Saturday, February 7, 2009

பிரிச்சா எல்லாம் சரியாயிடுமா?

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை பற்றி மருதன் எழுதி சமீபத்தில் வந்துள்ள ”இந்தியப் பிரிவினை : உதிரத்தால் ஒரு கோடு” புத்தகத்தை படித்தேன். பதற வைக்கும்படியான வரலாற்று நிகழ்வுகளை பற்றிய நூல். முஷாரப் அவருடைய புத்தகத்தில் பிரிவினை பற்றி குறிப்பிட்டு இருந்ததே, இந்த நூலை படிக்கும் ஆர்வத்தை எனக்குள் ஏற்படுத்தியது.

சுதந்திரம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது ஆங்கிலேயரிடம் இருந்து நள்ளிரவில் நாம் பெற்ற சுதந்திரம் மட்டும்தான். சுதந்திரம் பெற்றது எப்படி என்றால் உடனே சொல்லுவோம். காந்தி அஹிம்சை மூலம் பெற்று தந்தார் என்று. ஆனால் அதற்கு பின்னால் உள்ள காரணம், அப்போது ஏற்பட்ட பிரிவினை, தலைவர்களிடையே இருந்த இடைவெளிகள், மதத்தால் ஏற்பட்ட வலிகள் போன்றவை இப்போதுள்ள தலைமுறைக்கு தெரிந்திருக்காது. இப்படி மறைக்கப்பட்டதும் மறக்கப்பட்டதுமே பெரிய கொடுமைதான்.

நவீன படங்களில் வருவது போல் வெவ்வேறு காலக்கட்டத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை காலத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தி சொல்லாமல் காரணத்தின் அடிப்படையில் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

நினைச்சி பாருங்க. ஒரு வீட்டை பிரிக்குறதுன்னாவே எவ்ளோ பிரச்சினை வரும். நாட்டையே பிரிக்கும்போது? இப்படியெல்லாம் நடந்ததா? என்று ஆச்சரியப்படுத்தும் நிகழ்வுகள்.

முஸ்லிம் மதவாதிகள் சிலர் தங்கள் விண்ணப்பத்தை இந்திய அரசாங்கத்துக்கு அனுப்பி வைத்தார்கள். ஐயன்மீர், டில்லியில் ஆக்ரா பகுதியில் அமைந்துள்ள தாஜ்மகாலை உருவாக்கியவர்கள் மொகலாயர்கள். இதுகாறும் அது இந்தியாவில் இருந்து வந்ததைப் பற்றி எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், நாங்கள் பாகிஸ்தானுக்குப் போகும்போது, எங்கள் உயிருக்குயிரான தாஜ்மகாலையும் கொண்டு செல்ல விரும்புகிறோம். ஹிந்துக்களின் தேசத்துக்கு இனி தாஜ் தேவைப்படாது என்று நம்புகிறோம். அருள் கூர்ந்து தாஜ்மகாலை அப்படியே பெயர்த்து எடுத்து பாகிஸ்தானில் நிறுத்திவிடுங்கள்.

குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டிகள் பிரிக்கப்பட்டன. உனக்கொரு குதிரை. எனக்கொன்று. உனக்கொரு வண்டி. எனக்கொன்று. ஹார்ன் மட்டும் எஞ்சியிருந்தது. அந்த பிரிட்டிஷ் அதிகாரிக்கு குழப்பம். என்ன செய்யலாம்? காசு சுண்டிப் போடலாம் என்று நினைத்தார். ஆனால் அதில் ஒரு சிக்கல். தலையா பூவா என்பதை யார் முதலில் சொல்வது? இறுதியில் அந்த அதிகாரி சொன்னார். துரதிர்ஷ்டவசமாக இந்த ஹாரனை இரண்டாக உடைக்க முடியாது. ஆகவே, இதை நானே வைத்து கொள்கிறேன்.


இன்றைக்குதான் காங்கிரஸை மதசார்ப்பற்ற கட்சியாக சொல்லி கொள்கிறார்கள். அன்றைக்கு அது இந்தியாவின் ஹிந்து கட்சி. முஸ்லீம் லீக் முஸ்லிம்களுக்கான கட்சி. காங்கிரஸ் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராட, முஸ்லீம் லீக் பாகிஸ்தான் பிரிவினைக்காக போராடியுள்ளது. இரண்டுமே அதனதன் கோரிக்கையில் வெற்றி பெற்றது. வெற்றியின் பலன், சந்தோஷம் அல்ல. இன்று வரை தொடரும் துயரம்தான்.

ஹிந்து-முஸ்லீம் பிரச்சினை ஏதோ இன்று நேற்று வந்த பிரச்சினை இல்லை. ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் பிரச்சினை. ஒரு வகையில் சுதந்திரம் கிடைக்க காரணமாக இருந்த பிரச்சினை. பிரிட்டிஷாரரை ஓட வைத்த பிரச்சினை.

ஒட்டுமொத்த தேசத்துக்கும் சேர்த்து ஒரே சமயத்தில் மனநோய் பீடிக்குமா? ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், 1947. இந்த மூன்று மாதங்களில் நடைபெற்ற வன்முறைகளைக் கூட்டிப் பார்த்தால் அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.

மரணம் மட்டுமே நிச்சயம். ஓர் ஹிந்துவாக இருந்தால் ஒரு முஸ்லிம் மூலமாக. ஒரு முஸ்லிமாக இருந்தால் ஓர் ஹிந்துவால். அல்லது சீக்கியரால்.

ஒரு மதத்தை இழிவுபடுத்தவேண்டும் என்றால் அந்த மதத்தைச் சேர்ந்த பெண்களை இழிவுப்படுத்தினால் போதும். பர்தா அணிந்த பெண்னை பிடித்து இழுத்து வந்து அவள் அடிவயிற்றில் சூலத்தை பொறித்தால், இஸ்லாத்தை அவமதித்ததற்குச் சமம். ஓர் ஹிந்துப் பெண்ணின் மார்பில் பிறை நட்சத்திரத்தைப் பொறிப்பதன் மூலம், ஹிந்து மதத்தை இழிவு செய்யலாம். ஒரு சீக்கியப் பெண்ணைச் சித்திரவதை செய்வதன் மூலம் அவள் மதம் சாகும். இது அவர்களாகவே கற்பிதம் செய்து வைத்திருந்த ஒரு தத்துவம்.


இன்று வரை ஏதும் மாற்றம் தெரிகிறதா என்ன?

இந்த புத்தகத்தில் ஆசிரியர் காந்தியின் மனநிலை, நேருவின் திட்டங்கள், ஜின்னாவின் பிடிவாதம், வல்லபாய் படேலின் கிடுக்குப்பிடி இணைப்புகள், கோட்சேவின் கோபம் என்று எல்லாவற்றையும் அறிய வைத்து புரிய வைக்கிறார். ஒவ்வொரு இந்தியனும் உண்மையான சுதந்திர வரலாற்றை பற்றி அறிய வேண்டுமானால் பிரிவினை பற்றியும் அறிந்திருக்க வேண்டும். அவர்களுக்கு இப்புத்தகம் ஒரு பொக்கிஷம்.

இன்றும் நமது நாட்டுக்குள்ளேயும், வெளியேயும் பிரிவினை கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. பிரிவினை நல்ல தீர்வா? பிரிவினை பிரச்சினையை தீர்த்து வைக்குமா? வரலாற்றை பார்த்தால் கண்டிப்பாக இல்லை. பிரச்சினை வேறு விதமாக மாறுகிறது. அவ்வளவே. வரலாற்றில் இருந்து பாடம் கற்பது அவசியம். இல்லாவிட்டால், வேதனை தரும் நிகழ்வுகள் நிகழ்ந்துக்கொண்டே தான் இருக்கும்.

5 comments:

Boston Bala said...

தொடர்புள்ள கட்டுரையொன்று: India By Rajeev Bhargava :: Dissent Magazine: "Why was their departure moved up by over a year—from June 1948 to August 1947? What explains the timing of the withdrawal? What were its moral costs? Could displacement have been averted and the mass killings prevented if withdrawal had been delayed?"

சரவணகுமரன் said...

நன்றி பாலா.

அந்த லிங்க் சரியான பக்கத்திற்கு எடுத்து செல்லவில்லை.

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

Anonymous said...

I have often thought about the partition of India and Pakistan, something that most of the youth in India really don't know about. Might be the government's desire to keep anything distasteful about the past hidden for patriotism.

I differed in thought when I was younger and a huge fan of Gandhi. But a lot of the fake propaganda by Congress and subsequent history tales is coming to the light. Looking at all the communal riots since independence, I wonder if Jinnah was right? What would be the number of muslims or hindus lost, had they lived in the governments post-Independence? If the Kashmir issue was resolved, would the Indian governments still not portray as Pakistan as villain? Or vice-versa.

-kajan

சரவணகுமரன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி kajan