Tuesday, October 7, 2008

கஜயகாந்த் கடிவேலுவின் நேருக்கு நேர்

கஜயகாந்த் கடிவேலுவை சீண்ட(!), வெகுண்டு எழுந்த கடிவேலு, 2011 சட்டமன்ற தேர்தலில் நிற்கிறார். தேர்தல் நேரத்தில் மட்டும் கொஞ்சம் மருவாதையாக வாழும் மிஸ்டர். பொதுஜனத்தை சந்திக்க கிளம்புகிறார்கள். பிரச்சாரத்தில், ஒரு வீட்டில் இருவரும் ஒரே நேரத்தில் நுழைய நேரிடுகிறது.

பொதுஜனம் : பாத்து வாங்கையா. நாலு பேரு வந்து போற இடம் இல்லையா?
கஜயகாந்த் (கடிவேலுவை பார்த்து) : யோவ் யோவ்... என்னய்யா இங்கே வந்துருக்கே?
கடிவேலு : வேற எங்கே போறது?
கஜயகாந்த் : இது கார்பரேசன் ஏரியா. இங்கே வருரதுன்னா, எலெக்சன் கமிசன் கிட்ட அனுமதி வாங்கணும்.
பொதுஜனம் : யோவ் யோவ் யோவ்! ஒட்டு வேணும்னா கேட்டு தொலைங்கையா. அதுக்கு ஏன் சுத்தி வளச்சி கண்டதையும் பேசுறீங்க.
பதிஷ் (கஜயகாந்திடம்) : தலைவா, வாங்க வேற வீட்டுக்கு போகலாம்.
கஜயகாந்த் : இருப்பா. (பொதுஜனத்திடம் திருப்பி). புரிதில்ல புரிதில்ல. அப்ப வோட்ட எனக்கு போடுங்க.
கடிவேலு : அய்யா, காமெடி பண்ணி ரொம்ப நாளு ஆகுதையா. வோட்ட எனக்கு போடுங்கையா.
கஜயகாந்த் : ஏய்! ஒரு அரசியல் தலைவர் நின்னு பிரச்சாரம் பண்ணிட்டு இருக்கும் போது, "ஐயா, கொய்யா"ன்னுட்டு. சத்தம் இல்லமா கேக்கணும் ராஸ்கல்.
பொதுஜனம் : சரி, சரி. ரெண்டு பேரும் சண்ட போடாதிங்கையா.
கஜயகாந்த்: ஏய், நான் எப்படா இவன் கூட சண்டை போட்டேன்? சண்ட போடுற அளவுக்கு இவன் எனக்கு இக்குவலான்ன ஆளா?
பொதுஜனம் : டிவி பாக்குற நேரத்துல உசுர வாங்கதிங்கையா. ரெண்டு பேரும் ஓரமா நில்லுங்க.
கடிவேலு : சரிங்க சாமி

கடிவேலு ஓடி சென்று கஜயகாந்த் பக்கம் நிற்கிறார்.

கஜயகாந்த் : டேய்! என்னடா இங்க வந்து நிக்குற?
கடிவேலு : அவருதானே, நம்ம ரெண்டு போரையும் ஓரமா நிக்க சொன்னாரு.
கஜயகாந்த் : தல்ட்ரா, தல்ட்ரா... முதல்ல... (பொதுஜனத்திடம்) டேய், நான் தமிழ்நாடு பூரா பிரச்சாரம் போகணும். என் பேச்சை கேளு முதல்ல.
கடிவேலு : ஆமாண்ணே, நானும் நாலு தெரு போகணும். முதல்ல, என் பேச்சை கேளுங்க.

பின்னால் நின்று கொண்டிருந்த பழருட்டி "தூ" என்று துப்பி விட்டு செல்கிறார்.

கடிவேலு : அவரு ஏன் கோவிச்சிட்டு போறாரு? தேர்தல்ல பொறுமைதானே முக்கியம்.
கஜயகாந்த் : பார்த்திருறேண்டா இன்னைக்கு.
பொதுஜனம் : சரி சரி... சொல்லுங்க. ஆட்சிக்கு வந்தா என்ன பண்ணுவீங்க?
கடிவேலு : நான் வந்தா மக்களுக்கு எந்த கஷ்டமும் வராம பார்த்துக்குவேன். நான் பாட்டுக்கு என் வேலைய பார்த்திட்டு, அதிகாரிகள் அவுங்க வேலைய ஒழுங்கா பண்றாங்கலான்னு பார்த்துக்குவேன்.
பொதுஜனம் (கஜயகாந்திடம்) : அப்ப நீங்க?
கஜயகாந்த் : இதுவரைக்கு வந்தவுங்க தமிழ்நாட்டுக்கு ஒண்ணும் பண்ணல. நான் வந்தாலும், ஊழல ஒரு நாளுல ஒழிக்க முடியாது. நமக்கு நம்ம நாடுதான் முக்கியம். இலங்கை, பாகிஸ்தான் பிரச்சனை தீர வழி சொல்லுவேன். வீட்டுக்கு ஒரு கோழி குஞ்சு கொடுப்பேன்.
பொதுஜனம் : ஐயையையே.... அவரு என்ன அழகா வாக்குறுதி கொடுத்தாரு? நீ என்ன குழப்பிக்கிட்டு. ஒரு அரசியல்வாதியா இருந்து சட்டசபையில இருந்து அப்படி என்னதான் டிரெயினிங் எடுத்த?
கஜயகாந்த் : டேய்! சட்டசபைக்கும் இதுக்கும் என்னடா இருக்கு? அங்க இதுலம்மா சொல்லி தராங்க?
பொதுஜனம் : ஏய்! என்னை டிவி பாக்க விடாம, என் நேரத்த கெடுத்துட்டு இருந்த, மண்ட மேலயே போட்டுடுவேன். போயிடு பேசாம.
கஜயகாந்த் : ஏண்டா, இப்ப எமோசன் ஆகுற? ஏன் எமோசன் ஆகுற?
பொதுஜனம் (பயங்கர காண்டுடன் ): போட்டு தள்ளிடுவேன்... ஆமா... அந்த தங்கம் என்னா அருமையா வோட்டு கேக்குது. எப்ப பார்த்தாலும்.....

என்று சொல்லிக்கொண்டே ரீமோட்டை தூக்கி எறிய முற்படுகிறார்.

கஜயகாந்த் : டேய்.... டேய்... வாடா...வாடா.. உன்ன வச்சிக்கிறேன்... உன்ன நல்லவன்னு நம்பி வந்ததுக்கு ரீமோட்ட தூக்குறீயா?

(மனதுக்குள்) இந்த பயலுக்கு இவ்ளோ ஆதரவா?

கடிவேலுவிடம் திரும்பி,
கஜயகாந்த்: டேய்! நான் போற எடத்துக்கு "வராத வராத"ன்னு எத்தன தடவ சொல்லி இருக்கேன்?
கடிவேலு : நான் போற எடத்துக்கு நீங்க வராதீங்கன்னு எத்தன தடவ சொல்லி இருக்கேன்?
கஜயகாந்த்: என்ன விட அதிக செல்வாக்குன்னு திமிரா உனக்கு? இருடா உன்ன வச்சிக்கிறேன்...இரு... வச்சிக்கிறேன்...

(மனதுக்குள்) இவன எப்படி தூக்குறது? என் பின்னாடி தானே வருவான்? அப்ப தூக்குறேன்.

என்றபடியே, அடுத்த வீட்டுக்குள் நுழைகிறார்.

அந்த வீட்டில், இரு பொடிசுகள் சுட்டி டிவி பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
கஜயகாந்த்: தம்பிகளா! எனக்கு வோட்டு போட்டுடுங்க...
பொடுசு : இன்னும் ஒட்டு போடுற வயசு வரலிங்கையா.
கஜயகாந்த்: சரி, சரி... தேர்தல் நிதியாச்சும் கொடு.
பொடுசு : தூ... இதுலாம் ஒரு பொழப்பு?

அப்போது, அங்கு வரும் கடிவேலு, "அய்யா" என்று கூவ,
கஜயகாந்த், "சட் அப், யு நான் சென்ஸ் அண்ட் இடியேட் யு நியூ சென்ஸ்" என்று அலறியப்படி கடிவேலுவை விரட்டுகிறார் .

3 comments:

rapp said...

me the first?

rapp said...

:):):)

சரவணகுமரன் said...

வாங்க rapp,

முதல் வருகைக்கு நன்றி...