Saturday, April 18, 2009

எம்.ஆர்.ராதா - "நீங்க நல்லவரா, கெட்டவரா?"

ஒரு மனிதன் என்னதான் சமூகத்துக்காக உழைத்து இருந்தாலும், புதுமையான புரட்சியான கலைஞனாக இருந்தாலும், சில விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளாமல் இருந்தால், அவனுக்குரிய அங்கீகாரங்கள் கிடைக்காமல் போகலாம். அப்படி ஒரு கலைஞன் - எம்.ஆர். ராதா.

ராதாரவி ஒரு பேட்டியில் சொன்னார். “அவரு சமுதாயத்துக்காக எவ்ளோவோ பண்ணி இருக்காரு. கலையுலகில் பண்ணிய சாதனைகள் ஏராளம். இருந்தும் அவருக்கு ஒரு விழா எடுக்க முடியலை. அவர் பேருல விருது கொடுக்க முடியலை. எல்லாம் ஏன்? எம்.ஜி.ஆரை சுட்ட ஒரே காரணம்தான்”.

எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா ஏன் சுட்டாரு? எம்.ஆர்.ராதா எப்படிப்பட்ட ஆளு? என்னலாம் பண்ணி இருக்காரு? தெரிஞ்சுக்கணும்னா, தாராளமா படிக்கலாம், முகிலோட M.R. ராதாயணம். கிழக்கு பதிப்பகம் வெளியீடு.

நான் ஏற்கனவே முகில் எழுதிய சந்திரபாபுவோட வாழ்க்கை வரலாறு “கண்ணீரும் புன்னகையும்” படிச்சிருக்கேன். சந்திரபாபு பத்தி ஒரு புத்தகமா என்று ஆச்சரியத்துடன் வாங்கி படித்தது அது.

சிறு வயதிலேயே நாடக உலகத்தில் நுழைந்து விட்டார் ராதா. சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர், பின்பு வெவ்வெறு நாடக குழுக்களில் நுழைந்து, ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு நாடக குழுவை உருவாக்கினார். போட்ட நாடகங்கள் எல்லாம் ஹிட். ரத்த கண்ணீர் - சூப்பர் டூப்பர் ஹிட். பகுத்தறிவு கொள்கை உடன்பாடிருந்ததால், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரோடு நெருங்கி பழகினார். திராவிட உணர்வோடு கூடிய நாடகங்களை, அரசை எதிர்த்து நடத்தினார். பயங்கர அடிதடிகளுக்கிடையே நாடகங்களை நடத்தினார்.

சினிமாவில் அவர் ஆடியது, மூன்று இன்னிங்ஸ். முதல் இன்னிங்க்ஸில் ஒரு வெற்றியும் இல்லாமல், டக்கடித்து வெளியேறினார். இரண்டாவது இன்னிங்க்ஸில், ரத்த கண்ணீர் என்ற சதம். மூன்றாவது இன்னிங்க்ஸில், அவரது ஆல்-ரவுண்ட் பர்ஃபாமன்ஸை காட்டினார். வில்லன், நகைச்சுவை, குணச்சித்திரம் என்று அடித்து ஆடினார். அரசியலில் ஈடுபாடு வைத்திருந்தார். சிலரை ரொம்பவும் பிடித்திருந்தது. சிலரை கொஞ்சமும் பிடிக்கவில்லை. காமராஜர் மேல் கொண்ட பாசத்தால் எம்.ஜி.ஆரை சுட்டார். தன்னையும் சுட்டு கொண்டார். இருவரும் பிழைத்தார்கள். ராதா ஜெயில் சென்றார். எம்.ஜி.ஆர். சில காலம் கழித்து முதலமைச்சர் ஆனார்.

ஜெயிலில் இருந்து வந்த பின்பு, சில படங்களில் நடித்தார். நாடகங்களிலும் நடித்தார். ஆனால், பழையபடி இல்லை. சாகும்வரை நடித்துக்கொண்டே இருந்தார். தமிழ் கலையுலகில் மறக்க முடியாத, மறைக்க முடியாத நட்சத்திரமாக மறைந்தார்.

தோணியதை பேசியும், எண்ணியதை செய்தும் வாழ்ந்த வெளிப்படையான பர்சனாலிட்டி.

கூத்தாடிகள் என்று கூறி கொண்டிருந்த நடிகர்களை, கலைஞர்கள் என்று கூறிப்பிடுவதை பற்றி,

“எங்கேயோ கூத்தாடுறோம். அத இங்க வந்து திரையில காண்பிக்குறான். நாங்களெல்லாம் கலைஞர்னு பேசறாங்க எல்லோரும். அது இப்ப வந்த பேரு. சமீபத்துல, எங்களுக்கெல்லாம் பணம் வந்தவுடனே கலைஞர்னு கொடுத்தாங்க. அது எவன் காசு வாங்கிட்டுக் கொடுத்தானோ, அதுவே எனக்கு தெரியலை.”

எம்.ஜி.ஆரை சுட்டதை பற்றி, ஜெயிலுக்கு சென்று வந்த பின், நாடகத்தில் சொன்னது,

“நான் எம்.ஜி.ராமச்சந்திரனைச் சுட்டேன். நான் சுட்டது தப்புன்னு பெருந்தலைவர், பெரியார்ல இருந்து ஊர்ல இருக்குற வேற யாராவது அறிக்கை விட்டாங்களா? ஏன் விடல?

ஆனா நான் சுட்டது தப்புன்னு என்னைப் புடிச்சு ஜெயில்ல போட்டான். ஏன் போட்டான்? ஏண்டா ஒழுங்கா சுடலைன்னு போட்டான். நான் என்ன பண்ணுறது? நான் எடுத்துட்டுப் போனது இந்தியன் பிஸ்டல். அவன் அதுலயும் கலப்படம் பண்ணுவான்னு எனக்கு எப்படித் தெரியும்? இல்லேன்னா நான் ஃபாரின் பிஸ்டலை எடுத்துட்டுப் போயிருப்பேன்.”

காரின் குறுக்கே வந்தவனை “விருந்தாளிக்கு பொறந்தவனே” என்று திட்டிய டிரைவரிடம்,

“கழுத, நாயின்னு திட்டு. விருந்தாளிக்குப் பொறந்த புள்ளைன்னு திட்டாத. ஏன் தெரியுமா? இதே ஊர்ல நாடகம் நடத்தறப்போ ரொம்ப வூட்லே விருந்து சாப்டிருக்கேன். ஓடினவன் என் புள்ளையாயிருந்தாலும் இருப்பான்”

எம்.ஆர்.ராதாவும் தன் வாழ்வில் எதையும் மறைத்ததில்லை. புத்தகத்தின் நாயகன் ஆயிற்றே என்று நூலாசிரியரும் எதை பற்றியும் மறைக்கவில்லை.

இந்த புத்தகம் எழுதியதற்காக முகில் உழைத்திருக்கும் உழைப்பு, புத்தகத்தை படிக்கும் போதே தெரிகிறது. எத்தனை புத்தகங்களை படித்திருக்கிறார். எத்தனை பேரை சந்தித்திருக்கிறார். அவர் பட்டிருக்கும் கஷ்டம், நம்மை இஷ்டப்பட்டு படிக்க வைக்கிறது. எம்.ஆர்.ராதாவை பற்றி பத்திரிக்கைத்துறையில் கூகிள் சர்ச் கொடுத்தால் என்ன கிடைக்குமோ, அதைவிட அதிகமான தகவல்கள் இந்த புத்தகத்தில் பெறலாம்.

இந்த புத்தகத்தில் உள்ள நிறைய விஷயங்கள் எனக்கு தெரியாதது என்றாலும், அடிதடிக்கிடையே நடந்த ராமாயணம் நாடகம், ஆரவாரத்துடன் வரும் ரத்த கண்ணீர் பேப்பர் சீன் போன்ற புகழ் பெற்ற விஷயங்களை படிக்கும்போது, மிகவும் ஆச்சரியமளித்தது. ஊடகங்கள் அக்காலத்திலேயே எவ்வளவு வீரியமாக இருந்தது என்றும், எதை எவ்வளவு சிறப்பாக ராதா பயன்படுத்தியிருக்கிறார் என்றும்.

கடவுள் பற்றியும், கடவுள் நம்பிக்கை பற்றியும் கடுமையாக விமர்சித்து வந்த எம்.ஆர்.ராதா கடைசி காலத்தில் பக்தி படங்களிலும் நடித்தார். கேட்டதற்கு,

“இதுவும் சினிமா. காசு கொடுக்கறாங்க. நான் நடிக்கறேன். அவ்வளவுதான்” என்றார்.

அவர் மேல் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், சாகும்வரை மனதளவில் நேர்மையானவராக, தைரியமானவராக வாழ்ந்து முடித்தார். புத்தகத்தை பற்றி “ஒரு காட்டாற்று வெள்ளத்தை கப் அண்ட் சாஸரில் ஏந்திக்குடிக்கிற முயற்சி மட்டுமே” என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதை சிறப்பாக செய்திருக்கிறார்கள். புத்தகம் வாங்க இங்கே செல்லவும்.

----

“உனக்குமில்லை இது எனக்குமில்லை
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார்
கடைசியில் அவனே முடிவு செய்வான்”

நா.முத்துக்குமார் எழுதியது, புதுப்பேட்டைக்காக.

16 comments:

Raju said...

ஆம்..எம்.ஆர்.ராதா அவர்கள் ஒரு சரித்திரம்..
இரத்தகண்ணீரை மறக்க முடியுமா..?
அடியே சாந்தா.......?
என்ன ஒரு நடிப்பு...
நூல் அறிமுகத்திற்கு நன்றி நண்பா..

Raju said...

ஆம்..எம்.ஆர்.ராதா அவர்கள் ஒரு சரித்திரம்..
இரத்தகண்ணீரை மறக்க முடியுமா..?
அடியே சாந்தா.......?
என்ன ஒரு நடிப்பு...
நூல் அறிமுகத்திற்கு நன்றி நண்பா..

Raju said...

ஆம்..எம்.ஆர்.ராதா அவர்கள் ஒரு சரித்திரம்..
இரத்தகண்ணீரை மறக்க முடியுமா..?
அடியே சாந்தா.......?
என்ன ஒரு நடிப்பு...
நூல் அறிமுகத்திற்கு நன்றி நண்பா..

Bhaskar said...

nalla padhivu saravanakumaran...

ஆதவன் said...

no doubt.. m. r. radha is legend.. nice person..

Da VimCi Code said...

txs for the post. really nice.

shabi said...

னல்ல பதிவு

shabi said...

னல்ல பதிவு

shabi said...

ந்தான் first ஆஆஆஆஆஆஆஆஆ

சரவணகுமரன் said...

நன்றி டக்ளஸ்

சரவணகுமரன் said...

நன்றி bong apisar

சரவணகுமரன் said...

நன்றி ஆதவன்

சரவணகுமரன் said...

நன்றி DaVimciCode

சரவணகுமரன் said...

நன்றி shabi

Anonymous said...

M R Radhs ia true legend in acting...Even MGR and Shivaji cant compete his acting..But nowadays Vivek copying M R Radha's mannersim and dialogue deliveries...Vivek should stop copying M R Radha

முகில் said...

மதிப்புரைக்கு நன்றி நண்பரே.