம் தரும் வியாபாரம் என்று நினைக்கிறேன். இது போன்ற ஸ்டாலில் நிற்கும் பையன், அவனுடைய சம்பளம் 5500 என்றான். ஆச்சரியமாக இருந்தது. ரொம்ப வேலை இருக்குமோ? வேறு ஏதும் வேலை உண்டா? என்று கேட்டதற்கு இல்லை என்றான். ஒரு நாளைக்கு 500இல் இருந்து 1000 ரூபாய் வரை விற்பனை ஆகும் என்றான். அது சரி, அப்ப இந்த சம்பளம் சரிதான் என்று நினைத்துக்கொண்டேன்.
பிஸினஸ் மஹாராஜாக்கள் ஆக நினைப்பவர்கள், இது பற்றி விசாரிக்கவும்.
---
சேவை துறையில் வாய்ப்புகள் அதிகமானாலும் ஆனது, புதுசு புதுசா யோசிக்கிறார்கள். எனக்கு சில நாட்கள் முன்பு வந்த ஒரு எஸ்.எம்.எஸ். இப்படி சொன்னது. “நீங்கள் ஊருக்கு செல்லும் போது, உங்கள் நாயை எங்களிடம் விட்டு செல்லுங்கள். நாங்கள் கவனித்துக்கொள்கிறோம். நீங்கள் ஊர் திரும்பும் வரை, நாயின் முழு பராமரிப்பும் எங்களுடையது. எங்களிடம் நாய் பிக்-அப் வசதியும் உண்டு. தொடர்பு கொள்ள-”.
வீட்டுல ஊருக்கு போனா, நாய்க்கு கூட கம்பெனி கொடுக்குறாங்கப்பா!
---
ஒருபக்கம் மூட சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் திறந்துக்காட்ட சொல்கிறார்கள். நமது அரசு துறைகளின் தகவல் பரிமாற்ற பாதுகாப்பு கொள்கைகளை சொல்கிறேன்.
ஆர்பிஐ போன்ற அமைப்புகள் பண பரிமாற்ற தகவல்களை மூடி மூடி அனுப்ப சொல்கிறார்கள். இதர பாதுகாப்பு அமைப்புகளோ, ரொம்பவும் மூடினால் எங்களால் திறந்து பார்க்க முடியவில்லை. திறந்து காட்டு என்று மிரட்டுகிறார்கள். பாவம் ப்ளாக்பெர்ரி. அடுத்து, ஸ்கைப்பும், கூகிளும் இவர்களிடம் சிக்க போகிறார்கள். ரொம்பவும் பாதுகாப்பாக தகவல்களை அனுப்பினால், எங்களால் உளவு பார்க்க முடியவில்லை. தீவிரவாதிகள் இதை பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்கிறார்கள் என்பது அவர்கள் கவலை. திறந்து பார்க்க வசதி செய்து கொடுத்தால், இருக்கிற கஸ்டமர்கள் ஓடிவிடுவார்களே என்பது இவர்கள் கவலை.
தீவிரவாதிகளை விட மோசமான பரிமாற்றங்கள் எல்லாம் இச்சேவைகள் மூலம் நடைபெறுகிறது. உளவு பார்க்கிறேன் என்று அதை பார்க்க போகும் அதிகாரிகளை நினைத்து தான் என் கவலையெல்லாம்.
---
கீழே இருக்கும் படத்தை ஒரு ஹோட்டலில் பார்த்தேன். பக்கத்தில் இருந்த நண்பர், என்ன தெரியுது, என்ன தெரியுது என கேட்க, நானும் தெரிந்ததை எல்லாம் சொன்னேன். அவரும் அப்புறம் அப்புறம் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். நடுவில் யாரோ வந்து காப்பாற்றியதால், தப்பினேன்.

இப்ப, என் முறை... உங்களுக்கு இந்த படத்தில் என்னவெல்லாம் தெரிகிறது? ஆங்... அப்புறம்... அப்புறம்...
.
இப்ப என்ன சொல்கிறார்கள் என்றால், தேங்காய் எண்ணெய் ரொம்ப நல்லதாம். பாக்டிரியா, வைரஸ் ஆகியவற்றை எதிர்க்கும் சக்தியையும், காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களை எதிர்க்கும் சக்தியையும் தேங்காய் எண்ணெய் நம் உடலுக்கு அளிக்குமாம். கொலஸ்ட்ரால், ஹார்ட் அட்டாக் எல்லாம் இதனால் வராதாம். இந்த பயத்தையெல்லாம் கிளப்பிவிட்டது, சோயா எண்ணெய் குரூப் என்கிறார்கள். எதை நம்புவது? இவர்கள் அமெரிக்காவில் 99% சதவித சோயாக்கள், மரபணு மாற்றம் செய்யப்பட்டது என்கிறார்கள். அய்யோடா!!!
எது எப்படியோ, இதையெல்லாம் படிப்பதைவிட்டு விட்டு, இட்லிபொடிக்கு எண்ணெய் ஊற்றி சாப்பிடலாம் என்றிருக்கிறேன்.
---
இந்த போன் செய்யும் அட்டூழியங்கள் தாங்க முடியவில்லை. புதிதாக ஆப்பிள் ஐபோனில், ‘ஐ-ஸ்டதஸ்கோப்’ என்றொரு அப்ளிக்கேஷனை உருவாக்கியிருக்கிறார்கள். இதன் மூலம் ஸ்டதஸ்கோப் இல்லாமலே, வெறும் ஐபோன் வைத்துக்கொண்டு இதயத்துடிப்பை பரிசோதிக்க முடியுமாம்.
விளையாட்டுக்காக லண்டனை சேர்ந்த பீட்டர் என்பவர் செய்த கண்டுபிடிப்பு, மருத்துவ உலகில் இப்ப செம ஹிட். 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இதை டவுன்லோட் செய்திருக்கிறார்கள். நீங்களும் டவுன்லோட் செய்ய, இங்க போங்க.
இன்னும் இதை வச்சு என்னவெல்லாம் கண்டுப்பிடிக்க போறாங்களோ? வருங்காலத்தில் போனை காதில் மட்டும் வைக்காமல், வாயினுள், அக்குளில் எல்லாம் மக்கள் வைத்திருப்பார்கள். எந்த சந்தேகமும் வேண்டாம்! காய்ச்சல் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.
---
மால்களில், ஜவுளிக்கடை வாசலில், கடை தெருவில், உதிர்த்த சோளத்தை மசாலாவுடன், மிளகுடன், எலுமிச்சை சாறுடன் கிண்டி ஒரு கப்பில் வைத்து விற்பார்களே? அது ரொம்பவும் லாபம் தரும் வியாபாரம் என்று நினைக்கிறேன். இது போன்ற ஸ்டாலில் நிற்கும் பையன், அவனுடைய சம்பளம் 5500 என்றான். ஆச்சரியமாக இருந்தது. ரொம்ப வேலை இருக்குமோ? வேறு ஏதும் வேலை உண்டா? என்று கேட்டதற்கு இல்லை என்றான். ஒரு நாளைக்கு 500இல் இருந்து 1000 ரூபாய் வரை விற்பனை ஆகும் என்றான். அது சரி, அப்ப இந்த சம்பளம் சரிதான் என்று நினைத்துக்கொண்டேன்.
பிஸினஸ் மஹாராஜாக்கள் ஆக நினைப்பவர்கள், இது பற்றி விசாரிக்கவும்.
---
சேவை துறையில் வாய்ப்புகள் அதிகமானாலும் ஆனது, புதுசு புதுசா யோசிக்கிறார்கள். எனக்கு சில நாட்கள் முன்பு வந்த ஒரு எஸ்.எம்.எஸ். இப்படி சொன்னது. “நீங்கள் ஊருக்கு செல்லும் போது, உங்கள் நாயை எங்களிடம் விட்டு செல்லுங்கள். நாங்கள் கவனித்துக்கொள்கிறோம். நீங்கள் ஊர் திரும்பும் வரை, நாயின் முழு பராமரிப்பும் எங்களுடையது. எங்களிடம் நாய் பிக்-அப் வசதியும் உண்டு. தொடர்பு கொள்ள-”.
வீட்டுல ஊருக்கு போனா, நாய்க்கு கூட கம்பெனி கொடுக்குறாங்கப்பா!
---
ஒருபக்கம் மூட சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் திறந்துக்காட்ட சொல்கிறார்கள். நமது அரசு துறைகளின் தகவல் பரிமாற்ற பாதுகாப்பு கொள்கைகளை சொல்கிறேன்.
ஆர்பிஐ போன்ற அமைப்புகள் பண பரிமாற்ற தகவல்களை மூடி மூடி அனுப்ப சொல்கிறார்கள். இதர பாதுகாப்பு அமைப்புகளோ, ரொம்பவும் மூடினால் எங்களால் திறந்து பார்க்க முடியவில்லை. திறந்து காட்டு என்று மிரட்டுகிறார்கள். பாவம் ப்ளாக்பெர்ரி. அடுத்து, ஸ்கைப்பும், கூகிளும் இவர்களிடம் சிக்க போகிறார்கள். ரொம்பவும் பாதுகாப்பாக தகவல்களை அனுப்பினால், எங்களால் உளவு பார்க்க முடியவில்லை. தீவிரவாதிகள் இதை பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்கிறார்கள் என்பது அவர்கள் கவலை. திறந்து பார்க்க வசதி செய்து கொடுத்தால், இருக்கிற கஸ்டமர்கள் ஓடிவிடுவார்களே என்பது இவர்கள் கவலை.
தீவிரவாதிகளை விட மோசமான பரிமாற்றங்கள் எல்லாம் இச்சேவைகள் மூலம் நடைபெறுகிறது. உளவு பார்க்கிறேன் என்று அதை பார்க்க போகும் அதிகாரிகளை நினைத்து தான் என் கவலையெல்லாம்.
---
கீழே இருக்கும் படத்தை ஒரு ஹோட்டலில் பார்த்தேன். பக்கத்தில் இருந்த நண்பர், என்ன தெரியுது, என்ன தெரியுது என கேட்க, நானும் தெரிந்ததை எல்லாம் சொன்னேன். அவரும் அப்புறம் அப்புறம் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். நடுவில் யாரோ வந்து காப்பாற்றியதால், தப்பினேன்.
இப்ப, என் முறை... உங்களுக்கு இந்த படத்தில் என்னவெல்லாம் தெரிகிறது? ஆங்... அப்புறம்... அப்புறம்...
.
Monday, June 14, 2010
நாட்டு சரக்கு - பெங்களூரில் திருப்பதி லட்டு
சில நாட்களுக்கு முன்பு, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மீது தாக்குதல் நடந்ததாக பரபரப்பு செய்திகள் வெளிவந்தன. அவரும் பயங்கர பில்ட்-அப்புடன் ‘என் மீது தாக்குதல் நடத்தியவனை மன்னித்து விடுகிறேன்’ என்று பெரிய மனசு பண்ணி சொன்னார். இதற்குள், பிஜேபி தலைவர்கள் குருவுக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தும்படி, தங்கள் கட்சியை சேர்ந்த கர்நாடக முதல்வருக்கு சொல்ல, அவரும் பாதுகாப்பை அதிகப்படுத்தினார். அதற்கு பிறகு, சில நாட்களுக்கு பிறகு தான் உண்மை தெரிந்தது. இது ஏதும் தீவிரவாத தாக்குதல் அல்ல. தூரத்தில் ஒருவர் தொந்தரவு கொடுத்த நாயை சுட்ட குண்டு, அங்கு வந்து விழுந்துள்ளது என்று. இந்த குண்டுக்கு, ஆசிரமமும், ஊடகங்களும், கட்சிகளும் கொடுத்த பில்ட்-அப் ஓவரோ ஒவர்.
இப்ப அதுக்கும் மேல ஓவரா, இன்னொரு செய்தி. அது எப்படி தெரு நாயை சுடலாம்? என்று மிருக பாதுகாப்பு அமைப்பு ஒன்று கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளது. அப்படி கொல்வதற்கு சட்டத்தில் இடமில்லையாம். சரி, தெருவில் நாய் துரத்தினால், கல்லெடுத்து எறியலாமா? அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா? இல்லை, கடிபட்டு ஆஸ்பத்திரி சென்று ஊசி போடுவது தான் சரியான தீர்வா?
---
அகமதாபாத்தில் இருக்கும் அந்த குடும்ப தலைவிக்கு அந்த பிரச்சினை ரொம்ப பெரிதாக தெரிந்தது. முந்திய தினம், தன் கணவனுடன் போட்ட சண்டையால், தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தார். அவர்களுக்கு இரு பிள்ளைகள். மூத்தவனுக்கு எட்டு வயது. இளையவனுக்கு ஐந்து வயது. ஐம்பது தூக்க மாத்திரைகளை எடுத்து விழுங்க ஆரம்பித்தார்.
சிறிது நேரத்தில் சுய நினைவை இழக்க, வீட்டில் இருந்த பிள்ளைகளுக்கு என்ன செய்வதென தெரியவில்லை. கேட்பது எதற்கும் அம்மா பதில் சொல்லாமல் இருக்க, சிறியவன் அழ ஆரம்பித்தான். பெரியவனுக்கு முதலில் என்ன செய்வது என்று தெரியவில்லை. எப்பொழுதோ, யாரோ சொல்லி கொடுத்த 108 என்ற போன் நம்பர் நினைவுக்கு வர, அந்த நம்பருக்கு போன் செய்து விஷயத்தை ஒரளவுக்கு சொல்லி புரியவைத்தான். அவர்களும் இதை அலட்சியப்படுத்தாமல், வீடு இருக்கும் இடத்தை, அவன் சொன்ன அடையாளத்தை வைத்து கண்டுபிடித்து, அரை மணி நேரத்தில் அவர்கள் வீட்டுக்கு வர, சிறுவனின் அன்னை காப்பாற்றப்பட்டார்.
பெற்றோர்களே, நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 108. மறக்காமல், உங்கள் குழந்தைக்க்கு சொல்லிக்கொடுங்கள்.
---
சமீபகாலங்களில் எல்லா விளம்பரங்களிலும் விற்கப்படும் பொருளைப் பற்றியோ, சேவையைப் பற்றியோ சொல்லாமல், பெண்ணையோ, காதலையோ, காமத்தையோ பயன்படுத்தி, அதை எப்படியாவது விற்கப்படும் பொருளுடன் இணைத்து விளம்பரம் செய்கிறார்கள். ஐஸ்க்ரிம் ஆகட்டும், குளிர்பானம் ஆகட்டும். அது ரொமான்ஸை கூட்டுவதாக விளம்பரம். பாடி ஸ்ப்ரே ஆகட்டும், ஷேவிங் க்ரிம் ஆகட்டும். அது பெண்களை ஈர்ப்பதாக விளம்பரம். இது போல், சென்ற வாரம் நான் டைம்ஸ் அசெண்ட்டில் (வேலைவாய்ப்பு இணைப்பு) கண்ட விளம்பரம் - ஒரு சர்வதேச வங்கி தனது ஐடி துறைக்காக வெளியிட்டிருந்த வேலைவாய்ப்பு விளம்பரம்.

நீங்களே பாருங்கள். எவனாவது விளம்பரத்தை தப்பா புரிஞ்சி, வேலையில சேர்ந்து, அங்க போயி ‘எங்க என் ஜோடி?’ன்னு கேட்டுடக்கூடாது. சும்மாவே, ஐடி’ன்னா ஓவர் ஆட்டம்’ங்கிறாங்க. இதுல இது வேற!
---
நம்மில் பலர், டொரண்ட்டில் (Torrent) படங்களை டவுன்லோட் செய்து பார்க்கிறோம். தியேட்டருக்கு செல்லும் வாய்ப்பில்லாதவர்கள், தியேட்டரில் இன்னும் வராத, வர வாய்ப்பில்லாத, வந்து போன படங்களை பார்க்க விரும்புபவர்கள், இணையத்தில் படங்களை டவுன்லோட் செய்து பார்க்கிறார்கள். இப்படி டவுன்லோட் செய்தவர்கள் மீது, ‘ஹர்ட் லாக்கர்’ பட தயாரிப்பாளர்கள் சமீபத்தில் நீதிமன்றத்தில் கேஸ் போட்டுள்ளார்கள். படத்தை டவுன்லோட் செய்தவர்களின் ஐபி அட்ரஸை நீதிமன்றத்தில் சமர்பித்து, நஷ்ட ஈடு கேட்டு இருக்கிறார்கள். ஐபி அட்ரஸ் எதற்கு? இணையத்தில் பலர் தரவிறக்கி செய்து பார்த்ததாகவே சொல்லி, விமர்சனம் என்ற பெயரில் சுயவாக்குமூலமே கொடுத்திருக்கிறார்களே!
ஒண்ணும் செய்ய முடியாது என்றாலும், இவர்கள் இனி விமர்சனம் எழுதுகிறேன் என்று சுயவாக்குமூலம் கொடுக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
---
பெங்களூரில் திருப்பதி தேவஸ்தானம், ஒரு கோவில் கட்டியிருக்கிறார்கள். திருப்பதியில் செய்யும் பூஜைகள் போலவே, இங்கும் செய்கிறார்கள். அதெல்லாம் முக்கியமா? அதே போல், லட்டு கொடுப்பார்களா? என்பது தான் என் சந்தேகமாக இருந்தது. கொடுப்பார்களாம். சனிக்கிழமைகளில் மட்டும். ஒன்று ரூபாய் 25.
இன்னும் இந்த கோவில் போனதில்லை. ஒரு சனிக்கிழமை போக வேண்டும்.
---
எப்பவுமே நம்மூர் ஆஸ்பத்திரிகளைப் பற்றி மோசமாகத்தானே கேள்விப்படுகிறோம். இதோ ஒரு நல்ல செய்தி.
ஏதோ வேலை விஷயமாக பெங்களூர் வந்த ஒரு அமெரிக்கருக்கு திடீரென இரவில் நெஞ்சு வலிக்க, அவரை ஜெயதேவா ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கிறார்கள். பணியிலிருந்த டாக்டர் பரிசோதித்து, சீரியஸாக ஒன்றுமில்லை என்று சொல்லி அவரை உடனே திருப்பி அனுப்பியிருக்கிறார். பில்லை பார்த்த அமெரிக்கருக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். 92 ரூபாய்க்கு பில் போட்டிருக்கிறார்கள். உண்மையில் இது இந்தியர்களுக்கே ஆச்சரியமான விஷயமாகத்தான் இருக்கும். இருந்தாலும் விஷயம் தெரியாமல், அந்த ஆள் ஊருக்கு சென்று ஒபாமாவுக்கு லெட்டர் போட்டிருக்கிறார். “ஜயா, இந்த மாதிரி இந்தியாவுல நெஞ்சு வலிக்கு ஒரு ஆஸ்பத்திரி போயிருந்தேன். ரெண்டே ரெண்டு டாலர் தான் வாங்குனாங்க. நீங்களும் இருக்கீங்களே!”ன்னு. அதிபரும் அதற்கு பதிலளித்திருக்கிறார். அமெரிக்க மக்களின் மருத்துவ சேவைக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்று. கூடவே, பெங்களூர் ஆஸ்பத்திரிக்கு பாராட்டும் தெரிவித்து இருக்கிறார்.
ஏதோ அவர் நேரம் இந்த ஆஸ்பத்திரி போனாரு. ‘புகழ்பெற்ற’ மற்ற மருத்துவமனைகளுக்கு சென்றிருந்தால் அவ்வளவுதான். பீஸ் மட்டுமில்ல, ப்யூஸும் புடுங்கிருப்பாங்க.
.
இப்ப அதுக்கும் மேல ஓவரா, இன்னொரு செய்தி. அது எப்படி தெரு நாயை சுடலாம்? என்று மிருக பாதுகாப்பு அமைப்பு ஒன்று கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளது. அப்படி கொல்வதற்கு சட்டத்தில் இடமில்லையாம். சரி, தெருவில் நாய் துரத்தினால், கல்லெடுத்து எறியலாமா? அதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா? இல்லை, கடிபட்டு ஆஸ்பத்திரி சென்று ஊசி போடுவது தான் சரியான தீர்வா?
---
அகமதாபாத்தில் இருக்கும் அந்த குடும்ப தலைவிக்கு அந்த பிரச்சினை ரொம்ப பெரிதாக தெரிந்தது. முந்திய தினம், தன் கணவனுடன் போட்ட சண்டையால், தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தார். அவர்களுக்கு இரு பிள்ளைகள். மூத்தவனுக்கு எட்டு வயது. இளையவனுக்கு ஐந்து வயது. ஐம்பது தூக்க மாத்திரைகளை எடுத்து விழுங்க ஆரம்பித்தார்.
சிறிது நேரத்தில் சுய நினைவை இழக்க, வீட்டில் இருந்த பிள்ளைகளுக்கு என்ன செய்வதென தெரியவில்லை. கேட்பது எதற்கும் அம்மா பதில் சொல்லாமல் இருக்க, சிறியவன் அழ ஆரம்பித்தான். பெரியவனுக்கு முதலில் என்ன செய்வது என்று தெரியவில்லை. எப்பொழுதோ, யாரோ சொல்லி கொடுத்த 108 என்ற போன் நம்பர் நினைவுக்கு வர, அந்த நம்பருக்கு போன் செய்து விஷயத்தை ஒரளவுக்கு சொல்லி புரியவைத்தான். அவர்களும் இதை அலட்சியப்படுத்தாமல், வீடு இருக்கும் இடத்தை, அவன் சொன்ன அடையாளத்தை வைத்து கண்டுபிடித்து, அரை மணி நேரத்தில் அவர்கள் வீட்டுக்கு வர, சிறுவனின் அன்னை காப்பாற்றப்பட்டார்.
பெற்றோர்களே, நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 108. மறக்காமல், உங்கள் குழந்தைக்க்கு சொல்லிக்கொடுங்கள்.
---
சமீபகாலங்களில் எல்லா விளம்பரங்களிலும் விற்கப்படும் பொருளைப் பற்றியோ, சேவையைப் பற்றியோ சொல்லாமல், பெண்ணையோ, காதலையோ, காமத்தையோ பயன்படுத்தி, அதை எப்படியாவது விற்கப்படும் பொருளுடன் இணைத்து விளம்பரம் செய்கிறார்கள். ஐஸ்க்ரிம் ஆகட்டும், குளிர்பானம் ஆகட்டும். அது ரொமான்ஸை கூட்டுவதாக விளம்பரம். பாடி ஸ்ப்ரே ஆகட்டும், ஷேவிங் க்ரிம் ஆகட்டும். அது பெண்களை ஈர்ப்பதாக விளம்பரம். இது போல், சென்ற வாரம் நான் டைம்ஸ் அசெண்ட்டில் (வேலைவாய்ப்பு இணைப்பு) கண்ட விளம்பரம் - ஒரு சர்வதேச வங்கி தனது ஐடி துறைக்காக வெளியிட்டிருந்த வேலைவாய்ப்பு விளம்பரம்.

நீங்களே பாருங்கள். எவனாவது விளம்பரத்தை தப்பா புரிஞ்சி, வேலையில சேர்ந்து, அங்க போயி ‘எங்க என் ஜோடி?’ன்னு கேட்டுடக்கூடாது. சும்மாவே, ஐடி’ன்னா ஓவர் ஆட்டம்’ங்கிறாங்க. இதுல இது வேற!
---
நம்மில் பலர், டொரண்ட்டில் (Torrent) படங்களை டவுன்லோட் செய்து பார்க்கிறோம். தியேட்டருக்கு செல்லும் வாய்ப்பில்லாதவர்கள், தியேட்டரில் இன்னும் வராத, வர வாய்ப்பில்லாத, வந்து போன படங்களை பார்க்க விரும்புபவர்கள், இணையத்தில் படங்களை டவுன்லோட் செய்து பார்க்கிறார்கள். இப்படி டவுன்லோட் செய்தவர்கள் மீது, ‘ஹர்ட் லாக்கர்’ பட தயாரிப்பாளர்கள் சமீபத்தில் நீதிமன்றத்தில் கேஸ் போட்டுள்ளார்கள். படத்தை டவுன்லோட் செய்தவர்களின் ஐபி அட்ரஸை நீதிமன்றத்தில் சமர்பித்து, நஷ்ட ஈடு கேட்டு இருக்கிறார்கள். ஐபி அட்ரஸ் எதற்கு? இணையத்தில் பலர் தரவிறக்கி செய்து பார்த்ததாகவே சொல்லி, விமர்சனம் என்ற பெயரில் சுயவாக்குமூலமே கொடுத்திருக்கிறார்களே!
ஒண்ணும் செய்ய முடியாது என்றாலும், இவர்கள் இனி விமர்சனம் எழுதுகிறேன் என்று சுயவாக்குமூலம் கொடுக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
---
பெங்களூரில் திருப்பதி தேவஸ்தானம், ஒரு கோவில் கட்டியிருக்கிறார்கள். திருப்பதியில் செய்யும் பூஜைகள் போலவே, இங்கும் செய்கிறார்கள். அதெல்லாம் முக்கியமா? அதே போல், லட்டு கொடுப்பார்களா? என்பது தான் என் சந்தேகமாக இருந்தது. கொடுப்பார்களாம். சனிக்கிழமைகளில் மட்டும். ஒன்று ரூபாய் 25.
இன்னும் இந்த கோவில் போனதில்லை. ஒரு சனிக்கிழமை போக வேண்டும்.
---
எப்பவுமே நம்மூர் ஆஸ்பத்திரிகளைப் பற்றி மோசமாகத்தானே கேள்விப்படுகிறோம். இதோ ஒரு நல்ல செய்தி.
ஏதோ வேலை விஷயமாக பெங்களூர் வந்த ஒரு அமெரிக்கருக்கு திடீரென இரவில் நெஞ்சு வலிக்க, அவரை ஜெயதேவா ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கிறார்கள். பணியிலிருந்த டாக்டர் பரிசோதித்து, சீரியஸாக ஒன்றுமில்லை என்று சொல்லி அவரை உடனே திருப்பி அனுப்பியிருக்கிறார். பில்லை பார்த்த அமெரிக்கருக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். 92 ரூபாய்க்கு பில் போட்டிருக்கிறார்கள். உண்மையில் இது இந்தியர்களுக்கே ஆச்சரியமான விஷயமாகத்தான் இருக்கும். இருந்தாலும் விஷயம் தெரியாமல், அந்த ஆள் ஊருக்கு சென்று ஒபாமாவுக்கு லெட்டர் போட்டிருக்கிறார். “ஜயா, இந்த மாதிரி இந்தியாவுல நெஞ்சு வலிக்கு ஒரு ஆஸ்பத்திரி போயிருந்தேன். ரெண்டே ரெண்டு டாலர் தான் வாங்குனாங்க. நீங்களும் இருக்கீங்களே!”ன்னு. அதிபரும் அதற்கு பதிலளித்திருக்கிறார். அமெரிக்க மக்களின் மருத்துவ சேவைக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்று. கூடவே, பெங்களூர் ஆஸ்பத்திரிக்கு பாராட்டும் தெரிவித்து இருக்கிறார்.
ஏதோ அவர் நேரம் இந்த ஆஸ்பத்திரி போனாரு. ‘புகழ்பெற்ற’ மற்ற மருத்துவமனைகளுக்கு சென்றிருந்தால் அவ்வளவுதான். பீஸ் மட்டுமில்ல, ப்யூஸும் புடுங்கிருப்பாங்க.
.
Thursday, January 28, 2010
நாட்டு சரக்கு - கேமரூன் அடிச்ச காப்பி
இளையராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் பத்மபூஷண். நிருபர்கள், ஒரு கேள்வியை இருவரிடமும் கேட்டார்கள்.
ரஹ்மானுக்கும் பத்மபூஷண் விருது தந்திருக்கிறார்களே?
இது அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி.
இளையராஜாவுக்கும் பத்ம பூஷண் விருது கிடைத்திருக்கிறதே?
இளையராஜாவுக்கும் எனக்கும் ஒரே நேரத்தில் பத்ம பூஷண் விருது கிடைத்திருப்பது இரட்டிப்பு சந்தோஷம். எங்க அப்பா சேகர் இசையில் இளையராஜா வாசித்திருக்கிறார். இளையராஜா இசையில் நான் வாசித்திருக்கிறேன். அந்த வகையில் விருது கிடைத்திருப்பது குடும்ப சந்தோஷம்.
---

ஐபாட், ஐபோனை தொடர்ந்து ஐபேட் வெளியிட்டு இருக்கிறது ஆப்பிள் நிறுவனம். ஸ்லேட்டு போல இருக்கும் இதில் இணைய உலாவல், பாடல்கள், படங்கள், புத்தகங்கள், கேம்ஸ் என எல்லாம் சாத்தியம். புதுசு, புதுசா யோசிச்சு வெளியிடுறாங்க. ஆரம்பத்தில் அவர்களுடைய சிபியூ பாக்ஸ் பார்த்து வியப்படைந்திருக்கிறேன். சின்ன டிபன் பாக்ஸ் சைஸ் தான் இருக்கும்.
இப்ப, இன்னுமொரு புது சாதனம். இந்த வடிவத்தில் ஈ-புக் வாசிப்பது சரியாக, நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். இனி, இந்த மாடலை வைத்துக்கொண்டு பிற நிறுவனங்களும் இதுபோல் வெளியிடும். இந்தியர்களுக்காக, ஏதேனும் சைனா நிறுவனம் உழைக்க ஆரம்பித்து இருக்கும்.
---
ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்த நான்-வெஜ் ஹோட்டலில் இப்படி எழுதிவைத்திருந்தார்கள். “மாமிச உணவு சாலை”. படிக்கும்போது, என்னவோ போல இருந்தது. அசைவ உணவகம் என்று எழுதியிருந்தாலாவது பரவாயில்லை. அதனால் தானோ என்னவோ, நான் பார்த்தபோது, கடையில் கூட்டமே இல்லை.
---
அங்கிருந்து கிளம்பிய ஒரு ரயிலுக்குள் பார்த்தப்போது, ஒரே சிவப்பு நிற உடையாக இருந்தது. ஒரு கோச் என்றில்லாமல், எல்லா கோச்சிலும் அப்படியே. ரயிலே அப்படித்தான். ஈரோடு - மேல்மருவத்தூர் ஸ்பெஷல். சில நாட்கள் கழித்து மணியாச்சி ரயில் நிலையத்தில் பார்க்கிறேன். திருநெல்வேலி -மேல்மருவத்தூர் ஸ்பெஷல். எத்தனை?
கோவில் பற்றி தெரியாது. ஆனால், பெண்களை அதிகம் கவரும் கோவில் என்பதால் பெண்கள் கூட்டம் அதிகம் என நினைக்கிறேன். பெண்கள் போனப்பிறகு, வீட்டில் இருந்து ஆண்கள் என்ன செய்வது? வீட்டை பூட்டிவிட்டு எல்லோரும் போக வேண்டியது தான்.
ரயில்வே, ரயில் விட வேண்டியது தான்.
---
அவதார் பார்த்துவிட்டு வந்த கேரள நண்பர், வாயில் அடித்துக்கொண்டார். ”மோகன்லால் நடிச்ச ‘வியட்நாம் காலனி’ படக்கதையை (தமிழில் பிரபு நடித்தாரே! அதே தான்) அப்படியே காப்பி அடிச்சிட்டு, டைட்டிலில் ஒரு நன்றிக்கூட போடலியே” என்று புலம்பியவரை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு யோசித்து பார்த்தால், அட ஆமா!. ஒரு காலனியை அவுங்க பட்ஜெட்டுக்கு ஏத்தப்படி, வேற்றுக்கிரகமாக மாற்றியிருக்கிறார்கள்.
பாத்துக்கோங்க, ஹாலிவுட் டைரக்டர்களும் காப்பி அடிக்கிறாங்க.
---
’வியட்நாம் காலனி’ நல்ல ஜாலியான படம். படத்தை நினைச்சா, உடனே நினைவுக்கு வருற காமெடி இது.
கவுண்டமணி பசியோடு வீட்டுக்கு வருவார். வீட்டில் சாப்பிட உணவிருக்காது. தண்ணீர் குடிக்கலாம் என்று குடத்தின் அருகே இருக்கும் டம்ளரை எடுப்பார். உள்ளே கொஞ்சுண்டு தண்ணீர் இருக்கும். அதை குடிக்காமல், டம்ளரை அலசி வெளியே ஊற்றிவிட்டு, குடத்திற்குள் பார்த்தால் தண்ணீர் இருக்காது. அவருக்கே உரிய எக்ஸ்ப்ரெஷன் கொடுப்பார்.
பிறகு, கீழே மனோரமா வீட்டில் போய் சாப்பாடு இருக்கிறதா என்று கேட்பார். மனோரமா அதற்கு,
"இப்பத்தான் மாட்டுக்கு போயி கொட்டினேன்."
கவுண்டமணி பரிதாபமாக, "மாடு தூங்கியிருக்குமா?"
.
ரஹ்மானுக்கும் பத்மபூஷண் விருது தந்திருக்கிறார்களே?
இது அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி.
இளையராஜாவுக்கும் பத்ம பூஷண் விருது கிடைத்திருக்கிறதே?
இளையராஜாவுக்கும் எனக்கும் ஒரே நேரத்தில் பத்ம பூஷண் விருது கிடைத்திருப்பது இரட்டிப்பு சந்தோஷம். எங்க அப்பா சேகர் இசையில் இளையராஜா வாசித்திருக்கிறார். இளையராஜா இசையில் நான் வாசித்திருக்கிறேன். அந்த வகையில் விருது கிடைத்திருப்பது குடும்ப சந்தோஷம்.
---
ஐபாட், ஐபோனை தொடர்ந்து ஐபேட் வெளியிட்டு இருக்கிறது ஆப்பிள் நிறுவனம். ஸ்லேட்டு போல இருக்கும் இதில் இணைய உலாவல், பாடல்கள், படங்கள், புத்தகங்கள், கேம்ஸ் என எல்லாம் சாத்தியம். புதுசு, புதுசா யோசிச்சு வெளியிடுறாங்க. ஆரம்பத்தில் அவர்களுடைய சிபியூ பாக்ஸ் பார்த்து வியப்படைந்திருக்கிறேன். சின்ன டிபன் பாக்ஸ் சைஸ் தான் இருக்கும்.
இப்ப, இன்னுமொரு புது சாதனம். இந்த வடிவத்தில் ஈ-புக் வாசிப்பது சரியாக, நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். இனி, இந்த மாடலை வைத்துக்கொண்டு பிற நிறுவனங்களும் இதுபோல் வெளியிடும். இந்தியர்களுக்காக, ஏதேனும் சைனா நிறுவனம் உழைக்க ஆரம்பித்து இருக்கும்.
---
ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்த நான்-வெஜ் ஹோட்டலில் இப்படி எழுதிவைத்திருந்தார்கள். “மாமிச உணவு சாலை”. படிக்கும்போது, என்னவோ போல இருந்தது. அசைவ உணவகம் என்று எழுதியிருந்தாலாவது பரவாயில்லை. அதனால் தானோ என்னவோ, நான் பார்த்தபோது, கடையில் கூட்டமே இல்லை.
---
அங்கிருந்து கிளம்பிய ஒரு ரயிலுக்குள் பார்த்தப்போது, ஒரே சிவப்பு நிற உடையாக இருந்தது. ஒரு கோச் என்றில்லாமல், எல்லா கோச்சிலும் அப்படியே. ரயிலே அப்படித்தான். ஈரோடு - மேல்மருவத்தூர் ஸ்பெஷல். சில நாட்கள் கழித்து மணியாச்சி ரயில் நிலையத்தில் பார்க்கிறேன். திருநெல்வேலி -மேல்மருவத்தூர் ஸ்பெஷல். எத்தனை?
கோவில் பற்றி தெரியாது. ஆனால், பெண்களை அதிகம் கவரும் கோவில் என்பதால் பெண்கள் கூட்டம் அதிகம் என நினைக்கிறேன். பெண்கள் போனப்பிறகு, வீட்டில் இருந்து ஆண்கள் என்ன செய்வது? வீட்டை பூட்டிவிட்டு எல்லோரும் போக வேண்டியது தான்.
ரயில்வே, ரயில் விட வேண்டியது தான்.
---
அவதார் பார்த்துவிட்டு வந்த கேரள நண்பர், வாயில் அடித்துக்கொண்டார். ”மோகன்லால் நடிச்ச ‘வியட்நாம் காலனி’ படக்கதையை (தமிழில் பிரபு நடித்தாரே! அதே தான்) அப்படியே காப்பி அடிச்சிட்டு, டைட்டிலில் ஒரு நன்றிக்கூட போடலியே” என்று புலம்பியவரை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு யோசித்து பார்த்தால், அட ஆமா!. ஒரு காலனியை அவுங்க பட்ஜெட்டுக்கு ஏத்தப்படி, வேற்றுக்கிரகமாக மாற்றியிருக்கிறார்கள்.
பாத்துக்கோங்க, ஹாலிவுட் டைரக்டர்களும் காப்பி அடிக்கிறாங்க.
---
’வியட்நாம் காலனி’ நல்ல ஜாலியான படம். படத்தை நினைச்சா, உடனே நினைவுக்கு வருற காமெடி இது.
கவுண்டமணி பசியோடு வீட்டுக்கு வருவார். வீட்டில் சாப்பிட உணவிருக்காது. தண்ணீர் குடிக்கலாம் என்று குடத்தின் அருகே இருக்கும் டம்ளரை எடுப்பார். உள்ளே கொஞ்சுண்டு தண்ணீர் இருக்கும். அதை குடிக்காமல், டம்ளரை அலசி வெளியே ஊற்றிவிட்டு, குடத்திற்குள் பார்த்தால் தண்ணீர் இருக்காது. அவருக்கே உரிய எக்ஸ்ப்ரெஷன் கொடுப்பார்.
பிறகு, கீழே மனோரமா வீட்டில் போய் சாப்பாடு இருக்கிறதா என்று கேட்பார். மனோரமா அதற்கு,
"இப்பத்தான் மாட்டுக்கு போயி கொட்டினேன்."
கவுண்டமணி பரிதாபமாக, "மாடு தூங்கியிருக்குமா?"
.
Wednesday, December 9, 2009
நாட்டு சரக்கு - தவளை எங்கே?
அப்பாடா! ஒரு வழியா இளையராஜாவுக்கு நன்றாக இசையமைக்க தெரியுமென்று சாரு ஒத்துக்கொண்டுள்ளார்.
இசைத்துறை வல்லுனரும், இளையராஜாவின் தீவிர ரசிகருமான அகிலன் தன் பதிவில் ராஜா-ரஹ்மான் ஒப்பீடு பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜாவையும் ஏ ஆர் ரஹ்மானையும் அல்லது வேறு ஒரு இசையமைப்பாளரையோ ஒரே நேர்கோட்டில் வைப்பது எந்த வகையில் நேர்மையான பார்வையாக இருக்க முடியும்? அது முற்றிலும் நமது ரசனையில் இருந்து எழுவதுதானே? அதைவிட அபத்தமானது சலம்டாக் மில்லினியரையும் நான் கடவுளையும் ஒப்பிடுவது. இரண்டு இசையின் வெளிபாடுகளுக்கும் இரு வேறு பெரும் காரணங்கள் இருக்கிறது. அதை இசையமைப்பாளன் மட்டும் தீர்மானிப்பதில்லை.
...
இளையராஜாவின் சமீபத்திய படமான ‘பா’வை பார்ப்போம் அதில் ஒர் இறுதி காட்சி. அந்தப் பையன் இறக்கப் போகிறான், தனது தந்தைக்கும் தாயிற்கும் திருமணம் நடத்துகிறான், திருமணத்திற்கு தீயை சுற்றிச் சுற்றி நடப்பதுபோல், அவர்கள் அவனது படுக்கையைச் சுற்றி சுற்றி நடக்கிறார்கள், அவனது பாட்டி திருமண மந்திரம் சொல்கிறாள். பையன் மன நிறைவு கொள்கிறான். தந்தையின் முகத்தில் சோகம், இப்பொழுதான் பழகியிருக்கிறான் அதுவும் தனது மகன் என்று தெரியாத நிலையில். தெரியும் போது பையன் மரண படுக்கையில், அந்த சமயம் அவன் ‘பா’ என்கிறான். தந்தையின் முகத்தில் சந்தோஷம், ஏமாற்றம், விரக்தி. சற்று நேரத்தில் பையன் இறக்கிறான். ஒரு சில நிமிட சம்பவங்கள் அனைத்தும். இந்த அத்தனை உணர்ச்சிக்கும் இளையராஜா இசை வடிவம் கொடுத்திருப்பார். ஒவ்வொரு சின்னச் சின்ன உணர்ச்சிக்கும். மந்திரங்கள் உச்சரிக்கும் போது, தந்தை கவலையாகப் பார்க்கும் போது, சட்டென்று பையன் பா என்று சொல்லும் போது (முதல் முறையாக அவன் வாழ்வில் அவன் உச்சரிக்கும் வார்த்தை, அவன் தந்தை முதல் முறையாக அவனது வாழ்வில் கேட்கும் வார்த்தை) நமது கலாச்சரத்திற்குப் பழக்கப்பட்ட வயலின் நாதம் அந்த இடத்தில் ஒலிக்கும், உடனே அந்த இசை சற்றென்று தடம் மாறுகிறது காரணம் அவன் இறக்கிறான். மிகச் சிக்கலான இசைக் கலவை.
மேலும் வாசிக்க...
---
துவரம் பருப்பு விலை தாறுமாறாக போனதால், அதற்கு இணையான ஒரு ஐட்டத்தை கவர்மெண்ட் கனடாவில் இறக்குமதி செய்யப்போகிறார்கள். இதற்கு அரசாங்க தரப்பில், சத்தானது, விலையும் குறைவானது என ஆதர குரல் கொடுத்தாலும், மற்றவர்கள் இதன் சுவை துவரம் பருப்பு போல் வராது என்கிறார்கள். கிலோ இருபத்து ஜந்து ரூபாய் தான் வருமென்பதால், அரசாங்கம் இந்த எதிர்ப்பு குரலை எல்லாம் கண்டுக்கொள்ளபோவதில்லை. ஆரம்பத்தில், பாம் ஆயில் கொண்டு வந்த போதும், இப்படி எதிர்ப்பு இருந்தது. அப்புறம் சரியாகிவிட்டது என்கிறார்கள்.
---
சிவகாசி ஊர் பெயரை மாற்றபோகிறார்கள். விஜய் நடித்ததாலா? இல்லை, பேரரசு எடுத்ததாலா? இரண்டும் இல்லை. ஊரில் அடிக்கடி நடக்கும் விபத்துகளை தவிர்க்க, நியூமராலஜிப்படி பெயரை மாற்றுகிறார்கள். பெரிய மாற்றம் ஒன்றுமில்லை. ஒரு எழுத்து எக்ஸ்ட்ராவாக சேர்க்கிறார்கள். Sivakasi, இனி Sivakaasi.
இந்த பெயரை பயன்படுத்தும்படி உள்ளூர் மக்களுக்கும், நிறுவனங்களும் வேண்டுகோள் எழுப்பி , ஊரு முழுக்க சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுல இருக்குற ஊருக்கு, ஆங்கிலத்தில் ஸ்பெல்லிங் மாற்ற சொல்லி, எந்த ஜோசியருய்யா சொன்னது?
---
என் நண்பனுடன் கோவை சாலையில் நடந்துக்கொண்டிருந்தேன். அவன் ஒரு சைனா மொபைல் வைத்திருந்தான். போலி IMEI நம்பர் தடை விவகாரத்தால் ஒரு சிம் வேலை செய்யவில்லை. சரி செய்ய கடைகளில் 200 முதல் 400 வரை கேட்கிறார்கள். அந்த கடுப்பில் இருந்தவன், பெட்டிக்கடைகளில் தொங்கி கொண்டிருந்த தினசரி தலைப்பு செய்தியை பார்த்து இன்னும் கடுப்பானான். செய்தி - நாளை முதல் பொது இடங்களில் புகைப்பிடித்தால், 200 ரூபாய் அபராதம்.
“என்னங்கடா நினைச்சிக்கிட்டாங்க? கடையில சைனா மொபைல் விப்பாங்களாம். ஆனா, வாங்கி யூஸ் பண்ணா பணம் கட்டணும்’மாம். அப்புறம் ஏன் அதை விக்கவுட்டீங்க? இவுங்க தம்மு விப்பாங்களாம். வாங்கி அடிச்சா, பைன் கட்டணும்மாம். வாங்கிக்கிட்டு போயி வீட்டுக்குள்ளயா அடிக்கணும்? இப்படியே போச்சு’ன்னா, இன்னும் கொஞ்ச நாள்ல ரோட்டுல சிக்கன் கபாப் தின்னா கூட பைன் கேட்பானுங்க” என்று பொறிந்து தள்ளினான்.
---
கேபிள் சங்கர், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கின முதல் படமான டுயல் (Duel) பத்தி சொன்னதுக்கு அப்புறம் அந்த படம் பார்க்க ரொம்ப ஆர்வமா இருந்தேன். படமும் ஒரு வழியா பார்த்தாச்சு. ரெண்டு கேரக்டரை வைத்து மிரட்டியிருந்தார். லாரி எழுப்பும் ஒலியும், அதை காட்டும் கேமரா கோணமும் அபாரம். ஆனா, கடைசி வரை ஏன் இந்த விரட்டல்’ன்னு சொல்லவேயில்லையே?
ஹீரோ காரை விட்டு இறங்கி லாரியை நோக்கி நடந்தால், லாரிக்காரன் ஓடிவிடுகிறான். காரில் போனால், விரட்டுகிறான். ஆனால், அதே சமயம், குழந்தைகள் சென்ற ஸ்கூல் பஸ், கிளம்ப உதவுகிறான். ஒரு வேளை, அவனுக்கு அந்த கார் மேல் தான் கோபமா? இதையெல்லாமேயே காட்சிகள் மூலம் பார்ப்பவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இயக்குனரின் நோக்கமா?
---
போன வருடம் நடந்த மும்பை தாக்குதலுக்கு எதிராக அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? என்று எப்போதும் போல் கேள்விகள் வந்துக்கொண்டே இருக்கிறது. இந்த வருடம், அதே தினத்தன்று என்டிடிவியில் ஒளிப்பரப்பான உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பேட்டியில், ஒருவர் மும்பை தாக்குதலால ஏற்பட்ட இழப்புக்களை கூறிவிட்டு, ”ஆனால் இன்னமும் கசாப்பிடம் விசாரணை நடந்துக்கொண்டிருக்கிறது. ஏன்?” என்று அவரிடம் நேரடியாக கேள்வி எழுப்பினார். அதற்கு சிதம்பரம், “என் நிலையில் நீங்க இருந்தா என்ன பண்ணுவீங்க?” என்று பதில் கேள்வி எழுப்பினார். கேள்வி கேட்டவர் ஏதும் பதில் சொல்லவில்லை. சிறிது மௌனத்திற்கு பிறகு, “அது தான் பதில்” என்றார் சிதம்பரம்.
ஆனால், கடந்த ஒரு வருடமாக பாகிஸ்தானில் நிறைய குண்டு வெடிக்கிறதல்லவா? பாகிஸ்தானும் இந்தியா மேல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சும்மா தான் சொல்கிறார்களா? இல்ல...??? ஒண்ணும் புரியலை.
---
இது ஒருமுறை கூர்க் சென்ற போது எடுத்த படம். பெருசு பண்ணி பாருங்க. இதில் ஒரு தவளை இருக்கிறது. எங்கே’ன்னு சொல்லுங்க பார்க்கலாம்?

ஆங்கில எழுத்தையும், எண்ணையும் இணைத்து எந்த கட்டம் என்று கூறுங்கள்.
.
இசைத்துறை வல்லுனரும், இளையராஜாவின் தீவிர ரசிகருமான அகிலன் தன் பதிவில் ராஜா-ரஹ்மான் ஒப்பீடு பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜாவையும் ஏ ஆர் ரஹ்மானையும் அல்லது வேறு ஒரு இசையமைப்பாளரையோ ஒரே நேர்கோட்டில் வைப்பது எந்த வகையில் நேர்மையான பார்வையாக இருக்க முடியும்? அது முற்றிலும் நமது ரசனையில் இருந்து எழுவதுதானே? அதைவிட அபத்தமானது சலம்டாக் மில்லினியரையும் நான் கடவுளையும் ஒப்பிடுவது. இரண்டு இசையின் வெளிபாடுகளுக்கும் இரு வேறு பெரும் காரணங்கள் இருக்கிறது. அதை இசையமைப்பாளன் மட்டும் தீர்மானிப்பதில்லை.
...
இளையராஜாவின் சமீபத்திய படமான ‘பா’வை பார்ப்போம் அதில் ஒர் இறுதி காட்சி. அந்தப் பையன் இறக்கப் போகிறான், தனது தந்தைக்கும் தாயிற்கும் திருமணம் நடத்துகிறான், திருமணத்திற்கு தீயை சுற்றிச் சுற்றி நடப்பதுபோல், அவர்கள் அவனது படுக்கையைச் சுற்றி சுற்றி நடக்கிறார்கள், அவனது பாட்டி திருமண மந்திரம் சொல்கிறாள். பையன் மன நிறைவு கொள்கிறான். தந்தையின் முகத்தில் சோகம், இப்பொழுதான் பழகியிருக்கிறான் அதுவும் தனது மகன் என்று தெரியாத நிலையில். தெரியும் போது பையன் மரண படுக்கையில், அந்த சமயம் அவன் ‘பா’ என்கிறான். தந்தையின் முகத்தில் சந்தோஷம், ஏமாற்றம், விரக்தி. சற்று நேரத்தில் பையன் இறக்கிறான். ஒரு சில நிமிட சம்பவங்கள் அனைத்தும். இந்த அத்தனை உணர்ச்சிக்கும் இளையராஜா இசை வடிவம் கொடுத்திருப்பார். ஒவ்வொரு சின்னச் சின்ன உணர்ச்சிக்கும். மந்திரங்கள் உச்சரிக்கும் போது, தந்தை கவலையாகப் பார்க்கும் போது, சட்டென்று பையன் பா என்று சொல்லும் போது (முதல் முறையாக அவன் வாழ்வில் அவன் உச்சரிக்கும் வார்த்தை, அவன் தந்தை முதல் முறையாக அவனது வாழ்வில் கேட்கும் வார்த்தை) நமது கலாச்சரத்திற்குப் பழக்கப்பட்ட வயலின் நாதம் அந்த இடத்தில் ஒலிக்கும், உடனே அந்த இசை சற்றென்று தடம் மாறுகிறது காரணம் அவன் இறக்கிறான். மிகச் சிக்கலான இசைக் கலவை.
மேலும் வாசிக்க...
---
துவரம் பருப்பு விலை தாறுமாறாக போனதால், அதற்கு இணையான ஒரு ஐட்டத்தை கவர்மெண்ட் கனடாவில் இறக்குமதி செய்யப்போகிறார்கள். இதற்கு அரசாங்க தரப்பில், சத்தானது, விலையும் குறைவானது என ஆதர குரல் கொடுத்தாலும், மற்றவர்கள் இதன் சுவை துவரம் பருப்பு போல் வராது என்கிறார்கள். கிலோ இருபத்து ஜந்து ரூபாய் தான் வருமென்பதால், அரசாங்கம் இந்த எதிர்ப்பு குரலை எல்லாம் கண்டுக்கொள்ளபோவதில்லை. ஆரம்பத்தில், பாம் ஆயில் கொண்டு வந்த போதும், இப்படி எதிர்ப்பு இருந்தது. அப்புறம் சரியாகிவிட்டது என்கிறார்கள்.
---
சிவகாசி ஊர் பெயரை மாற்றபோகிறார்கள். விஜய் நடித்ததாலா? இல்லை, பேரரசு எடுத்ததாலா? இரண்டும் இல்லை. ஊரில் அடிக்கடி நடக்கும் விபத்துகளை தவிர்க்க, நியூமராலஜிப்படி பெயரை மாற்றுகிறார்கள். பெரிய மாற்றம் ஒன்றுமில்லை. ஒரு எழுத்து எக்ஸ்ட்ராவாக சேர்க்கிறார்கள். Sivakasi, இனி Sivakaasi.
இந்த பெயரை பயன்படுத்தும்படி உள்ளூர் மக்களுக்கும், நிறுவனங்களும் வேண்டுகோள் எழுப்பி , ஊரு முழுக்க சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுல இருக்குற ஊருக்கு, ஆங்கிலத்தில் ஸ்பெல்லிங் மாற்ற சொல்லி, எந்த ஜோசியருய்யா சொன்னது?
---
என் நண்பனுடன் கோவை சாலையில் நடந்துக்கொண்டிருந்தேன். அவன் ஒரு சைனா மொபைல் வைத்திருந்தான். போலி IMEI நம்பர் தடை விவகாரத்தால் ஒரு சிம் வேலை செய்யவில்லை. சரி செய்ய கடைகளில் 200 முதல் 400 வரை கேட்கிறார்கள். அந்த கடுப்பில் இருந்தவன், பெட்டிக்கடைகளில் தொங்கி கொண்டிருந்த தினசரி தலைப்பு செய்தியை பார்த்து இன்னும் கடுப்பானான். செய்தி - நாளை முதல் பொது இடங்களில் புகைப்பிடித்தால், 200 ரூபாய் அபராதம்.
“என்னங்கடா நினைச்சிக்கிட்டாங்க? கடையில சைனா மொபைல் விப்பாங்களாம். ஆனா, வாங்கி யூஸ் பண்ணா பணம் கட்டணும்’மாம். அப்புறம் ஏன் அதை விக்கவுட்டீங்க? இவுங்க தம்மு விப்பாங்களாம். வாங்கி அடிச்சா, பைன் கட்டணும்மாம். வாங்கிக்கிட்டு போயி வீட்டுக்குள்ளயா அடிக்கணும்? இப்படியே போச்சு’ன்னா, இன்னும் கொஞ்ச நாள்ல ரோட்டுல சிக்கன் கபாப் தின்னா கூட பைன் கேட்பானுங்க” என்று பொறிந்து தள்ளினான்.
---
கேபிள் சங்கர், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கின முதல் படமான டுயல் (Duel) பத்தி சொன்னதுக்கு அப்புறம் அந்த படம் பார்க்க ரொம்ப ஆர்வமா இருந்தேன். படமும் ஒரு வழியா பார்த்தாச்சு. ரெண்டு கேரக்டரை வைத்து மிரட்டியிருந்தார். லாரி எழுப்பும் ஒலியும், அதை காட்டும் கேமரா கோணமும் அபாரம். ஆனா, கடைசி வரை ஏன் இந்த விரட்டல்’ன்னு சொல்லவேயில்லையே?
ஹீரோ காரை விட்டு இறங்கி லாரியை நோக்கி நடந்தால், லாரிக்காரன் ஓடிவிடுகிறான். காரில் போனால், விரட்டுகிறான். ஆனால், அதே சமயம், குழந்தைகள் சென்ற ஸ்கூல் பஸ், கிளம்ப உதவுகிறான். ஒரு வேளை, அவனுக்கு அந்த கார் மேல் தான் கோபமா? இதையெல்லாமேயே காட்சிகள் மூலம் பார்ப்பவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இயக்குனரின் நோக்கமா?
---
போன வருடம் நடந்த மும்பை தாக்குதலுக்கு எதிராக அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? என்று எப்போதும் போல் கேள்விகள் வந்துக்கொண்டே இருக்கிறது. இந்த வருடம், அதே தினத்தன்று என்டிடிவியில் ஒளிப்பரப்பான உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பேட்டியில், ஒருவர் மும்பை தாக்குதலால ஏற்பட்ட இழப்புக்களை கூறிவிட்டு, ”ஆனால் இன்னமும் கசாப்பிடம் விசாரணை நடந்துக்கொண்டிருக்கிறது. ஏன்?” என்று அவரிடம் நேரடியாக கேள்வி எழுப்பினார். அதற்கு சிதம்பரம், “என் நிலையில் நீங்க இருந்தா என்ன பண்ணுவீங்க?” என்று பதில் கேள்வி எழுப்பினார். கேள்வி கேட்டவர் ஏதும் பதில் சொல்லவில்லை. சிறிது மௌனத்திற்கு பிறகு, “அது தான் பதில்” என்றார் சிதம்பரம்.
ஆனால், கடந்த ஒரு வருடமாக பாகிஸ்தானில் நிறைய குண்டு வெடிக்கிறதல்லவா? பாகிஸ்தானும் இந்தியா மேல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சும்மா தான் சொல்கிறார்களா? இல்ல...??? ஒண்ணும் புரியலை.
---
இது ஒருமுறை கூர்க் சென்ற போது எடுத்த படம். பெருசு பண்ணி பாருங்க. இதில் ஒரு தவளை இருக்கிறது. எங்கே’ன்னு சொல்லுங்க பார்க்கலாம்?

ஆங்கில எழுத்தையும், எண்ணையும் இணைத்து எந்த கட்டம் என்று கூறுங்கள்.
.
Wednesday, November 25, 2009
நாட்டு சரக்கு - மிஸஸ் கொலம்பஸின் அதிரடி கேள்விகள்
ஏ.சி.நீல்சன் என்றொரு கருத்து கணிப்பு நிறுவனம் உண்டல்லவா? அவர்கள் ஆசிய அளவிலான சர்வே ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். தலைப்பு - செரைக்கணுமா? வேண்டாமா? என்பது தான். வேற பொழப்பு இல்லையா என்கிறீர்களா? அதுதானே அவர்கள் பொழப்பு. சரி, சர்வே முடிவு என்ன?
இந்திய பெண்களுக்கு முழுக்க மழித்த ஆண்கள் தான் பிடிக்குமாம். அப்பத்தான் கிஸ் பண்ண விரும்புவார்களாம். சென்னை, மும்பை பெண்களுக்கு ரெண்டு மூணு நாளு தாடி இருந்தாலும் ஒகேவாம். எந்த ஊர் ஆண்கள் மீசை வைக்கிறார்கள்? எவ்வளவு நேரத்தில் சேவிங் பண்ணுகிறார்கள்? எந்த நடிகருக்கு மீசை எப்படி இருந்தால் நல்லாயிருக்கும்? என்றெல்லாம் நாட்டுக்கு தேவையான பல தகவல்கள் இந்த சர்வே முடிவின் மூலம் தெரியவந்திருக்கிறது.
---
ஆந்திராவில் காந்தி என்ற பெயருக்கு ரேஷன் கார்டு கொடுத்த செய்தியை படித்தீர்களா? நம்மூர்ல அடிக்கடி இந்த மாதிரி குமுதத்தில் செய்வார்கள். பாரதியாருக்கு சாதி சான்றிதழ், லைசென்ஸ் என்று. ஆனால், காந்திக்கு ரேஷன் கார்டு வாங்கியவர் பண்ணிய குசும்பு கொஞ்சம் ஓவர்.
ரேஷன் கார்டில் இருந்த புகைப்படம், காந்தியின் உண்மையான புகைப்படம். கொடுத்த பெயர், ’காந்தி தாத்தா’. அப்பா பெயர், ‘நாதுராம் கோட்சே’. முகவரி, நம்பர் 15, காந்தி தெரு, காந்தி சாலை. (விவேகானந்தர் குறுக்கு சந்து என்பதுபோல்!) இப்படித்தான் கொஞ்ச நாள் முன்பு, ஆந்திராவில் லட்சுமி என்ற பெண்ணுக்கு சானியா மிர்சா படம் போட்ட ரேஷன் கார்டு கொடுத்தாங்களாம்.
ஐயா, அதிகாரிகளே, மோசடி பண்ணுங்க. கொஞ்சம் நம்புற மாதிரி டீசண்டா பண்ணுங்க.
---
கனடாவில் ஐபிஎம் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நேதலி என்றொரு பெண்மணி, உடம்பு சரியில்லாததால் வேலைக்கு செல்லவில்லை. கடும் மன உளைச்சல் என்று காரணம் சொல்லி, அவருடைய காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து மாத மாதம் பணம் பெற்று வந்திருக்கிறார். ஒரு சமயத்தில் பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள். என்ன காரணமென்றால், அவருடைய பேஸ்புக்கில் இருந்த புகைப்படங்களை காட்டியிருக்கிறார்கள். அந்த புகைப்படங்களில் அம்மணி பாரில் என்ஜாய் பண்ணியது, பர்த்டே பார்ட்டி கொண்டாடியது, விடுமுறையில் ஊருக்கு சென்றது எல்லாம் இருந்திருக்கிறது.
இனி என்ன பண்றது’ன்னு அம்மணி பேசாம விட்டிருக்கும்’ன்னு நினைக்கிறீங்களா? அதுதான் இல்லை. டாக்டர்தான் கவலையை மறக்க பாருக்கு போயி நண்பர்களுடன் ஜாலியா இருங்க. வேற வேற ஊருக்கு ட்ரிப் போயிட்டு வாங்க’ன்னு அட்வைஸ் பண்ணியிருக்காரு’ன்னு சொல்லி வக்கீல் வைச்சு போராடிட்டு இருக்காங்க.
அதானே, கவலையை மறக்க வேற என்ன பண்ண முடியும்?
---
கொலம்பஸுக்கு கல்யாணம் ஆகியிருந்தா என்னவாயிருக்கும்’ன்னு ஒரு மெயில் வந்தது.
அவரு வீட்டை விட்டு கிளம்பும் போது இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருந்திருக்குமாம்.
- ஏங்க, எங்க போறீங்க?
- யாரு கூட வருறது?
- எதுக்கு?
- எப்படி போறீங்க?
- என்னது கண்டுபிடிக்க?
- எதுக்கு நீங்க மட்டும் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்க்கறீங்க?
- நீங்க இல்லாம, நான் என்ன பண்றது?
- நானும் வரட்டுமா?
- எப்ப வருவீங்க?
- நைட் சாப்பாட்டுக்கு வந்திருவீங்களா?
- எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?
- நீங்க வேணுமின்னே, என்னை சேர்க்காம பிளான் போட்டு இருக்கீங்க?
- எல்லாம் கடைசி நேரத்துல திட்டம் போடுறது?
- எதுக்குன்னு சொல்லுங்க?
- நான் எங்க அம்மா வீட்டுக்கு போகணும்.
- நீங்க தான் என்னை வந்து விட்டுட்டு போகணும்.
- நான் திரும்பி வர போறதில்லை.
- என்னது சரியா?
- எதுக்கு நீங்க என்னை தடுக்க மாட்டேங்கிறீங்க?
- அப்படி என்ன எழவை கண்டுபிடிக்க போறீங்களோ!
- எப்ப பாரு, இந்த மாதிரி வெட்டி வேலைத்தான்.
- போன தடவையும், இப்படித்தான் ஏதோ பண்ணுனீங்க.
- இப்பயெல்லாம் நீங்க இந்த மாதிரி வேலையைத்தான் பார்க்கிறீங்க.
- எனக்கு இன்னும் புரியலை. இன்னும் அப்படி கண்டுபிடிக்க என்ன இருக்கு?
இதுக்கு மேல, அவரு அமெரிக்காவை கண்டுப்பிடிச்சிருப்பாரு? சரி, அப்படியே கூட்டிட்டு போயிருந்தா?

:-)
.
இந்திய பெண்களுக்கு முழுக்க மழித்த ஆண்கள் தான் பிடிக்குமாம். அப்பத்தான் கிஸ் பண்ண விரும்புவார்களாம். சென்னை, மும்பை பெண்களுக்கு ரெண்டு மூணு நாளு தாடி இருந்தாலும் ஒகேவாம். எந்த ஊர் ஆண்கள் மீசை வைக்கிறார்கள்? எவ்வளவு நேரத்தில் சேவிங் பண்ணுகிறார்கள்? எந்த நடிகருக்கு மீசை எப்படி இருந்தால் நல்லாயிருக்கும்? என்றெல்லாம் நாட்டுக்கு தேவையான பல தகவல்கள் இந்த சர்வே முடிவின் மூலம் தெரியவந்திருக்கிறது.
---
ஆந்திராவில் காந்தி என்ற பெயருக்கு ரேஷன் கார்டு கொடுத்த செய்தியை படித்தீர்களா? நம்மூர்ல அடிக்கடி இந்த மாதிரி குமுதத்தில் செய்வார்கள். பாரதியாருக்கு சாதி சான்றிதழ், லைசென்ஸ் என்று. ஆனால், காந்திக்கு ரேஷன் கார்டு வாங்கியவர் பண்ணிய குசும்பு கொஞ்சம் ஓவர்.
ரேஷன் கார்டில் இருந்த புகைப்படம், காந்தியின் உண்மையான புகைப்படம். கொடுத்த பெயர், ’காந்தி தாத்தா’. அப்பா பெயர், ‘நாதுராம் கோட்சே’. முகவரி, நம்பர் 15, காந்தி தெரு, காந்தி சாலை. (விவேகானந்தர் குறுக்கு சந்து என்பதுபோல்!) இப்படித்தான் கொஞ்ச நாள் முன்பு, ஆந்திராவில் லட்சுமி என்ற பெண்ணுக்கு சானியா மிர்சா படம் போட்ட ரேஷன் கார்டு கொடுத்தாங்களாம்.
ஐயா, அதிகாரிகளே, மோசடி பண்ணுங்க. கொஞ்சம் நம்புற மாதிரி டீசண்டா பண்ணுங்க.
---
கனடாவில் ஐபிஎம் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நேதலி என்றொரு பெண்மணி, உடம்பு சரியில்லாததால் வேலைக்கு செல்லவில்லை. கடும் மன உளைச்சல் என்று காரணம் சொல்லி, அவருடைய காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து மாத மாதம் பணம் பெற்று வந்திருக்கிறார். ஒரு சமயத்தில் பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள். என்ன காரணமென்றால், அவருடைய பேஸ்புக்கில் இருந்த புகைப்படங்களை காட்டியிருக்கிறார்கள். அந்த புகைப்படங்களில் அம்மணி பாரில் என்ஜாய் பண்ணியது, பர்த்டே பார்ட்டி கொண்டாடியது, விடுமுறையில் ஊருக்கு சென்றது எல்லாம் இருந்திருக்கிறது.
இனி என்ன பண்றது’ன்னு அம்மணி பேசாம விட்டிருக்கும்’ன்னு நினைக்கிறீங்களா? அதுதான் இல்லை. டாக்டர்தான் கவலையை மறக்க பாருக்கு போயி நண்பர்களுடன் ஜாலியா இருங்க. வேற வேற ஊருக்கு ட்ரிப் போயிட்டு வாங்க’ன்னு அட்வைஸ் பண்ணியிருக்காரு’ன்னு சொல்லி வக்கீல் வைச்சு போராடிட்டு இருக்காங்க.
அதானே, கவலையை மறக்க வேற என்ன பண்ண முடியும்?
---
கொலம்பஸுக்கு கல்யாணம் ஆகியிருந்தா என்னவாயிருக்கும்’ன்னு ஒரு மெயில் வந்தது.
அவரு வீட்டை விட்டு கிளம்பும் போது இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருந்திருக்குமாம்.
- ஏங்க, எங்க போறீங்க?
- யாரு கூட வருறது?
- எதுக்கு?
- எப்படி போறீங்க?
- என்னது கண்டுபிடிக்க?
- எதுக்கு நீங்க மட்டும் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்க்கறீங்க?
- நீங்க இல்லாம, நான் என்ன பண்றது?
- நானும் வரட்டுமா?
- எப்ப வருவீங்க?
- நைட் சாப்பாட்டுக்கு வந்திருவீங்களா?
- எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?
- நீங்க வேணுமின்னே, என்னை சேர்க்காம பிளான் போட்டு இருக்கீங்க?
- எல்லாம் கடைசி நேரத்துல திட்டம் போடுறது?
- எதுக்குன்னு சொல்லுங்க?
- நான் எங்க அம்மா வீட்டுக்கு போகணும்.
- நீங்க தான் என்னை வந்து விட்டுட்டு போகணும்.
- நான் திரும்பி வர போறதில்லை.
- என்னது சரியா?
- எதுக்கு நீங்க என்னை தடுக்க மாட்டேங்கிறீங்க?
- அப்படி என்ன எழவை கண்டுபிடிக்க போறீங்களோ!
- எப்ப பாரு, இந்த மாதிரி வெட்டி வேலைத்தான்.
- போன தடவையும், இப்படித்தான் ஏதோ பண்ணுனீங்க.
- இப்பயெல்லாம் நீங்க இந்த மாதிரி வேலையைத்தான் பார்க்கிறீங்க.
- எனக்கு இன்னும் புரியலை. இன்னும் அப்படி கண்டுபிடிக்க என்ன இருக்கு?
இதுக்கு மேல, அவரு அமெரிக்காவை கண்டுப்பிடிச்சிருப்பாரு? சரி, அப்படியே கூட்டிட்டு போயிருந்தா?

:-)
.
Friday, October 30, 2009
நாட்டு சரக்கு - நார்வே அயன்
புதிதாக பெங்களூருக்கு வந்த, எனக்கு தெரிந்த ஒருவர் எப்படியாவது ஒரு வருடத்தில் கன்னடம் கற்று தேர்ந்துவிட எண்ணினார். நல்ல விஷயம் தான். ஒரு கன்னடக்காரரின் வீட்டில் இதற்காக குடியமர்ந்தார். வீட்டுக்காரரிடம் பேசி பேசி கன்னடம் கற்றுவிடலாம் என்பது திட்டம். ஒரு வருடம் கழித்து அவரை சந்தித்த போது,
“கன்னடம் நல்லா பேசுறீங்களா?”
“இல்லைங்க. வீட்டுக்காரர் இப்ப நல்லா கொங்கு தமிழ்ல பேசுறாரு”
!
தமிழர்கள் கன்னடம் கற்றுகொள்வதை விட, இங்கிருக்கும் கன்னடர்கள் தமிழை வேகமாக கற்றுக்கொண்டுவிடுவார்கள். தமிழ் மட்டுமில்லை. மற்ற மொழிகளையும். கொஞ்சம் வெட்கப்பட வேண்டிய விஷயம் தான்.
---
ரஹ்மான் வந்தே மாதரம் ஆல்பத்திற்கு இசையமைத்தது தெரியும். வைரமுத்து எழுத, தமிழ் தாய் வாழ்த்திற்கும் இசையமைக்க போவதாக சொல்லியிருந்ததும் தெரியும். இப்ப, சீக்ரெட்டா இன்னொரு ஆல்பம் ரெடி பண்ணி கொண்டு இருக்கிறார். யாருக்காக? குழந்தைகளுக்காக. நர்சரி ரைம்ஸ் பாடல்களுக்கு இசையமைத்து கொண்டிருக்கிறார். நான் சின்ன வயசில ரைம்ஸை, தமிழ் பட பாடல் ட்யூனுக்கு பாடியிருக்கிறேன். இப்ப, சினிமா பாட்டுக்கு ட்யூன் போட்டவரே, ரைம்ஸுக்கும் ட்யூன் போடுகிறார். பாருங்க, இன்னும் கொஞ்சம் நாள்ல ஸ்கூல் ரைம்ஸ் ஹிட் ஆயிடும். இந்த ஆல்பத்தில் நடிக்க போவது யார் தெரியுமா? காட்ரீனா கைப்.
ஏம்ப்பா, நான் படிக்கும்போது இப்படியெல்லாம் பண்ணலையே?
---
உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? சுற்றுச்சூழலுக்கு எதிராக இருப்பது, சாலையில் ஓடும் வாகனங்கள் மட்டுமல்ல, உங்கள் வீட்டு நாயும். ஒரு நார்மல் சைஸ் நாய் ஒரு வருடத்தில் 164 கிலோ கறியும், 95 கிலோ தானியங்களும் சாப்பிடுகிறதாம். என்ன கணக்கோ தெரியவில்லை! ஒரு நாயிற்கான ஒரு வருட உணவை உருவாக்குவதற்கு 0.8 ஹெக்டர் நிலம் தேவைப்படுகிறதாம். பெரிய ஜெர்மன் செப்பர்ட் நாய் என்றால், 1.1 ஹெக்டர். ஒரு கார் ஒரு வருடம் ஒடுவதற்கு தேவையான சக்தியை உருவாக்குவதற்கான இடத்தை விட இது அதிகமாம். அதனால், நிறைய நாய் வளர்க்காதீங்க. முடிஞ்சா, ஷேர் பண்ணிக்கோங்க என்கிறார்கள். உணவாகவும் இருக்கும் கோழி, ஆடு, மாடு, பன்றியெல்லாம் நாயை விட பெட்டராம்.
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.
---
சில பள்ளிகளில் உங்கள் குழந்தைகளை புத்திசாலி குழந்தையாக்குகிறோம் என்று சொல்லி விளம்பரம் செய்வதை கேள்விப்பட்டிருப்போம். அஹமதபாத்தில், புத்திசாலி குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதிகளுக்கு சொல்லிக்கொடுக்கிறோம் என்று ஒரு பல்கலைகழகம் ஆரம்பித்து இருக்கிறார்கள். அதெல்லாம் பெரிய விஷயமில்லை. யார் வேண்டுமானாலும் பலதரப்பட்ட திறமைகளைக் கொண்ட சூப்பர் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம். எப்படி என்று இந்திய புராதன புத்தகங்களிலிருந்தும் நவீன மருத்துவமும் படித்து தெரிந்து வைத்திருக்கிறேன் என்கிறார் இதன் நிறுவனரான படேல். வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கும் பேஷா பாடம் நடத்திடலாம் எனவும் சொல்கிறார்.
அஞ்சு வயசுல ஸ்கூலுக்கு போயிட்டு இருந்த குழந்தை, இப்ப இரண்டரை-மூணு வயதில் போயிகிட்டுயிருக்குது. இது போதாது என்று வயத்துக்குள்ளேயே பாடத்தை நடத்த போறாராம்.
---
ஊரை விட்டு பெங்களூருக்கு வந்த நண்பனுக்கு இங்குள்ள ஹோட்டல் சாப்பாடு பிடிக்கவேயில்லை. பிஸிபிலாபாத், வாங்கிபாத், மசால் தோசை, இட்லி - எதுவும் பிடிக்கவில்லை. மத்தியானம், சிக்கன் பிரியாணி மட்டும் உள்ளே இறங்குகிறது. சரி, அதையே சாப்பிடுவோம் என்று தினமும் அதையே சாப்பிட்டவன், ஒரு மாதம் கழித்து, ஊருக்கு போனபோது, ஊரில் அவனுக்காக அவனுடைய அம்மா ஆசையாக செய்து வைத்திருந்தது - சிக்கன் பிரியாணி!
அய்யோ... என பிரியாணி போபியா வந்தவனாக கதறி, எனக்கு ரசம் சாதம் தான் வேண்டும் என்று அதை மட்டும் வாங்கி சாப்பிட்டுவிட்டு வந்திருக்கிறான்.
---

இவர்தான் நார்வே அயன். நார்வே ஏர்போர்ட்டில் கடத்த முயன்றதற்காக கஸ்டம்ஸ் ஆபிஸர்களால் கைது செய்யப்பட்டு இருப்பவர். இவர் நெஞ்சைச் சுற்றி சின்ன சின்ன பைகளில் அடைத்து கடத்தி வந்தது - பாம்புக்குட்டிகள். பைத்தான் வகை பாம்புகள். அது மட்டுமில்லை. தொடையில் அல்பினோ என்ற வகை சேர்ந்த பல்லிகள். இங்க, அவனவன் வீட்டுக்குள்ள இருக்குற பல்லியை விரட்ட முடியாம நொந்து போயி இருக்கான். உலகத்தோட அந்த பக்கத்துல கடத்திக்கொண்டு போற அளவுக்கு பல்லிக்கு கிராக்கி.
வேலில போன ஓணானை எடுத்து... அதை செஞ்சு காட்டுனது இவருதான்.
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா
.
“கன்னடம் நல்லா பேசுறீங்களா?”
“இல்லைங்க. வீட்டுக்காரர் இப்ப நல்லா கொங்கு தமிழ்ல பேசுறாரு”
!
தமிழர்கள் கன்னடம் கற்றுகொள்வதை விட, இங்கிருக்கும் கன்னடர்கள் தமிழை வேகமாக கற்றுக்கொண்டுவிடுவார்கள். தமிழ் மட்டுமில்லை. மற்ற மொழிகளையும். கொஞ்சம் வெட்கப்பட வேண்டிய விஷயம் தான்.
---
ரஹ்மான் வந்தே மாதரம் ஆல்பத்திற்கு இசையமைத்தது தெரியும். வைரமுத்து எழுத, தமிழ் தாய் வாழ்த்திற்கும் இசையமைக்க போவதாக சொல்லியிருந்ததும் தெரியும். இப்ப, சீக்ரெட்டா இன்னொரு ஆல்பம் ரெடி பண்ணி கொண்டு இருக்கிறார். யாருக்காக? குழந்தைகளுக்காக. நர்சரி ரைம்ஸ் பாடல்களுக்கு இசையமைத்து கொண்டிருக்கிறார். நான் சின்ன வயசில ரைம்ஸை, தமிழ் பட பாடல் ட்யூனுக்கு பாடியிருக்கிறேன். இப்ப, சினிமா பாட்டுக்கு ட்யூன் போட்டவரே, ரைம்ஸுக்கும் ட்யூன் போடுகிறார். பாருங்க, இன்னும் கொஞ்சம் நாள்ல ஸ்கூல் ரைம்ஸ் ஹிட் ஆயிடும். இந்த ஆல்பத்தில் நடிக்க போவது யார் தெரியுமா? காட்ரீனா கைப்.
ஏம்ப்பா, நான் படிக்கும்போது இப்படியெல்லாம் பண்ணலையே?
---
உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? சுற்றுச்சூழலுக்கு எதிராக இருப்பது, சாலையில் ஓடும் வாகனங்கள் மட்டுமல்ல, உங்கள் வீட்டு நாயும். ஒரு நார்மல் சைஸ் நாய் ஒரு வருடத்தில் 164 கிலோ கறியும், 95 கிலோ தானியங்களும் சாப்பிடுகிறதாம். என்ன கணக்கோ தெரியவில்லை! ஒரு நாயிற்கான ஒரு வருட உணவை உருவாக்குவதற்கு 0.8 ஹெக்டர் நிலம் தேவைப்படுகிறதாம். பெரிய ஜெர்மன் செப்பர்ட் நாய் என்றால், 1.1 ஹெக்டர். ஒரு கார் ஒரு வருடம் ஒடுவதற்கு தேவையான சக்தியை உருவாக்குவதற்கான இடத்தை விட இது அதிகமாம். அதனால், நிறைய நாய் வளர்க்காதீங்க. முடிஞ்சா, ஷேர் பண்ணிக்கோங்க என்கிறார்கள். உணவாகவும் இருக்கும் கோழி, ஆடு, மாடு, பன்றியெல்லாம் நாயை விட பெட்டராம்.
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.
---
சில பள்ளிகளில் உங்கள் குழந்தைகளை புத்திசாலி குழந்தையாக்குகிறோம் என்று சொல்லி விளம்பரம் செய்வதை கேள்விப்பட்டிருப்போம். அஹமதபாத்தில், புத்திசாலி குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதிகளுக்கு சொல்லிக்கொடுக்கிறோம் என்று ஒரு பல்கலைகழகம் ஆரம்பித்து இருக்கிறார்கள். அதெல்லாம் பெரிய விஷயமில்லை. யார் வேண்டுமானாலும் பலதரப்பட்ட திறமைகளைக் கொண்ட சூப்பர் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம். எப்படி என்று இந்திய புராதன புத்தகங்களிலிருந்தும் நவீன மருத்துவமும் படித்து தெரிந்து வைத்திருக்கிறேன் என்கிறார் இதன் நிறுவனரான படேல். வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கும் பேஷா பாடம் நடத்திடலாம் எனவும் சொல்கிறார்.
அஞ்சு வயசுல ஸ்கூலுக்கு போயிட்டு இருந்த குழந்தை, இப்ப இரண்டரை-மூணு வயதில் போயிகிட்டுயிருக்குது. இது போதாது என்று வயத்துக்குள்ளேயே பாடத்தை நடத்த போறாராம்.
---
ஊரை விட்டு பெங்களூருக்கு வந்த நண்பனுக்கு இங்குள்ள ஹோட்டல் சாப்பாடு பிடிக்கவேயில்லை. பிஸிபிலாபாத், வாங்கிபாத், மசால் தோசை, இட்லி - எதுவும் பிடிக்கவில்லை. மத்தியானம், சிக்கன் பிரியாணி மட்டும் உள்ளே இறங்குகிறது. சரி, அதையே சாப்பிடுவோம் என்று தினமும் அதையே சாப்பிட்டவன், ஒரு மாதம் கழித்து, ஊருக்கு போனபோது, ஊரில் அவனுக்காக அவனுடைய அம்மா ஆசையாக செய்து வைத்திருந்தது - சிக்கன் பிரியாணி!
அய்யோ... என பிரியாணி போபியா வந்தவனாக கதறி, எனக்கு ரசம் சாதம் தான் வேண்டும் என்று அதை மட்டும் வாங்கி சாப்பிட்டுவிட்டு வந்திருக்கிறான்.
---

இவர்தான் நார்வே அயன். நார்வே ஏர்போர்ட்டில் கடத்த முயன்றதற்காக கஸ்டம்ஸ் ஆபிஸர்களால் கைது செய்யப்பட்டு இருப்பவர். இவர் நெஞ்சைச் சுற்றி சின்ன சின்ன பைகளில் அடைத்து கடத்தி வந்தது - பாம்புக்குட்டிகள். பைத்தான் வகை பாம்புகள். அது மட்டுமில்லை. தொடையில் அல்பினோ என்ற வகை சேர்ந்த பல்லிகள். இங்க, அவனவன் வீட்டுக்குள்ள இருக்குற பல்லியை விரட்ட முடியாம நொந்து போயி இருக்கான். உலகத்தோட அந்த பக்கத்துல கடத்திக்கொண்டு போற அளவுக்கு பல்லிக்கு கிராக்கி.
வேலில போன ஓணானை எடுத்து... அதை செஞ்சு காட்டுனது இவருதான்.
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா
.
Wednesday, September 16, 2009
நாட்டு சரக்கு - திருப்பதி லட்டு
அண்ணா நூற்றாண்டையொட்டி நடந்த கருத்தரங்க விழா இது. எத்தனை அண்ணா, எத்தனை கலைஞர் பாருங்க?
அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா விருது வழங்கப்பட்டதற்கு காரணம் எது?
கலைஞரின் பகுத்தறிவு கொள்கை!
ஏழைகளுக்காக கலைஞர் உழைப்பது!
கலைஞரின் பேச்சாற்றல்!
கலைஞரின் எழுத்தாற்றல்!
கட்சியை கலைஞர் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது!
கலைஞரின் அரசியல் நாகரீகம்!
கட்சியை இந்த அளவுக்கு செல்வாக்காக வளர்த்தது என்று ஒரு தலைப்பு வைத்திருக்கலாம். தனி திராவிட நாடு என்ற கோரிக்கையை ஆரம்பத்தில் வைத்த அண்ணாவுக்கு, இந்திய அரசின் சார்பில் நாணயம் வெளியிட வைத்ததற்கு, கட்சியின் இந்த வளர்ச்சிதானே காரணம்?
---
அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு, கே டிவியில் இரவு சிறப்பு திரைப்படம். குஷி. அண்ணாவுக்காகவோ இல்லையோ, கலைஞரில் அஞ்சாதே ஓடிக்கொண்டிருந்தது. டிஆர்பி விட்டுட கூடாதே?
அண்ணாவுக்கும் குஷிக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்க வேண்டாம். குஷி, தமிழ் வார்த்தைகளில் அர்த்த புரட்சி பண்ணியவரின் படமாச்சே!
---
நாங்கள் கல்லூரியில் படித்தப்போது, ஒரு மினி எலக்ட்ரானிக்ஸ் ப்ராஜக்ட் போட்டி நடந்தது. அதில் என் நண்பனின் டீம் செய்தது - ஆட்டோமேடிக் மோட்டார் கண்ட்ரோலர். இப்ப, கமர்ஷியலாகவே கிடைக்கிறது. இது கிணறு மற்றும் தொட்டியின் தண்ணீர் அளவை பொறுத்து, மோட்டரை தானாகவே ஆன்/ஆப் செய்யும். ஹாஸ்டலில் ரூமில் இருந்து செய்தது. டெஸ்ட் செய்தபோது ஒழுங்காக வேலை செய்தது.
கல்லூரியில் டெமொ காட்டும் அன்று, பிரச்சினை செய்து விட்டது. என்ன பிரச்சினை என்றே தெரியவில்லை. அப்ப, என் நண்பன் சீரியஸாக கேட்டான்.
“டேய்! ஹாஸ்டல் தண்ணி கொண்டு வந்து பாப்போமா?”
---
போன சனி முழுவதும், சன் டிவியில் கீழே ஓடிக்கொண்டிருந்தது - நாளை தினகரனில் எந்திரன் ஸ்டில்ஸ் உடன் கூடிய சிறப்பு பக்கங்கள். ஆஹா, ஆரம்பிச்சுட்டாய்ங்களா? ஸ்டில்ஸ்க்கே இப்படியா? என்று நினைத்துக்கொண்டேன்.
எதிர்பார்த்ததைப் போல ஞாயிறு அன்று தினகரன் விற்பனையும் அதிகமாம். பெட்டிக்கடையில் மக்கள் முண்டியடித்து பேப்பர் வாங்கியதை, சன் நியூஸில் காட்டினார்களா என்று தெரியவில்லை.
---
போஸ்டர் ஒட்டியதால் மாட்டிக்கொண்டார் நடிகர் அர்ஜீன்.
அர்ஜீன் கன்னடத்தில் அவர் சொந்தக்கார பையனை வைத்து ஒரு படம் தயாரித்திருந்தார். அந்த படத்தின் போஸ்டர் பெங்களூர் நகர சாலைகளில் உள்ள பொது சுவர்களில் ஒட்டப்பட்டதற்காக, அவர் மீது கார்ப்பரேஷன் கேஸ் போட்டுள்ளது.
ஏதாவது ஒரு இங்கிலிஷ் பட போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தால், அந்த படத்தை தயாரித்த வார்னர் ப்ரதர்ஸ் அல்லது செஞ்சுரி பாக்ஸ் மீது கேஸ் போட்டு இருப்பார்களோ?
---

இனி திருப்பதி லட்டு என்ற பெயரில் வேறு யாரும் லட்டு செய்ய முடியாது. இதற்கும் பேடண்ட் வாங்கிவிட்டார்கள். திருப்பதி லட்டு, திருப்பதிக்கே.
லட்டு - சில தகவல்கள்.
* 17ஆம் நூற்றாண்டில் இருந்து இந்த லட்டு இருக்கிறதாம்.
* ஒரு நாளைக்கு 1.5 லட்சம் லட்டுகள் செய்யப்படுகிறது.
* தினசரி 10000 கிலோ சர்க்கரை, 1000 கிலோ முந்திரி, 500 கிலோ நெய் போட்டு் செய்யப்படுகிறது.
* ஒரு லட்டின் தற்போதைய விலை - ரூ. 25.
* ஒரு வருட லட்டு வருவாய் - ரூ. 2 கோடி
லட்டு’னா, சும்மா இல்லை.
.
அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா விருது வழங்கப்பட்டதற்கு காரணம் எது?
கலைஞரின் பகுத்தறிவு கொள்கை!
ஏழைகளுக்காக கலைஞர் உழைப்பது!
கலைஞரின் பேச்சாற்றல்!
கலைஞரின் எழுத்தாற்றல்!
கட்சியை கலைஞர் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது!
கலைஞரின் அரசியல் நாகரீகம்!
கட்சியை இந்த அளவுக்கு செல்வாக்காக வளர்த்தது என்று ஒரு தலைப்பு வைத்திருக்கலாம். தனி திராவிட நாடு என்ற கோரிக்கையை ஆரம்பத்தில் வைத்த அண்ணாவுக்கு, இந்திய அரசின் சார்பில் நாணயம் வெளியிட வைத்ததற்கு, கட்சியின் இந்த வளர்ச்சிதானே காரணம்?
---
அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு, கே டிவியில் இரவு சிறப்பு திரைப்படம். குஷி. அண்ணாவுக்காகவோ இல்லையோ, கலைஞரில் அஞ்சாதே ஓடிக்கொண்டிருந்தது. டிஆர்பி விட்டுட கூடாதே?
அண்ணாவுக்கும் குஷிக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்க வேண்டாம். குஷி, தமிழ் வார்த்தைகளில் அர்த்த புரட்சி பண்ணியவரின் படமாச்சே!
---
நாங்கள் கல்லூரியில் படித்தப்போது, ஒரு மினி எலக்ட்ரானிக்ஸ் ப்ராஜக்ட் போட்டி நடந்தது. அதில் என் நண்பனின் டீம் செய்தது - ஆட்டோமேடிக் மோட்டார் கண்ட்ரோலர். இப்ப, கமர்ஷியலாகவே கிடைக்கிறது. இது கிணறு மற்றும் தொட்டியின் தண்ணீர் அளவை பொறுத்து, மோட்டரை தானாகவே ஆன்/ஆப் செய்யும். ஹாஸ்டலில் ரூமில் இருந்து செய்தது. டெஸ்ட் செய்தபோது ஒழுங்காக வேலை செய்தது.
கல்லூரியில் டெமொ காட்டும் அன்று, பிரச்சினை செய்து விட்டது. என்ன பிரச்சினை என்றே தெரியவில்லை. அப்ப, என் நண்பன் சீரியஸாக கேட்டான்.
“டேய்! ஹாஸ்டல் தண்ணி கொண்டு வந்து பாப்போமா?”
---
போன சனி முழுவதும், சன் டிவியில் கீழே ஓடிக்கொண்டிருந்தது - நாளை தினகரனில் எந்திரன் ஸ்டில்ஸ் உடன் கூடிய சிறப்பு பக்கங்கள். ஆஹா, ஆரம்பிச்சுட்டாய்ங்களா? ஸ்டில்ஸ்க்கே இப்படியா? என்று நினைத்துக்கொண்டேன்.
எதிர்பார்த்ததைப் போல ஞாயிறு அன்று தினகரன் விற்பனையும் அதிகமாம். பெட்டிக்கடையில் மக்கள் முண்டியடித்து பேப்பர் வாங்கியதை, சன் நியூஸில் காட்டினார்களா என்று தெரியவில்லை.
---
போஸ்டர் ஒட்டியதால் மாட்டிக்கொண்டார் நடிகர் அர்ஜீன்.
அர்ஜீன் கன்னடத்தில் அவர் சொந்தக்கார பையனை வைத்து ஒரு படம் தயாரித்திருந்தார். அந்த படத்தின் போஸ்டர் பெங்களூர் நகர சாலைகளில் உள்ள பொது சுவர்களில் ஒட்டப்பட்டதற்காக, அவர் மீது கார்ப்பரேஷன் கேஸ் போட்டுள்ளது.
ஏதாவது ஒரு இங்கிலிஷ் பட போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தால், அந்த படத்தை தயாரித்த வார்னர் ப்ரதர்ஸ் அல்லது செஞ்சுரி பாக்ஸ் மீது கேஸ் போட்டு இருப்பார்களோ?
---

இனி திருப்பதி லட்டு என்ற பெயரில் வேறு யாரும் லட்டு செய்ய முடியாது. இதற்கும் பேடண்ட் வாங்கிவிட்டார்கள். திருப்பதி லட்டு, திருப்பதிக்கே.
லட்டு - சில தகவல்கள்.
* 17ஆம் நூற்றாண்டில் இருந்து இந்த லட்டு இருக்கிறதாம்.
* ஒரு நாளைக்கு 1.5 லட்சம் லட்டுகள் செய்யப்படுகிறது.
* தினசரி 10000 கிலோ சர்க்கரை, 1000 கிலோ முந்திரி, 500 கிலோ நெய் போட்டு் செய்யப்படுகிறது.
* ஒரு லட்டின் தற்போதைய விலை - ரூ. 25.
* ஒரு வருட லட்டு வருவாய் - ரூ. 2 கோடி
லட்டு’னா, சும்மா இல்லை.
.
Tuesday, September 8, 2009
நாட்டு சரக்கு - ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் பெருமாளா?
போன வாரம் ஆந்திரா முதல்வர் இறந்த ஹெலிகாப்டர் விபத்திற்கான விசாரணையை சிபிஐ நடத்த போகிறது. விசாரணை முடிவில் என்ன சொல்ல போகிறார்களோ? ஆனால், ஆந்திராவில் சிலர் காரணத்தைக் இப்போதே கண்டுப்பிடித்துவிட்டார்கள். ஹெலிகாப்டர் பழுதோ, மோசமான வானிலையோ இல்லையாம் அது. திருப்பதி வெங்கடாஜலபதி தானாம்.
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, மதம் மாறிய கிருஸ்துவக் குடும்பத்தை சார்ந்தவர். இவர் பதவியேற்றதில் இருந்து கிருஸ்துவ அமைப்புகளுக்கு சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. திருப்பதி தேவஸ்தான விவகாரங்களிலும் தலையீடு இருந்ததாகவும், தேவஸ்தான போர்டை பலவீனமாக்கி, பெருமாளை சுற்றி இருக்கிற ஏழு மலைகளில் சிலவற்றில் தேவாலயம் கட்ட முயற்சி செய்ததாகவும் செய்திகள் வந்தது.
தற்போது, அவர் சென்ற ஹெலிகாப்டர் மலையில் முட்டி விபத்துக்குள்ளானத்திற்கு இதுதான் காரணம் என்று கடவுள் பக்தி அதிகம் உள்ள ஆந்திராவில் கிளப்பி விட்டு இருக்கிறார்கள்.
இது கோடி ராமகிருஷ்ணா கதை.
---
அடுத்தது ராம் கோபால் வர்மா படம்.
ராஜசேகர ரெட்டியின் தந்தை, ஒரு ரவுடி கும்பலால் கொலை செய்யப்பட்டாராம். இவர் முதல்வரானதும், அவர்களை பழி வாங்கிவிட்டாராம்.
உண்மையா,கதையா? எனக்கு தெரியாது. ஆனா, இது தான் ராம் கோபால்வர்மாவின் அடுத்த படக்கதையாம். முன்னாடியே சொன்னாரு. என்ன ஆச்சோ?
யாருய்யா சொன்னது? தெலுங்கு படத்துல யதார்த்தம் இல்லன்னு.
---
ராஜசேகர ரெட்டி இறந்த அன்று அதிர்ச்சியில் இறந்தவர்கள் என்று வந்த எண்ணிக்கை இன்னமும் அதிர்ச்சியளித்தது. நல்லவேளை, இந்த அதிர்ச்சியில் யாரும் இறக்கவில்லை.
சாவை கண்டுக்கூட பயமில்லை. யாராவது அரசியல்வாதியோ, நடிகரோ இறந்த நாளில் செத்து, அவர்களின் தொண்டராகவோ, ரசிகராகவோ ஆக்கப்பட்டு விடக் கூடாது என்று தான் பயமாக உள்ளது.
---

சாவு என்ற சொல்லே செண்டிமெண்ட்டா ஒரு நெகடிவ்வான விஷயம். ஆனா, பேயை இவ்வளவு நாளா பிராண்ட் அம்பாஸிடரா வச்சிருந்தது ஒனிடா. அதாங்க, ஒரு கொம்பு வச்ச மொட்டை வந்து “கொண்டவரின் பெருமை... பக்கத்து வீட்டுக்காரரின் பொறாமை...”ன்னு சொல்லுமே!
அந்த காலத்துல டிவி வச்சிருக்கிறது பொறாமைக்கொள்ளும் அளவுக்கு பெரிய விஷயம். இன்னிக்கு அப்படி இல்லையே? ப்ரியா கிடைக்குதே!
அதனால அந்த மொட்டை பேயை ஓடவிட்டுட்டு, வேற எதையாவது கொண்டு வர போறாங்களாம்? வேற என்ன கொண்டு வருவாங்க? ஏதாவது ஒரு கான், இல்ல கபூர் வருவாங்க. அதுக்கு பேயே பரவாயில்லைன்னு சொல்றீங்களா?
----
கடந்த இருபத்தைந்து வருடங்களில், இதுவரை இருபத்தைந்து மில்லியன் மக்கள் உலகில் எய்ட்ஸால் இறந்திருக்கிறார்கள். இப்போது, எய்ட்ஸ் மருந்து கண்டுப்பிடிப்பில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
எய்ட்ஸ் கிருமிக்கு எதிராய் போரிட ரெண்டு ஆண்டி-பாடிஸ் கண்டுபிடிச்சிருக்காங்களாம். ஆண்டி-பாடிஸ்’ன்னா, நோய்களை எதிர்க்க நமது உடலில் உருவாகும் ஒரு வகையான ப்ரோட்டீன். எய்ட்ஸ்க்கு எதிரான ஆண்டி-பாடிஸ், ஆப்பிரிக்காவுல இருக்குற ஒரு சமூகத்தை சேர்ந்த மக்களின் உடலில் காணப்படுகின்றதாம். அவர்களுக்கு எய்ட்ஸ் தாக்கினாலும், எந்த அறிகுறியும் இல்லையாம். உடல் நலக் குறையும் இல்லையாம்.
அதனால, கூடிய சீக்கிரம் எய்ட்ஸ்க்கு மருந்து வருது. மேட் இன் ஆப்பிரிக்கா.
---
நாட்டில் ஸ்வைன் ப்ளுவால் இறந்தவர்கள் பெங்களூரில் தான்... இன்னொரு மரண செய்தியா? வேண்டாம். அதுக்கு பதில் இன்னொரு பரிதாப நியூஸ்.
பெங்களூர்ல இருக்குற சிஎம்எஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர், நாகராஜ். இந்த நிறுவனம் தான், ஏடிஎம்களுக்கு பாதுகாப்புடன் பணம் பட்டுவாடா செய்யும் நிறுவனம். இவர் போன மாசம், கிட்டத்தட்ட 26 லட்ச ரூபாய் பணம் எடுத்துக்கிட்டு, ஏடிஎம் மெஷின்களை நிரப்ப சென்றிருக்கிறார்.
இப்படி நம்ம கையில, தற்காலிகமாத்தான் பணம் புரளுதே! நிரந்தரமா இருந்தா எப்படி இருக்கும்?’ன்னு நினைச்சுக்கிட்டு, 15 லட்சத்தை மட்டும் மெஷினுக்குள்ள இறக்கிட்டு, மிச்சத்தை இவரு இறக்கிக்கிட்டாரு.
கூட வந்தவங்களை, ஆபிஸ் போக சொல்லிட்டு இவரு அவரோட சொந்த ஊருக்கு எஸ்ஸாயிட்டாரு. அப்புறம்தான் ஆபிஸ்ல தெரிஞ்சிருக்கு இவரோட திருவிளையாடல். போலீஸ் வந்து விசாரிச்சிட்டு, அவரோட ஊருக்கு போயி பதினைஞ்சு நாள்ல அவரை பிடிச்சிட்டாங்க. அப்பவும், அவரு கையில பதினொரு லட்சம் வைச்சிருக்காரு. 15 நாள்ல அவரு செலவழிச்ச பணம், 30 ஆயிரம் தான். அதுவும், 5000க்கு ஒரு மொபைலும், மிச்ச பணத்தை ஓட்டல்ல தங்கியும், சாப்பிட்டும் செலவிட்டு இருக்காரு.
பாருங்க, எவ்ளோ வெகுளியா இருக்காரு? நாகராஜ், நீங்க நல்லவரா? கெட்டவரா?
---
மனிதர்களுக்கு வர வர சோம்பேறித்தனம் அதிகமாகிக்கிட்டே வருது. விஞ்ஞானம் இதுக்கு ரொம்ப உதவிக்கிட்டு இருக்குது.
நடக்குறதுக்கு தேவையே இல்லாம, பக்கத்துல இருந்தாலும் சரி.. தூரத்துல இருந்தாலும் சரி.. பைக், இல்ல கார் எடுத்துட்டு போறோம். சரி. பில்டிங் உள்ளயாவது நடக்குறோமான்னு பார்த்தா, அதுவும் இல்ல. லிப்ட்ல போறோம். இல்ல, எஸ்கலேட்டர்ல போறோம். சரி, ஹோட்டல்ல சாப்டுட்டு கை கழுவவாவது நடந்து வாஷ்பேஷின் போறோமா? இல்ல, அதுக்கு டேபிள்லயே பிங்கர் பவுல் கொண்டு வந்து வச்சிடுறாங்க.
வீட்டுக்கு வந்து டிவி போட்டாக்கூட வசதிக்கேற்ப நூத்துக்கணக்குல சேனல்கள். அதையும் மாத்த கையில் ரிமோட். இனி ரிமோட்ட அழுத்தவும், நாம சோம்பல் பட தேவையில்லை. நாம நினைச்சாலே போதும், சேனல் மாறிடும்.
இங்கிலாந்து விஞ்ஞானி ஜான் ஸ்ப்ராட்லி, இப்படி ஒரு டெலிபதி மைக்ரோ சிப்ப கண்டுப்பிடிச்சிருக்காரு. மூளையில் எண்ணங்களால் உதிக்கும் சிக்னல்களை இந்த சிப், எலக்ட்ரானிக் சிக்னலாக மாற்றி, வயர்லெஸ் சிக்னலாக அனுப்புமாம். அதற்கேற்றப்படி, டிவியோ, கம்யூட்டரோ எதை வேண்டுமானாலும் கட்டுப்படுத்த முடியுமாம்.
இது உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவ கண்டுப்பிடித்ததாக அவர் கூறியுள்ளார். பார்ப்போம், யாருக்கு உதவுகிறது என்று?
.
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, மதம் மாறிய கிருஸ்துவக் குடும்பத்தை சார்ந்தவர். இவர் பதவியேற்றதில் இருந்து கிருஸ்துவ அமைப்புகளுக்கு சாதகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. திருப்பதி தேவஸ்தான விவகாரங்களிலும் தலையீடு இருந்ததாகவும், தேவஸ்தான போர்டை பலவீனமாக்கி, பெருமாளை சுற்றி இருக்கிற ஏழு மலைகளில் சிலவற்றில் தேவாலயம் கட்ட முயற்சி செய்ததாகவும் செய்திகள் வந்தது.
தற்போது, அவர் சென்ற ஹெலிகாப்டர் மலையில் முட்டி விபத்துக்குள்ளானத்திற்கு இதுதான் காரணம் என்று கடவுள் பக்தி அதிகம் உள்ள ஆந்திராவில் கிளப்பி விட்டு இருக்கிறார்கள்.
இது கோடி ராமகிருஷ்ணா கதை.
---
அடுத்தது ராம் கோபால் வர்மா படம்.
ராஜசேகர ரெட்டியின் தந்தை, ஒரு ரவுடி கும்பலால் கொலை செய்யப்பட்டாராம். இவர் முதல்வரானதும், அவர்களை பழி வாங்கிவிட்டாராம்.
உண்மையா,கதையா? எனக்கு தெரியாது. ஆனா, இது தான் ராம் கோபால்வர்மாவின் அடுத்த படக்கதையாம். முன்னாடியே சொன்னாரு. என்ன ஆச்சோ?
யாருய்யா சொன்னது? தெலுங்கு படத்துல யதார்த்தம் இல்லன்னு.
---
ராஜசேகர ரெட்டி இறந்த அன்று அதிர்ச்சியில் இறந்தவர்கள் என்று வந்த எண்ணிக்கை இன்னமும் அதிர்ச்சியளித்தது. நல்லவேளை, இந்த அதிர்ச்சியில் யாரும் இறக்கவில்லை.
சாவை கண்டுக்கூட பயமில்லை. யாராவது அரசியல்வாதியோ, நடிகரோ இறந்த நாளில் செத்து, அவர்களின் தொண்டராகவோ, ரசிகராகவோ ஆக்கப்பட்டு விடக் கூடாது என்று தான் பயமாக உள்ளது.
---

சாவு என்ற சொல்லே செண்டிமெண்ட்டா ஒரு நெகடிவ்வான விஷயம். ஆனா, பேயை இவ்வளவு நாளா பிராண்ட் அம்பாஸிடரா வச்சிருந்தது ஒனிடா. அதாங்க, ஒரு கொம்பு வச்ச மொட்டை வந்து “கொண்டவரின் பெருமை... பக்கத்து வீட்டுக்காரரின் பொறாமை...”ன்னு சொல்லுமே!
அந்த காலத்துல டிவி வச்சிருக்கிறது பொறாமைக்கொள்ளும் அளவுக்கு பெரிய விஷயம். இன்னிக்கு அப்படி இல்லையே? ப்ரியா கிடைக்குதே!
அதனால அந்த மொட்டை பேயை ஓடவிட்டுட்டு, வேற எதையாவது கொண்டு வர போறாங்களாம்? வேற என்ன கொண்டு வருவாங்க? ஏதாவது ஒரு கான், இல்ல கபூர் வருவாங்க. அதுக்கு பேயே பரவாயில்லைன்னு சொல்றீங்களா?
----
கடந்த இருபத்தைந்து வருடங்களில், இதுவரை இருபத்தைந்து மில்லியன் மக்கள் உலகில் எய்ட்ஸால் இறந்திருக்கிறார்கள். இப்போது, எய்ட்ஸ் மருந்து கண்டுப்பிடிப்பில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
எய்ட்ஸ் கிருமிக்கு எதிராய் போரிட ரெண்டு ஆண்டி-பாடிஸ் கண்டுபிடிச்சிருக்காங்களாம். ஆண்டி-பாடிஸ்’ன்னா, நோய்களை எதிர்க்க நமது உடலில் உருவாகும் ஒரு வகையான ப்ரோட்டீன். எய்ட்ஸ்க்கு எதிரான ஆண்டி-பாடிஸ், ஆப்பிரிக்காவுல இருக்குற ஒரு சமூகத்தை சேர்ந்த மக்களின் உடலில் காணப்படுகின்றதாம். அவர்களுக்கு எய்ட்ஸ் தாக்கினாலும், எந்த அறிகுறியும் இல்லையாம். உடல் நலக் குறையும் இல்லையாம்.
அதனால, கூடிய சீக்கிரம் எய்ட்ஸ்க்கு மருந்து வருது. மேட் இன் ஆப்பிரிக்கா.
---
நாட்டில் ஸ்வைன் ப்ளுவால் இறந்தவர்கள் பெங்களூரில் தான்... இன்னொரு மரண செய்தியா? வேண்டாம். அதுக்கு பதில் இன்னொரு பரிதாப நியூஸ்.
பெங்களூர்ல இருக்குற சிஎம்எஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர், நாகராஜ். இந்த நிறுவனம் தான், ஏடிஎம்களுக்கு பாதுகாப்புடன் பணம் பட்டுவாடா செய்யும் நிறுவனம். இவர் போன மாசம், கிட்டத்தட்ட 26 லட்ச ரூபாய் பணம் எடுத்துக்கிட்டு, ஏடிஎம் மெஷின்களை நிரப்ப சென்றிருக்கிறார்.
இப்படி நம்ம கையில, தற்காலிகமாத்தான் பணம் புரளுதே! நிரந்தரமா இருந்தா எப்படி இருக்கும்?’ன்னு நினைச்சுக்கிட்டு, 15 லட்சத்தை மட்டும் மெஷினுக்குள்ள இறக்கிட்டு, மிச்சத்தை இவரு இறக்கிக்கிட்டாரு.
கூட வந்தவங்களை, ஆபிஸ் போக சொல்லிட்டு இவரு அவரோட சொந்த ஊருக்கு எஸ்ஸாயிட்டாரு. அப்புறம்தான் ஆபிஸ்ல தெரிஞ்சிருக்கு இவரோட திருவிளையாடல். போலீஸ் வந்து விசாரிச்சிட்டு, அவரோட ஊருக்கு போயி பதினைஞ்சு நாள்ல அவரை பிடிச்சிட்டாங்க. அப்பவும், அவரு கையில பதினொரு லட்சம் வைச்சிருக்காரு. 15 நாள்ல அவரு செலவழிச்ச பணம், 30 ஆயிரம் தான். அதுவும், 5000க்கு ஒரு மொபைலும், மிச்ச பணத்தை ஓட்டல்ல தங்கியும், சாப்பிட்டும் செலவிட்டு இருக்காரு.
பாருங்க, எவ்ளோ வெகுளியா இருக்காரு? நாகராஜ், நீங்க நல்லவரா? கெட்டவரா?
---
மனிதர்களுக்கு வர வர சோம்பேறித்தனம் அதிகமாகிக்கிட்டே வருது. விஞ்ஞானம் இதுக்கு ரொம்ப உதவிக்கிட்டு இருக்குது.
நடக்குறதுக்கு தேவையே இல்லாம, பக்கத்துல இருந்தாலும் சரி.. தூரத்துல இருந்தாலும் சரி.. பைக், இல்ல கார் எடுத்துட்டு போறோம். சரி. பில்டிங் உள்ளயாவது நடக்குறோமான்னு பார்த்தா, அதுவும் இல்ல. லிப்ட்ல போறோம். இல்ல, எஸ்கலேட்டர்ல போறோம். சரி, ஹோட்டல்ல சாப்டுட்டு கை கழுவவாவது நடந்து வாஷ்பேஷின் போறோமா? இல்ல, அதுக்கு டேபிள்லயே பிங்கர் பவுல் கொண்டு வந்து வச்சிடுறாங்க.
வீட்டுக்கு வந்து டிவி போட்டாக்கூட வசதிக்கேற்ப நூத்துக்கணக்குல சேனல்கள். அதையும் மாத்த கையில் ரிமோட். இனி ரிமோட்ட அழுத்தவும், நாம சோம்பல் பட தேவையில்லை. நாம நினைச்சாலே போதும், சேனல் மாறிடும்.
இங்கிலாந்து விஞ்ஞானி ஜான் ஸ்ப்ராட்லி, இப்படி ஒரு டெலிபதி மைக்ரோ சிப்ப கண்டுப்பிடிச்சிருக்காரு. மூளையில் எண்ணங்களால் உதிக்கும் சிக்னல்களை இந்த சிப், எலக்ட்ரானிக் சிக்னலாக மாற்றி, வயர்லெஸ் சிக்னலாக அனுப்புமாம். அதற்கேற்றப்படி, டிவியோ, கம்யூட்டரோ எதை வேண்டுமானாலும் கட்டுப்படுத்த முடியுமாம்.
இது உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவ கண்டுப்பிடித்ததாக அவர் கூறியுள்ளார். பார்ப்போம், யாருக்கு உதவுகிறது என்று?
.
Tuesday, September 1, 2009
நாட்டு சரக்கு - சினிமா ரசனை

ஜெயா டிவியில் ‘சினிமா டாக்ஸ்’ அப்படின்னு ஒரு நிகழ்ச்சியில சேரன் பேசிக் கொண்டிருந்தார். அவர் ஒரு புள்ளிவிவரம் சொன்னாரு. சினிமா ஒரு பொழுதுபோக்கு மீடியா மட்டுமே என்பவர்கள் 70% என்றும், இல்லை, அது ஒரு சமூக கருவி என்பது மீதி 30 சதவிகித்தினரின் எண்ணம் என்றும் கூறினார். எப்படி, எங்கே, இந்த சர்வே நடத்தினார் என்று தெரியவில்லை.
இவர் அந்த 30%க்காக படம் எடுக்கிறாராம். ஆட்டோகிராப், அழகி போன்ற படங்களெல்லாம் இந்த 30% த்தால் தான் ஓடியதாம். மற்றவர்கள் மாற வேண்டுமாம். கிட்டத்தட்ட, திருந்துங்க, மேலே ஏறி வாங்க என்ற ரேஞ்சில் பேசிக் கொண்டிருந்தார். (பள்ளிக்கூடத்தில் படம் பார்ப்பது எப்படி என்று க்ளாஸ் வைக்கலாமா? என்றெல்லாம் கேள்வி வந்தது)
எந்த படம் எடுத்தாலும், பார்க்கிற மாதிரி எடுத்தால் தான் பார்ப்பார்கள். இன்னாருக்கு இதுதான் பிடிக்கும் என்றும் சொல்ல முடியாது. ஒவ்வொருத்தருக்கும் ரசனை மாறுபடும். ஒவ்வொரு நேரத்திற்கும் மாறுபடும். எந்த படம், பெரும்பாலோனருக்கு பிடித்திருக்கிறதோ, அது வெற்றி பெறுகிறது.
ஒரு டவுட். எனக்கு அழகியும் பிடிக்கிறது. கில்லியும் பிடிக்கிறது. நான் எந்த கேட்டகிரி?
---
சக்கரக்கட்டி, கந்தசாமிக்கு முன் வந்த தாணுவின் படங்களைப் பற்றி சன் டிவியில் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். காட்சிகளையும் போடமாட்டார்கள். டாப் டென் லிஸ்ட்டிலும் இருக்காது.
அப்ப, ஏன்னு எனக்கு புரியலை.
இப்ப, கந்தசாமிக்கு சன் டிவியில் பலத்த ஆதரவு. படத்தின் டைட்டிலிலே, கலாநிதிமாறனுக்கு நன்றி சொல்கிறார்கள்.
இப்பவும், ஏன்னு எனக்கு புரியலை.
---
அடுத்தது ஜெயா டிவி.
ஹாசினி பேசும் படம் நிகழ்ச்சியில், சுஹாசினி ’கந்தசாமி’ படத்தை விமர்சனம் செய்தார். கொஞ்சம் நேரம் பார்த்தேன். பார்த்தவரைக்கும் படத்தை பற்றி நல்லதாகவே சொன்னார். நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம் என்றார். விக்ரம், ஸ்ரேயா, பிரபு, சுசி. கணேசன் என்று எல்லோரையும் புகழ்ந்தார். சிவாஜியில் ஸ்ரேயாவை கொஞ்சம் காரமாக விமர்சித்து இருப்பார் போல. இதில் அதை குறிப்பிட்டே, அவரை புகழ்ந்தார்.
சுசி கணேசன், ஷங்கரை மாதிரி இல்லாமல் அவருக்கு மேல் என்று சொல்லும்படி படத்தை எடுத்து இருக்கிறாராம். ஆனால், ரசிகர்களை சஸ்பென்ஸில் வைக்கும் ஷங்கரின் திரைக்கதை போல் இல்லையாம். பின் எந்த விஷயத்தில், ஷங்கரை மிஞ்சினாரோ?
அவரிடம் பேசும்போது, கணேஷ் என்றே அவரை அழைத்தார். கவனிக்க, சுசி கணேசன் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
---
சுசி கணேசன் ரொம்ப சந்தோஷமாக இருந்தார். ஒரு தினசரி பத்திரிக்கையை கொண்டு வந்திருந்தார். அதில், ஸ்விஸ் பேங்க்கில் இருந்து இந்திய பணத்தை பற்றிய தகவலை தர முடியாது என்று சொல்லி விட்டார்கள் என்று செய்தி வந்திருந்தது.
தான் இந்த ஸ்கிரிப்டை மூன்று வருடம் முன்பே எழுதிவிட்டதாகவும், தற்போது இது பற்றிய விழிப்புணர்வு வந்திருப்பதாகவும், ஒரு படைப்பாளியாக தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.
கடந்த தேர்தலில், அத்வானி வெளிநாட்டில் இருக்கும் இந்திய பணத்தை கொண்டு வருவதை பற்றி வாக்குறுதி கொடுத்திருந்தார். ஒருவேளை, அவர் படத்தோட ஷுட்டிங் பார்த்திருப்பாரோ?
---
சிலர், தங்களுக்கு பிடித்தவாறு படம் எடுப்பார்கள். சிலர், ரசிகர்களுக்கு பிடித்தவாறு படம் எடுப்பார்கள்.
இப்ப, ட்ரெண்ட் - சன் டிவிக்கு பிடித்தவாறு படம் எடுப்பது. விஜயின் வேட்டைக்காரனும் சன் டிவியின் வெளியீடு.
சுதந்திர தினத்தன்று, சன் டிவியில் வந்த நகுலின் பேட்டியில், யாரெல்லாம் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று கேள்விக்கு, அவர் ரசிகர்களுடன் சேர்த்து சன் பிக்சர்ஸ் என்று சொன்னது பரிதாபமாக இருந்தது.
---
இந்த வாரம் ’நினைத்தாலே இனிக்கும்’ வெளிவருகிறது. பட பாடல்களை பற்றி சொன்னபோது, ஒரு குற்றம் செய்துவிட்டேன். அழகாய் பூக்குதே பாடலை பற்றி சொல்லிவிட்டு, பாடிய பிரசன்னா, ஜானகி ஐயர் (பெயர் குழப்பம் வரும் என்பதால், முழுதாய் சொல்ல வேண்டி இருக்கிறது) பற்றி சொல்லாமல் விட்டு விட்டேன். குறிப்பாய், ஜானகி உணர்வுகளை கொட்டி பாடியிருக்கிறார்.
”சில நேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுகிறேன்
உன்னாலே.....”
இந்த இடத்தை அவர் குரலில் கேட்டு பாருங்கள்.
அம்மணி, பாதி ஜோலியை முடிச்சிட்டாங்க...
.
Tuesday, August 25, 2009
நாட்டு சரக்கு - சல்மானின் மத நல்லிணக்கம்

ஸ்வைன் ப்ளூ இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள, ரூபாய் 700 இல் இருந்து ரூபாய் 2500 வரை ஆகுமாம். இந்திய மாநில அரசுகளில் முதல்முறையாக, கர்நாடகாவில் இச்சோதனைகளை அரசின் செலவில், இலவசமாக செய்து கொள்ளலாமாம்.
தமிழ்நாட்டில் ஏதேதோ இலவசமாக கொடுக்கிறார்கள். இதையும் கொடுக்கலாமே?
---
எனக்கு பயணங்கள் பிடிக்கும். ஜன்னல் இருக்கை என்றால் ரொம்ப, ரொம்ப. இதற்காக ரயிலில் முன்பதிவு செய்யும்போது, சைட் லோயரை விருப்பமாக தேர்வு செய்வேன். கிடைத்தால் கொஞ்ச நேரம் ஜாலியாக இருப்பேன். இருட்டும் போது, யாராவது வருவார்கள். லேடிஸ் சார், (இல்லையென்றால், வயதானவர்கள்) மேலே ஏறி படுக்க முடியாது, நீங்க கொஞ்சம் மேலே போங்களேன் என்பார்கள். நானும் மறுபேச்சில்லாமல், இடத்தை காலி செய்வேன். இதற்காகவா, நான் கஷ்டப்பட்டு முன்பதிவு செய்தேன்? என முன்பெல்லாம் தோணும்.
இப்ப பழக்கமாயிடுச்சு. கடந்த இரு வாரங்களாக, ரயிலில்தான் பயணம் செய்து கொண்டிருந்தேன். இரவு உணவை முடித்து விட்டு, காத்து கொண்டிருந்தேன். என்னடா, இன்னும் யாரும் வரலை என்று. நினைத்து கொண்டிருந்த போதே, டிடிஆர் வந்தார். எதிர்பார்த்ததை கேட்டார். இந்த முறை இரு குழந்தைகளுடன் ஒரு பெண்ணாம். சரியென்று மேலே ஏறினேன். இன்னொருமுறையும் அதேப்போல்.
சுயநலம் தான். நாளை என் அப்பாவோ, அம்மாவோ வருவாங்க, இல்லை?
---
அதிமுகவுக்கு என்னவாயிற்று என்றே தெரியவில்லை. கட்சியின் நிதிநிலை சரியில்லை என்கிறார்கள். இரண்டாம் வரிசை பெரிய தலைகள், அதிமுகவாலேயோ அல்லது திமுகவாலேயோ தூக்கப்படுகிறார்கள். அதிமுக பற்றி இன்னொரு ஆச்சரியமூட்டும் செய்தி கேட்டேன். கருணாநிதி பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறந்ததற்கு ஆதரவு தெரிவித்துள்ளார், ஜெயலலிதா.
’திருவள்ளுவரும் சர்வக்ஞரும் சமமானவர்களா?’ அப்படின்னு ஏதாச்சும் கேள்வி கேட்டு குற்றம் சாட்டியிருக்கலாமே? நான் சமீபத்தில் இப்படியொரு கேள்வி கேட்டு ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ் கண்டேன். ஏதோ திருவள்ளுவர் சொல்லி, எல்லாம் கேட்டுட்ட மாதிரி.
---
அதிமுக இடைதேர்தலை புறக்கணிப்பதாக சொல்லியும், ஓட்டு சதவிகிதம் அதிகமாகத்தான் இருந்திருக்கிறது. இதையெல்லாம் யார் கேட்க போகிறார்கள்? ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில், ஓட்டுப்போட்ட மை கையில் இருந்தால், விரல் வெட்டப்படும் என்று சொல்லியும் மக்கள் ஓட்டு போட்டு இருக்கிறார்கள்.
சும்மா சொல்லி வதந்தி கிளப்பவில்லை. நிஜமாகவே, இருவரின் ஓட்டு போட்ட விரலை வெட்டி எறிந்திருக்கிறார்கள். நாமெல்லாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்? கையில நோட்டு. குத்துறேன் ஓட்டு.
---
ஷாருக்கானுக்கு அமெரிக்க விமான நிலையத்தில் இழைக்கப்பட்ட ’அநீதி’, இன்று இந்தியா முழுமைக்கும் தெரிந்திருக்கிறது. வேறு எந்த நாட்டிலும், மீடியா இது போன்ற செய்திகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லையாம். ஜப்பானில், இது எல்லாம் ஒரு செய்தி, என்று பேப்பரில் வரவே வராதாம்.
ரூல்ஸ் இஸ் ரூல்ஸ். அவ்வளவுதான். இது பரவாயில்லை. போன ஞாயிறு, நம்ம தினத்தந்தியின் தலைப்பு செய்திகளில் ஒன்று.
ரம்பா வீட்டின் முன் ரசிகர் ரகளை.
---
விநாயகர் சதுர்த்தி அன்று ஈச்சனாரி பிள்ளையார் கோவிலுக்கு சென்றிருந்தேன். அவருடைய பிறந்தநாள் என்பதால் (பிறந்தநாள் தானே?), அவருக்கு வாழ்த்து சொல்ல வழக்கத்திற்கு மாறான கூட்டம். ஆனால், நம்மூர் அரசியல் தலைவர்கள் பிறந்தநாளுக்கு, லைன் கட்டி நிற்பார்களே? அந்த அளவுக்கு இல்லை. சின்ன வரிசைதான் என்று எப்போதும் தோன்றும் வகையில் அனுப்பிகொண்டிருந்தார்கள்.
வெளியே ஒருவர், வந்திருந்தவர்கள் அனைவருக்கும் பிள்ளையார் பாடல்கள் கொண்ட வீடியோ டிவிடியை இலவசமாக வழங்கி கொண்டிருந்தார். தமிழக இல்லங்கள், டிவிடி ப்ளேயரில் தன்னிறைவு அடைந்துவிட்டது போலும்.
---
சல்மான்கான், விநாயகர் சதுர்த்திக்கு ஆடிபாடுவது போல் ஒரு பாடலை, ஹிந்தி போக்கிரிக்கு பிரபுதேவா எடுத்திருக்கிறார். சல்மான்கான், விநாயகர் சதுர்த்திக்கா? என்று ஆச்சரியப்பட வேண்டாம். சல்மான் உண்மையிலேயே பிள்ளையார் பக்தராம். அவருடைய குடும்பம் மத நல்லிணக்கத்தை பேணும் குடும்பம்.
சல்மான்கான் தந்தையின் முதல் மனைவி இந்து. இரண்டாம் மனைவி கிரிஸ்டியன். மத நல்லிணக்கம் தானே?
Wednesday, August 19, 2009
நாட்டு சரக்கு - சேரனால்தான் முடியுமாமே?
பியரா சிங், வயது 80. ஒரு கொலைக்குற்றத்துக்காக தூக்கு தண்டனை பெற்றவர், கடந்த 20 ஆண்டுகளாக அமிர்தசரஸ் சிறையில், 12க்கு 6 அடி அறையில் அடைப்பட்டுக்கிடக்கிறார். கருணை வேண்டி, 12 வருடங்களுக்கு முன்பு ஜனாதிபதிக்கு மனு செய்திருந்தார். இன்னும் பதில் வரவில்லையாம். போய் சேர்ந்திருச்சான்னே தெரியலை.
கருணையே வேண்டாம். என்னை கொன்றுவிடுங்கள் என்கிறார். ”எனக்கு தூக்கு என்று தீர்ப்பு வழங்கிய நாளே, என்னை தூக்கிலிட்டு இருக்க வேண்டும்.”
தாமதிக்கப்படும் கருணை, பெருங்கொடுமை. இதற்கு மேல், அவருக்கு என்ன தண்டனை கொடுக்க முடியும்?
---
சாலைகளில் மூடப்படாத சாக்கடை துவாரங்களில், மனிதர்கள் விழும் விபத்தை பற்றி அடிக்கடி செய்தித்தாள்களில் படித்திருப்போம். அப்படி ஒரு செய்தியை படித்தேன். இந்த முறை விழுந்தது - ஒரு யானை. தாய்லாந்தில். அவ்வளவு பெரிய சாக்கடை குழியா?
சில விஷயங்களில், நம் நாடு பரவாயில்லை என்று எண்ணிக்கொள்ள வேண்டியதுதான்.
---
தமிழ் படங்களுக்கு பொருத்தமான டைட்டில் வைக்கிறார்களோ, இல்லையோ, தமிழில் மொழிமாற்றம் செய்து வரும் ஆங்கில படங்களுக்கு பொருத்தமாகத்தான் பெயர் வைக்கிறார்கள். சமீபத்தில் நான் அப்படி பார்த்த ஒரு தலைப்பு - ருத்ர மனிதர்கள் 2009. மனிதர்களை உண்ணுபவர்களை பற்றிய கதையாம். ’நான் கடவுள்’ படத்தில் ருத்ரன் தானே, மனிதர்களை தின்பான். அதான், அப்படி தின்பவர்களை பற்றிய படத்திற்கு ருத்ர மனிதர்கள் என்று பெயர் வைத்துவிட்டார்கள்.
கொஞ்சம் நாள் முன்னாடி, இப்படித்தான் ‘300 பருத்தி வீரர்கள்’ என்று ஒரு படம் வந்தது.
---
போன விநாயகர் சதுர்த்திக்கு, விடுமுறை தினத்தை முன்னிட்டு என்று சொல்லி கலைஞர் டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகள் போட்டார்கள். இந்த வருடம் விடுமுறை தினமான ஞாயிறு அன்று தான் சதுர்த்தியே வருகிறது.
இப்ப, என்ன செய்வீங்க...???
---
தவணை முறையில மிக்ஸி வாங்கிருப்போம்... கிரைண்டர் வாங்கியிருப்போம்... டிவி வாங்கியிருப்போம்... இனி ஜீன்ஸும் வாங்கலாம். இப்படி ஒரு அருமையான திட்டத்தை கொண்டு வந்திருப்பது, லெவிஸ் நிறுவனம். முதல் கட்டமாக, பெங்களூரில் மட்டும். மூணு மாச வட்டியில்லா தவணையில, ஜீன்ஸ் பேண்ட் வாங்கிக்கலாம்.
கடனை கட்டி முடிக்கறதுக்குள்ள, எப்படியும் எவனும் ஜீன்ஸை துவைச்சி இருக்க மாட்டான். இப்ப, கடனை கட்ட முடியாட்டி, என்ன பண்ணுவாங்க? ஜீன்ஸை புடுங்கிட்டு போயிடுவாங்களா?
ச்சீய்...
---
பன்றி காய்ச்சல் இந்தியாவில் பரவுவதற்கு காரணம், அமெரிக்க சதியாம். புலனாய்வு பத்திரிக்கைகளின் கவர் ஸ்டோரி இது. ஷாருக் விவகாரத்தில், அம்பிகா சோனி சொன்னது போல், இதற்கும் நாம் பதிலடி கொடுக்க வேண்டும்.
ஊருக்குள் சேரனால் தான் முடியும் என்கிறார்கள்.
சேரன் சார், பொக்கிஷம் படத்தை ஆஸ்கர்க்கு அனுப்புங்க.
.
கருணையே வேண்டாம். என்னை கொன்றுவிடுங்கள் என்கிறார். ”எனக்கு தூக்கு என்று தீர்ப்பு வழங்கிய நாளே, என்னை தூக்கிலிட்டு இருக்க வேண்டும்.”
தாமதிக்கப்படும் கருணை, பெருங்கொடுமை. இதற்கு மேல், அவருக்கு என்ன தண்டனை கொடுக்க முடியும்?
---
சாலைகளில் மூடப்படாத சாக்கடை துவாரங்களில், மனிதர்கள் விழும் விபத்தை பற்றி அடிக்கடி செய்தித்தாள்களில் படித்திருப்போம். அப்படி ஒரு செய்தியை படித்தேன். இந்த முறை விழுந்தது - ஒரு யானை. தாய்லாந்தில். அவ்வளவு பெரிய சாக்கடை குழியா?
சில விஷயங்களில், நம் நாடு பரவாயில்லை என்று எண்ணிக்கொள்ள வேண்டியதுதான்.
---
தமிழ் படங்களுக்கு பொருத்தமான டைட்டில் வைக்கிறார்களோ, இல்லையோ, தமிழில் மொழிமாற்றம் செய்து வரும் ஆங்கில படங்களுக்கு பொருத்தமாகத்தான் பெயர் வைக்கிறார்கள். சமீபத்தில் நான் அப்படி பார்த்த ஒரு தலைப்பு - ருத்ர மனிதர்கள் 2009. மனிதர்களை உண்ணுபவர்களை பற்றிய கதையாம். ’நான் கடவுள்’ படத்தில் ருத்ரன் தானே, மனிதர்களை தின்பான். அதான், அப்படி தின்பவர்களை பற்றிய படத்திற்கு ருத்ர மனிதர்கள் என்று பெயர் வைத்துவிட்டார்கள்.
கொஞ்சம் நாள் முன்னாடி, இப்படித்தான் ‘300 பருத்தி வீரர்கள்’ என்று ஒரு படம் வந்தது.
---
போன விநாயகர் சதுர்த்திக்கு, விடுமுறை தினத்தை முன்னிட்டு என்று சொல்லி கலைஞர் டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகள் போட்டார்கள். இந்த வருடம் விடுமுறை தினமான ஞாயிறு அன்று தான் சதுர்த்தியே வருகிறது.
இப்ப, என்ன செய்வீங்க...???
---
தவணை முறையில மிக்ஸி வாங்கிருப்போம்... கிரைண்டர் வாங்கியிருப்போம்... டிவி வாங்கியிருப்போம்... இனி ஜீன்ஸும் வாங்கலாம். இப்படி ஒரு அருமையான திட்டத்தை கொண்டு வந்திருப்பது, லெவிஸ் நிறுவனம். முதல் கட்டமாக, பெங்களூரில் மட்டும். மூணு மாச வட்டியில்லா தவணையில, ஜீன்ஸ் பேண்ட் வாங்கிக்கலாம்.
கடனை கட்டி முடிக்கறதுக்குள்ள, எப்படியும் எவனும் ஜீன்ஸை துவைச்சி இருக்க மாட்டான். இப்ப, கடனை கட்ட முடியாட்டி, என்ன பண்ணுவாங்க? ஜீன்ஸை புடுங்கிட்டு போயிடுவாங்களா?
ச்சீய்...
---
பன்றி காய்ச்சல் இந்தியாவில் பரவுவதற்கு காரணம், அமெரிக்க சதியாம். புலனாய்வு பத்திரிக்கைகளின் கவர் ஸ்டோரி இது. ஷாருக் விவகாரத்தில், அம்பிகா சோனி சொன்னது போல், இதற்கும் நாம் பதிலடி கொடுக்க வேண்டும்.
ஊருக்குள் சேரனால் தான் முடியும் என்கிறார்கள்.
சேரன் சார், பொக்கிஷம் படத்தை ஆஸ்கர்க்கு அனுப்புங்க.
.
Friday, August 7, 2009
நாட்டு சரக்கு - பெயர் மாற்றும் அழகிரி
பெயரை மாற்றுகிறார் அழகிரி. பயப்பட வேண்டாம். ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கும் அவர் பெயரை, டெல்லியில் அமைச்சர்கள் உள்ளிட்ட மற்றவர்கள் அஸகிரி என்று வாசிக்கிறார்களாம். பாருங்க கொடுமைய! தமிழின் பெருமையாம் ழகரம், அழகிரிக்கு கொடுக்கும் சிரமத்தை. அதனால், azhagiri, இனி ஆங்கிலத்தில் alagiri என்றழைக்கப்படுவாராம். இதே கொடுமையை, இவ்ளோ நாள் அனுபவிச்சிட்டு இருந்த மற்றொருவர் - கனிமொஸி... சே... கனிமொழி.
இதுக்கு, ’பதவிக்காக தமிழை சமரசம் செய்து கொண்ட அழகிரி’ன்னு யாராச்சும் கிளம்புவாங்களே?
ழி’க்கு ஆங்கிலத்தில் zhi என்பதற்கு ஏதேனும் காரணம் உண்டா? இப்படி உருவாக்கியவர் யார்?
---
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஊத்தங்கரை பக்கமுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகன், சேலத்தில் இருந்து வந்த அரசாங்க பேருந்தினால் ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார். ஒரே மகன். பல மாதமாகியும், வெங்கடேசனுக்கு எந்த நஷ்ட ஈடும் கிடைக்கவில்லை.
இதற்காக தொடர்ந்த வழக்கில், இரு ஆண்டுகளுக்கு முன்பு, நீதிமன்றம் வெங்கடேசனுக்கு பணம் வழங்க போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது. கழகமோ, இன்னமும் வழங்கவில்லை. பார்த்தார் நீதிபதி. வெங்கடேசனிடம் பஸ் ஸ்டாண்ட் போயி, ஒரு பஸ்ஸை எடுத்து செல்லுமாறு கூறிவிட்டார்.
இப்ப, அந்த கவர்மெண்ட் பஸ் வெங்கடேசன் வீட்டு முன்னாடி நிக்குதாம். யாரும் தூக்கிட்டு போயிட கூடாதுன்னு, அது பக்கத்திலேயே சமைச்சு, சாப்பிட்டு அதுலேயே தூங்குறாராம்.
போக்குவரத்து கழகம் மேலயும், நம்மூர் மேலயும் தான் எவ்ளோ நம்பிக்கை?
---
இப்ப சாதாரணமாக காய்ச்சல் வந்தாலோ, இல்ல ஜலதோஷம் வந்தாலோ, பன்றி காய்ச்சலா இருக்குமோன்னு பயப்பட ஆரம்பிச்சிட்டுட்டாங்க. கொஞ்ச நாள் முன்னாடி வரை, 'இது வெளிநாட்டுல தான் இருக்குது' அப்படின்னு வெளிநாடு போறவங்களும், ஏர்போர்ட் போறவங்களும் தான் எச்சரிக்கையா இருந்தாங்க. வித்தியாசமான நோயா இருந்தது. சுகாதாரம் இல்லாத இடங்களுக்கு போனா, மத்த வியாதிகள் வரும். இது கார்ப்பரேட் ஆபிஸ் போனாத்தான் வரும்ங்கற நிலை. இப்ப, நிலை மாறிவிட்டது. நீக்கமற பரவிவிட்டது. யாரோட மெத்தனமோ?
ஆனா, இனியும் பல இடங்களில் மெத்தனமாத்தான் இருக்காங்க. ’ஸ்வென் ப்ளூவா இருக்குமோ? டெஸ்ட் பண்ணுங்க, டாக்டர்?’ன்னு கேட்டா, போயிட்டு நாளைக்கு வாங்கன்னு சொல்றாங்களாம். இந்த நோயினால் இறந்த குழந்தை ரிதாவின் பெற்றோரும், குழந்தையை பரிசோதித்த டாக்டரின் மெத்தனத்தைத்தான் கைக்காட்டுகிறார்கள்.
அதனால, காய்ச்சல், தொண்டை வலி, இருமல், மூக்கு ஒழுகுறது, உடம்பு வலி, தலைவலி, சோர்வு - இதெல்லாம் இருந்தா உஷாரு.
----
பொழுது போகாமல் பாட்டு கேட்க கம்ப்யூட்டர் ஆன் செய்தேன். கேட்பதற்கு பாடல்களை தேர்ந்தெடுத்து கொண்டிருந்தபோது, ஆங்கில எழுத்து வரிசை ஒழுங்கில் தமிழ் படப்பெயர்களை கவனித்தேன். வேடிக்கையாக இருந்தது. பொழுதுபோக்கலாம்ன்னு பாட்டு கேட்க வந்தா, பாட்டு கேட்காமலே பொழுது போச்சு!
அச்சமில்லை அச்சமில்லை - அச்சமுண்டு அச்சமுண்டு
அழகன் - அழகி
சின்ன கவுண்டர் - சின்ன ஜமீன் (சின்ன நாட்டாமை?)
பெரியார் - பெருமாள் (ஆங்கில வரிசைப்படி ரெண்டும் பக்கத்துல)
மிஸ்டர் பாரத் - மிஸ்டர் ரோமியோ (இன்னொரு மிஸ்டர் இருக்கே? கார்த்திக் நடிச்சது...)
ராஜ பார்வை - ராஜாவின் பார்வையிலே
ரெண்டு - ரெண்டு பேர்
ரோஜா - ரோஜாக்கூட்டம்
எங்க ஊரு பாட்டுக்காரன் - எங்க ஊரு காவல்காரன் (இதுல ’எங்க ஊரு’ ’காரன்’, இதெல்லாம் ராமராஜனோட ட்ரெட்மார்க் டைட்டில் பாகங்கள்)
நான் அடிமை இல்லை - நான் அவன் இல்லை (ஹா ஹா ஹா)
இன்னும் சில பெயர்களை பார்த்தால் காமெடியா இருந்தது. சண்டைக்கோழி, குருவி, சேவல்... இனி காக்கா, வாத்து, காடை, கௌதாரி எல்லாம் வருமோ? அப்புறம் இதுல காடை, கௌதாரியை எல்லாம் சாப்பாட்டு டேபிள்ல மட்டும் தான் பார்த்திருக்கேன்.
---
ரொம்ப நாளா பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்குற நண்பனிடம் பேசிக்கொண்டு இருந்தபோது,
“ஒரு பொண்ணும் சரியா அமைய மாட்டேங்குது”
”நீ நிறைய கண்டிசன்ஸ் போட்டு இருப்ப?”
“நிறைய இல்லை. ஒண்ணே ஒண்ணுத்தான்.”
“என்ன?”
“பார்க்குறது பொண்ணா இருக்கணும். அவ்ளோத்தான்”
---
கோர்ட் கொடுக்கும் தீர்ப்புக்கள் வர வர சுவாரஸ்யமாகவும், ஓவராகவும் இருப்பதாக ’மக்கள்’ பேசிக்கிறாங்க (நீதிமன்ற தீர்ப்புக்கு கருத்து சொல்ல கூடாதாம்ல!).
ஆண் ஆணை திருமணம் செய்து கொள்ளலாம். பெண் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம். அப்புறம், திருமணமான பிறகு தாலி அவசியம் இல்லை. கழட்டி ஆணியில் மாட்டி கொள்ளலாம். சேர்ந்து பல ஆண்டுகள் வாழ்ந்தாலே, திருமணமானதாக கருதி கொள்ளலாம். மருமகளை மாமியார் எட்டி உதைப்பது கொடுமை இல்லை. இப்படி ஒரே பரபரப்பு தீர்ப்புகள்.
நீதிமன்றங்கள் ‘பார்ம்’ல இருப்பதாக தோன்றுகிறது.
.
இதுக்கு, ’பதவிக்காக தமிழை சமரசம் செய்து கொண்ட அழகிரி’ன்னு யாராச்சும் கிளம்புவாங்களே?
ழி’க்கு ஆங்கிலத்தில் zhi என்பதற்கு ஏதேனும் காரணம் உண்டா? இப்படி உருவாக்கியவர் யார்?
---
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஊத்தங்கரை பக்கமுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகன், சேலத்தில் இருந்து வந்த அரசாங்க பேருந்தினால் ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார். ஒரே மகன். பல மாதமாகியும், வெங்கடேசனுக்கு எந்த நஷ்ட ஈடும் கிடைக்கவில்லை.
இதற்காக தொடர்ந்த வழக்கில், இரு ஆண்டுகளுக்கு முன்பு, நீதிமன்றம் வெங்கடேசனுக்கு பணம் வழங்க போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது. கழகமோ, இன்னமும் வழங்கவில்லை. பார்த்தார் நீதிபதி. வெங்கடேசனிடம் பஸ் ஸ்டாண்ட் போயி, ஒரு பஸ்ஸை எடுத்து செல்லுமாறு கூறிவிட்டார்.
இப்ப, அந்த கவர்மெண்ட் பஸ் வெங்கடேசன் வீட்டு முன்னாடி நிக்குதாம். யாரும் தூக்கிட்டு போயிட கூடாதுன்னு, அது பக்கத்திலேயே சமைச்சு, சாப்பிட்டு அதுலேயே தூங்குறாராம்.
போக்குவரத்து கழகம் மேலயும், நம்மூர் மேலயும் தான் எவ்ளோ நம்பிக்கை?
---
இப்ப சாதாரணமாக காய்ச்சல் வந்தாலோ, இல்ல ஜலதோஷம் வந்தாலோ, பன்றி காய்ச்சலா இருக்குமோன்னு பயப்பட ஆரம்பிச்சிட்டுட்டாங்க. கொஞ்ச நாள் முன்னாடி வரை, 'இது வெளிநாட்டுல தான் இருக்குது' அப்படின்னு வெளிநாடு போறவங்களும், ஏர்போர்ட் போறவங்களும் தான் எச்சரிக்கையா இருந்தாங்க. வித்தியாசமான நோயா இருந்தது. சுகாதாரம் இல்லாத இடங்களுக்கு போனா, மத்த வியாதிகள் வரும். இது கார்ப்பரேட் ஆபிஸ் போனாத்தான் வரும்ங்கற நிலை. இப்ப, நிலை மாறிவிட்டது. நீக்கமற பரவிவிட்டது. யாரோட மெத்தனமோ?
ஆனா, இனியும் பல இடங்களில் மெத்தனமாத்தான் இருக்காங்க. ’ஸ்வென் ப்ளூவா இருக்குமோ? டெஸ்ட் பண்ணுங்க, டாக்டர்?’ன்னு கேட்டா, போயிட்டு நாளைக்கு வாங்கன்னு சொல்றாங்களாம். இந்த நோயினால் இறந்த குழந்தை ரிதாவின் பெற்றோரும், குழந்தையை பரிசோதித்த டாக்டரின் மெத்தனத்தைத்தான் கைக்காட்டுகிறார்கள்.
அதனால, காய்ச்சல், தொண்டை வலி, இருமல், மூக்கு ஒழுகுறது, உடம்பு வலி, தலைவலி, சோர்வு - இதெல்லாம் இருந்தா உஷாரு.
----
பொழுது போகாமல் பாட்டு கேட்க கம்ப்யூட்டர் ஆன் செய்தேன். கேட்பதற்கு பாடல்களை தேர்ந்தெடுத்து கொண்டிருந்தபோது, ஆங்கில எழுத்து வரிசை ஒழுங்கில் தமிழ் படப்பெயர்களை கவனித்தேன். வேடிக்கையாக இருந்தது. பொழுதுபோக்கலாம்ன்னு பாட்டு கேட்க வந்தா, பாட்டு கேட்காமலே பொழுது போச்சு!
அச்சமில்லை அச்சமில்லை - அச்சமுண்டு அச்சமுண்டு
அழகன் - அழகி
சின்ன கவுண்டர் - சின்ன ஜமீன் (சின்ன நாட்டாமை?)
பெரியார் - பெருமாள் (ஆங்கில வரிசைப்படி ரெண்டும் பக்கத்துல)
மிஸ்டர் பாரத் - மிஸ்டர் ரோமியோ (இன்னொரு மிஸ்டர் இருக்கே? கார்த்திக் நடிச்சது...)
ராஜ பார்வை - ராஜாவின் பார்வையிலே
ரெண்டு - ரெண்டு பேர்
ரோஜா - ரோஜாக்கூட்டம்
எங்க ஊரு பாட்டுக்காரன் - எங்க ஊரு காவல்காரன் (இதுல ’எங்க ஊரு’ ’காரன்’, இதெல்லாம் ராமராஜனோட ட்ரெட்மார்க் டைட்டில் பாகங்கள்)
நான் அடிமை இல்லை - நான் அவன் இல்லை (ஹா ஹா ஹா)
இன்னும் சில பெயர்களை பார்த்தால் காமெடியா இருந்தது. சண்டைக்கோழி, குருவி, சேவல்... இனி காக்கா, வாத்து, காடை, கௌதாரி எல்லாம் வருமோ? அப்புறம் இதுல காடை, கௌதாரியை எல்லாம் சாப்பாட்டு டேபிள்ல மட்டும் தான் பார்த்திருக்கேன்.
---
ரொம்ப நாளா பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்குற நண்பனிடம் பேசிக்கொண்டு இருந்தபோது,
“ஒரு பொண்ணும் சரியா அமைய மாட்டேங்குது”
”நீ நிறைய கண்டிசன்ஸ் போட்டு இருப்ப?”
“நிறைய இல்லை. ஒண்ணே ஒண்ணுத்தான்.”
“என்ன?”
“பார்க்குறது பொண்ணா இருக்கணும். அவ்ளோத்தான்”
---
கோர்ட் கொடுக்கும் தீர்ப்புக்கள் வர வர சுவாரஸ்யமாகவும், ஓவராகவும் இருப்பதாக ’மக்கள்’ பேசிக்கிறாங்க (நீதிமன்ற தீர்ப்புக்கு கருத்து சொல்ல கூடாதாம்ல!).
ஆண் ஆணை திருமணம் செய்து கொள்ளலாம். பெண் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம். அப்புறம், திருமணமான பிறகு தாலி அவசியம் இல்லை. கழட்டி ஆணியில் மாட்டி கொள்ளலாம். சேர்ந்து பல ஆண்டுகள் வாழ்ந்தாலே, திருமணமானதாக கருதி கொள்ளலாம். மருமகளை மாமியார் எட்டி உதைப்பது கொடுமை இல்லை. இப்படி ஒரே பரபரப்பு தீர்ப்புகள்.
நீதிமன்றங்கள் ‘பார்ம்’ல இருப்பதாக தோன்றுகிறது.
.
Friday, July 10, 2009
நாட்டு சரக்கு - நயன்தாரா டாட்டூ
ஆடி பிறப்பதற்கு பத்து நாட்கள் முன்பே டிவி சானல்களில் ஆடி தள்ளுபடி ஜவுளி விளம்பரங்கள் களைகட்ட தொடங்கிவிட்டது. சரவணாவில் சினேகா காண்ட்ராக்ட் முடிந்துவிட்டது போலும். இப்போது ஸ்ரீதேவிக்காக ஆடி விளம்பரத்தில் ஆடி கொண்டு இருக்கிறார் (எத்தனை ஆடி?). ராதிகா மேடம் சென்னை சில்க்ஸில் துணி வாங்க சொல்றாங்க. நல்லவேளை, இவுங்க ஆடவில்லை. ஜெயசந்திரனுக்கு லேகா வாஷிங்க்டனும், பூர்ணாவும். போத்தீஸ்க்காக சத்யராஜ் என்ன செய்ய போகிறாரோ? ஒரு வருட காண்ராக்டுக்காக ஒரு கோடி வாங்கியிருப்பதாக சொல்வதால், சும்மா விட மாட்டார்கள். பிரபு சினிமாவில் போடாத வேஷங்களை கூட கல்யாணுக்காக போடுகிறார். “சரவணா... பிரமாண்டமா...” என்று உலக அதிசய பின்னணியில் தமன்னாவும், லட்சுமிராயும் இன்னபிற அழகிகளுடன் ஆடி கழிவு துணியை பிரமாண்டமாக வாங்க சொல்கிறார்கள். ஆடி தள்ளுபடிக்கும், பிரமாண்டத்துக்கும் என்னப்பா சம்பந்தம்?
----
இன்பமோ, துன்பமோ... சந்தோஷமோ, கஷ்டமோ...
ஒரு நிமிஷம் எல்லாத்தையும் கட்டுப்படுத்திக்கிட்டு
மனசை அமைதியாக்கிட்டு யோசிச்சு
ஒரு முடிவு எடுத்தா, அது சரியா வரும்
அப்படிங்கற மாதிரி பிரபுதேவா நடிச்ச காதலன் படத்துல பாலகுமாரன் எழுதிய வசனம் ஒண்ணு வரும். எல்லோரும் அப்படி யோசிச்சா சரி. யோசிச்சிருந்தாலும் சரி.
----
நான் வேலைக்கு சேரும் முன்பு, ஒருமுறை என் நண்பனுக்காக பெங்களூர் எம்.ஜி. ரோட்டில் காத்து நின்று கொண்டிருந்தேன். தாமதமாக வந்த அவன், தனக்கு எம்.ஜி. ரோடுக்கும் ப்ரிகேட் ரோடுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றான். இரண்டு ரோடுகளும் சந்திக்கும் இடத்தில் நின்று கொண்டு அவனிடம்,
“இது எம்.ஜி. ரோடு. இந்த பக்கம் ப்ரிகேட் ரோடு. அந்த பக்கம் இருக்குறது காமராஜர் ரோடு.” என்றேன்.
அவன் ஆச்சரியத்துடன், “காமராஜர் ரோடா? இங்கேயா? எப்படி?” என்று கூறியவன், பின்பு அவனாக,
“காமராஜர் படிச்சிட்டு வேலை இல்லாம இங்க வந்திருப்பாரு. அப்ப இந்த பக்கம் தான் தங்கியிருப்பாரு!” என்று காரணம் சொல்லிக்கொண்டான்.
-----
முன்னணி ஹீரோவென்றால் ஒரு படத்திலாவது போலீஸ் வேஷம் போட்டு விடுவார்கள். முன்னணி காமெடி நடிகரென்றால் ஒரு படத்திலாவது ரவுடி வேஷம் போட்டு விடுவார்கள். முன்னணி இசையமைப்பாளர்கள் ஒரு படத்திலாவது அம்மா சென்டிமெண்ட் பாட்டுக்கு மெட்டு போட்டு இருப்பார்கள்.
இளையராஜா பல படங்களில் அம்மா பாட்டுக்கு இசையமைத்து இருக்கிறார். ஜேசுதாஸ், ரஜினி என்ற சூப்பர் காம்பினேஷனில் வந்த “அம்மா என்றழைக்காத உயிரில்லையே”, அம்மா பாடல்களுக்கு பெஞ்ச்மார்க்காக இருக்கிறது. இதில் வீணை, தபலா, வயலின் என்று ரொம்ப சாத்வீகமா, டிபிக்கல் இளையராஜாத்தனமாக இருக்கும். ரஹ்மானுக்கு நியூ படத்தில் வரும் “காலையில் தினமும்” பாடல். இதில் அவருக்கே உரிய கீ-போர்டு, டிரம்ஸுடன் இருந்தாலும் ரொம்ப அடிதடியாக பீட்டுடன் இல்லாமல் அழகா இருக்கும். இது ரஹ்மான் டைப் பாட்டு. அப்புறம் நம்ம தேனிசை தென்றல். அவரு வியாபாரி படத்துக்காக ஒரு அம்மா பாட்டு போட்டு இருப்பாரு. பாடலில் உபயோகித்த இசை கருவிகள் ஆகட்டும், பாடலின் மெட்டு ஆகட்டும் - அக்மார்க் தேவா பாடல். இப்படி இந்த இசையமைப்பாளர்களின் இசை ஸ்டைலை தெரிந்து கொள்ள, ‘அம்மா’ பாடல் என்கிற இந்த சாம்பிள் போதும்.
----
பெஞ்ச்மார்க்ன்னு சொல்லும்போது இன்னொண்ணு நினைவுக்கு வருகிறது. சன் டிவி தமிழர்களின் வாழ்வோடு எந்தளவுக்கு கலந்திருக்கிறது என்றும் தெரிகிறது.
இரண்டு தாய்மார்கள் பேசி கொண்டார்கள்.
“எத்தனை மாசம்?”
“நாலு மாசம்”
“புரண்டு படுக்கிறானா?”
“படுக்குறான்.”
“சன் டிவில தமிழ் மாலைன்னு போடும்போது திரும்பி பார்க்கிறானா?”
“ம்ம்ம்... பார்க்குறான்.”
பார்க்காத குழந்தை விசேஷ குழந்தையாகிவிட்டது. புரண்டு படுப்பது, உட்கார்வது, தவழ்வது, நடப்பது என்பது போல் சன் டிவி தமிழ் மாலையும் குழந்தையின் வாழ்வில் ஒரு மைல் கல்லாகிவிட்டது.
----
கூகிள் அடுத்ததாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியிட போகிறார்கள். அங்கே இங்கே என்று கடைசியில் மைக்ரோசாப்டின் அடி வயித்துலேயே கை வைக்க போகிறார்கள். இணைய வசதியுடன் ஒரு சிம்பிள் மெஷினும் கூகிள் கிரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டமும் இருந்தால் போதும். ஆன்-லைனிலேயே எல்லாவற்றையும் செய்துவிடும் வசதி வந்துவிடும். நமக்கு விண்டோஸுக்கு கொடுக்குற நாலாயிரம் மிச்சமாகும். ஆனா, அத இன்டர்நெட்டுக்கு கொடுக்க வேண்டிவரும். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வந்த ஜிமெயில்ல, பீட்டா என்ற சோதனை பெயரை இந்த வாரம் தான் தூக்கியிருக்கிறார்கள். இத்தனை வருஷம் ஆனாலும் விண்டோஸில் இருக்குற ஓட்டையை இன்னமும் முழுசா அடைக்குற வழியை காணும். இந்நிலையில் கூகிளின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எப்படியிருக்குமோ?
----
பச்சை குத்திக்கறத முன்னாடி பட்டிக்காட்டான், படிக்காதவன் பண்ற வேலையா சொல்லிட்டு இருந்தாங்க. இப்ப, நாகரிகமாக அன்பின் வெளிப்பாடாக மாறிவிட்டது. டாட்டூ. கமிட்மெண்ட் இருக்குறவுங்களும், கமிட்மெண்ட் வேணுங்கறவுங்களும் பண்ணிக்கிறாங்க. நயன்தாரா பிரபுதேவாவுக்காக குத்திக்கிட்ட டாட்டூவை பாத்தீங்களா? எது எப்படியோ, அந்த டிசைன் நல்லாயிருக்குது. பி ஆங்கிலத்திலயும்... rabhu தமிழிலும்...
அந்த பி கூட எனக்கு தமிழ் போலத்தான் தெரிகிறது.

பிரபுதேவாவுக்கு தெலுங்காம்... நயன்தாராவுக்கு மலையாளமாம்... டாட்டூ தமிழில்...
வாழ்க தமிழ்!
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா
----
இன்பமோ, துன்பமோ... சந்தோஷமோ, கஷ்டமோ...
ஒரு நிமிஷம் எல்லாத்தையும் கட்டுப்படுத்திக்கிட்டு
மனசை அமைதியாக்கிட்டு யோசிச்சு
ஒரு முடிவு எடுத்தா, அது சரியா வரும்
அப்படிங்கற மாதிரி பிரபுதேவா நடிச்ச காதலன் படத்துல பாலகுமாரன் எழுதிய வசனம் ஒண்ணு வரும். எல்லோரும் அப்படி யோசிச்சா சரி. யோசிச்சிருந்தாலும் சரி.
----
நான் வேலைக்கு சேரும் முன்பு, ஒருமுறை என் நண்பனுக்காக பெங்களூர் எம்.ஜி. ரோட்டில் காத்து நின்று கொண்டிருந்தேன். தாமதமாக வந்த அவன், தனக்கு எம்.ஜி. ரோடுக்கும் ப்ரிகேட் ரோடுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றான். இரண்டு ரோடுகளும் சந்திக்கும் இடத்தில் நின்று கொண்டு அவனிடம்,
“இது எம்.ஜி. ரோடு. இந்த பக்கம் ப்ரிகேட் ரோடு. அந்த பக்கம் இருக்குறது காமராஜர் ரோடு.” என்றேன்.
அவன் ஆச்சரியத்துடன், “காமராஜர் ரோடா? இங்கேயா? எப்படி?” என்று கூறியவன், பின்பு அவனாக,
“காமராஜர் படிச்சிட்டு வேலை இல்லாம இங்க வந்திருப்பாரு. அப்ப இந்த பக்கம் தான் தங்கியிருப்பாரு!” என்று காரணம் சொல்லிக்கொண்டான்.
-----
முன்னணி ஹீரோவென்றால் ஒரு படத்திலாவது போலீஸ் வேஷம் போட்டு விடுவார்கள். முன்னணி காமெடி நடிகரென்றால் ஒரு படத்திலாவது ரவுடி வேஷம் போட்டு விடுவார்கள். முன்னணி இசையமைப்பாளர்கள் ஒரு படத்திலாவது அம்மா சென்டிமெண்ட் பாட்டுக்கு மெட்டு போட்டு இருப்பார்கள்.
இளையராஜா பல படங்களில் அம்மா பாட்டுக்கு இசையமைத்து இருக்கிறார். ஜேசுதாஸ், ரஜினி என்ற சூப்பர் காம்பினேஷனில் வந்த “அம்மா என்றழைக்காத உயிரில்லையே”, அம்மா பாடல்களுக்கு பெஞ்ச்மார்க்காக இருக்கிறது. இதில் வீணை, தபலா, வயலின் என்று ரொம்ப சாத்வீகமா, டிபிக்கல் இளையராஜாத்தனமாக இருக்கும். ரஹ்மானுக்கு நியூ படத்தில் வரும் “காலையில் தினமும்” பாடல். இதில் அவருக்கே உரிய கீ-போர்டு, டிரம்ஸுடன் இருந்தாலும் ரொம்ப அடிதடியாக பீட்டுடன் இல்லாமல் அழகா இருக்கும். இது ரஹ்மான் டைப் பாட்டு. அப்புறம் நம்ம தேனிசை தென்றல். அவரு வியாபாரி படத்துக்காக ஒரு அம்மா பாட்டு போட்டு இருப்பாரு. பாடலில் உபயோகித்த இசை கருவிகள் ஆகட்டும், பாடலின் மெட்டு ஆகட்டும் - அக்மார்க் தேவா பாடல். இப்படி இந்த இசையமைப்பாளர்களின் இசை ஸ்டைலை தெரிந்து கொள்ள, ‘அம்மா’ பாடல் என்கிற இந்த சாம்பிள் போதும்.
----
பெஞ்ச்மார்க்ன்னு சொல்லும்போது இன்னொண்ணு நினைவுக்கு வருகிறது. சன் டிவி தமிழர்களின் வாழ்வோடு எந்தளவுக்கு கலந்திருக்கிறது என்றும் தெரிகிறது.
இரண்டு தாய்மார்கள் பேசி கொண்டார்கள்.
“எத்தனை மாசம்?”
“நாலு மாசம்”
“புரண்டு படுக்கிறானா?”
“படுக்குறான்.”
“சன் டிவில தமிழ் மாலைன்னு போடும்போது திரும்பி பார்க்கிறானா?”
“ம்ம்ம்... பார்க்குறான்.”
பார்க்காத குழந்தை விசேஷ குழந்தையாகிவிட்டது. புரண்டு படுப்பது, உட்கார்வது, தவழ்வது, நடப்பது என்பது போல் சன் டிவி தமிழ் மாலையும் குழந்தையின் வாழ்வில் ஒரு மைல் கல்லாகிவிட்டது.
----
கூகிள் அடுத்ததாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியிட போகிறார்கள். அங்கே இங்கே என்று கடைசியில் மைக்ரோசாப்டின் அடி வயித்துலேயே கை வைக்க போகிறார்கள். இணைய வசதியுடன் ஒரு சிம்பிள் மெஷினும் கூகிள் கிரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டமும் இருந்தால் போதும். ஆன்-லைனிலேயே எல்லாவற்றையும் செய்துவிடும் வசதி வந்துவிடும். நமக்கு விண்டோஸுக்கு கொடுக்குற நாலாயிரம் மிச்சமாகும். ஆனா, அத இன்டர்நெட்டுக்கு கொடுக்க வேண்டிவரும். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வந்த ஜிமெயில்ல, பீட்டா என்ற சோதனை பெயரை இந்த வாரம் தான் தூக்கியிருக்கிறார்கள். இத்தனை வருஷம் ஆனாலும் விண்டோஸில் இருக்குற ஓட்டையை இன்னமும் முழுசா அடைக்குற வழியை காணும். இந்நிலையில் கூகிளின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எப்படியிருக்குமோ?
----
பச்சை குத்திக்கறத முன்னாடி பட்டிக்காட்டான், படிக்காதவன் பண்ற வேலையா சொல்லிட்டு இருந்தாங்க. இப்ப, நாகரிகமாக அன்பின் வெளிப்பாடாக மாறிவிட்டது. டாட்டூ. கமிட்மெண்ட் இருக்குறவுங்களும், கமிட்மெண்ட் வேணுங்கறவுங்களும் பண்ணிக்கிறாங்க. நயன்தாரா பிரபுதேவாவுக்காக குத்திக்கிட்ட டாட்டூவை பாத்தீங்களா? எது எப்படியோ, அந்த டிசைன் நல்லாயிருக்குது. பி ஆங்கிலத்திலயும்... rabhu தமிழிலும்...
அந்த பி கூட எனக்கு தமிழ் போலத்தான் தெரிகிறது.
பிரபுதேவாவுக்கு தெலுங்காம்... நயன்தாராவுக்கு மலையாளமாம்... டாட்டூ தமிழில்...
வாழ்க தமிழ்!
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா
Friday, July 3, 2009
நாட்டு சரக்கு - உயிர் காத்த வயாகரா
கணவன் அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருக்கிறான். மனைவி சமையல் செய்து கொண்டிருக்கிறாள். அவர்களது 6 மாத குழந்தை கட்டிலில் படுத்தவாறே, தந்தையை பார்த்து கொண்டிருக்கிறது.
அடுப்பாங்கரையில் இருக்கும் மனைவியிடம், கணவன் பெருமையுடன்,
“ஏண்டி, பிள்ளை என்னையே பார்த்துக்கிட்டு இருக்கான். புள்ளைக்கு என்ன யோசனையோ?”
சலிப்புடன் “என்ன யோசிப்பான்? யாருடா இது? காலையிலேயே கிளம்பி போறாரு? கையில பெரிய சாப்பாடு கூடை வேற மறக்காம எடுத்துட்டு போறாரு. நைட் திரும்ப வாராரு. சாப்பிட்டுட்டு தூங்க போயிடுறாரு. மறுபடியும் காலையிலேயே எந்திரிச்சு போறாரு. எதுக்கு இவரு இப்படி இருக்காரு?’ன்னு ஆச்சரியத்தோடு யோசிச்சிட்டு இருப்பான்.”
---
அருந்ததீ பார்த்துட்டு வந்த அனுஷ்காவின் தீவிர ரசிகனான நண்பனிடம்,
“படம் எப்படி?”
“ம்ம்ம்... நல்லாயிருந்துச்சு”
”பயந்திட்டியா?”
“ஆமாம். ’நல்லா’ நடிச்சிட்டு இருந்த அனுஷ்கா, இந்த படத்தோட வெற்றியால, இனி இப்படி தான் நடிப்பாங்களோன்னு பயமாயிருந்துச்சு.”
----
ராஜஸ்தானில் ஒரு வேலை இருக்கிறது. ஷிப்ட் 5 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம் வரை. கிட்டத்தட்ட 100 பேர் இந்த தொழிலில் அங்கு ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். தினசரி சம்பளம். ஒருநாளுக்கு 500 ரூபாயிலிருந்து 2000 வரை சம்பாதிக்கிறார்கள். உடனே, என்ன? எது? என்று கிளம்பி விடாதீர்கள். சராசரி மக்களால் முடியாதது அது.
அஜ்மீர் தர்காவில் பிச்சை எடுப்பது தான் அந்த தொழில். ஆனால், இந்த சம்பாத்தியம் எல்லாம் வருடத்திற்கு 10 நடக்கும் உருஸ் விழாவில் மட்டும் தான். 10 கோடி வரை டர்னொவர் வருமாம். தினமலரில் வந்த இந்த செய்தியில், இவ்வாறு பிச்சை எடுத்து சம்பாதிப்பவர்களை, ‘பிச்சைக்கார தொழிலதிபர்கள்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். என்ன முரண்பட்ட வார்த்தைகள்?
----
பொல்லாதவன் வந்த சமயம். டீக்கடையில் இருவர். (ஜூ.வி. பாணி!)
“இயக்குனர் மேல கேஸ் போட போறாங்களாம்”
“ஏன்?”
“பைக் வாங்கினதுக்கப்புறம், ஹீரோயின் லவ் பண்றதா காமிச்சிருக்கதால, பெண்கள இழிவுப்படுத்தியிருக்கறதா சொல்லி கேஸ் போட போறாங்களாம்.”
“அடப்பாவமே!”
“விடு... எப்படி தனுஷ லவ் பண்றதா காட்டலாம்?ன்னு சொல்லி கேஸ் போடலயே?”
----
அமெரிக்காவுல இருக்குற ஒரு யூனிவர்சிட்டில ஒரு ஆராய்ச்சி பண்ணியிருக்காங்க. ஆணி அடிப்பதில் யார் சிறந்தவர்கள்? ஆண்களா? பெண்களா? வேலையத்தவனுங்க. என்ன கண்டுப்பிடிச்சிருக்காங்கன்னா, பெண்கள் தான் நல்லா, கரெக்டா ஆணி அடிப்பாங்களாம். ஆனா, வெளிச்சத்துல தான் பெண்களோட துல்லியம் எல்லாமுமாம். இருட்டுனா, ஆண்கள் தானாம்.
டேய், என்னடா சொல்ல வாரீங்க?
---
லண்டலில் போன வருடம் பிறந்த ஆலிவருக்கு, பிறக்கும் போதே இதயத்தில் ஒரு குறைபாடு. பிறந்து 16 நாட்களில், ஒரு ஆபரேஷன் செய்து அதை சரி செய்திருக்கிறார்கள் லண்டன் டாக்டர்கள். மூன்றாம் மாதத்தில், ஆலிவர் ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட, ரயில்வேயில் வேலை பார்க்கும் அவன் தந்தையிடம், ”உங்க பிள்ளை பிழைக்குறது கஷ்டம். இன்னும் ரெண்டு மாசம் தான்.” என்றிருக்கிறார்கள். என்னன்னமோ சொல்லியிருக்கிறார்கள். ரத்த நாளத்தின் சுருக்கத்தால், ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. அதனால், ரத்த அழுத்தம் என்று.
பிறகு, திரவ நிலையில் இருக்கும் வயாகரா கொடுத்து பாருங்க. ரத்தம் ஓட்டம் இம்ப்ருவ் ஆகும்ன்னு சொல்லி இருக்காங்க. அன்னையிலிருந்து, தினமும் ஆறு வேலை வயாகரா எடுத்துக்கிறான். இதோ, இன்னும் சில நாட்களில் தனது முதல் பிறந்த நாளை கொண்டாடப் போகிறான் ஆலிவர். ”வயாகரா, நயாகரா” என்று மற்றவர்கள் பாடிக்கொண்டிருக்க, “வயாகராதான் ஆலிவரின் உயிர்காப்பான்” என்கிறார் ஆலிவரின் தந்தை.
அடுப்பாங்கரையில் இருக்கும் மனைவியிடம், கணவன் பெருமையுடன்,
“ஏண்டி, பிள்ளை என்னையே பார்த்துக்கிட்டு இருக்கான். புள்ளைக்கு என்ன யோசனையோ?”
சலிப்புடன் “என்ன யோசிப்பான்? யாருடா இது? காலையிலேயே கிளம்பி போறாரு? கையில பெரிய சாப்பாடு கூடை வேற மறக்காம எடுத்துட்டு போறாரு. நைட் திரும்ப வாராரு. சாப்பிட்டுட்டு தூங்க போயிடுறாரு. மறுபடியும் காலையிலேயே எந்திரிச்சு போறாரு. எதுக்கு இவரு இப்படி இருக்காரு?’ன்னு ஆச்சரியத்தோடு யோசிச்சிட்டு இருப்பான்.”
---
அருந்ததீ பார்த்துட்டு வந்த அனுஷ்காவின் தீவிர ரசிகனான நண்பனிடம்,
“படம் எப்படி?”
“ம்ம்ம்... நல்லாயிருந்துச்சு”
”பயந்திட்டியா?”
“ஆமாம். ’நல்லா’ நடிச்சிட்டு இருந்த அனுஷ்கா, இந்த படத்தோட வெற்றியால, இனி இப்படி தான் நடிப்பாங்களோன்னு பயமாயிருந்துச்சு.”
----
ராஜஸ்தானில் ஒரு வேலை இருக்கிறது. ஷிப்ட் 5 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம் வரை. கிட்டத்தட்ட 100 பேர் இந்த தொழிலில் அங்கு ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். தினசரி சம்பளம். ஒருநாளுக்கு 500 ரூபாயிலிருந்து 2000 வரை சம்பாதிக்கிறார்கள். உடனே, என்ன? எது? என்று கிளம்பி விடாதீர்கள். சராசரி மக்களால் முடியாதது அது.
அஜ்மீர் தர்காவில் பிச்சை எடுப்பது தான் அந்த தொழில். ஆனால், இந்த சம்பாத்தியம் எல்லாம் வருடத்திற்கு 10 நடக்கும் உருஸ் விழாவில் மட்டும் தான். 10 கோடி வரை டர்னொவர் வருமாம். தினமலரில் வந்த இந்த செய்தியில், இவ்வாறு பிச்சை எடுத்து சம்பாதிப்பவர்களை, ‘பிச்சைக்கார தொழிலதிபர்கள்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். என்ன முரண்பட்ட வார்த்தைகள்?
----
பொல்லாதவன் வந்த சமயம். டீக்கடையில் இருவர். (ஜூ.வி. பாணி!)
“இயக்குனர் மேல கேஸ் போட போறாங்களாம்”
“ஏன்?”
“பைக் வாங்கினதுக்கப்புறம், ஹீரோயின் லவ் பண்றதா காமிச்சிருக்கதால, பெண்கள இழிவுப்படுத்தியிருக்கறதா சொல்லி கேஸ் போட போறாங்களாம்.”
“அடப்பாவமே!”
“விடு... எப்படி தனுஷ லவ் பண்றதா காட்டலாம்?ன்னு சொல்லி கேஸ் போடலயே?”
----
அமெரிக்காவுல இருக்குற ஒரு யூனிவர்சிட்டில ஒரு ஆராய்ச்சி பண்ணியிருக்காங்க. ஆணி அடிப்பதில் யார் சிறந்தவர்கள்? ஆண்களா? பெண்களா? வேலையத்தவனுங்க. என்ன கண்டுப்பிடிச்சிருக்காங்கன்னா, பெண்கள் தான் நல்லா, கரெக்டா ஆணி அடிப்பாங்களாம். ஆனா, வெளிச்சத்துல தான் பெண்களோட துல்லியம் எல்லாமுமாம். இருட்டுனா, ஆண்கள் தானாம்.
டேய், என்னடா சொல்ல வாரீங்க?
---
லண்டலில் போன வருடம் பிறந்த ஆலிவருக்கு, பிறக்கும் போதே இதயத்தில் ஒரு குறைபாடு. பிறந்து 16 நாட்களில், ஒரு ஆபரேஷன் செய்து அதை சரி செய்திருக்கிறார்கள் லண்டன் டாக்டர்கள். மூன்றாம் மாதத்தில், ஆலிவர் ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட, ரயில்வேயில் வேலை பார்க்கும் அவன் தந்தையிடம், ”உங்க பிள்ளை பிழைக்குறது கஷ்டம். இன்னும் ரெண்டு மாசம் தான்.” என்றிருக்கிறார்கள். என்னன்னமோ சொல்லியிருக்கிறார்கள். ரத்த நாளத்தின் சுருக்கத்தால், ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. அதனால், ரத்த அழுத்தம் என்று.
பிறகு, திரவ நிலையில் இருக்கும் வயாகரா கொடுத்து பாருங்க. ரத்தம் ஓட்டம் இம்ப்ருவ் ஆகும்ன்னு சொல்லி இருக்காங்க. அன்னையிலிருந்து, தினமும் ஆறு வேலை வயாகரா எடுத்துக்கிறான். இதோ, இன்னும் சில நாட்களில் தனது முதல் பிறந்த நாளை கொண்டாடப் போகிறான் ஆலிவர். ”வயாகரா, நயாகரா” என்று மற்றவர்கள் பாடிக்கொண்டிருக்க, “வயாகராதான் ஆலிவரின் உயிர்காப்பான்” என்கிறார் ஆலிவரின் தந்தை.
Friday, June 26, 2009
நாட்டு சரக்கு - உலக கண்டுப்பிடிப்பும் உள்ளூர் கண்டுப்பிடிப்பும்
லண்டனில் இருக்கும் ஹென்றி, இன்றைய தேதிக்கு உலகின் வயதான மனிதர். வயசு அதிகமில்லை. 113 ஆண்டுகள். 16 நாட்கள். இவர் இதுவரை 3 நூற்றாண்டுகள், 6 அரசாட்சிகள், 2 உலக போர்களை பார்த்திருக்கிறார்.
“நீண்ட ஆயுளுக்கு என்ன காரணம்?”
“சிகரெட், விஸ்கி... அப்புறம் பொண்ணுங்க, அடங்காத பொண்ணுங்க”
அட, உண்மையாங்க.
-----
வாஷிங்மெஷின்ல துணியை துவைக்க போட்டா, ஒரு பிரச்சினை. தண்ணி எக்கச்சக்கமா எடுக்கும். அதுக்கு முடிவு கட்ட, புது மாதிரியா ஒரு வாஷிங்மெஷின் கண்டுப்பிடிச்சிருக்காங்க. ஒரு கப் தண்ணி போதுமாம். 90% சதவிகித தண்ணீரை மிச்சம் பிடிக்கலாமாம்.
படிச்சிட்டு நண்பன் கேட்டான்.
“இதே மாதிரி ஒரே கப்புல மப்பு வர ஏதாச்சும் கண்டுபிடிப்பாங்களா?”
-----
ரயில் தண்டவாளத்தை தாண்டலாமா? தாண்டலாமே, இதுல என்ன இருக்குன்னு கேக்குறீங்களா? ஜாக்கிரதை.
அதுக்கு தண்டனை, ஆறு மாதம் வரைக்குமான ஜெயில். இந்திய தண்டவாள வரலாற்றில் முதல் முறையாக இந்த தண்டனையை பெற்றிருப்பவர், மும்பையை சேர்ந்த பிரகாஷ். மேலே கடந்து செல்ல பாலம் இருக்க, குறுக்கு வழியா குறுக்க போயிருக்கார். பிடிச்சு, ஒரு வாரம் ஜெயில வச்சிட்டாங்க.
ரயில் டிக்கெட் எடுக்காம வந்தவுங்க, தண்டவாளத்துல தலை வச்சவுங்க, மறியல் பண்றவுங்களுக்கெல்லாம் கவலைப்பட வேண்டாம். வாழ்க்கையில பெரிய இடத்துக்கு வருவீங்க.
----
உத்தரபிரதேச அரசாங்கம், கட்டுமான வேலைகளுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எல்லாம் ரொம்ப முக்கியமான வேலைகள்.
இதுவரை கன்ஷிராம், மாயாவதி சிலைகளை ஊரு பூரா வைக்க, 7 கோடி செலவு பண்ணியிருக்காங்க. 52 கோடிக்கு மார்பிள்ல யானை சிலை செஞ்சிருக்காங்க. 2008-09 ஆண்டு மட்டும் பெரிய தலைவர்களுக்கு சிலை வைக்க, 194 கோடி. அம்பேத்கர் நினைவு மண்டபத்துக்கு 231 கோடி. அடுத்ததா, 40 சிலைகளை மாயாவதி திறந்து வைக்க போறாங்களாம். அதுல, ஆறு அவுங்க சிலை.
ரொம்ப முக்கியம்...
-----
போன வாரம், கர்நாடக மின் துறை அமைச்சரை சந்திக்க வந்த ஒரு முதலீட்டாளரை, சென்னை ஏர்போர்ட்ல கைது பண்ணிட்டாங்க. ஏன்னா, அவரு தீவிரவாதியாம். பேரு, அப்பாஸி. அல்ஜீராவை சேர்ந்தவர். அந்த நாட்டு ஏர்போர்ட் குண்டு வெடிப்பில் அவரும் குற்றம் சாட்டப்பட்டவராம். சென்னையில ஜெயிலுல வச்சிட்டாங்க. அப்புறம், இண்டர்போல் எச்சரிக்கையை விலக்கிக்கொள்ள, ரிலீஸ் பண்ணிட்டாங்க.
அமைச்சர்கிட்ட ஏன் இப்படின்னு கேட்டா, மின் ஆலை நிறுவ அவரோட டீலிங் நல்லாயிருந்தது. அதான் வர சொன்னோம்ங்கறாரு. கடைசில, சர்ச்சையில இருந்து தப்பிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரியை வேலையை விட்டு தூக்கிட்டாங்க. அவரும், ஒண்ணும் பிரச்சினை இல்லை, நல்லதுன்னு அப்பாஸியோட கம்பெனியில சி.இ.ஓ.வா சேர்ந்துட்டாரு.
இப்ப, தமிழ்நாட்டு கவர்மெண்டோட பேச்சுவார்த்தை நடந்திட்டு இருக்காம் !
-----
ஒரு கோவிலுக்கு வெளியே காத்திருந்தேன். உள்ளே சென்றவர்கள் வெளியே வருவதற்காக. கோவிலுக்கு உள்ளே போகிறவர்கள் எல்லோரும், கதவில் இருந்த ஒரு உலோக வளையத்தை தட்டி கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். ஒருவர் விடாமல் எல்லோரும். பக்கத்தில் வந்த கோவில் ஊழியரிடம் கேட்டேன்.
“ஏங்க, அது என்னதுங்க? ஏன் அதை தட்டணும்?”
“அது கதவு தாழ்பாளுங்க. எவனோ ஒருத்தன் தட்டிட்டு போயிருப்பான். அதை பார்த்துட்டு எல்லோரும் ஆரம்பிச்சுருப்பாங்க.”
“நீண்ட ஆயுளுக்கு என்ன காரணம்?”
“சிகரெட், விஸ்கி... அப்புறம் பொண்ணுங்க, அடங்காத பொண்ணுங்க”
அட, உண்மையாங்க.
-----
வாஷிங்மெஷின்ல துணியை துவைக்க போட்டா, ஒரு பிரச்சினை. தண்ணி எக்கச்சக்கமா எடுக்கும். அதுக்கு முடிவு கட்ட, புது மாதிரியா ஒரு வாஷிங்மெஷின் கண்டுப்பிடிச்சிருக்காங்க. ஒரு கப் தண்ணி போதுமாம். 90% சதவிகித தண்ணீரை மிச்சம் பிடிக்கலாமாம்.
படிச்சிட்டு நண்பன் கேட்டான்.
“இதே மாதிரி ஒரே கப்புல மப்பு வர ஏதாச்சும் கண்டுபிடிப்பாங்களா?”
-----
ரயில் தண்டவாளத்தை தாண்டலாமா? தாண்டலாமே, இதுல என்ன இருக்குன்னு கேக்குறீங்களா? ஜாக்கிரதை.
அதுக்கு தண்டனை, ஆறு மாதம் வரைக்குமான ஜெயில். இந்திய தண்டவாள வரலாற்றில் முதல் முறையாக இந்த தண்டனையை பெற்றிருப்பவர், மும்பையை சேர்ந்த பிரகாஷ். மேலே கடந்து செல்ல பாலம் இருக்க, குறுக்கு வழியா குறுக்க போயிருக்கார். பிடிச்சு, ஒரு வாரம் ஜெயில வச்சிட்டாங்க.
ரயில் டிக்கெட் எடுக்காம வந்தவுங்க, தண்டவாளத்துல தலை வச்சவுங்க, மறியல் பண்றவுங்களுக்கெல்லாம் கவலைப்பட வேண்டாம். வாழ்க்கையில பெரிய இடத்துக்கு வருவீங்க.
----
உத்தரபிரதேச அரசாங்கம், கட்டுமான வேலைகளுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எல்லாம் ரொம்ப முக்கியமான வேலைகள்.
இதுவரை கன்ஷிராம், மாயாவதி சிலைகளை ஊரு பூரா வைக்க, 7 கோடி செலவு பண்ணியிருக்காங்க. 52 கோடிக்கு மார்பிள்ல யானை சிலை செஞ்சிருக்காங்க. 2008-09 ஆண்டு மட்டும் பெரிய தலைவர்களுக்கு சிலை வைக்க, 194 கோடி. அம்பேத்கர் நினைவு மண்டபத்துக்கு 231 கோடி. அடுத்ததா, 40 சிலைகளை மாயாவதி திறந்து வைக்க போறாங்களாம். அதுல, ஆறு அவுங்க சிலை.
ரொம்ப முக்கியம்...
-----
போன வாரம், கர்நாடக மின் துறை அமைச்சரை சந்திக்க வந்த ஒரு முதலீட்டாளரை, சென்னை ஏர்போர்ட்ல கைது பண்ணிட்டாங்க. ஏன்னா, அவரு தீவிரவாதியாம். பேரு, அப்பாஸி. அல்ஜீராவை சேர்ந்தவர். அந்த நாட்டு ஏர்போர்ட் குண்டு வெடிப்பில் அவரும் குற்றம் சாட்டப்பட்டவராம். சென்னையில ஜெயிலுல வச்சிட்டாங்க. அப்புறம், இண்டர்போல் எச்சரிக்கையை விலக்கிக்கொள்ள, ரிலீஸ் பண்ணிட்டாங்க.
அமைச்சர்கிட்ட ஏன் இப்படின்னு கேட்டா, மின் ஆலை நிறுவ அவரோட டீலிங் நல்லாயிருந்தது. அதான் வர சொன்னோம்ங்கறாரு. கடைசில, சர்ச்சையில இருந்து தப்பிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரியை வேலையை விட்டு தூக்கிட்டாங்க. அவரும், ஒண்ணும் பிரச்சினை இல்லை, நல்லதுன்னு அப்பாஸியோட கம்பெனியில சி.இ.ஓ.வா சேர்ந்துட்டாரு.
இப்ப, தமிழ்நாட்டு கவர்மெண்டோட பேச்சுவார்த்தை நடந்திட்டு இருக்காம் !
-----
ஒரு கோவிலுக்கு வெளியே காத்திருந்தேன். உள்ளே சென்றவர்கள் வெளியே வருவதற்காக. கோவிலுக்கு உள்ளே போகிறவர்கள் எல்லோரும், கதவில் இருந்த ஒரு உலோக வளையத்தை தட்டி கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். ஒருவர் விடாமல் எல்லோரும். பக்கத்தில் வந்த கோவில் ஊழியரிடம் கேட்டேன்.
“ஏங்க, அது என்னதுங்க? ஏன் அதை தட்டணும்?”
“அது கதவு தாழ்பாளுங்க. எவனோ ஒருத்தன் தட்டிட்டு போயிருப்பான். அதை பார்த்துட்டு எல்லோரும் ஆரம்பிச்சுருப்பாங்க.”
Saturday, June 13, 2009
நாட்டு சரக்கு - போலி ஸ்டேட்மெண்ட்ஸ்
ஐ.டி. பாதிப்பால் வேலை இழந்தவர்கள் வெறும் 1 % மட்டுமே என்று சொல்லியிருக்கிறார், நாஸ்காம் தலைவர்.
ஒரு உண்மை சம்பவம். ஒரு முன்னணி ஐ.டி. கம்பெனியில் பணி புரியும் ஒருவர், அவர்களது நிறுவனத்தில் புதியதாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் அவருக்கு வருடாந்திர ரேட்டிங்கில் 6 இல் ஒன்று சரியில்லாமல் போய்விட்டது. தேர்வு ஒன்றும் சுலபமில்லை. இதுவரை பணிப்புரிய வாய்ப்பு கிடைத்திராத தொழில்நுட்பங்களில் படித்து தேர்ச்சி பெற வேண்டும். கால நேரம் பார்க்காமல் பார்க்கும் அலுவலக வேலையுடன். அதே சமயம் அவருடைய ப்ராஜக்ட் அந்த வாரம் தான் முடிந்திருந்தது. ஃப்ரி பூல்.
மனிதவள மேலாளரிடம் இருந்து அழைப்பு. “இங்க பாருங்க. உங்களுக்கு ரேட்டிங் குறைந்து விட்டது. நீங்க வேலையும் இல்லாம இருக்கீங்க. அதனால, இன்னைக்கே ரிசைன் பண்ணிருங்க. நீங்களே ரிசைன் பண்ணிட்டுங்கன்னா, ரெண்டு மாச நோட்டீஸ் ப்ரியட் சம்பளம். நாங்களே உங்கள வேலையை விட்டு நிறுத்தினா, அப்புறம் சம்பளமும் கிடைக்காது. டாக்குமெண்ட்ஸும் ஒழுங்கா வராது.”
இதற்கும் சம்பந்தப்பட்ட நபர் ஒரு நல்ல பெர்பார்மர். அலுவலகத்தில் அவார்டுகள் வாங்கியுள்ளார். அதை சொல்லி கேட்டதற்கு, இந்த மாதம் நாங்க இத்தனை ஊழியர்களை நீக்க வேண்டி உள்ளது, வேறு வழியில்லை என்றிருக்கிறார். பேசி பார்த்து ஒன்றும் முடியாததால், வந்து மெயில் அனுப்பி விட்டார். நல்ல காலத்தில், தாமதமாகும் ஆள் விடுவிப்பு பாலிஸி, இப்ப செம பாஸ்ட்.
”கம்பெனியில வேலை இல்லங்கறத சொல்றத விட்டுட்டு, என் வேலை சரியில்லை, என் தகுதி சரியில்லைன்னு சொல்றது கஷ்டமா இருக்கு. ஹச்.ஆர். கூப்பிட்டா மொபைல்ல வாய்ஸ் அல்லது வீடியோ ரிக்கார்டரை ஆன் பண்ணிட்டு உள்ளே போங்க”ன்னு பார்ப்பவர்களிடம் சொல்லி வருகிறார்.
-----
மணி சங்கர் அய்யரிடம் இருந்து அவருடன் தொடர்புள்ளவர்களுக்கு மெயில் வந்திருக்கிறது.
“ஸாரி. இங்கிலாந்துக்கு ஒரு செமினாருக்கு வந்தேன். வந்த இடத்தில், என் பர்ஸை தொலைத்து விட்டேன். செலவுக்கு காசில்லை. ரூம் ரெண்ட் கட்டணும். உடனே 3500 டாலர் அனுப்பி வைக்கவும்.
இப்படிக்கு,
மணி.”
இப்படி. என்னன்னு அவருக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது, நான் இப்ப நியூயார்க்கில் இருக்கிறேன். என் இமெயில் ஐடி ஹாக் செய்யப்பட்டு உள்ளது. அந்த மெயில லூஸ்ல விடுங்கன்னு சொல்லியிருக்கார்.
எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு. :-)
-----
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி, மகாராஷ்ட்ரா அரசு குழந்தை நட்சத்திரங்களை பயன்படுத்தும் சானல்கள் மீது கேஸ் போட போவதாக அறிவித்துள்ளது. குழந்தைகள் என்ன கொடுமைகள் அனுபவித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், இந்த தடை கொஞ்சம் ஒவரா தெரியுது. குழந்தைகளை நடிக்க வைத்தால், என்ன வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று ஒரு சட்ட வடிவம் கொடுத்திருக்கலாம்.
மிருக வதை என்று படங்களில் மிருகங்கள் பயன்படுத்துவதை தடை செய்தார்கள். மது, சிகரெட் காட்சிகளை தடை செய்தார்கள். அடுத்தது, குழந்தை நட்சத்திரங்களா?
மூட நம்பிக்கை என்று சாமி படங்கள் எடுப்பதையும் தடை செய்தால், இராம நாராயணனின் முழு போர்ட்பொலியோவையும் மூடிய மகிழ்ச்சி கிடைக்கும். கமல், சூர்யா படங்களுக்கு பிரச்சினை இல்லை. அவர்களே குழந்தை வேஷமும் போட்டுவிடுவார்கள்.
----
கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் ஆக போகிறது. மும்பை தாக்குதல் நடந்து. இறந்தவர்களை புதைத்திருந்தால், வெறும் எலும்பு கூடு தான் மிச்சம் இருக்கும். ஆனால், இன்னமும் அந்த கேஸ் நடந்து கொண்டிருக்கிறது. மாட்டிய கஸாப்பை இன்னமும் அடையாளம் காட்ட, சாட்சியங்களை கோர்ட்டுக்கு கூப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். எத்தனை ரயில்வே கேமராக்கள். எத்தனை டிவி சானல் கேமராக்கள். படித்து உருண்டு எல்லாம் எடுத்தார்கள். ஆனால், இன்னமும் சாட்சி வேண்டுமாம். மாட்டியவனிடம் கேட்டால், அவனே ஒத்து கொள்வான்.
எல்லாம் சட்டப்படியே நடக்கட்டும். அதற்காக இப்படியா? உங்க கடமையுணர்ச்சி புல்லரிக்க வைக்கவில்லை. வயியெரிய வைக்கிறது. எலும்புகளும் மக்குவதற்குள் தீர்ப்பு சொல்லுவீங்களா?
இப்படித்தான் போன வாரம் சம்பவத்தில் குண்டடிப்பட்ட ஒரு பத்து வயது சிறுமியை சாட்சி சொல்ல அழைத்திருக்கிறார்கள். அவளும் ஊன்றுகோல் ஊன்றியப்படி கோர்ட்டுக்கு வந்து, ’நான் சொல்வது எல்லாம் உண்மை, உண்மையை தவிர வேறொன்றுமில்லை’ என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு கஸாப்பை அடையாளம் காட்டி சாட்சியம் கொடுத்திருக்கிறாள்.
எனக்கு இதுதான் குழந்தைகளுக்கெதிரான கொடுமையாக தெரிகிறது.
ஒரு உண்மை சம்பவம். ஒரு முன்னணி ஐ.டி. கம்பெனியில் பணி புரியும் ஒருவர், அவர்களது நிறுவனத்தில் புதியதாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் அவருக்கு வருடாந்திர ரேட்டிங்கில் 6 இல் ஒன்று சரியில்லாமல் போய்விட்டது. தேர்வு ஒன்றும் சுலபமில்லை. இதுவரை பணிப்புரிய வாய்ப்பு கிடைத்திராத தொழில்நுட்பங்களில் படித்து தேர்ச்சி பெற வேண்டும். கால நேரம் பார்க்காமல் பார்க்கும் அலுவலக வேலையுடன். அதே சமயம் அவருடைய ப்ராஜக்ட் அந்த வாரம் தான் முடிந்திருந்தது. ஃப்ரி பூல்.
மனிதவள மேலாளரிடம் இருந்து அழைப்பு. “இங்க பாருங்க. உங்களுக்கு ரேட்டிங் குறைந்து விட்டது. நீங்க வேலையும் இல்லாம இருக்கீங்க. அதனால, இன்னைக்கே ரிசைன் பண்ணிருங்க. நீங்களே ரிசைன் பண்ணிட்டுங்கன்னா, ரெண்டு மாச நோட்டீஸ் ப்ரியட் சம்பளம். நாங்களே உங்கள வேலையை விட்டு நிறுத்தினா, அப்புறம் சம்பளமும் கிடைக்காது. டாக்குமெண்ட்ஸும் ஒழுங்கா வராது.”
இதற்கும் சம்பந்தப்பட்ட நபர் ஒரு நல்ல பெர்பார்மர். அலுவலகத்தில் அவார்டுகள் வாங்கியுள்ளார். அதை சொல்லி கேட்டதற்கு, இந்த மாதம் நாங்க இத்தனை ஊழியர்களை நீக்க வேண்டி உள்ளது, வேறு வழியில்லை என்றிருக்கிறார். பேசி பார்த்து ஒன்றும் முடியாததால், வந்து மெயில் அனுப்பி விட்டார். நல்ல காலத்தில், தாமதமாகும் ஆள் விடுவிப்பு பாலிஸி, இப்ப செம பாஸ்ட்.
”கம்பெனியில வேலை இல்லங்கறத சொல்றத விட்டுட்டு, என் வேலை சரியில்லை, என் தகுதி சரியில்லைன்னு சொல்றது கஷ்டமா இருக்கு. ஹச்.ஆர். கூப்பிட்டா மொபைல்ல வாய்ஸ் அல்லது வீடியோ ரிக்கார்டரை ஆன் பண்ணிட்டு உள்ளே போங்க”ன்னு பார்ப்பவர்களிடம் சொல்லி வருகிறார்.
-----
மணி சங்கர் அய்யரிடம் இருந்து அவருடன் தொடர்புள்ளவர்களுக்கு மெயில் வந்திருக்கிறது.
“ஸாரி. இங்கிலாந்துக்கு ஒரு செமினாருக்கு வந்தேன். வந்த இடத்தில், என் பர்ஸை தொலைத்து விட்டேன். செலவுக்கு காசில்லை. ரூம் ரெண்ட் கட்டணும். உடனே 3500 டாலர் அனுப்பி வைக்கவும்.
இப்படிக்கு,
மணி.”
இப்படி. என்னன்னு அவருக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது, நான் இப்ப நியூயார்க்கில் இருக்கிறேன். என் இமெயில் ஐடி ஹாக் செய்யப்பட்டு உள்ளது. அந்த மெயில லூஸ்ல விடுங்கன்னு சொல்லியிருக்கார்.
எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு. :-)
-----
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி, மகாராஷ்ட்ரா அரசு குழந்தை நட்சத்திரங்களை பயன்படுத்தும் சானல்கள் மீது கேஸ் போட போவதாக அறிவித்துள்ளது. குழந்தைகள் என்ன கொடுமைகள் அனுபவித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், இந்த தடை கொஞ்சம் ஒவரா தெரியுது. குழந்தைகளை நடிக்க வைத்தால், என்ன வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று ஒரு சட்ட வடிவம் கொடுத்திருக்கலாம்.
மிருக வதை என்று படங்களில் மிருகங்கள் பயன்படுத்துவதை தடை செய்தார்கள். மது, சிகரெட் காட்சிகளை தடை செய்தார்கள். அடுத்தது, குழந்தை நட்சத்திரங்களா?
மூட நம்பிக்கை என்று சாமி படங்கள் எடுப்பதையும் தடை செய்தால், இராம நாராயணனின் முழு போர்ட்பொலியோவையும் மூடிய மகிழ்ச்சி கிடைக்கும். கமல், சூர்யா படங்களுக்கு பிரச்சினை இல்லை. அவர்களே குழந்தை வேஷமும் போட்டுவிடுவார்கள்.
----
கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் ஆக போகிறது. மும்பை தாக்குதல் நடந்து. இறந்தவர்களை புதைத்திருந்தால், வெறும் எலும்பு கூடு தான் மிச்சம் இருக்கும். ஆனால், இன்னமும் அந்த கேஸ் நடந்து கொண்டிருக்கிறது. மாட்டிய கஸாப்பை இன்னமும் அடையாளம் காட்ட, சாட்சியங்களை கோர்ட்டுக்கு கூப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். எத்தனை ரயில்வே கேமராக்கள். எத்தனை டிவி சானல் கேமராக்கள். படித்து உருண்டு எல்லாம் எடுத்தார்கள். ஆனால், இன்னமும் சாட்சி வேண்டுமாம். மாட்டியவனிடம் கேட்டால், அவனே ஒத்து கொள்வான்.
எல்லாம் சட்டப்படியே நடக்கட்டும். அதற்காக இப்படியா? உங்க கடமையுணர்ச்சி புல்லரிக்க வைக்கவில்லை. வயியெரிய வைக்கிறது. எலும்புகளும் மக்குவதற்குள் தீர்ப்பு சொல்லுவீங்களா?
இப்படித்தான் போன வாரம் சம்பவத்தில் குண்டடிப்பட்ட ஒரு பத்து வயது சிறுமியை சாட்சி சொல்ல அழைத்திருக்கிறார்கள். அவளும் ஊன்றுகோல் ஊன்றியப்படி கோர்ட்டுக்கு வந்து, ’நான் சொல்வது எல்லாம் உண்மை, உண்மையை தவிர வேறொன்றுமில்லை’ என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு கஸாப்பை அடையாளம் காட்டி சாட்சியம் கொடுத்திருக்கிறாள்.
எனக்கு இதுதான் குழந்தைகளுக்கெதிரான கொடுமையாக தெரிகிறது.
Subscribe to:
Posts (Atom)