Thursday, December 23, 2010

நன்றி தமிழ்மகன்

கொஞ்ச நாட்களுக்கு முன்பு, எழுத்தாளர் தமிழ்மகன் எழுதி உயிர்மை பதிப்பகத்தின் வெளியிட்டில் வந்திருந்த ”செல்லுலாயிட் சித்திரங்கள்” என்ற புத்தகத்தை வாங்கியிருந்தேன். தமிழ்மகன், தனது திரையுலக அனுபவங்களைப் பற்றி சுவையாக எழுதிய புத்தகம் இது. உயிரோசையில் தொடராக வந்தது. அவருடைய வலைத்தளத்தில் வருவதை வாசித்திருக்கிறேன். பின்னூட்டங்களும் இட்டிருக்கிறேன்.



இன்று அந்த புத்தகத்தை எடுத்து புரட்ட ஆரம்பித்தேன்.

முதல் பக்கத்தில் நன்றி சொல்லியிருந்தார், ஒரு கூட்டத்திற்கே. இப்படி.

நன்றி

என். சொக்கன், பாஸ்டன் பாலா, உண்மைத்தமிழன், ஆயில்யன், ராஜம் ரஞ்சனி, கே. பாலமுருகன், வா.மணிகண்டன். ஜோ, வண்ணத்துப்பூச்சியார், ஆதவன், இலா, நிலோபர் அன்பரசு, வெங்கடரமணன், ஏ.மாரீஸ்வரன், வினோத் கௌதம், முரளிகண்ணன், ராமசுப்ரமணிய சர்மா, தமிழ் ஸ்டூடியோ.காம் அருண், கேபிள் ஷங்கர், ராஜா, சரவணகுமரன், தமிழ் சினிமா, கோவை ரகுநாதன் என ஊக்கமளித்து, தவறுகளைச் சுட்டிக்காட்டி எழுதிய வலைவாசி நண்பர்களுக்கு பிரத்யேகமாக.


தெரிந்த பெயர்களாக இருக்கிறதே? என்று வாசித்ததில் என் பெயரும் வந்தது. அது நானாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

எதிர்ப்பார்க்காமல் கண்ணில் பட்ட விஷயம், ரொம்ப மகிழ்வை கொடுத்தது. பின்னூட்டத்திற்கு இப்படி ஒரு நன்றியா?

உங்க நன்றிக்கு ரொம்ப நன்றி சார்.

.

5 comments:

மாணவன் said...

வாழ்த்துக்கள் நண்பரே

Anonymous said...

Can you change your blog to read it in mobile?!?!

Just like how Cable Sankar did. Also appreciate if you can post a awareness post on this. It would help people reading blogs over mobile....

Tamil cinema said...

நல்ல பதிவு நன்றி

BalHanuman said...

வாழ்த்துக்கள் சரவணகுமரன். நீங்கள் சொன்ன பிறகு தான் நான் கவனித்தேன் இந்தப் புத்தகத்தை பல மாதங்கள் முன் வாங்கியிருந்தும் கூட.

KrishnaDeverayar said...

Where is ur review for manmadhan anbu?