Monday, June 8, 2009

என்னது? உங்க மனைவிக்கு கல்கத்தாவா?

பேசும்போது கவனமா பேசுனாலே, பல சங்கடங்களை, சண்டைகளை தவிர்க்கலாம். பல பெரிய பிரச்சினைக்களுக்கு காரணம், நாக்குல சனின்னு சொல்லுவாங்க. ஒரு பேச்சாற்றல் வகுப்பில் சொன்னது. ஒருவர் ஒரு கேள்வியை நம்மிடம் கேட்கும் போது, நம் மூளை அதற்காக திருப்பி கூற ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களை யோசித்து, நமது நாக்குக்கு அனுப்பிவிடுமாம். நாம் முந்திரிகொட்டையாக இருந்தால், முதல் பதிலை டக்கென்று கூறி விடுவோம். அப்படி இல்லாமல், கொஞ்சம் சூது வாது தெரிஞ்ச ஆளா இருந்தால், அந்த பதில்களில் பெஸ்ட்ட தேர்ந்தெடுத்து கூறுவோம். எவ்ளோ பதில்கள யோசிக்கறோமோ, அவ்வளவு அறிவாளி. எந்தளவுக்கு பெஸ்ட் பதில தேர்ந்தெடுக்கோமோ, அவ்வளவு புத்திசாலி.

ஆனா, கீழே வருற கதையில இருக்குற ஹீரோ இதுல விதிவிலக்கு. இவ்ளோ ஸ்பீடா யோசிச்சு பேச முடியுமா? அப்படி யாராச்சும் இருந்தா, பேசிட்டே இருக்கலாம். கதை மின்னஞ்சலில் வந்தது. இனி இத சொல்ல போறது இல்ல.

----

நம்மூர்ல இருக்குற நீல்கிரிஸ், புட் வேர்ல்ட், மோர், பிக் பஜார் இது போல ஒரு சூப்பர் மார்க்கெட். அதுல நம்மாளு சேல்ஸ் சர்வீஸ் பாய் வேலை பார்க்குறான். ஒரு நாள், ஒரு கஸ்டமர் வந்து இருக்குற சீனி பாக்கெட்ட எல்லாம் பார்க்குறாரு. அவருக்கு தேவை, அரை கிலோ சீனி. ஆனா, இருக்குறது எல்லாம் ஒரு கிலோ பாக்கெட்டுகள்.

“தம்பி, அரை கிலோ எங்க இருக்குது?”

நம்மாளும் பார்க்குறான். எங்கயும் இல்லை.

“ஸ்டாக் இல்லை, சார்”

“வேணுமே. கொஞ்சம் பாருப்பா...” அடம் பிடிக்குறாரு.

வேறு வழியில்லாமல், ”இல்லையே சார். நான் வேணும்ன்னா மேனேஜர்கிட்ட கேட்குறேன்”

மேனேஜர் ரூமுக்கு போகிறான்.

மேனேஜர் நல்ல பிரண்ட்லி டைப். அவர் கிட்ட, “சார், ஒரு சாவுகிராக்கி காலையிலேயே வந்து அரை கிலோ சீனி தான் வேணும்ன்னு கேட்டு அடம் பிடிக்குறான்.”

சொல்லிட்டு திரும்பி பார்க்க, அந்த கஸ்டமர் பின்னாடி நிற்குறாரு.

பையன் பார்த்துட்டு, நிலைமையை சமாளிக்க, அப்படியே தொடர்ந்து சொல்றான், “இந்த சாருக்கு இன்னொரு அரை கிலோ வேணுமாம்” (எப்படி?)

உடனே, மேனேஜர் அவருக்கே உரிய திறமையோட(!), பிஸினஸை முடிச்சி கஸ்டமரை அனுப்புறாரு.

அனுப்பிட்டு, பையனை பாராட்டுறாரு. “தம்பி, ஒவரா பேசி நீயும் சிக்கல்ல மாட்டி, என்னையும் மாட்டி விட்டுடுவேன்னு நினைச்சேன். சூப்பரா பேசி சமாளிச்சுட்டே. இப்படித்தான் இருக்கணும். நல்ல சமயோசித புத்தி உனக்கு. கீப் இட் அப். எந்த ஊரு உனக்கு?”

நம்மாளு, “கல்கத்தா, சார்...”.

“ஓ! அப்படியா? அங்க இருந்து எதுக்கு இங்க வந்த?”

”பிடிக்கலை. அந்த ஊரு முழுக்க வெறும் விபச்சாரிகளும், புட்பால் ப்ளேயர்ஸும் தான்.”

குனிந்து கொண்ட மேனேஜர், “என் மனைவிக்கும் கல்கத்தா தான்”. சொல்லிவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தார்.

“அவுங்க எந்த டீம்ல சார் விளையாடினாங்க?”

10 comments:

இராகவன் நைஜிரியா said...

சமயோசிதம்... என்பது இது தானோ?

வாயுள்ள பிளை பிழைச்சுக்கும்...

ச.பிரேம்குமார் said...

ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி

? said...

Super!

பாசகி said...

class

சரவணகுமரன் said...

வாங்க இராகவன்

சரவணகுமரன் said...

நன்றி பிரேம்குமார்

சரவணகுமரன் said...

நன்றி நந்தவனத்தான்

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி பாசகி

சித்து said...

ரொம்ப நல்லா இருக்கு, செம ஷார்ப் போல அந்த பையன்

சரவணகுமரன் said...

ஆமாங்க சித்து