Monday, July 19, 2010

ரஜினியின் வலைப்பதிவு - பதிவர்களுக்கு எச்சரிக்கை

ஊர் உலகத்துல ஆளாளுக்கு ப்ளாக் ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். ரஜினி ஒன்று ஆரம்பிக்கலாம், இல்லையா? இப்படி ரஜினியை ப்ளாக் ஆரம்பிக்க சொல்லி அமிதாப்பிடம் நச்சரிக்கிறார்களாம் இணைய ரசிகர்கள்.

அமிதாப் ஒவ்வொருவரையாக ப்ளாக் ஆரம்பிக்க சொல்ல, ட்விட்டர் கணக்கு தொடங்க சொல்ல, உச்ச நட்சத்திரங்களும் அவர் பேச்சை கேட்டு தொடங்குகிறார்கள். நமக்கு ஒரு தூதுவர் கிடைத்துவிட்டார் என்றெண்ணி பெரும்பாலான ரசிகர்களும் அவரிடம் ரஜினிக்கு இணையத்தில் ஒரு துண்டு போட்டு சீட் பிடிக்க நெருக்குகிறார்களாம்.



’நானென்ன இம்மாதிரி இணைய தளங்களுக்கு விளம்பர தூதுவரா?’ என்று அமிதாப் கேட்டாலும், எனக்கென்னமோ இது உண்மையாக இருக்குமோ என்று கூட தோன்றுகிறது. இப்ப கொஞ்சம் பரவாயில்லை. சில காலம் முன்பு, டிவியில் விளம்பரம் போட ஆரம்பித்தால், வரிசையாக சீப்பு, சோப்பு என எல்லாவற்றிலும் அமிதாப் தான் வருவார். ஏன் வெள்ளிக்கிழமையானால் போதும். ஏதோ ஒரு அமிதாப் படம் ரிலீஸ் ஆகிவிடும். தற்சமயம் நிலைமை சீரடைந்து இருக்கிறது. அதனால், தனது வியாபாரத்தை இணையத்தில் தொடங்கிவிட்டாரோ? என்றெண்ண தோன்றுகிறது. இப்ப ‘ஆனா, ஊனா’ என்றால் ப்ளாக், ட்விட்டர் என்பதே இவர் பேச்சாக இருக்கிறது.

ஆனால், இந்த விஷயத்தில் இவர் பேச்சையெல்லாம் ரஜினி கேட்க போவதில்லை. ரஜினி தனது இமேஜ்/ப்ராண்ட் போன்றவற்றை, பொதுஜனம்/மீடியா போன்றவற்றில் இருந்து விலகியே வளர்ப்பவர். மூடியிருப்பதை பார்க்கும் ஆசை தான், ரஜினியின் புகழ் யுக்தி. விளம்பரங்களில் நடித்து தனது சூப்பர் ஸ்டார் இமேஜை நீர்த்துப்போகாமல் வைத்திருப்பவர். அவ்வளவாக விழாக்களில், நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளாதவர். (கலைஞரின் பாராட்டுவிழாக்கள் விதிவிலக்கு). முன்புக்கு இப்போது பரவாயில்லை.

ரஜினி டிவிக்கு, பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்து எவ்வளவு நாளாகிறது? விஜய் டிவியில் அவருக்கு ‘செவாலியே சிவாஜி விருது’ வழங்கி, கோபிநாத் ஒரு சிறு பேட்டி எடுத்தார். கமல் போன்றோர் வரும் பொதுநல விளம்பரங்களில் கூட தலைக்காட்டுவதில்லை. பல வருடங்களுக்கு முன்பு, போலியோ விளம்பரத்தில் வந்தார்.

அப்படி திரைப்போட்டு வாழ்பவர், வலைப்பதிவு ஆரம்பித்து தன் எண்ணங்களை பதிவாரா, என்ன? தற்போதைக்கு சாத்தியமே இல்லை. வேண்டுமானால், இன்னும் கொஞ்சம் காலம் கழித்து, ஓய்வு நேரம் அதிகமிருக்கும் சமயத்தில் ஆரம்பிக்கலாம்.

இப்ப போய் கேட்டா, ”நம்ம கையில என்ன இருக்கு? எல்லாம்...” என்று சொல்லி மேலே கையைக் காட்டுவார்.

---

நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பம் அனுப்பும் போது, விண்ணப்பித்தவர்களைப் பற்றி அறிந்துக்கொள்ளவும், ஒருக்கட்டத்திற்கு மேல் வடிகட்டுவதற்கும், சமீபகாலங்களில் அவர்களின் பெயரை இணையத்தில் தேடி, அதன் மூலம் அவர்களின் குணாதிசயங்களை தேர்வாளர்கள் தெரிந்துக்கொள்கிறார்களாம்.

உதாரணத்திற்கு, உங்கள் பெயரை கூகிளில் தேடுங்கள். பேஸ்புக், ப்ளாக், ட்விட்டர், லிங்க்இன் - இப்படி எதிலாவது உங்கள் பக்கத்தை எடுத்துக்காட்டும். அப்படியே அங்கு இருப்பதை பார்த்தால், உங்கள் மறுபக்கம் தெரிந்துவிடும்.

நீங்க கேவலமாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்திருந்தால், மானாவாரியாக கவர்மெண்ட்டை திட்டி, நிறுவனங்களை திட்டி பதிவெழுதியிருந்தால், ஆப்பு நிச்சயம். என்ன தான் நிறுவனங்கள் கருத்து சுதந்திரத்தை அனுமதித்தாலும், அநாகரீகமாக சொல்லப்படும் கருத்தை ஏற்க போவதில்லை.

இதற்கு தான் புனைப்பெயர்கள் உதவுகிறது. ஆனால், அதிலும் சிலர் ஆர்வகோளாறில் தங்களது போட்டோவை போட்டுவிடுவார்கள். ஆக, இன்னும் கொஞ்சம் காலம் கழித்து, அதுவும் வேலைக்கு ஆகாது. அப்படி இப்படி குலுக்கி போட்டு கண்டுப்பிடித்துவிடுவார்கள். அதனால், இம்மாதிரி சிக்கல்களில் சிக்காமல் இருக்க, ஒழுக்கமாக எழுதவும். இதுவரை ஏதாவது வில்லங்கமாக எழுதியிருந்தால், உடனே தூக்கிவிடுங்கள். ஆமா, அப்படியே நாம் தூக்கினாலும், கூகிள் கேச் விடவா போகிறது?!!!

இனியாவது இதையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு பதிவெழுதவும். இல்லாவிட்டால், முற்றிலும் வேறொரு முகமூடியுடன் பதிவெழுதவும்.

ஆனால், அதில் மல்டிபிள் டிஸ்ஆர்டர் வியாதி வரும் ஆபத்து இருப்பதால், ஒழுக்கமே விழுப்பம் தரும்.

.

7 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

writttu

சி.பி.செந்தில்குமார் said...

இப்போ என்ன சொல்ல வர்றீங்க?பதிவை ஜாக்கிரதையா போடனுமா?ஆணீயே எடுக்க வேணாம்கறீங்களா?காமெடி சென்ஸ் தெறிக்கும் பதிவு.

Meerapriyan said...

enna sir payamuruthuringa? irunthalum echarikkaiyudan ezhuthuvathu nallathu than!-meerapriyan.blogspot.com

சரவணகுமரன் said...

நன்றி ரமேஷ்

சரவணகுமரன் said...

செந்தில்குமார், ஆணியை பாத்து அடிங்க’ங்கறேன்...

சரவணகுமரன் said...

ஆமாம் மீராப்ரியன்

Anonymous said...

epavume nallapadiya eluthuna than epavum nall mathipu erukum.

avar twit eluthina enna elathati enna epa athu romba mukiyam parunga
yen sir tension pannarenga avar epadiye than ethanayo varusama makkala yemathitu erukar. avara pathi solli nenga than time waste seythutenga