Sunday, April 25, 2010

இமயமும் சிகரமும் ரெட்டச்சுழி

படத்தின் பெயரே “இமயமும் சிகரமும் ரெட்டச்சுழி”. ஏன்? ஏதும் டைட்டில் ரிசர்வேஷன் பிரச்சினையோ? எது எப்படியோ, இந்த படத்தின் ரிசல்டை பார்த்து, ‘ரெட்டச்சுழி’ என்று இனியும் பெயர் வைக்கமாட்டார்கள்.



ஷங்கர் சீப்பாக படமெடுத்தாலும், மேக்கிங்கில் ஒரு தரம் இருக்கும். இதில் அது டோட்டலி மிஸ்ஸிங். டிவி டிராமா பார்க்கும் எபெக்ட். டிவி டிராமாக்களில் கூட தற்சமயம் லாஜிக், யதார்த்தம் போன்றவை பார்க்கிறார்கள். இமயம்+சிகரம் என்பதற்காகவே ஷங்கர் ஒத்துக்கொண்டார் போலும்.

பாலசந்தரும், பாரதிராஜாவும் தங்கள் படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு நடிப்பு சொல்லிக்கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் நடிப்பதும், அதுவும் இணைந்து நடிப்பதும் எப்படி இருக்கும் என்று ஒரு எதிர்பார்ப்பு படத்தின் மீது இருந்தது.

பாலசந்தரை விட பாரதிராஜா நடிப்பில் கலக்கியிருக்கிறார். கிராமத்து பெரிய மனுஷனை கண் முன் நிறுத்துகிறார். கை வச்ச பனியன், பட்டாபட்டி மேல மடிச்சுவிட்ட வேட்டி, சரிந்து விழும் துண்டு என கிராமத்து யதார்த்தம். இதற்கு நேர் எதிராக பாலசந்தரின் மேக்கப். அந்த ஒட்டு மீசை, ஒரு சோறு.

பாரதிராஜாவுக்கு எத்தனை வயதானாலும், குரலில் அந்த ‘கணீர்’ போகவில்லை. நடிப்பில் என்னமா உணர்ச்சியைக் கொட்டுகிறார்? அதே சமயம், இன்னொரு பக்கம் காமெடியிலும் களைக்கட்டுகிறார். திரை உலகினர் இவரைப் பார்த்து டைரக்‌ஷன் மட்டுமல்ல, நடிப்பும் கற்றுக்கொள்ளலாம். பாரதிராஜா இன்னும் நிறைய நடிக்கணும். நான் பார்க்கணும்.

எனக்கு படத்தில் நல்லவிதமாக சொல்வதற்கு, பாரதிராஜாவை தவிர வேறெதுவுமில்லை.

அஞ்சலி... ம்ம்ம்... செம...!!! ‘அங்காடித்தெரு’வில் தங்கையுடன் பேசும் மாடுலேஷனுடனே இதில் பசங்களுடன் பேசுகிறார்.

கருணாஸ் அறிமுகமானவுடன் அவர்தான் ஹீரோவா? என அதிர்ச்சியுடன் தியேட்டர் சலசலத்தது. மக்கள் ரொம்ப நொந்துபோய் படம் பார்த்தார்கள். நடுவில் கரண்ட் போக, ‘ஹைய்யா’ என சந்தோஷக்குரல். ஒருவர் அவருடைய மொபைலில் ‘அபூர்வ சகோதரர்கள்’ சோக வயலின் இசை போட, அனைவரும் அவரவர் நிலையை எண்ணி சிரித்துக்கொண்டார்கள். ஏதோ அந்த பசங்க அவ்வப்போது அடிக்கும் ஜோக்குகளினால், எழுந்து போகாமல் கடைசிவரை உட்கார்ந்து பார்த்தது கூட்டம். (நெளிந்துக்கொண்டு தான்) அதில் மட்டும் தான் இயக்குனருக்கு வெற்றி.

மட்டமான தியேட்டர். நீண்ட இடைவெளிக்கு பிலிம் ப்ரொஜக்‌ஷனில் படம் பார்த்தேன். ரொம்ப டல்லாக இருந்தது. தியேட்டரில் சவுண்ட் சரியில்லையா, இல்லை படத்தின் சவுண்ட் ரெகார்டிங்கே அப்படித்தானா? என்று தெரியவில்லை. மோசம். திருட்டு டிவிடியில் பார்த்தது போன்ற உணர்வு.

ஒரு படத்தில் எவ்வளவு பெரிய ஆட்கள் பங்கு இருந்தாலும், அது வெற்றிக்கு உத்திரவாதமில்லை என்பதற்கு இது இன்னுமொரு உதாரணம். தமிழ் சினிமாவின் மூன்று சிறந்த இயக்குனர்கள் இந்த கதையை, திரைக்கதையைக் கேட்டு தங்கள் உழைப்பை செலவழித்திருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமே.

.

2 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

padam oothtikichaa?

சரவணகுமரன் said...

ரமேஷ், அத எப்படி என் வாயால சொல்லுவேன்?