Wednesday, March 3, 2010

நித்தி அடைந்த ஆனந்தம்

போன ஞாயிறு, ஓசூரில் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் இருக்கும் ஒரு ஓட்டலில் ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தேன். மணி ஏழு- ஏழரை இருக்கும். ஓட்டலின் கல்லா டேபிளுக்கு எதிரே ஒரு பெரிய நித்தியானந்தா புகைப்படம் ஒரு சின்ன டேபிளின் மீது வைக்கப்பட்டிருந்தது.

கடையின் முதலாளியா? யாரென்று தெரியவில்லை. போட்டோவுக்கு மாலைப்போட்டு, ரொம்ப பயபக்தியுடன் சாம்பிராணி போட்டு பூஜை செய்தார். அவருடன் இருந்தவர்களும் தொட்டு கும்பிட்டு சென்றார்கள்.

இன்னமும் அந்த போட்டோ இருக்கிறதா, பூஜை நடக்கிறதா என்று தெரியவில்லை.

(அந்த போட்டோவை எடுத்துவிட்டதாக, நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவிர, ஓசுரில் நண்பர் வீட்டில் இரண்டு நாட்கள் கேபிள் தெரியவில்லையாம். கேபிள் ஆபரேட்டரும் நித்தியானந்தாவின் பக்தராம்!)

---

என்னுடன் படித்த நண்பன் ஒருவன் அடிக்கடி போன் செய்து நித்தியானந்தா ஆசிரமத்திற்கு கூப்பிடுவான். சும்மா இருந்தா வாடாவென்பான். ஸ்ட்ரெஸ் குறைச்சிக்கலாம் என்பான்.

சும்மா இருந்தாலும் போகாமல் இருந்ததற்கு காரணம் - 750, 1000 ரூபாய் என்று பீஸ் கேட்பார்கள். இல்லாவிட்டால், போய் என்னத்தான் சொல்கிறார்கள் என்று பார்த்திருப்பேன். ஸ்ட்ரெஸ் குறைக்கலாம் என்பதற்கு அப்படி ஒன்று என்னிடம் இல்லை என்பேன். இல்ல, நீ என் கூட வா. நம்ம பசங்கள பார்க்கலாம். ஏதாச்சும் படம் பார்க்கலாம். உனக்கு ஸ்ட்ரெஸ் இருந்தா குறையும் என்பேன். நல்ல நண்பர்களுடன் பேசுவதை விட வேறு எதில் ஸ்ட்ரெஸ் குறைந்துவிட போகிறது?

ஒரு கட்டத்திற்கு மேல் அழைப்பதை நிறுத்திவிட்டான். இன்று அவனுக்கு போன் செய்யவே எனக்கு தயக்கமாக இருக்கிறது. பாவம்! ரொம்ப நொந்துப்போய் இருப்பான்.

ஒருவேளை, அந்த களவாணிப்பயல் பண்ணினதுக்கு எனக்கென்ன? என்று சாரு மாதிரி கேட்டாலும் கேட்பான்.

---

சன் டிவியில் எனக்கு பிடித்த விஷயம் - படங்களில் அவர்கள் செய்யும் சென்ஸார். அவர்கள் போடும் தமிழ்ப்படங்களில் முத்தக்காட்சியோ, விவகாரமான காட்சியோ இருந்தால் கட் செய்துவிடுவார்கள். குடும்பத்துடன் பார்க்கும்போது சங்கடங்கள் நேராது.

உதாரணத்திற்கு, சன் டிவியில் காதல் கொண்டேன் படம் போட்டால் தைரியமாக பார்க்கலாம். தேவதையை கண்டேன் பாடல் காட்சியை போடும்போது கூட, அதிலிருக்கும் முத்தக்காட்சி இருக்காது. விவகாரமான காட்சி என்று இல்லை. அவர்களுக்கு பிடிக்காத எதையும் கட் செய்துவிடுவார்கள்.

சரவணா படத்தில் ஒரு காட்சியில் ‘டாக்டர் ராமதாஸ்கிட்ட சொல்லிடுவேன்’ என்பார் சிம்பு. அதைக்கூட கட் செய்துவிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் நித்தியானந்தா விஷயத்தில் இறங்கி அடித்திருக்கிறார்கள். பார்க்க முடிகிற விஷயங்களை மட்டும் தான் போடுகிறோம் என்று ஒரு டிஸ்கி வேறு. என்ன நியூஸ் சொல்கிறார்கள் என்பதை ஹாலில் உட்கார்ந்து டிவியில் கேட்கமுடியாத அளவுக்கு காட்சிகள்.

---

சன் டிவியில் நேற்று இரவு என்றால், இன்று இந்தியா முழுக்க.

பெங்களூரில் சலூன், மெடிக்கல் ஷாப், ஹோட்டல் என்று எல்லா இடங்களில் உள்ள டிவிக்களிலும் நியூஸ் சேனல்கள் ஓடிக்கொண்டிருந்தது. எல்லாவற்றிலும், நித்தி-ரஞ்சி சல்சா.

பப்ளிக்கா எல்லா இடங்களிலும், படுக்கையறை காட்சியை போட்டுக்கொண்டு இருந்தது அசிங்கம்.

---

நித்தியானந்தாவின் பேமஸ் கட்டுரை தலைப்பை, இன்று பதிவர்கள் பதிவு தலைப்பாக பயன்படுத்தியிருந்தது செம காமெடி.

கதவை திற! ரஞ்சிதா வரட்டும்!
கதவைத் திற காமிரா உள்ளே வரட்டும்
கதவைத் திற கட்டழகி வரட்டும்
கதவைத் திற காமிரா வரும்

---

நித்தியாந்தாவின் கட்டுரைகளை போட்டு கல்லா கட்டிய குமுதம் இப்போது என்ன செய்கிறது?

இதோ!



இங்கு யாருக்கும் வெட்கமில்லை.

.

14 comments:

Muruganantham Durairaj said...

//இங்கு யாருக்கும் வெட்கமில்லை//

Nice. Ending saying many things in single line.

Anonymous said...

i like your writing style, it's just that you are not in lime light, like Charu, Lucky, Cable

Sukumar said...

குமுதத்திற்கு வெக்கம் மானம் சூடு சொரணை எதுவுமே இல்லை போல இருக்கு தல

sampath said...

நம்மை "கதவை திற காற்று வரட்டும்" என்றார். அவர் மட்டும் கதவை மூடிவிட்டார் . "மூடு வந்து விட்டது ".
இது போன்ற விவகாரங்களில் மாட்டும் முதல் நபர் இவர் அல்ல . கடைசி நபரும் இவராக இருக்கப்போவதில்லை.

இதிலும் " the best is yet to come"

சித்து said...

//இங்கு யாருக்கும் வெட்கமில்லை//

சரியா சொன்னீங்க சார், இங்கே சில பதிவர்கள் ஏன் Light Off பண்ணீட்டாங்க மொத்த படத்தையும் போடணும்னு கேட்டு வெட்கமே இல்லாம பதிவிட்றாங்க. என்னத்த சொல்றது?? அவன் பண்ணது எவ்வளவு அசிங்கமோ அதே மாதிரி இதுவும் அசிங்கம் தானே??

தகனமேடை said...

சந்நியாசம் என்ற பெயரில் ஒரு மனிதன் வியாரம் செய்தான். அரசியல்வாதிகள் அரசியலைவைத்து வியாபாரம் செய்கிறார்கள். அவ்வளவு தான்.

சந்நியாசத்திற்கு அவமரியாதை செய்ததாகக் கருதி மக்கள் இதை பெரிதுபடுத்தினால் அரசியல்வாதிகள் செய்வதை மட்டும் ஏன் பெரிதுபடுத்தாமல் இருக்கிறார்கள்?

இந்திய சட்டப்பட்டி ஒருவனுக்கு ஒருமனைவி மட்டும் தான் இருக்கவேண்டும். ஆனால் இந்த சட்டங்களைக் காப்பாற்றி மதித்து நடக்கவேண்டியவர்கள் அதை கடைபிடிக்கவில்லையென்றால் அதையும் இதுபோல வீடியோகாட்சியில் காட்டவேண்டும்.

சந்நியாசிக்கு எப்படி சந்நியாச நெறிமுறைகள் அவசியமோ அதுபோல அரசியல் தலைவர்களுக்கு சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழும் நெறிமுறை அவசியம்.

In South India, more the merrier
2 May 2006
Times of India News
http://timesofindia.indiatimes.com/arti ... page-1.cms

HYDERABAD/CHENNAI/BANGALORE: That engineer K Suryanarayana had two wives became public only after his murder in Afghanistan, but the revelation isn't surprising in Andhra Pradesh, indeed in most of south India.

In Tamil Nadu, bigamy is pretty much institutionalised and even has a name - Chinna veedu, which translates as 'small house' or second home. It is an age-old tradition surviving to this day despite its illegality.

When DMK was in power in the state, security agencies had a tough time providing security to two houses for many ministers, as each of them had two wives.

Whether it was the late M G Ramachandran, or M Karunanidhi, they have all had it, and flaunted it. Karunanidhi has married at least three women, the first of whom is dead.

The DMK chief (present CM) now divides his time in the houses of both wives - spending mornings at the Gopalapuram residence with Dayaluammal while moving to the house of his other wife, Rajathiammal, at CIT Nagar in Chennai in the afternoons.


Another towering Tamil actor, Gemini Ganesan, married five times while his first wife was alive. The Chinna veedu concept is fairly common in Krishnagiri and Salem districts of TN, where males believe in more the merrier.

At least one top Union minister from Tamil Nadu is known to have two wives and so does a senior DMK official, who married his daughter's classmate.

In Andhra, bigamy doesn't have the traditional sanction it enjoys in TN, but the practice is fairly widespread among the powerful and even a status symbol.

ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது. இந்திய மக்கள் கடைந்தெடுத்த முட்டாள்கள். சுயசிந்தனையை இழந்துவிட்டார்கள். அவ்வளவுதான்.

Naresh Kumar said...

அருமையா சொன்னீங்க!!!

விலைவாசி பிரச்சனை, பெட்ரோ, டீசல் விலை, மாணவர் கலவரம் இவை எல்லாவர்றையும் விட யாரோ ரெண்டு பேர். தனிய படுத்துகிட்டு இருந்ததுதான் நமக்கு மிக முக்கியமா போச்சுன்னா, நம்மளை ஒழிக்க தனியா வேற யாரும் வர வேணும்!!!

சரவணகுமரன் said...

நன்றி முருகானந்தம் துரைராஜ்

சரவணகுமரன் said...

ஆஹ்ஹா...

புகழ்ச்சிக்கு மயங்காதவன் மனுசனே இல்லை’ன்னு சும்மாவா சொன்னாங்க!!!

சரவணகுமரன் said...

கரக்ட் சுகுமார்

சரவணகுமரன் said...

ஆமாம் சம்பத்

சரவணகுமரன் said...

விடுங்க சித்து...

சரவணகுமரன் said...

அழகிய சித்தன், எவ்ளோ பெரிய பின்னூட்டம்...

சரவணகுமரன் said...

நன்றி நரேஷ்