Wednesday, December 7, 2011

குளிரும் பஜ்ஜியும் - ஆட்டோபிக்‌ஷன் சிறுகதை



சிறிது தூரம் தான் வெளியில் நடக்க வேண்டியிருந்தாலும், குளிரில் உடல் ப்ரிஸ் ஆகிறது. இந்த குளிரில் சூடாக காபியும், மிளகா பஜ்ஜியும் சாப்பிட்டால் எப்படியிருக்கும்? நினைக்கவே உச்சந்தலையில் சுர்ரென்றது.




வீட்டுக்குள் நுழைந்ததும், பேக்கை கழட்டி வைத்து, கை காலையை அலம்பிவிட்டு, கிச்சனுக்கு சென்று, கீழ்கண்டவற்றை எடுத்தேன்.

ஒரு கப் கடலை மாவு
சிறிது அரிசி மாவு
சிறிது மைதா
கொஞ்சம் மிளகாய் பொடி
உப்பு
லைட்டா ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்

இவையனைத்தையும் தண்ணீர் விட்டு கலந்தேன்.



அடுப்பில் வாணலியில் எண்ணையை காய வைத்தாயிற்று.

ப்ரிட்ஜில் இருந்து இரண்டு மிளகாயும், கூடைக்குள் இருந்து ஒரு வெங்காயமும், ஒரு உருளைக்கிழங்கும் எடுத்து நறுக்கினேன்.



ஸ்லைஸாக நறுக்கி, கலந்து வைத்த மாவில் முக்கி, சூடான எண்ணெய்யில் போட்டேன்.



அடுப்பில் அது கிடைக்கும் வேளையில், சூடாக ஒரு காபி தயார். இந்த பக்கம், பஜ்ஜியும் ரெடி.



நேற்று இரவு வைத்த தேங்காய் சட்னி, ப்ரிட்ஜில் இருப்பது நினைவுக்கு வர, ஏதோ முன் ஜென்ம பிறப்பின் ரகசியத்தை அறிந்துக்கொண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது.



ஒரு கையில் சூடான காபி, இன்னொரு கையில் சட்னியில் முக்கிய பஜ்ஜி. ஹாட்!!!

இன்னும் நாலு க்ளைமாக்ஸ் இருக்கு. அப்புறம் சொல்றேன்.

---

அப்புறம் இத பாத்தீங்களா?

.

6 comments:

துளசி கோபால் said...

ஆஹா!!!!!!!!!!!!

Anonymous said...

nice post ...pictures are tempting ...

and HA HA HA for Chaaru Paaru ...no words ..

-Janet

அமுதா கிருஷ்ணா said...

சூப்பரு..

சரவணகுமரன் said...

வாங்க துளசிம்மா...

சரவணகுமரன் said...

நன்றி Janet

சரவணகுமரன் said...

நன்றி அமுதா கிருஷ்ணா