Sunday, February 12, 2012

நானும் எஸ்ராவும்

சும்மா சீனுக்கு வச்ச தலைப்பு தான்.

இருந்தாலும், ஒரு அர்த்தம் இருக்கிறது.

எஸ்.ராமகிருஷ்ணன் காந்தி பற்றி சொன்னதாக வந்த தகவல்கள் தவறானவை என்று சர்ச்சை கிளம்பியது. பல புத்தகங்களை வாசித்து, பல திரைப்படங்களை பார்த்து, பல இடங்களுக்கு சென்று, அத்தகவல்களை மக்களுடன் பகிர்ந்துக்கொண்டு வருபவர் எஸ்ரா. வாசிக்கும் அனைத்தின் நம்பகத்தன்மையையும் சோதித்து பார்த்து சொல்வது கஷ்டமான விஷயம் தான்.


டால்ஸ்டாய்


இவற்றையெல்லாம் மிக உறுதியான தகவல்களாக எடுத்துவைக்காமல், ஒரு டிஸ்கி போட்டு பகிரலாம். அல்லது, தவறு என்று உறுதியான பிறகாவது, திருத்திக்கொள்ளலாம். இல்லாவிட்டால், சர்ச்சை தான்.

சரி. எனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?

நானும் அவர் கூறிய தகவலை, சில வருடங்களுக்கு முன்பு அவரை போலவே நம்பி, உண்மைப்போல் இத்தளத்தில் பகிர்ந்திருந்தேன்.

பெங்களூரில் வள்ளுவர் சிலை திறக்கப்பட்ட போது எழுதிய பதிவு அது.

இப்போது, அத்தகவல் தவறு என்று தெரிகிறது. தினமணியில் இது பற்றி லா.சு.ரங்கராஜன் எழுதியிருக்கிறார். அதை பற்றி, ஞாநியும் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதனால், எஸ்ரா போல் நானும் எதையோ வாசித்து ஏமாந்திருக்கிறேன் என்று தெரிகிறது. இருந்தாலும், அது உண்மையாக இருந்திருக்கலாம் என்று மனம் எண்ணுகிறது. பெருமையடிக்கத்தான். முன்பு, அலுவலகத்தில் பிற மொழியினரிடம் இதை சொல்லி பெருமையடித்திருக்கிறேன். (ஒகே... சொன்ன பொய்யை மறைச்சிடலாம்!!!)

எனிவே, என் பதிவைப் பார்த்து ஏமாந்தவர்களிடம் உண்மையை கூற கடமைப்பட்டுள்ளேன்.

அப்பதிவை வாசித்த நண்பர்களே, அதை மறந்துவிடுங்கள். ஓகே? :-)

.

No comments: