Monday, July 2, 2012

லேட்டாய் ஏறிய ராட்டினம்

பொதுவாக இணையத்தில் பார்க்கும் படங்களைப் பற்றி எதுவும் எழுதுவதில்லை. நல்லதாக எழுதுவதாக இருந்தால், இனி எழுதலாம் என்று பாலிஸியை தளர்த்திக்கொள்ள போகிறேன்.

ஏன் இணையத்தில் படம் பார்க்க வேண்டி இருக்கிறது என்பதற்கு ஒரு தன்னிலை விளக்கம். ரொம்ப சிம்பிளான விளக்கம். இங்கு திரையரங்கில் பார்க்க முடிவதில்லை என்பது தான். ஆயிரத்திற்கு மேற்பட்ட திரையரங்குகள் என்று விளம்பரப்படுத்தபட்டு, போன வாரம் வெளியான சகுனியே இங்கு வெளியாகாதபோது, ராட்டினம் போன்ற படங்களை திரையரங்குகளில் எதிர்ப்பார்க்க முடியாது.

---

படம் வெளியாகி ரொம்ப நாள் ஆனாலும், இப்போது தான் இணையத்தில் டிவிடி தரத்தில் காணக்கிடைத்தது. தூத்துக்குடியில் எடுத்த படம் என்ற சொந்த ஊர் பாசம் இருந்தாலும், பெரிதாக பார்க்க ஆர்வம் இல்லாமல் தான் இருந்தது.



படத்தின் ஆரம்பகட்ட காட்சிகளும், படத்தின் மேல் ஈடுபாட்டை ஏற்படுத்தவில்லை. அதேசமயம், திரையை அணைக்கவும் விடவில்லை.

இயல்பான காட்சியமைப்புகள். நிஜமான மனிதர்களின் யதார்த்தமான உணர்வு சார்ந்த செயல்பாடுகள் படத்தை தொடர்ந்து பார்க்க வைத்தது. பாடல்கள் தான் கொஞ்சம் தடையாக இருந்தது. காதல் காட்சிகள் அழுத்தமாக இல்லாதது, படம் முடிந்தபிறகு, இயக்குனரின் சாமர்த்தியம் என்று புரிந்தது. படம் முழுவதும், பேசாமல் வரும் அந்த பெரியவர், இறுதியில் மனதை கனக்க செய்கிறார்.

காதலை தூக்கிபிடிக்காதது, படத்தை வித்தியாசமான கதையம்சமுள்ள படங்களின் வரிசையில் சேர்க்கிறது.

இது உண்மை கதையா என்று தெரியவில்லை. அப்படி இருக்கும் வாய்ப்புகள் அதிகம். உண்மை சம்பவங்கள் பாதிப்பு இல்லாமல், இப்படி ஒரு கதையை யோசிப்பது சிரமம் என்று நினைக்கிறேன்.

படம் பார்த்தபிறகு, படம் சம்பந்தப்பட்ட சீரியஸான சிந்தனைகளை உள்ளூக்குள் கிளப்பிவிட்டால், அது நல்ல படம் என்றால், இதுவும் நல்ல படம்.

எப்படி ’வழக்கு எண்’ இளம் தலைமுறையினர் பார்க்க வேண்டிய திரைப்படம் என்று பரிந்துரைக்கப்பட்டதோ, இதுவும் அப்படிப்பட்ட படம் தான். சிறப்பான மேக்கிங் என்று சொல்லமுடியாவிட்டாலும், நேரடியாக கருத்து சொல்லாமல், இறுதியில் சில நிமிடங்கள் அனைவரையும் யோசிக்க வைக்கும் என நம்புகிறேன்.

.

3 comments:

Anonymous said...

yes...I have also watched in DVD torrents yesterday.. And the film is close to Kadhal.. But the climax is entirely different from Kadhal... But its worth to watch...

சரவணகுமரன் said...

நன்றி அன்பு

அன்புடன் அருணா said...

அட!தூத்துக்குடியா? நானும்!!