Tuesday, October 14, 2008

வாரணம் ஆயிரம் - கேட்க காரணம் ஏராளம்

அடியே கொல்லுதே

கிட்டார் ஆதிக்கம் செலுத்தும் இந்த பாடலை பென்னி, க்ரிஷ்வுடன் சேர்ந்து பாடி இருப்பவர், ஸ்ருதி கமலஹாசன். எனக்கு என்னவோ, இப்பாடலின் சரணம், "காக்க காக்க - என்னை கொஞ்சம் மாற்றி"யை ஞாபகப்படுத்தியது. முணுமுணுக்க வைக்கும் இப்பாடலில் உள்ள கிட்டார் இசை, கொஞ்சம் இரைச்சலை கொண்டு வந்தது போல் உள்ளது.

"உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும் அர்த்தங்கள் சேர்ந்திடுதே!
என் காலை நேரம், என் மாலை வானம், நீ இன்றி காய்ந்திடுதே!"


நெஞ்சுக்குள் பெய்திடும்

மென்மையான இசையில் ஹரிஹரன் தாலாட்டும் குரலில் பாடிய இந்த பாடலை, இரவு விளக்கை அணைத்து விட்டு கேட்டால், தூக்கம் உத்தரவாதம்.

"என்னோடு வா, வீடு வரைக்கும்
என் வீட்டை பார், என்னை பிடிக்கும்"


ஏத்தி ஏத்தி

இதே மாதிரி பாட்ட நான் எங்கயோ கேட்டு இருக்கென? எங்கன்னு தான் தெரியல. எதோட இன்ஷ்பிரசனோ? :-) பசங்களை பத்திய பீட் பாடல் என்பதால் என்னவோ, இந்த பாடலை மட்டும், தாமரைக்கு பதில் முத்துகுமார் எழுதிவுள்ளார்.

"லைட் ஹவுஸ் உயரத்தையும், எங்க லவ் லெட்டர் தாண்டும்
பரிட்சையில பதில் எழுத, பாதி பேப்பர்ல நோண்டும்"


முன்தினம் பார்த்தேனே

சூர்யா, அலைபாயுதே மாதவன் ஸ்டைல்'லில் பேசி ஆரம்பிக்கும் இந்த பாடல், சாக்சபோன், கிட்டார் இசையில் ஒரு அருமையான மெலடி. இப்படத்தின் பாடல்களில் முன்னணியில் உள்ள பாடல்.

"தலை சாய்க்க தோளும் தந்தாய்…விரல் கோர்த்து பக்கம் வந்தாய்…
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே..
பகல் நேரம் கனாக்கள் கண்டேன், உறங்காமலே… உயிரெண்டும் உராய கண்டேன், நெருங்காமலே…
உனை அன்றி எனக்கு ஏது, எதிர்காலமே…"


ஓம் ஷாந்தி! ஷாந்தி!

மூணு நிமிஷ பிட்டு பாடலை பாடி இருப்பவர்கள், எஸ்.பி.பி. சரணும் கிளிண்டனும். தாளம் ஏறி இறங்கும் இந்த பாடலை, இளமையான எஸ்.பி.பி. பாடியது போல் உள்ளது.

"நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழியெங்கும் உந்தன் முகம்தான்
வலிகூட இங்கே சுகம்தான்"


அவ என்ன என்ன தேடி

ஹாரிஸ்-கௌதம்-தாமரை காம்பினேசனில் இப்படி ஒரு பாடலா? என்று ஆச்சரியப்படுத்தும் இந்த பாடல், மெல்லிய குத்தில் சாதாரணமாக இருந்தாலும், இடையில் வரும் கோரஸ் டாப் கிளாஸ்.

"துணியால் கண்ணையும் கட்டி, கைய காத்தில நீட்டி, இன்னும் தேடுறேன் அவள
தனியா எங்கே போனாலோ?
வெளிச்சம் தந்தவ ஒருத்தி, அவளே இருட்டுல நிறுத்தி, ஜோரா பயணத்த கிளப்பி,
தனியா எங்கே போனாலோ?"


அனல் மேலே

சுதா ரகுநாதன் கச்சிதமாக பாடியுள்ள இப்பாடல், அட்டகாசமான மெலடி. வயலினும் சித்தாரும், பின்னால் வரும் ஹம்மிங்கும் பீல் பண்ண வைக்கிறது.

"எந்த காற்றின் அளாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ!
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ! "


மெலடிகள் நிறைந்துள்ள இப்படத்தின் பாடல்கள், ஏற்கனவே ஹிட். பொதுவா, மெலடி பாடல்களின் போது, தியேட்டரில் சிகரெட் நிறைய விற்கும். விற்பனையை, கவுதம் 'வாசுதேவ' மேனன் கட்டுபடுத்துகிறாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம். (ஒ! தியேட்டருல சிகரெட் பிடிக்க கூடாதோ?)

6 comments:

Anonymous said...

முன்தினம் பாட்டு சூப்பர்.

சரவணகுமரன் said...

ஆமாம், அனானி... சூப்பர் பாட்டு

பின் புலம் said...

apdiye padayalaium serthu inaippu koduthiruntha kettu anupavichu pathil koduthirukkalam

சரவணகுமரன் said...

ஒரிஜினல் சிடி வாங்கி கேளுங்கள் :-)

இல்ல! இருக்கவே இருக்கார், கூகுளாண்டவர்.

நாகா said...

சல்லடைக் கண்ணாலே நெஞ்சமும் புண்ணானதே....

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி, naga