Tuesday, December 6, 2011

மதன் டாக்ஸ்

நேற்றைய பதிவில், பாக்யராஜ் ‘பேசலாம்’ என்று சொல்லிவிட்டு அவரே பேசிக்கொண்டு இருக்கிறார் என்று சொன்னேன். இன்று ஜெயா டிவியில் வந்த ‘மதன் டாக்ஸ்’ நிகழ்ச்சியை பார்த்தேன். டாக்ஸ் என்று இருந்தாலும், இவர் செல்வராகவனை அதிகம் பேசவிட்டார்.



செல்வராகவன் பேசியதில் சில,

”என்னால் மூன்று படங்களை, ஒரே நேரத்தில் எடுக்க முடியும்.”

”என் வாழ்க்கையே ஒரு குழப்பம். அமைதின்னா என்ன, சந்தோஷம்ன்னா என்ன? அப்படின்னு ரொம்ப சுத்தி தேடி, அலைஞ்சி திரிஞ்சு, நொந்து நூலான்னுந்துக்கப்புறம் பாத்தா, இங்க தான் பக்கத்துல இருக்கு.”

”நிம்மதியா இருக்கிறத, போர்’ன்னு நினைச்சுக்கிறோம்.”

”ஒழுக்கமாக இருப்பது தான், வாழ்க்கையில் நிம்மதி.”

”படத்தை ஒரு go'ல பாக்கணும். ப்ரேக்குக்கும், கதைக்கும் என்ன சம்பந்தம்?”

”இன்னைக்கு படத்தோட நீளம் 2:20 என்பதால், அதோடு நிறுத்தியிருக்கிறேன்.”

”எடிட்டிங் ரூம்ல படம் பார்த்து அழுதிருக்கிறேன்.”

”தனுஷ் மேலிருந்து விழுவதை ஆக்ஸிடெண்ட் என்றும் எடுத்துக்கொள்ளலாம், தற்கொலை என்றும் எடுத்துக்கொள்ளலாம்.”

”என் கதைய யாராச்சும் திருடுனாலும், என்னால ஒண்ணும் பண்ண முடியாது. வீட்ல உட்கார்ந்து அழ வேண்டியது தான். படத்துல காட்டுற மாதிரி நாங்க எல்லாம் ஹீரோ இல்ல, பயந்தாங்குளி தான்.”

”ஸ்கிரிப்ட்ல தனுஷ் அந்த போட்டோக்கிராபரை பீச்ல அடிக்கிற மாதிரி சீன் இருக்கு. ஆனா, என்னால அதை எடுக்க முடியல.”

”I don't want to give justification. I don't want to follow any rules.”

”கருத்து சொல்றதுக்கு எனக்கு எந்த தகுதியும் கிடையாது.”

”பாட்டி முகத்தில பார்த்த புன்னகைக்கும், முகத்தில விழுற இலைக்கும் ஒரே அர்த்தம் தான்.”

பாருங்க... பேசவிட்டா எவ்ளோ பேசுகிறார்?

மதனும் ”ஒரு விமர்சகர், இயக்குனருக்கு ஆலோசனை சொல்வது மோசமானது. இருந்தாலும் சொல்கிறேன்.”ன்னு சொல்லிவிட்டு, ஐடியா கொடுத்தார். செல்வராகவன் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. என் படம், அப்படித்தான் எடுப்பேன் என்பதுபோல் பேசினார். அதையும் முடிவில் மதன் பாராட்டினார்.

மதன் பேசுவதையும் சில நேரங்களில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. வேலாயுதம் விமர்சனத்தில் ராஜாவிடம் கேட்ட கேள்விகளில் சிலதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த வாரம், இயக்குனர் சார்பாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் கதை, திரைக்கதை சம்பந்தமாக பதிலளித்தது கவர்ந்தது.

---

இந்த வாரம், மதன் சாப்ளின் பற்றி கூறிய ஒரு தகவல் சுவாரஸ்யமானது.

சாப்ளின் இறந்த பிறகு, அவர் உடலை சிலர் களவாடி, பிறகு அது கணடுபிடிக்கப்பட்டு, திரும்ப திருடப்படாதபடி புதைக்கப்பட்டது, சுவையான தகவல்.

.

3 comments:

Babu said...

Ungal pathivu padikka nandraaga erunthathu. Vaalthukkal nanbare.

jhon3447 said...

arumai

jhon3447 said...

சேவைக்கு நன்றி