Thursday, January 21, 2010

கொழந்தப்பய குமரனின் கோட்டிக்காரத்தனங்கள்

சிறு வயதில் நாங்கள் இருந்த வீட்டை சுற்றி இருந்த சுவர்களில் ஒரு சுவருக்கும் வீட்டின் ஒரு பக்க சுவருக்கும் ரொம்ப சின்ன இடைவெளிதான் இருந்தது. பெரியவர்கள் யாராலும் அந்த சைடு போக முடியாது. என்னை போன்ற சிறுவர்கள் ஒரு பக்கமாக திரும்பிக்கொண்டு போகலாம்.

அப்போது கலர் கலராக இருக்கும் கோழிக்குஞ்சுகளை வளர்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு கோழிக்குஞ்சு அந்த பக்கமாக சென்று விட்டது. அதை பிடிக்க சைடாக சென்ற நான், அந்த இடைவெளியில் நேராக திரும்ப, சுவருக்கிடையில் சிக்கிக்கொண்டேன். கோழிக்குஞ்சு அசால்டாக வெளியே வந்து அதன் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டது.

நானாக வெளியே வர முயற்சி செய்து பார்த்தேன். ஒன்றும் முடியவில்லை. பயத்தில் கத்தி அழ ஆரம்பித்து விட்டேன்.

வீட்டில் இருந்தவர்கள் வந்து வெளியே இழுக்க முயற்சி செய்தார்கள். நெற்றி சுவரில் படும்படி தலை சரியாக மாட்டிக்கொண்டது. பிறகு, தெருவில் சென்றுக்கொண்டு இருந்தவர்களும் உதவிக்கு வந்தார்கள். என்னை சுற்றி ஒரே மக்கள் கூட்டம். எப்படியோ, பல திட்டங்கள் போட்டு வெளியே கொண்டு வந்தார்கள். அடுத்த நாள், தினந்தந்தியில் இந்த செய்தி வந்ததா? என்று தெரியவில்லை. மற்றபடி, தெருவில் பாப்புலர் ஆகிவிட்டேன்.

ஒரு வாரத்திற்கு, தொப்பியில் இருப்பதை போல, நெற்றி முன்பக்கம் நீண்டுக்கொண்டிருந்தது. அதற்கு பிறகு, அந்த கோழிக்குஞ்சை பார்க்கும்போதெல்லாம் அது என்னை நக்கலாக பார்ப்பது போலவே இருக்கும்.

---

எங்களது வீட்டின் முன்பக்கம் இருக்கும் க்ரில் கேட்டில் எப்போதும் தொங்கிக்கொண்டு இருப்பேன். தெருவில் வித்தை காட்டுபவர்கள் போல, அவ்வப்போது அதில் தொங்கியவாறு டைவ் அடிப்பேன்.

ஒருநாள் கையில் ஒரு கயிறு கிடைக்க, அதையும் வைத்துக்கொண்டு வித்தைகளை தொடர்ந்தேன். கயிறை கேட்டின் மேலுள்ள ஆணியில் மாட்டிக்கொண்டு தொங்க, ஆணியில் இருந்து கயிறு நழுவ, டமாலென்று கீழே விழுந்தேன். கேட்டின் இரும்பு கீழ்பாகத்தில், உச்சந்தலை பட்டு, கொஞ்சம் டெமெஜ் ஆனது (ஓ! அதான் இப்படி எழுதுறீயா?’ன்னு கேட்கக்கூடாது!).

முடிக்களுக்கிடையே ப்ளாஸ்டர் போட சிரமமாக இருக்க, அந்த இடத்தில் இருந்த முடிகளை வெட்டிவிட்டார்கள். ஆனந்த தாண்டவத்தில் ரிஷிக்கு போட்டு விட்ட வழுக்கை போல.

அடிப்பட்டதுக்கூட வலிக்கவில்லை. இந்த ஹேர் கட்டிங் தான்...

---

தீவிர ரஜினி ரசிகனாக இருந்த காரணத்தால், கையில் கிடைக்கும் ரஜினி படங்களை எல்லாம் சேர்த்து ஒரு நோட்டில் ஒட்டி வைத்திருப்பேன். சில படங்கள் இங்கேயும், இங்கேயும் இருக்கிறது.

புத்தகம் என்றால் நடுநடுவே விளம்பரங்கள் இருக்க வேண்டும் அல்லவா? அதையும் சேர்த்தேன். இதோ அந்த விளம்பரங்கள்.









ராமராஜன் படம் கிடைக்கல. அதான் நானாகவே... ஹி...ஹி... :-)

.

6 comments:

Anonymous said...

I'm still laughing at the incident in first para..

-Arthi

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சூப்பர் அண்ணாச்சி..,

சரவணகுமரன் said...

:-) Arthi...

சரவணகுமரன் said...

அண்ணாச்சியா?!!!

நரேஷ் said...

அப்ப இருந்தே அழிச்சாட்டியத்தை ஆரம்பிச்சிட்டீங்க போல!!!

கோழி நக்கலா பாக்குது, நெத்தி தொப்பி மாதிரி நீட்டிட்டு இருக்கு, அதுனாலதான் இப்டி எழுதுறியா மாதிரியான உங்களுடைய ஸ்டைல் ரொம்பவே ரசிக்க வைக்குது!!!

சரவணகுமரன் said...

நன்றி நரேஷ்