Monday, November 29, 2010

ரிசண்ட் படங்கள் - நவம்பர் 2010

குவாட்டர் படத்திற்கு பிறகு இப்படி ஒரு குவார்ட்டருக்கு படங்களைச் சேர்த்து எழுதுவேன் என்று நினைக்கவில்லை. எழுதி நாளாகிறது. எழுதுவதிற்கிடையே இடைவெளி கூடுகிறது. காரணம் பல. ஒன்று சொல்கிறேன். கேளுங்கள்.

அன்று ஒரு பதிவை மாங்கு மாங்கென்று டைப் செய்துக்கொண்டிருந்தேன். எனக்கு ஒரு கெட்ட பழக்கம். டைப் அடித்து, உடனுக்குடன் Ctrl+S அடிக்க மாட்டேன். நீளமாக, நேர்த்தியாக(!) நோட்பேடில் அடித்து முடிக்கும் சமயம், வீட்டில் இருந்த பொடிசு ஒன்று, கம்ப்யூட்டரை அசால்ட்டாக ஆஃப் செய்துவிட்டு சென்றுவிட்டது. திரும்ப ஆன் செய்து பார்த்தப்போது, முதல் பாரா மட்டுமே இருந்தது. அதை பார்த்தப்பிறகு, திரும்ப டைப் செய்யவா தோன்றும்? இருங்க, Ctrl+S பண்ணிக்கிறேன்!

---

மைனா

ஒவ்வொரு படமும் ஓட, ஒவ்வொரு காரணம் இருக்கும். இந்த படம் ஓட, விநியோகஸ்தர் முக்கிய காரணம். பருத்திவீரனின் பாதிப்பையும் மீறி, மக்களை கவர்ந்து கைத்தட்ட வைத்தது - போலீஸ் கேரக்டர் ருத்ரதாண்டவம் ஆடும் இறுதிக்காட்சி. பஸ் கவிழ்ந்து விழுந்த பிறகு, தலையை துடைத்துக்கொண்டே ஒருவர் போனில் பேசும் காட்சிக்கு ரொம்பவே சிரித்தேன். அதில் நீளமான வசனத்தை குறைத்திருக்கலாம்.

இமான் பாடல்கள் எப்போதும் பிடிக்கும். இப்படத்தின் பாடல்கள், படம் பார்த்தப்பிறகு இன்னமும் பிடித்தது. இந்த இயக்குன-இசையமைப்பாள கூட்டணி தொடர்ந்து ஹிட்டடித்தால் நன்றாக இருக்கும்.

நகரம் மறுபக்கம்

வடிவேலு, ரொம்ப நாட்கள் கழித்து, திரையரங்கை குலுங்க வைத்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, சுந்தர் சி. இயக்கம் என்பதால் ஒரு பேமிலி காமெடி பட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படத்தை பார்த்தால் சுராஜ் படம் போல் இருந்தது. சிஷ்யர்களின் படங்களில் குருவின் தாக்கம் தெரியும். இங்கு குருவின் படத்தில் சிஷ்யரின் பாதிப்பு. விறுவிறுப்பான சம்பவங்கள் மூலம் காட்சிகளை நகர்த்தியதால், பெரிய சேதாரம் இல்லை. மீண்டும் பழைய படி, ஒரு பொள்ளாச்சி ஏரியா படத்தை சுந்தர் சி.யிடம் எதிர்ப்பார்க்கிறேன்.

ஹாரி பாட்டர்

இதை எவண்டா குழந்தைகள் பார்க்குற படம்’ன்னு சொன்னது? செம மொக்கை. இந்த மாதிரி கிராபிக்ஸை, இன்னுமா மக்கள் ரசிக்கிறார்கள்? தயவுசெய்து, குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம். இன்னொருமுறை, எந்திரனுக்குக்கூட கூட்டி செல்லலாம்.

நந்தலாலா



கமர்ஷியல் படத்தையும் கலைப்படைப்பாக எடுப்பதால்தான் மிஷ்கினை பிடித்திருந்தது. இதில் வெறும் கலை, அழகியல் மட்டும்.

எங்காவது நடந்துக்கொண்டிருப்பார்கள். பிறகு, எதையோ பார்த்து அப்படியே நின்றுவிடுவார்கள். கொஞ்ச நேரம் கழித்து, கேமரா தள்ளிவரும். அங்கு யாராவது நிற்பார்கள். இப்படி ஒரு முறை வந்தால் பரவாயில்லை. இப்படியே வந்துக்கொண்டிருந்தால்...?

அஞ்சாதேயில் வந்ததை போல, கால்களிடையே உலாவும் கேமரா, இதில் அடிக்கடி அப்படியே உலாவுவதால், அந்த கிக்கும் போச்சு. படம் பார்க்கும் போது நிறைய விஷயங்கள் ரசித்தாலும், படத்தின் வேகத்தினால், யூகிக்க முடிந்த திருப்பங்களால், பாராட்டும்படியான படம் பார்த்த உணர்வு வரவில்லை. இதற்கும் அந்த ஜப்பான் படத்தை பார்க்கவில்லை. கடைசிக்காட்சியில் ரோகிணியின் கெட்டப்பைப் பார்த்தப்போது, இதுவும் ஜப்பான் படமாக தான் தெரிந்தது.

மிஷ்கின் நடிப்பைப் பார்த்தப்போது, எனக்கு நரேன் தான் நினைவுக்கு வந்தார். முந்தைய படங்களில், தன்னுடைய நடிப்பை நரேன் மூலம் வெளிக்காட்டி இருந்தார். இருந்தாலும், அரை நிமிடத்திற்கு ஒரு ஸ்டில் கொடுத்துவிட்டு, எதுவானாலும் பிறகு செய்ய ஆரம்பிப்பது ஓவரு உலகத்தரம்!

இளையராஜா இல்லாவிட்டால் அவ்வளவுதான். இம்மாதிரி படங்களில் இளையராஜா குரலில் ஒரு பாடல் வரும்போது, தொண்டை அடைக்கும். உ.தா. அழகி - உன் குத்தமா. இதிலும் ஒரு பாட்டு வருகிறது. ஒன்றும் அடைக்கவில்லை. அது ஏன் மிஷ்கின் இத்தனை பாடல்களை இளையராஜாவிடம் வாங்கி, சிலதை மட்டும் பயன்படுத்தினார்? முக்கியமாக குறவர் பாடல் இல்லை.

என்னமோ தெரியவில்லை. எழுத்தாளர்களுக்கெல்லாம் பிடித்திருக்கிறது. கமல் நடித்திருந்தால் எந்த படமாக இருந்தாலும், மனோரமாவும், காந்திமதியும் வந்து ‘என் பிள்ளை படத்தை என்னா அருமையா எடுத்திருக்கு!!!’ என்று கண்ணீருடன் சொல்வார்களே? அந்த மாதிரி. ஞாநி என்ன சொல்கிறார்? தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

உத்தமப்புத்திரன்

இப்போதெல்லாம் படம் நீளமாக இருந்தால் பிடிப்பதில்லை. நான் பிஸியாகிவிட்டேன் போலும். வேலை இருந்ததால், கடைசி பாடலின்போதே எழுந்து வந்துவிட்டேன். உசும்பலாரெசே பாட்டு பிடித்திருந்தது. டக்குன்னு டக்குன்னு, நச்சுக்கு நச்சுக்கு போன்ற இடங்களில் டிடிஎஸ்ஸை நன்றாக பயன்படுத்தியிருந்தார்கள். பொதுவாகவே, படத்தின் காட்சிகள் கலர்புல்லாக அழகாக இருந்தது. இப்படிப்பட்ட படத்திலும் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம் தெரிகிறார்.

தங்களை அவமதிப்பதாக சொல்லி ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி, படத்தில் ஆங்காங்கே கீ கீ என்று சத்தம் வருகிறது. அந்த இடங்களிலெல்லாம் நானே ஒரு வார்த்தையை சப்ஸ்டிடுயூட் செய்து சிரித்துக்கொண்டேன்.

இயக்குனருக்கு தேவையில்லாத வேலை. அப்படியொன்றும் நேட்டிவிட்டியையும் கொண்டு வரவில்லை. ஏனோதானோவென்று எடுத்ததுபோல் இருந்தது. நாயகி ஒரு காட்சியில் தண்டபாணி என்கிறார். யாரும் சொல்லாமலே சிவா என்று சரியாக சொல்கிறார். தனுஷ் காலையில் மீசை இல்லாமல் இருக்கிறார். இரவில் மீசை-தாடியுடன் இருக்கிறார். விவேக் மட்டும் கொஞ்சம் புதுமாதிரியாக சிரிக்க வைக்கிறார்.

மந்திரப்புன்னகை

கடைசி அரைமணி நேரத்தை தவிர்த்து, இந்த படம் எனக்கு பிடித்திருந்தது. கதையே தேவையில்லை. இம்மாதிரி நச்சென்ற வசனங்களுக்காகவே, கரு. பழனியப்பனின் படம் பார்க்க நான் ரெடி. இம்மாதிரி கதை கொண்ட படத்தை, இவ்வளவு டீசண்டாக எடுத்ததே பாராட்டுக்குரியது.

இருந்தாலும், தன்னுடைய முதல் படத்தைப்போல, எல்லோரும் ரசிக்கும்படியான கதையை, இதேப்போல் புத்திசாலித்தனமாக இயக்குனர் எடுக்கவேண்டும் என்பதே என் ஆசை.

.

10 comments:

சிவராம்குமார் said...

குட்டி விமரிசனம் நல்லா இருக்கு!! ஆனா நந்தலாலா எனக்கு மிகவும் பிடித்தது!!!

மாணவன் said...

அருமையான அலசல்...

சிம்ப்ளா சொல்லியிருந்தாலும் சூப்பரா சொல்லியிருக்கீங்க...

short and sweet

தொடரட்டும் உங்கள்பொன்னான பணி

நன்றி
நட்புடன்
மாணவன்

மாணவன் said...

நேரம் கிடைக்கும்போது நம்ம தளத்துக்கும் வந்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,

உங்களைப் போன்ற வலையுலக ஆசான்களின் கருத்து என்னைப் போன்ற புதியவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமுமாய் அமைவதோடு எழுத்துக்களையும் வளப்படுத்தும்...

நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

welcome sir

Mohan said...

ஒரே கல்லில் ஆறு மாங்காய். குட்டி விமர்சனங்கள் அனைத்தும் நன்றாக இருந்தது!

சரவணகுமரன் said...

நன்றி மாணவன்

சரவணகுமரன் said...

அப்படியெல்லாம் இல்லைங்க... நானும் உங்களை மாதிரிதான், மாணவன். :-)

சரவணகுமரன் said...

நன்றி ரமேஷ்...

சரவணகுமரன் said...

நன்றி மோகன்

Unknown said...

smart and simple -

நல்லா இருக்கு....

நன்றி