Friday, December 28, 2007

தங்கர்பச்சான் கதையை திருடியது யார் யார்?

இந்த வாரம் குங்குமத்துல தங்கர்பச்சான் பேட்டி வந்துருக்கு. அதுல உள்ள ஒரு கேள்வி பதில் இது.

கேள்வி: ஏற்கனவே மூணு தடவை 'ஒன்பது ரூபாய் நோட்டை' திருடி எடுத்திட்டாங்கன்னு மேடையிலயே சொன்னீங்க. எந்தந்த படங்கள்?

பதில்: மூணு பேர் என்கிட்ட என் கதையைப் படமாக்க உரிமை கேட்டதும், நான் மறுத்ததும், பிறகு உரிமை வாங்காமலேயே அதைப் படமா எடுத்திட்டதும் உண்மை. மீதியைத்தான் இப்போ நான் எடுத்திருக்கேன். பெற்ற பிள்ளைகளைப் போராடி வளர்த்து ஆளாக்கி, அவங்க வளர்ந்ததும் உதாசீனப்படுத்தபட்டு உயிரை விட்ட அப்பாக்கள் வந்த படங்களை நினைச்சுப் பாருங்க, உங்களுக்கே தெரியும்.

இப்ப எனக்கு நினைவுக்கு வர்றது, "தவமாய் தவமிருந்து". மிச்ச ரெண்டு படங்கள் எது எது?

ஆனால் ஆச்சர்யமான விஷயம், தங்கர் வழக்கம் போல கிழி கிழின்னு கிழிக்காம Hint எல்லாம் கொடுக்குறாரு. ஏற்கனவே தங்கரும் சேரனும் ஆனந்த விகடன்ல மோதிக்கிட்டாங்க. இப்ப இதுவா?

No comments: