Monday, August 23, 2010

நான் மகான் அல்ல

நாலைந்து கல்லூரி மாணவர்களை பார்த்து, மரண பயம் ஏற்படுமா? ஏற்படுத்தியிருக்கிறார் சுசீந்திரன். முதல் படத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாமல், ஒரு படத்தை கொடுத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். இரண்டு படத்தையும் எடுத்தது ஒரே டைரக்டர் என்றால் நம்புவோமா? இதற்கு முன்பு, இப்படி ஆச்சரியம் கொடுத்தது லிங்குசாமி. (அதற்கு பிறகு, அவர் கொடுத்தது ஏமாற்றங்களே!)



சலிப்பே இல்லாத பரபர விறுவிறு திரைக்கதை. சுப்பிரமணியபுரம் படம் பார்த்தபோது, பக்கத்தில் இருந்தவர் அடித்த கமெண்ட் - “டேய்! ஏதோ கொலைக்கார கும்பல் நடுவே உக்கார்ந்த மாதிரியே இருக்குடா!”. இதிலும் அப்படிதான் தோன்றியது. கொஞ்சம் பொல்லாதவனும், ரேனிகுண்டாவும் நினைவுக்கு வந்தது.

வயலன்ஸ் ரொம்பவே ஓவர். சரக் சரக் என்று சீவிக்கொண்டே இருக்கிறார்கள். குழந்தை மனம் படைத்த பெண்களையும்(!), நிஜ குழந்தைகளையும் பாதிக்கும் என்பதால் குடும்பத்தோடு வேண்டவே வேண்டாம்.

கார்த்தி முதலிரண்டு படங்களிலேயே, அவருடைய திறமை எல்லாவற்றையும் காட்டிவிட்டதால், அவர் என்ன செய்தாலும் பார்த்தது போலவே இருக்கிறது. தனுஷுக்கு ஏற்ற கேரக்டர். என்ன, பொல்லாதவன் போலவே இருந்திருக்கும்.

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வந்தவர்கள், நிறைய பேர் இதிலும் வருகிறார்கள். நகர தோற்றத்தில். காஜல் அகர்வாலுக்கு பெரிதாக வேலையில்லை. கார்த்திக்காகவே காத்திருந்து காதலித்துவிட்டு, பாதி படத்தில் காணாமல் போகிறார். விதவிதமான ட்ரஸ்களில் வந்தாலும், ட்ராக் சூட்டில் சூப்பர்!

யுவனின் பின்னணி இசை மிரட்டுகிறது. ”ஒரு மாலை நேரம்” பாட்டை காணும். யாருப்பா கட் பண்ணது? ஒரு டவுட். இப்பல்லாம் நல்ல பாடல்களை யுவன் பாடுகிறாரா, அல்லது அவர் பாடுவதெல்லாம் நல்ல பாட்டா தெரியுதா?

நாலு வெறி நாய்கள் ஒருவன் மீது பாய்ந்தால், அவனுக்கு எந்த மாதிரியான வெறித்தனமான தாக்குதல் உணர்வு ஏற்படுமோ, அதை ரசிகனுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் - இயக்குனரும், ஸ்டண்ட் மாஸ்டரும். வில்லன்களின் பலத்தை காட்ட, ரவுடிக்கும்பலுக்கு ஏற்படும் நிலையை இயக்குனர் காட்டுவதிலும், பார்க்கும் ஆடியன்ஸ்களுக்கே களைப்பை கொண்டு வருவது போன்ற இறுதி சண்டைக்காட்சியை அனல் அரசு அமைத்திருப்பதிலும் ஜெயித்திருக்கிறார்கள்.

படம் பார்த்து விட்டு வெளியே வந்தபோது, ட்ராபிக் சிக்னலில் பக்கத்தில் ஒரு மாருதி ஆம்னி நின்றது. நாலு பசங்க இருந்தார்கள். ஒருவன் சிகரட் அடித்துக்கொண்டிருந்தான். பைக்கில் பின்னால் உக்கார்ந்திருந்த நண்பனிடம் சொன்னேன்.

“அவன முறைச்சு பாரேன்”

“சும்மா இரேன்” என்று படக்கென்று தலையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான்.

திரும்ப, “வண்டிக்குள்ள என்ன இருக்கு பாரேன்”

“சும்மா இருடா. சீக்கிரம் கிளம்பு.”

இப்படி படத்தின் தாக்கம், திரையரங்கத்திற்கு வெளியேயும் நீளுவதில் இயக்குனர் வெற்றி பெற்றாலும், கதிகலங்கும் வயலன்ஸால் குடும்ப ஆடியன்ஸ், ரிபீட் ஆடியன்ஸ் போன்றவை டவுட்.

.

7 comments:

sakthipriya said...

oh
Nall velai
Payama iruku
nan padam pakka polamnu erunthen
no way

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கிளைமாக்ஸ் பைட் சூப்பர். ஜெயபிரகாஷ் நடிப்பும் அருமை

சரவணகுமரன் said...

சக்திப்ரியா,

எதையும் நேரடியாக காட்டவில்லையென்றாலும், காட்சிகளின் வீரியம் அதிகம் தான்.

சரவணகுமரன் said...

ரமேஷ்,

ஜெயபிரகாஷ் நடிக்கும் எல்லா படங்களிலும் கலக்குகிறார்.

சரவணகுமரன் said...

இண்ட்லி இணைப்பிற்கு நன்றி, ரமேஷ்

Kartheeswaran said...

nalla nadunilayana vimarsam... naanum intha padathai netru thaan paarthen...keep it up saravanakumaran... :)

Anonymous said...

I like to consider breaks in the course of the my working day and seem via some blogs to find out what others are referring to. This weblog occurred to show up in my searches and I couldn't aid clicking on it. I'm glad I did simply because it was a quite satisfying learn.

--------------------------------------------
my website is
http://happykidskaraoke.info

Also welcome you!