Monday, January 26, 2009

அயன் - ஹாரிஸால் உண்டு பயன்

ரஹ்மானின் இருப்பு தமிழ்நாட்டில் குறைந்ததால், இளைஞர்களுக்கு ஏற்பட்ட இசை தாகத்தை குறைத்து வைத்து கொண்டு இருப்பவர்கள் ஹாரிஸும், யுவனும். இதில் ஹாரிஸ் ரொம்ப செலக்டிவா இசையமைத்து வருகிறார். எட்டு வருஷங்களில் இருபத்தைந்து படங்களில் மட்டும் இசையமைத்து இருக்கிறார்.

முன்பு ஹாரிஸின் ஒவ்வொரு பாடலை கேட்கும் போதும், எனக்கு ஏதோவொரு ரஹ்மானின் பாடல் ஞாபகம் வரும். பின்னணி இசையிலும் ஒரே பிட், அவரது பெரும்பாலான படங்களில் வந்துள்ளது.

இருந்தாலும் நகர இளைஞர்களுக்கு பிடித்தமான படங்களிலும், பிடித்த இயக்குனர்களின் படங்களிலும் தொடர்ந்து இசையமைத்து வருவதால், இளைஞர்களை அதிகம் கவர்ந்தவராக இருக்கிறார். என்ன... வெரைட்டி காட்ட மாட்டேங்கிறார். கிராமத்து படம் எதுவும் இசையமைக்க வில்லை. இந்த விதத்தில் யுவன் பலமிக்கவராக தெரிகிறார். பருத்தி வீரன் போன்ற படங்களில் இசையமைத்து அதிக ரீச்சை பெற்றுள்ளார்.

படம் வெற்றியோ தோல்வியோ பாடல்களை வெற்றியடைய செய்து விடுவதால், இவர் பட பாடல்களுக்கு எந்த விளம்பரமும் தேவையில்லை. வாரணம் ஆயிரம் பாடல்கள் பெரும் வெற்றியை பெற்று படத்தின் ஒப்பனிங்குக்கும் உதவி புரிந்தது. அதை தொடர்ந்து இப்போது வெளி வந்து இருப்பது அயன் பாடல்கள்.

---

நெஞ்சே நெஞ்சே

கண்டிப்பாக உடனடியாக ஹிட் ஆகும் காதல் மெலடி பாடல். வைரமுத்துவின் வரிகளை ஹரிஷ் ராகவேந்திரா ஹையாகவும், மஹதி லோவாகவும் பாடிவுள்ளார்கள். நடுவே லேசா லேசா பாடல் ஏதோவொன்றை போல் இருந்தது.

"வெயில் காலம் வந்தால் தான் நீரும் தேனாகும்
பிரிவொன்று கொண்டால் தான் காதல் ருசி ஆகும்"


விழி மூடி

ஹாரிஸ் சோக பாடல் என்றால் கார்த்திக்கை கூப்பிட்டு விடுவார் போல. அஞ்சலையை தொடர்ந்து இது. வேறு டைப். சூப்பராக உள்ளது. கடைசியில் விசில் அருமை.

"விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே"


நெஞ்சுக்குள் நுழைந்து

ஓயாயியே என்று தொடங்கும் இப்பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். இளைஞர்களை கவரும் பாடல். "அடியே கொல்லுதே" மாதிரி உள்ளது. திரும்பவும் பாருங்க. ஏதோவொரு ஒரு ஹாரிஸ் பாடலை நினைவுப்படுத்துகிறது.

"நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என்கையில் வளைந்து என்மீது மிதந்து சாலையில் நடக்கின்ற நிலவு நீ"


பள பளக்கும் பகலா நீ?

நவீன இசையில் பழைய தாளம். எம்.ஜி.ஆரின் தத்துவ பாடல் டைப். இடையில் ஹரிஹரனின் மென்மையான உச்சரிப்பும் ஹம்மிங்கும் இதமாக உள்ளது. ஆனால் முதலில் கேட்கும் போது பிடிக்க வில்லை. வரிகள் : நா. முத்துக்குமார்.

"இதுவரை நெஞ்சில் இருக்கும் சிறு துன்பங்களை நாம் மறப்போம்
கடிகார முள் தொலைத்து தொடு வானம் வரை போய் வருவோம்"


ஹனி ஹனி

மேற்கத்திய இசையில் கிளப் பாடல் போல் உள்ளது. மெதுவாக வேறு உள்ளது. தாம் தூமில் ஒரு கிளப் சாங் உண்டே? அதே போல். எனக்கு பிடிக்கவில்லை. பாதிக்கு பாதி ஆங்கிலம்.

---

ஏ.வி.எம். தயாரிப்பு, சூர்யா ஹீரோ, கே.வி.ஆனந்த் இயக்கம். இது போதாதென்று இப்போது பாடல்களை மூலை முடுக்கெல்லாம் 'பலவந்தமாக' கொண்டு சேர்க்க சன். தமிழக மக்கள் கண்டிப்பாக கேட்டாகவேண்டும்.

10 comments:

Senthil said...

me the firstu

senthil, bahrain

Anonymous said...

Harris is the best
thanks
csbabu

அப்பாவி தமிழன் said...

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆமா நான் கூட அதன் பீல் பண்ணேன்

DHANS said...

sun pictures going to distribute this film also

சரவணகுமரன் said...

நன்றி Senthil

சரவணகுமரன் said...

நன்றி csbabu

சரவணகுமரன் said...

நன்றி observer

சரவணகுமரன் said...

ஆமாம் DHANS

Anonymous said...

//இது போதாதென்று இப்போது பாடல்களை மூலை முடுக்கெல்லாம் 'பலவந்தமாக' கொண்டு சேர்க்க சன். தமிழக மக்கள் கண்டிப்பாக கேட்டாகவேண்டும்.//

Good one :-)

சரவணகுமரன் said...

நன்றி Shoban