என்னுடைய மலையாள நண்பன், மலையாளத்தில் இந்த படம் ரிலீஸ் ஆனவுடன் பார்த்துவிட்டு சொன்னான். படம் சூப்பர். மம்முட்டியை விட சரத்குமார் தான் படத்தில் வெயிட். பின்னணி இசையில் இளையராஜா கலக்கியிருக்கிறார். ஒலிப்பதிவு - ரசூல் பூக்குட்டி. அட்டகாசம்.
அடடே! படத்தின் ஒலிப்பதிவை எல்லாம் மக்கள் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்களே? எல்லாம் ஆஸ்கார் பண்ணிய வேலை.
இப்படியெல்லாம் கேட்ட நான், அப்பொழுதே மலையாளத்தில் பார்த்துவிட வேண்டும் என நினைத்தேன். பிறகு, நேரம் அமையாததால், முடியவில்லை. தமிழில் தான் பார்க்க முடிந்தது.
படத்தில் மம்முட்டி ராஜா. சரத்குமார் தளபதி. தமிழ் ரிமேக்கின் போஸ்டரில் தளபதி தான் முன்னாடி நிற்கிறார். டைட்டிலிலும் சுப்ரீம் ஸ்டார் தான் பஸ்ட்.
இது தான் மலையாள திரைப்படவுலகின் மிகப்பெரிய பிரமாண்ட படைப்பு. எக்கச்சக்க செலவு. நல்ல வசூல். இப்படியெல்லாம் கேள்விப்பட்ட எனக்கு படத்தைப் பார்த்தபிறகு தோன்றியது. மலையாள படவுலகம் அவ்வளவு பரிதாபகரமாக இருக்கிறது? சிறைச்சாலைக் கூட இதைவிட பிரமாண்டமாக தெரிந்ததே? ஓ! அது கலைப்புலி தயாரிப்போ!
ஒருவேளை எதார்த்தமாக இப்படித்தான் இருந்தது என்பதால், இப்படி எடுத்திருப்பார்களோ? இருக்கலாம். ஆனால், படத்தில் மம்முட்டி, சரத்குமார், மனோஜ் கே. ஜெயன், பத்மபிரியா என எல்லோரும் கயிறு கட்டி பறப்பதை பார்த்தால் வேறு எதுவோ ட்ரை பண்ணியதுபோல அல்லவா இருக்கிறது.
படத்தில் நகைச்சுவை நடிகர்களாக தெரிந்தது, ஆங்கிலேயர்கள் தான். அதுவும், பரேடு போகும் ஆங்கிலேய சிப்பாய்களை கண்டு, என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
படத்தில் மம்முட்டி ரொம்ப சாந்தமான ராஜா. எப்பொழுதும் பொறுமையா, நிதானமா, யாரு என்ன சொன்னாலும் கேட்குறாரு. துரோகத்திற்கு மேல் துரோகம் செய்யும் சுமனை ஆங்காங்கே பார்த்தாலும் அப்படியே பேசிவிட்டு விட்டுவிடுகிறார். இதனால், சூழ்ச்சி செய்யும் சுமன் மற்றும் ஆங்கிலேயரை விட இப்படி எவ்ளோ அடிச்சாலும் தாங்கும் ராஜாவை பார்த்தால் எனக்கு கோபம் வருகிறது. அதற்காக வரலாற்றை மாற்றவா முடியும்? தனியாக சென்று, எல்லோரையும் சுட்டு தள்ளி, பழிக்கு பழியாக ஜெனரலை தூக்கில் தொங்கவிடுவது - கொஞ்சம் சுறுசுறு.
போராடுபவர்களிடம் இருக்கும் ஆக்ரோஷம் படத்தில் சரத்குமாரிடம் தான் இருக்கிறது. அப்புறம் மனோஜ் கே. ஜெயன். தண்ணியடித்துக்கொண்டிருக்கும் சுமனிடன் சரத் பேசும்பொழுது அவர் வாளை நீட்ட, அதை சரத் பிடித்தப்படி பேசும் காட்சியில் வெளுத்துக்கட்டியிருந்தார்.
இளையராஜாவின் இசை படத்திற்கு கொஞ்சம் ரிச்னெஸ் கொடுத்திருந்தது. ஆஹா, ஓஹோவென்று சிலர் புகழ்ந்த பாடல்களும், என்னை பெரிதாக கவரவில்லை.
பழசிராஜா படையினர் ஆங்கிலேயரிடம் தோற்றதற்கு, சூழ்ச்சி, படை பலம், ஆயுத பலம் போன்றவை சில காரணங்களாக இருந்தாலும், வேட்டியை மடித்துக்கொண்டு போரிட்டிருந்தாலே பெருமளவு சேதாரத்தை தவிர்த்திருக்கலாம் என்பது என் ஆய்வின் முடிவு.
கேரள பண்டையக்கால கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை காணும் ஆர்வமிருந்தால் பாருங்கள். அதுவும் இந்த வாரமே பார்த்துவிடுங்கள். அதற்கு பிறகு கஷ்டம் தான்.
.
Monday, November 23, 2009
பழசிராஜா
வகை
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)




8 பேரு கருத்து சொல்லியிருக்காங்க...:
plese avoid this type of film
save your time
read good books
பாத்தாப் போச்சு
அப்போ பாக்கலாம்...
சரவணகுமார்,
இது ஒன்றும் அந்தளவு மோசமான படம் கிடையாது. நல்ல முயற்சி.
வருகைக்கு நன்றி தியா
பேநா மூடி,
அப்போ பாக்கபோறீங்க...
போட்டுத் தாக்கீட்டீங்க...
ஆனாலும் கண்டிப்பாப் பாப்பேன்... ராஜாவுக்காக...
தமிழ்பறவை,
பாருங்க... பாருங்க...
Post a Comment