Tuesday, February 9, 2010

பத்மபூஷணும், பச்ச மஞ்ச செவப்பு தமிழனும்...

மகேந்திரனிடமிருந்து...



பச்ச, மஞ்ச செவப்பு தமிழன் என்பது இன்று கேலிப்பாடலாக இருந்தாலும், இருபது வருடங்களுக்கு முன், நிஜமான ஒரு பச்ச, மஞ்ச, ரோசு தமிழன் இருந்தார்.... எல்லா தட்டு மக்களும் ரசித்த, அவரின் பல படங்கள் தொடர்ச்சியாக வந்தன.

காரணம் சொல்ல முடியாத அதிசயங்கள் எப்போதாவது நிகழ்வதுண்டு... ஆனால் இந்த அதிசயத்துக்கு அனைவரும் அறிந்த காரணம் உண்டு... அது... ராஜா....

ராமராஜன் வெற்றிகரமாக வலம் வந்ததற்கு முக்கியகாரணம் அவர் படத்திலிடம் பெற்ற ராஜாவின் பாடல்கள்... ஆர். சுந்தரராஜனைப்போல ராஜாவால் தூக்கிவிடப்பட்ட இன்னுமொரு நபர் ராமராஜன்.

எங்க ஊரு பாட்டுக்காரனுக்கு பின், அவரின் படங்கள் தொடர்ச்சியாக ராஜாவின் இசையில் வெளியாயின... அவற்றுள் பல படங்கள் கங்கை அமரனின் இயக்கத்தில் இருந்தது இன்னுமொரு சிறப்பு... தேவையானதை கேட்டு பெறவோ, வேண்டாததை மறுக்கவோ ராஜாவிடம் கூடுதல் உரிமை இருந்தது அமரனுக்கு...

ஒரே பாடலை படத்தில் மூன்று முறை பயன்படுத்தும் வழக்கம் அமரனுக்கு இருந்தது. எங்க ஊரு பாட்டுக்காரனில் செண்பகமே செண்பகமே போல... (ராமராஜனுக்கு மனோ, நிஷாந்திக்கு சுனந்தா & ரேகாவிற்கு ஆஷா போஸ்லே) கரகாட்டகாரனிலும் மாங்குயிலே பாடலை மூன்றாம் முறை சோகப்பாடலாக ஒலிக்கச்செய்ய ராஜாவை கேட்டபோது, ரெண்டு தடவை வந்ததே போதும்... அதுக்கு நான் வேற தாரேன்... என்று ராஜா தந்தது "குடகுமலை காற்றில் வரும் பாட்டு கேட்குதா?"...

"ஊருவிட்டுஊரு வந்து காதல் கீதல்"' பாடலை கோர்க்கும் போது, ராமராஜனை கேலி செய்பவர்களெல்லாம் அவரின் கரகாட்டக்குழுவின் வாத்தியக்கலைஞர்கள் என்பதால், பாடல் முழுதும் ஒத்தூதுவது போல (பப்பப்பா... ஆமா... ஆமா... இல்லே...இல்லே....) சேர்ந்திசை குரல்களையே chords போல போடச்சொன்னாராம் ராஜா... என்ன தவம் செய்தனை அமரன்...

ராமராஜனின் படங்களுக்கு ராஜா போட்ட பாடல்களென என் தொகுப்பில் நான் பத்திரமாக வைத்திருக்கும் பாடல்களை பற்றி...

1988 ல் வெளியான எங்க ஊரு காவல்காரன், இந்த படத்தில் வரும் இரண்டு பாடல்கள் என் விருப்ப எண்கள்... தீபன் சக்கரவர்த்தி & சுசீலா பாடிய "அரும்பாகி மொட்டாகி பூவாகி..." அமரனின் வரிகள்...

மணக்கும் சந்தனம் பூசட்டுமா? இனிக்கும் சங்கதி பேசட்டுமா?
எதுக்குங்கப்பன கேக்கட்டுமா? அப்பறம் உன்கிட்ட பேசட்டுமா?


ஒரு சந்தர்ப்பத்தில் தீபன் அவர்களை சந்தித்த போது இந்த பாடல் பதிவின் நிகழ்வுகளை அவர் சொன்னது, இதை பாடிக் காண்பித்தது எல்லாம் இன்னமும் எனக்கு வியப்பு...

இன்னுமொரு பாடல் "ஆசையில பாத்திகட்டி நாத்து ஒண்ணு நட்டுவெச்சேன்..." சுசீலாவின் குரலில் ஒரு முறையும், மனோ & சுசீலாவின் ஜோடிக்குரல்களில் சோகப்பாடலாகவும் இருமுறை ஒலிக்கும்...

"கன்னி நான் நாத்து கண்ணன் நீ காத்து வந்து தான் கூடவில்ல..."

ஆடி மாதம் நீர் நிறைந்து ஓடும் வாய்க்காலில், நல்ல வெயில் நேரம் அமிழ்ந்து கிடப்பது போன்ற மிதப்பை தரும் இந்த பாடல்...

1989 ல் வந்த "பொங்கி வரும் காவேரி" க்காக ராஜாவின் இசையில் அருண்மொழி & சித்ரா பாடிய "வெள்ளி கொலுசு மணி... வேலான கண்ணு மணி..." சில வருடங்களுக்கு முன் எனக்கு இந்த பாடலை தினமும் கேட்கும் வழக்கம் இருந்தது...

"கண்ணத்திறந்தேன் ... நெஞ்சில் விழுந்த...
உள்ளுக்குள்ள இன்ப சுகந்தான்..."


மிகத்தெளிவான சித்ராவின் குரலும் உச்சரிப்பும் இந்த பாடலின் பலம்...



எங்க ஊரு பாட்டுகாரன் (1987 ), கங்கை அமரன் இயக்கிய இப்படத்தில் எல்லா பாடல்களுமே இனிமை எனினும், அறிமுகமான புதிது என்பதால் சற்றே தயக்கமான, மெலிதான பயம் கலந்த மனோவின் குரலில் வந்த "மதுர மரிக்கொழுந்து வாசம்"... பாடலுக்காக மனோவுடன் இணைந்திருப்பது சித்ரா.

"பச்சரிசி மாவிடிச்சி... சக்கரையில் பாவுவெச்சி..." என குழுவினர் குரலில் தொடங்கும் இந்தபாடல் கேட்கும் போதெல்லாம், ஏதோ ஒரு பொங்கல் நாளில் கரும்பு கடிப்பது போல தோன்றும்.

"சுத்துறது உனக்கு மட்டும் தானா? இந்த சிட்டும் கூட சிக்கியது ஏனோ..."

இந்த வரிகளின் மெட்டு எந்த கர்நாடக சங்கீத பாடலையும் ஏனென்று கேட்டு இடுப்பில் கைவைத்து முறைக்க வல்லது... மனசேனோ கிறங்குதடி, செறகடிச்சி பறக்குதடி மதுர... என்று மனோ முடிக்க மரிக்கொழுந்து வாசம் என்று சித்ரா தொடர்வார்... எனக்கு மனக்கண்ணில் ராஜா சிரிப்பார்...



1990 ம் ஆண்டு வந்த கரகாட்டகாரன், தமிழ் சினிமா வசூல் வரலாற்றையே புரட்டிப்போட்டது... தில்லானா மோகனாம்பாளின் நாட்டுப்புற பதிப்பு போல எனக்கு தோன்றும்... நடிகர் தேர்வு, நகைச்சுவை எல்லாமே சிறப்பு. படத்தை தூக்கி நிறுத்தியது இசை...

படம் வெளிவந்த புதிதில், அதில் வரும் ஒரு தொக்கு பாடல் "நந்தவனத்தில் ஒரு ராஜகுமாரி... " முந்தானையை இழுத்து சொருகி, ராமராஜனை முறைக்கும் கனகா... ஹப்பா.... இந்த பாடல் சமீபத்தில் யுவன் ஷங்கரால் புதுப்பிக்கப்பட்டது... (முட்டத்து பக்கத்துல...) யாருமே கண்டுக்கல...(!!)

இந்த படத்தில் எனக்கான பாடல் "குடகுமலை காற்றில்வரும் பாட்டு கேட்குதா... என் கண்மணி..." மனோ & சித்ரா பாடிய வரிகள் அமரன் எழுதியவை... சரணத்தில் வரிக்கு வரி மெட்டு மாறுவது (tune variation) பிரமிப்பு... (இதற்கு இன்னொரு சிறப்பான உதாரணம் ராஜாதி ராஜா படத்தில் வரும் மீனம்மா பாடல்)

ஊருவிட்டு ஊருவந்து என்ற படத்திற்காக ராஜாவின் இசையில் எஸ்.பி.பி & ஜானகி பாடிய "தானா வந்த சந்தனமே... உன்ன தழுவ தினம் சம்மதமே..." கேட்பதற்கு மிக எளிதான தெம்மாங்கு பாடல் போல தோன்றினாலும், சங்கீத விற்பன்னர்களால் வியக்கப்பட்ட ராஜாவின் இசைக்கோர்வை இது...

இன்றும் கர்நாடக சங்கீதத்திற்கான வலைத்தளங்களில் விவாதிக்கவும் எடுத்துக்காட்டவும் முன் நிற்கும் பாடல்...

இதில் முதல் சரணத்தில் ஒரு வரி...

"முன்ன பின்ன அறிஞ்சதில்ல மொறையாக தெரிஞ்சதில்ல
சின்னச்சின்ன தவற நீயும் பொறுத்தாக வேணுமே...
புத்தகத்தில் படிச்சதில்ல புரியாம நடிக்கவில்ல...
வித்தைகள வெவரமாக வெளியாக்க வேணுமே..."


ஜானகியும் எஸ்.பி.பியும் வீடு கட்டி விளையாடியிருப்பார்கள்...

மீண்டும் ஜானகிக்கென கேட்கத்துவங்கி நான் அடிமையான ஒரு பாடல் செண்பகமே செண்பகமே (1988 ) படத்தில் எஸ்.பி.பி & ஜானகி பாடிய "வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா... வச்சிபுட்டா..."

இப்ப ஒண்ணும் அவசரமில்ல, நிதானமா போலாம் என்று எல்லோருக்கும் ராஜா சொன்னதைப்போல, வெகு நேர்த்தியான நடை, பாடகர்களுக்கு உச்ச ஸ்தாயி இம்சைகள் எதுவும் கொடுக்காத நானோ நீங்களோ பாடிவிட முடிகிற ஸ்ருதியில், வயலின்களும், அதற்கு மேல் ஜானகியும் கொஞ்சுகிற பாடல்.

இரண்டாம் சரணத்திற்கு முன் ஜானகியும் உடன் வயலினும் சொல்லும் ஒரு ஹம்மிங், அதற்கு பதில் சொல்லும் குழல் என அற்புதமான கோர்வை... பாடல் இறுதியில், "ஏதோ ஒண்ண சொல்லி சொல்லி என்ன இப்ப கிள்ளாத..." என்று ஜானகி சிணுங்க, அதற்கு எஸ்.பி.பி சிரிப்பார் பாருங்கள்... நான் காதலிக்காமல் போனதற்காக வருத்தப்படுகிறேன்...!!

இறுதியாக இன்று பின்னிரவில், கேட்டு விட்டு தூங்கலாம் என்று உங்களை யோசிக்க வைக்க என்னுடைய அஸ்திரம் இந்த பாடல்...

1991 ல் வெளியான 'ஊரெல்லாம் உன் பாட்டு' படத்தில் ஸ்வர்ணலதா பாடிய "ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது..." இதே பாடல் ராஜா தனியே பாடி படத்தில் வராமல், இசைத்தட்டுகளில் மட்டும் வந்திருக்கும். ஒரு நீரோடை போல மிக தெளிவான மெட்டு, தாலாட்டும் தபேலா, வசீகரிக்கும் ஸ்வர்ணலதாவின் குரல் என மிக அருமையான பாடல்...

ஸ்வர்ணலதா... ராஜாவின் கண்டுபிடிப்பு இந்த குயில்... ஒரு கட்டத்தில் ராஜாவின் எல்லா படங்களுக்கும் இவரை பயன்படுத்தினார்... (ஒரு பாடலுக்கேனும்)

ஒரு நீண்ட ஏறி இறங்கும் ஆலாபனையுடன் துவங்கும் இந்த பாடல்... ஆலாபனை இறுதியில் கிடார் மட்டும் இணையும்... ஒரு வினாடி மௌனத்திற்கு பின் பாடல் துவங்கும்... பல்லவியின் இரண்டாம் வரியில் தபேலா இணையும்... மனசுக்கு மிக இணக்கமான தாளக்கட்டு... காதலிக்காதவரையும் சற்றே அசைத்துப்பார்க்கும் வரிகள்... நீங்களே கேளுங்கள்...



ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது...
நாளெல்லாம் உன் பார்வை தான் இன்பத்தை கூட்டுது...
நீயல்லால் தெய்வம் வேறெது...
நீயெனை சேரும் நாளேது...

உன் பெயர் உச்சரிக்கும் உள்ளம் நித்தமும் தத்தளிக்கும்...
இங்கு நீயில்லாது வாழ்வில் எது வேனிற்காலம் தான்?
என் மனம் உன் வசமே, கண்ணில் என்றும் உன் சொப்பனமே...
விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ணக்கோலம் தான்...
ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி...
ஆடும் நினைவுகள் நாளும் பாடும் உனதருள் தேடி...
இந்தப்பிறப்பிலும் எந்தப்பிறப்பிலும் எந்தன் உயிர் உன்னை சேரும்...

சென்றது கண்ணுறக்கம் நெஞ்சில் நின்றது உன் மயக்கம்...
இனி ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம்?
உன்னிடம் சொல்வதற்கு எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு...
அதை நீயும் கேட்க நானும் சொல்ல எது வாசகம்?
பாதச்சுவடுகள் போலும் பாதை அறிந்திங்கு நானும்
கூட வருகின்ற நேரம் கூட மறுப்பதும் ஏனோ?
உள்ளக்கதவினை மெல்லத் திறந்திங்கு நெஞ்சில் இடம் தர வேணும்...

ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது...
நாளெல்லாம் உன் பார்வை தான் இன்பத்தை கூட்டுது...
நீயல்லால் தெய்வம் வேறெது...
நீயெனை சேரும் நாளேது...


-மகேந்திரன்.

.

20 comments:

தர்ஷன் said...

சென்பகமே சென்பகமே பாடியது லதா மங்கேஷ்கர் என நினைக்கிறேன்.

அண்ணாமலையான் said...

அழகான பாட்டுக்கள போட்டு நினைவுகள கிளறி விட்டுட்டீங்க,,,,

Unknown said...

Romba nalla, rasanaiyaana pathivu. namma mottaiya pathi innum niraya ezhuthunga.(yaaro chaaru nivetitavaame avara indha songs.a kaekka sollunga apdiyaavathu uraikkattum.But one thing, sundarajan sir pathi sonnadhu konjam nerudala irundhuchi. raajaa sir thaan thookivitarnu sonnadhu aethuka mudiyala,because raajaa illanaalum avar periya aalaa ahiyiruppaar.he is best commercial director in tamil.and also raajaa sir kitarundhu tunes select pandrathula ivara yaaraalayum adichikka mudiyaathu.(its my opinion)thanks.
saravanan,
kurumbalur.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//"குடகுமலை காற்றில் வரும் பாட்டு கேட்குதா?"...//

அட ஆமாம். மாங்குயிலே பாட்டின் சோக வடிவம் போலத்தான் இருக்கிறது.

Naresh Kumar said...

அட்டகாசம் மகேந்திரன்....

ஏகப்பட்ட விஷயங்கள்!!! நடுவுல ஆள் கானாமப் போனாலும் நிறைய மேட்டரோட வந்திருக்கீங்க!!!

pudugaithendral said...

ராமராஜன் ஆடுவதைபாக்கத்தான் பிடிக்காது. நீங்க சொல்வது போல அவரது பாடல்கள் ராஜாவால் சூப்பர் ஹிட். மதுரை மரிக்கொழுந்து வாசம், வாசலிலே பூசணிப்பு, அரும்பாகி மொட்டாகி பூவாகி இவை என்னோட ஃப்வரேட்.

மரா said...

அண்ணாமலையாரை அப்பிடியே வழிமொழிகிறேன்.நல்லா எழுதியிருக்கிறீர்கள்..

Unknown said...

சென்பகமே சென்பகமே பாடியது aasha bonsle

டக்கால்டி said...

"நந்தவனத்தில் ஒரு ராஜகுமாரி... " முந்தானையை இழுத்து சொருகி, ராமராஜனை முறைக்கும் கனகா... ஹப்பா.... இந்த பாடல் சமீபத்தில் யுவன் ஷங்கரால் புதுப்பிக்கப்பட்டது... (முட்டத்து பக்கத்துல...) யாருமே கண்டுக்கல...(!!)//

Thala enakku nyaabagam irukku...
Nalla pagirvu..

டக்கால்டி said...

Oorellam un paattu thaan paattum,
Kannamma paattum (vanna vanna pookkal) raajaavin kuralil ennal marakka mudiyaathavai...

Matrapadi neengal kooriya "meenamma meenamma" paadalin seithi arumai.

Unknown said...

அனைத்துமே நல்ல பாடல்கள்

ஸ்ரீ சரவணகுமார் said...

ரசிப்பதை வெளிப்படுத்தகூடிய திறன் எல்லாருக்கும் அமைவதில்லை
மகேந்திரன் சிறந்த ரசிகர் அதே சமயத்தில் சிறந்த எழுத்தாளரும் கூட

இந்த பதிவில் சொல்லப் பட்டிருக்கும் பாடல்களைப் பற்றி பேச நிறைய இருக்கிறது ஆனால் நேரமும் இடமும் போதாது.

தொடர்ந்து நிறைய எழுதுங்கள் மகேந்திரன்.

venkat said...

நல்ல தகவல்
நன்றி

ம்கேந்திரன் said...

இல்லை தர்ஷன், அதை பாடியவர் ஆஷா போஸ்லே, லதா இல்லை..
நன்றி தர்ஷன்..

மகேந்திரன் said...

நன்றி அண்ணாமலையான்..

மகேந்திரன் said...

நன்றி சரவணன், ஆமாம் ஆர்.சுந்தர்ராஜன் சிறந்த இயக்குனர் என்பதில் எனக்கும் மறுப்பில்லை,
அவரின் படங்களுக்கு கூடுதல் பலம் ராஜா என்று சொல்ல வந்தேன்..

மகேந்திரன் said...

நன்றி சுரேஷ்..
ரெண்டும் முற்றிலும் வேறான மெட்டு, நீங்கள் இதை படித்துவிட்டதால் அப்படி தோன்றலாம்..

இனியா said...

nalla pathivu!!!!

மகேந்திரன் said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி...

Shanthakumar said...

"ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது..." இதே பாடல் ராஜா தனியே பாடி படத்தில் வராமல், இசைத்தட்டுகளில் மட்டும் வந்திருக்கும்.
I think the male version of the song was sung by Yesudoss.. Sorry, If I am wrong!