Wednesday, February 25, 2009

நாட்டு சரக்கு - கலைமாமாமணி

தமிழின் இரு முன்னணி நட்சத்திரங்கள் அவர்கள். ஆரம்ப காலத்தில் இணைந்து கலக்கி கொண்டிருந்தார்கள். தற்போது பிரிந்தே நடிக்கிறார்கள். இவர்கள் சரும நிறத்தில் வேறுப்பட்டிருந்தாலும், மக்களை மகிழ்விப்பதில் ஒரே நிறம். இருவருமே தமிழின் முன்னணி இயக்குனர்களான பாரதிராஜா, ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார் படங்களில் நடித்து இருக்கிறார்கள்.

யார் இவர்கள்? பதில் முடிவில்.

-----

தமிழக அரசு சார்பில் சாதனை புரிந்த பலருக்கு கலைமாமணி விருது வழங்கி இருக்கிறார்கள். இந்த லிஸ்ட பார்த்து தான், எனக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு பரதநாட்டியம் ஆட தெரியும்'ங்கற விஷயம் தெரியும். அத பார்த்திட்டு ச்சின்னப்பையன், 'என்கிட்டயும் ரேசன் கார்டு இருக்கு. எனக்கு தருவாங்களா'ன்னு கேட்குறாரு.

இதுல வேற கமல், வெளிநாட்டினர் விருது வாங்க நம்ம நாட்டுக்கு வரணும்ன்னு ஆசைப்படுறாரு. நம்ம நாட்டுல எல்லோருக்கும் கொடுத்திட்டு தான், அவுங்களுக்கு கொடுக்கணும் சரியா? இதன் மூலம் நம்ம தகுதியை உயர்த்திக்கலாம்.

அந்நியன் படத்துல விவேக் சொல்லுவாரு. "இங்க நான் ஒரு கலைமாமாமணி வாங்க போராடிட்டு இருக்கேன்"ன்னு. கூடிய சீக்கிரம் அதுக்கும் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

-----

சாப்ட்வேர் கம்பெனிகளில் முன்பு காபி, டீ, போர்ன்விட்டா, லெமன் டீ, பாதாம் மில்க் என்று இலவசமாக அள்ளி வழங்கி கொண்டிருந்தார்கள். இப்ப, பல கம்பெனிகளில் கையில காசு, வாயில தோசை என்றாக்கி விட்டார்கள்.

முன்ன, பிரிண்ட் அவுட் எடுக்கணும்னா, அடிச்சி விட்டுட்டு இருந்தாங்க. இப்ப, அதுக்கும் தட்டுப்பாடாம்.

பல கம்பெனிகளில், மாத கடைசியில் வழங்கி கொண்டிருந்த சம்பள பட்டுவாடாவை, மாதத்தின் முதல் வாரத்திற்கு தள்ளி வைத்துவிட்டார்களாம். ஏதோ பேங்க், இன்ட்ரஸ்ட், மிச்சம்'ங்கறாங்க. ஒண்ணும் புரியல.

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க?

-----

இப்படி உள்ளுக்குள்ள பல விஷயம் நடந்தாலும், வெளியே அவுங்க சந்தோஷப்படுற மாதிரி ஒரு விஷயம் நடக்க ஆரம்பிச்சிருக்கு.

வீட்டு வாடகை குறைச்சிருக்காம். எனக்கு குறையலையே?'ன்னு கேட்காதீங்க. இருக்குற வீட்டுக்கு குறைக்கலையாம். அதுக்கு பதிலா, வீடு மாறி போனீங்கன்னா, குறைஞ்ச வாடகைக்கு கிடைக்குதாம். இதனாலேயே, பலர் வீடு மாற ஆரம்பிச்சுருக்காங்க.

-----

மேலே சொன்னவாறு சொன்னால் தெரியுமோ என்னவோ, இப்படி சொன்னால் கண்டிப்பாக தெரியும். தமிழ் சாட்டிலைட் சானல்களில், இவர்கள் முகம்தான் அடிக்கடி தெரிகிறது. வேற யாரு?

பத்மஸ்ரீயும், வைகை புயலும்தான்...

விவேக் கடைசியா (நம்மை வைத்து) செய்த பெரிய காமெடி, பத்மஸ்ரீ தான்.

7 comments:

முரளிகண்ணன் said...

நாட்டுச்சரக்கு நச்சுன்னு இருக்கு

சரவணகுமரன் said...

நன்றி முரளிகண்ணன்

சின்னப் பையன் said...

//அத பார்த்திட்டு சிலர், 'என்கிட்டயும் ரேசன் கார்டு இருக்கு. எனக்கு தருவாங்களா'ன்னு கேட்டுட்டு இருக்காங்க.//

whos this????

:-)))

சரவணகுமரன் said...

ச்சின்னப்பையன், நீங்க தானா அது?

butterfly Surya said...

நாட்டு சரக்கு ஒரு சின்ன Large.

Keep blogging.

சரவணகுமரன் said...

நன்றி வண்ணத்துபூச்சியார்

Anonymous said...

Please look at the date of my post.... (Ippo enna seyveenga...) :))