Monday, February 2, 2015

ரஜினியை பேட்டி கண்ட சுஜாதா

(முன்குறிப்பு - 2010 முற்பகுதியில் எழுதிய பதிவு இது. இன்று எதேச்சையாக பார்க்க, அப்படியே பொது நலன் கருதி, உங்கள் பார்வைக்கு...)


சுஜாதா: ரஜினி, நீங்க ரொம்ப பெருசா ஜெயிச்சிருக்கீங்க. இப்போ திரும்பி பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோணுது? உங்க வெற்றிக்கு என்ன காரணம்? ஆண்டவன் அருளா, திறமையா, அதிர்ஷ்டமா, இல்ல உழைப்பா?

ரஜினி: சத்தியமா ஆண்டவன் அனுகிரகம்தான். அவன் கருணை இல்லாம நான் வளர்ந்திருக்க முடியாது.

ஆனா, எங்கேயோ பெங்களூரில் ஒரு பஸ் கண்டக்டரா இருந்த சிவாஜிராவ், இங்கே மெட்ராஸில் ஒவ்வொரு ஸ்டுடியோவா ஏறி வாசல் கதவைத் தட்டினான் பாருங்க, அது அவனோட முயற்சி!

அப்படிக் கிடைச்ச வாய்ப்பை நிரூபிக்கணும்னு முடிஞ்சதெல்லாம் செஞ்சு போராடினான் பாரு, அது அவனோட உழைப்பு.

நாம நிச்சயம் ஒரு நாள் ஜெயிப்போம்னு கனவு கண்டானே... அது அவனோட நம்பிக்கை.

அதோட, ஜனங்களைத் தன்னாலயும் எண்டர்டெயின் பண்ண முடியும்னு கெடந்து பல்டி அடிச்சான் பாருங்க, அது அவனோட திறமை.

அதுக்கு இந்த மக்களோட அன்பு கிடைச்சதே, அது அவன் செஞ்ச பாக்யம்!

---

பொத்திவெச்ச உள்ளங்கை மாதிரி இருக்கு வாழ்க்கை. ‘கண்டக்டர் டு சூப்பர் ஸ்டார்’னு என் கிராஃபை ஒரு கதையாச் சொன்னா யாராவது நம்புவாங்களா? நான் பஸ் கண்டக்டரா இருந்தேன். ரொம்ப சின்ன வேலை. சின்ன சம்பளம். ஆனால் அப்பவும் நான் சந்தோஷமா இருந்தேன். பெங்களூரிலேயே ஸ்டைலான கண்டக்டர் நான் தான். என் விசிலுக்கே அவ்வளவு ரசிகர்கள் இருப்பாங்க. நான் வர்ற பஸ்ஸுக்காக ரெண்டு பஸ்ஸை மிஸ் பண்ணிட்டுக் காத்திருந்த பாசஞ்சர்ஸ்லாம் உண்டு. இப்போ நினைச்சுப் பார்த்தா, என்னையறியாம அப்பவும் நான் ஒரு எண்டர்டெயினராத்தான் இருந்திருக்கேன்னு தெரியுது.

---

விகடன் நிருபர்: நமக்கு பையன் இல்லையேன்னு எப்பவாவது யோசிச்சதுண்டா?

ரஜினி: நெவர்! ஆண் பிள்ளை இல்லியேனு யோசிச்சதே இல்லை. ரெண்டும் பெண் குழந்தைகள்னு சந்தோஷப்பட்ட நேரங்களே அதிகம். ஐஸ்வர்யா-சௌந்தர்யானு நான் ரெண்டு பெண்களுக்குத் தகப்பன். காலையில் எந்திரிச்சு வரும்போது, வீட்டில் ரெண்டு மகள்களும் கலகலனு நடமாடுறதைப் பார்த்தாலே ஒரு தனி சந்தோஷம் வரும். ஆமா, ஒரே ஒரு பொண்ணு இருந்தாக்கூட போதும்... அந்த வீட்டுக்கே உயிர் வந்துடும். ஏன்னா... பெண் தான் சக்தி... தாய்!


இது ஆண்டவன் கட்டளை.
விகடன்.

No comments: