Sunday, October 30, 2011

ஏழாம் அறிவு

தியேட்டர் சென்று பார்க்க மாட்டேன் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன். சனிக்கிழமை போரடித்தால் செல்லலாம் என்றொரு எண்ணம் இருந்ததால், லேப்டாப்பில் பார்த்துக் கொண்டிருந்த நண்பர் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை.

ஏனோ தெரியவில்லை. நண்பருக்கு படம் பிடித்திருந்தது. சூர்யாவை புகழ்ந்துக்கொண்டிருந்தார்.

இன்று மதியம் அவரிடம் ‘ஏழாம் அறிவு போறேன். வாரீங்களா?’ என்றேன். எப்படியும் பார்த்தாச்சே! வர மாட்டார் என்றேண்ணினேன். ‘கண்டிப்பா வருவேன்’ என்று ஆச்சரியம் கொடுத்தார்.



இங்கு மூணு மணி ஷோவுக்கு சென்றோம். வெளியே சென்று ரொம்ப நாள் ஆவதால், எங்காவது செல்லலாம் என்று முடிவெடுத்து, இந்த படத்துக்கு சென்றோம்.

---

படத்தை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. வந்த நாளே பார்த்திருந்தால், அதை பற்றி சொன்னால் ஏதேனும் பிரயோஜனம் இருக்கும். டோங்லீ நாய்க்கு போட்ட கிருமி மாதிரி அதான் நல்லா பரவிடுச்சே!

இந்த படத்தின் மைனஸ் என்றால் அது படத்திற்கு கொடுத்த பில்டப் தான். அட்லீஸ்ட், போதிதர்மரையாவது கொஞ்சம் சஸ்பெஸ்சாக வைத்திருக்கலாம். அவரைப் பற்றி படம் வருவதற்கு முன்பே எல்லா சானல்களிலும் டாகுமெண்டரி ஒளிபரப்பி பெப்பை குறைத்துவிட்டார்கள்.

விமர்சனஃபோபியாவுக்கு பயந்து முன்ஜாக்கிரதையோடு இருப்பேன். இனி, பில்டப்ஃபோபியாவுக்கும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் போல?

பில்டப்பும் வித்தியாசமான பில்டப். அடக்கமாக கையை கட்டிக்கொண்டே பில்டப் கொடுத்தார்கள்.

முன்பு, நீதி உபதேசக்கதைகளில் தன்னடக்கம் முக்கியம், தன்னடக்கத்துடன் இருக்க வேண்டும் என்பது போல் நீதி வைத்து இருப்பார்கள். ஆனால், அப்ரைசல் வந்து விட்டால், நாம் அப்படியா இருக்கிறோம்? அதை செய்தோம், இதை செய்தோம் என்று பில்டப் கொடுப்போம் இல்லையா? அப்படி தான் எங்கும் ஆகிவிட்டது. பிழைக்க வேண்டும் என்றால் இப்படியொரு விளம்பரம் அவசியமாகிவிட்டது இக்காலத்தில். மார்க்கெட்டிங் ஸ்ட்ராடஜி!

---

இங்கு ஆங்கில சப்-டைட்டிலுடன் திரையிட்டு இருந்தார்கள். சைனீஸ் கவர்மெண்ட் என்று வரும் இடங்களை, சைனீஸ் என்றே படத்தில் சொல்கிறார்கள். சப்-டைட்டிலுக்கு சென்சார் கிடையாதே!

கமல் பொண்ணு என்பதால் சில இடங்களில் கேமரா சுட்டதை கிராபிக்ஸ் துணைக்கொண்டு கண்ணியம் காத்திருக்கிறார்கள். தமிழகத்தின் பெருமையை இவருடைய டமிழைக் கொண்டு சொல்கிறார்கள்.

ஏதாச்சும் பெருசா பண்ணனும், பண்ணனும் என்று யதார்த்ததை பல இடங்களில் விட்டுவிட்டு படம் செய்திருக்கிறார்கள். திரைக்கதையில் உருவாக்கிய பல பிரச்சினைகளுக்கு முடிவு சொல்லாமல் படத்தை அம்போவென்று முடித்தது போல் இருக்கிறது.

---

நண்பருக்கு திரும்ப பார்த்தாலும், படம் பிடித்திருந்தது. ஆச்சரியமான விஷயம் தான். அதற்கு காரணம், தியேட்டரில் பார்த்தது தான். வீடு வரும்வரை புகழ்ந்துக்கொண்டு வந்தார்.

படம் சுமார் தான் என்று சொன்ன பிறகும், தியேட்டர் சென்று காசு செலவழித்து படம் பார்த்த எனக்கு எவ்வளவு பெரிய மனசு? என்னைப்போல் ரசிகர்கள் இருக்கும் வரை, தமிழ் சினிமா அழியாது. தமிழ் சினிமாவை காப்பாற்ற நாங்கள் இருக்கிறோம். (அது என்னமோ தெரியவில்லை. இந்த படத்தின் எபெக்ட். பில்டப் அதுவாக வருகிறது!!!)

.

4 comments:

Yaathoramani.blogspot.com said...

நன்றாக இல்லை என கேள்விப்பட்ட பின்பும்
ஏன் நன்றாக இல்லை என பார்க்கச் செல்கிற
சராசரிகளில் நானும் ஒருவன்
இன்று பார்க்கலாம் என இருக்கிறேன்
தங்கள் விமர்சனம் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
த.ம 1

Shanmugam Rajamanickam said...

பொதுவாவே உங்களோட நிலைமை போலதான் எல்லோர் நிலமையும்...

ஷஹி said...

மூன்றாம் கோணம்
பெருமையுடம்

வழங்கும்
இணைய தள
எழுத்தாளர்கள்
சந்திப்பு விழா
தேதி : 06.11.11
நேரம் : காலை 9:30

இடம்:

ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்

போஸ்டல் நகர்,

க்ரோம்பேட்,

சென்னை
அனைவரும் வருக!
நிகழ்ச்சி நிரல் :
காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )

11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
1 மணி : விருந்து

எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
ஆசிரியர் மூன்றாம் கோணம்

பதிவர் சந்திப்பு

மாணவன் said...

உங்கள் ரசனையை அப்படியே யதார்த்தமாக சொல்லிவிட்டீர்கள்...நீங்கள் சொல்வதுபோல் பில்டப் பிரமாண்டம் என்று சொல்லியே ஓட்டி விடுகிறார்கள்...

எல்லாமே மார்க்கெட்டிங் டெக்னிக்தான்... :-)