Saturday, July 25, 2009

கலாமை சோதனையிட்டது தப்பா?

கலாமை அமெரிக்க விமான நிறுவனம் அவமரியாதை செய்துவிட்டது. மன்னிப்பு தெரிவிக்கவில்லை. பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் பிரச்சினை. விமான நிறுவனம் மன்னிப்பு. பிறகு இல்லையென்று இந்த வாரம் செய்திதாளில் தினமும் வந்த செய்தி இது.

இதில் கலாம் என்ற மனிதரை விட்டுவிடலாம். ஒரு முன்னாள் ஜனாதிபதியை சோதனை செய்யலாமா வேண்டாமா? என்பதை மட்டும் பார்க்கலாம். முன்னாள் மட்டுமில்லை, இந்நாள் ஜனாதிபதியையும், மற்ற குடிமகன்கள் என்ன சோதனைக்களுக்கு உட்படுத்தபடுகிறார்களே, அத்தனைக்கும் உட்படுத்த வேண்டும். அவரும் குடிமகன் தானே? முதல் குடிமகன்.

தவிர, சோதனை செய்வதை எப்படி அவமரியாதை என்ன எண்ணலாம்? நாட்டில் எல்லோரையும் தான் சோதனை செய்கிறார்கள். அப்ப, நாமெல்லாம் தினமும் கேவலப்படுத்தப்பட்டு கொண்டு தான் இருக்கிறோமா? நம்ம மேல சந்தேகப்படுறாங்க. எனக்கு மரியாதை இல்லைன்னு நினைச்சா, பிறகு பாதுகாப்பில் தான் குறை ஏற்படும். பாதுகாப்பிற்கு என்று சில சோதனைகளை வரைமுறை செய்துவிட்டால், அனைவரையும் அதில் உட்படுத்தவேண்டும்.

பெரிய பதவியில் இருப்பவர்கள் தவறு செய்ய மாட்டார்களா? ஒருமுறை ஒரு எம்.பி. லைசன்ஸ் இல்லாமல் துப்பாக்கி கொண்டு சென்றார் என்று செய்தி வந்தது. இன்னொரு எம்.பி. தனது மனைவியின் பாஸ்போர்ட்டில் இன்னொரு பெண்ணை வெளிநாடு அழைத்து சென்று மாட்டி கொண்டார். தங்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளை துஷ்பிரயோகம் செய்பவர்கள் இங்கே இருக்கிறார்கள்.

இவர்கள் தவறு செய்பவர்களா? என்று எண்ணாமல், அனைவரும் சமம் என்னும் ரீதியிலாவது இந்த சோதனைகள் அவசியம். சில நிறுவனங்களில் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான அனுமதிகள் உண்டு. நிறுவன தலைவர் உட்பட. எது கொண்டு செல்லலாம்? எது கொண்டு செல்ல கூடாது? என்று. இது வரவேற்க்கபட வேண்டியது தானே?

இப்பொழுது கலாம் என்ற மனிதர் சம்பந்தபட்டதால், மக்கள் ஆதரவோடு அரசியல்வாதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதில் அரசியல்வாதிகள், ஆதாயம் தேட வாய்ப்புள்ளது. அடிபட போவது, சோதனை செய்யும் பணியாளர்களின் கடமையுணர்ச்சி. எங்கே, இவரை சோதனையிட்டால் பிரச்சினை ஆகுமோ? என்று யோசிக்கும் நிலை வரும். அது நல்லதற்கில்லை.

முதலில் பாதுக்காப்புக்காக செய்யப்படும் இந்த சோதனைகளில் பாரபட்சம் கூடாது. அதேப்போல், சோதனையிடுவதை கௌரவ குறைவாக எடுத்துக்கொள்ள கூடாது. இது பற்றி கலாமிடம் கருத்து கேட்டாலே, நாட்டின் பாதுகாப்பு பற்றி அக்கறை உள்ளவராக, இதற்கு ஆதரவு தெரிவிப்பார்.

முன்னாள் ஜனாதிபதியை சோதனையிட தேவையில்லை என்பது நமது அரசாங்க ப்ரோட்டோக்கால். முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும், சோதனையிட வேண்டும் என்பது அமெரிக்க விமான நிறுவனத்தின் பாலிஸி. இப்போது ஒரு கேள்வி? இந்திய விமான நிறுவனங்கள் - அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியை சோதனையிடுமா, இல்லையா? இதில் தெரிந்துவிடும் லட்சணம்.

மீடியாக்களை சொல்ல வேண்டும். சோதனையிட்டாலும் கூச்சல். சரியாக சோதனையிடாமல் பிளைட் கடத்தப்பட்டாலும் கூச்சல்.

27 comments:

சம்பத் said...

நல்ல சொல்லிருக்கிங்க நண்பா....வழி மொழிகிறேன்....

Raja said...

முன்னால் ஜனாதிபதி திரு.அப்துல் கலாம் மீது சற்று வருத்தம். இந்தப் பிரச்சனையின் ஆரம்பத்திலேயே, அவராக முன்வந்து 'இதில் தவறேதுமில்லை, இதனால் எனக்கு எந்த வருத்தமுமில்லை' என்று சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் 'இதுவரை யாரும் என்னிடம் நேரில் மன்னிப்பு கேட்கவில்லை' என்று சொல்லி, அவரை சோதனை செய்தது அவருக்குப் பிடிக்கவில்லை என்று மறைமுகமாக வெளிப்படுத்தி விட்டார்.

Anonymous said...

ஐயா!

பொதுவாக ‘புரோட்டாகால்’ என்ற விதிமுறைகள் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் பின்பற்றப்படும். நீங்கள் ஒரு பேருந்தில் ஏறி அலுவலகம் செல்லலாம். கலைஞர் அவ்வாறு செல்ல முடியாது. அது புரிகிறதா உங்களுக்கு?

கலாம் மட்டுமல்ல. டிப்ளமாட்டிக்ஸ் எல்லாருக்கும் தனி பாஸ்போர்டு உண்டு. தெரியுமா உங்களுக்கு?

டிப்ளமாட்டிக்ஸ் துப்பாக்கி தூக்கி செல்லலாம் என்றெல்லாம் அனுமதி கிடையாது. அவர்கள் மெட்டல் டிடெக்டர்கள் வழியாக செல்லவேண்டும். அவர்களுடைய பெட்டி படுக்கைகள் சோதனை செய்யப்படும். ஆனால் இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்று தெரியாமலே வேகவேகமாக எழுதிவிட்டீர்கள் போலிருக்கிறது. Frisking என்று சொல்லப்படும் உடல் சோதனை நடத்தப்பட்டதுதான் பிரச்சினையே. இந்தியாவின் அரசியல் தலைவர்கள் Frisking செய்யப்படமாட்டார்கள். அதுவும் முன்னாள் ஜனாதிபதி வேறு. வெளிநாட்டிலேயே செய்ய மாட்டார்கள். முன்பு ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்பு மந்திரியாக இருந்தபோது அமெரிக்காவில் அவரை Frisking செய்தார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அவர்கள் இடத்தில் இந்திய புரோட்டாகால் பின்பற்றப்படவில்லை என்றால் சரி. இந்திய மண்ணில்? அதுதான் பிரச்சினையே. தயவுசெய்து என்ன பிரச்சினை என்று தெரிந்து கொண்டு கருத்தைக் கூறுங்கள்.

சித்து said...

திரு.அப்துல் கலாமை சோதனை செய்தது, அதுவும் கடைசி கட்டத்தில் விமானத்தில் ஏறும்பொழுது தனியே அழைத்து சென்று சோதனை செய்தது தான் தவறு. அது தான் இந்த பிரச்சனைக்கு காரணம். பிறகு எதற்க்கு Protocol, Diplomatic Passport??

சரவணகுமரன் said...

நன்றி சம்பத்

சரவணகுமரன் said...

ஆமாம் ராஜா

சரவணகுமரன் said...

அனானி, விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி. பெயர் போட்டு இருக்கலாமே?

//நீங்கள் ஒரு பேருந்தில் ஏறி அலுவலகம் செல்லலாம். கலைஞர் அவ்வாறு செல்ல முடியாது.//

ஏனென்றால் அதுவும் அவர்களின் பாதுகாப்பிற்கு தான்.

//கலாம் மட்டுமல்ல. டிப்ளமாட்டிக்ஸ் எல்லாருக்கும் தனி பாஸ்போர்டு உண்டு. தெரியுமா உங்களுக்கு?//

தெரியும். அதன் மேல்தான் எனக்கு தோன்றிய கேள்விகளை எழுப்பியுள்ளேன்.

//Frisking என்று சொல்லப்படும் உடல் சோதனை நடத்தப்பட்டதுதான் பிரச்சினையே. //

என்னங்க உடல் சோதனை? ஷூவை கழற்ற சொன்னார்கள். அதுவா? இது இருக்கும் விதிமுறையை மீற பட்ட செயல். ஆமாம். ஏன் இப்படி விதிமுறை? எல்லோரையும் சமமாக கருதி சோதனையிடலாமே? இதை எதற்கு கௌரவ குறைச்சலாக எடுத்து கொள்ள வேண்டும். எனக்கு தெரிந்து திரு.கலாம் அவர்கள் இதை பிரச்சினையாக எடுத்து கொள்ளவில்லை.

//அதுவும் முன்னாள் ஜனாதிபதி வேறு. வெளிநாட்டிலேயே செய்ய மாட்டார்கள். //

ஏன் செய்யமாட்டார்கள்? அங்கே அவர்கள் யாரை வேண்டுமானாலும் சோதனை செய்யலாம். சோதனை செய்யப்படும் முக்கியஸ்தரும், இதை கௌரவ குறைச்சலாக எடுத்து கொள்வது இல்லை. இங்கே கலாமும் எடுத்து கொள்ளவில்லை என்றே கருதுகிறேன்.

உ.தா. அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி அல்கோர் ஒவ்வொரு முறையும் விமானநிலையத்தில் சோதனையிடபடுகிறார். அவரும் இதை சீரியஸாக எடுத்து கொள்ளாமல், நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையானது என்று வரவேற்றுள்ளார்.

//தயவுசெய்து என்ன பிரச்சினை என்று தெரிந்து கொண்டு கருத்தைக் கூறுங்கள்.//

சரிங்க ஆபிஸர்.

ஒண்ணு சொல்றதுக்கு முன்னாடி யோசிச்சிக்கிட்டே இருந்தா, ‘இந்த கடையில் மீன்கள் விற்கப்படும்’ கதிதான். எனக்கு தோன்றியது நியாயமாக பட்டதால் எழுதிவிட்டேன்.

விரிவான பின்னூட்டத்திற்கு மீண்டும் நன்றி பாஸ்... :-)

சரவணகுமரன் said...

//பிறகு எதற்க்கு Protocol, Diplomatic Passport??//

ஆமாங்க சித்து... அதைதான் அரசியல்வாதிகள் பிரச்சினையாக்கிவிட்டார்கள். கவனிக்க, பிரச்சினையாக்கியது கலாம் இல்லை.

இதை பிரச்சினையாக்கி, இதில் இருந்து தப்பிக்க பார்க்கிறார்களா நம்மூர் அரசியல்வாதிகள் என்ற சந்தேகம் வருகிறது எனக்கு.

//அதுவும் கடைசி கட்டத்தில் விமானத்தில் ஏறும்பொழுது தனியே அழைத்து சென்று சோதனை செய்தது தான் தவறு.//

எனக்கு ஒரு சந்தேகமுங்க... விமான நிறுவன ஊழியர்களிடம் இருந்து கூட அவரை காப்பாற்ற முடியவில்லையா, அவருக்கு பாதுகாப்புக்கு சென்றவர்கள்?

joe vimal said...

நெத்தியடி பதிவு நண்பா யார இருந்தாலும் சோதனை செய்ய வேண்டும் என்பதே என் கருத்து .ஒபாமா முதல் குப்புசாமி வரை எல்லாரும் ஒன்றே இதுவே ஒரு சாதாரண முஸ்லிம் குடிமகன் தாடி வைத்து சென்றால் சோதிக்காமல் விட்டுவிடுவார்கள என்ன .எத்தனையோ பிசினஸ் மண்,ச்சிஎண்டிச்ட் எல்லாம் இந்த சோதனைக்கு உட்பட்டே செல்கின்றனர் .டிப்லோமட் தீவிரவாதி யாக மாறமுடியாத அல்லது தீவிரவாதிகள் பிறகும் போதே சொல்லி விட்டு பிரகின்றனரா என்னைய இது கமல்,ஆமிர் கான் மற்றும் எண்ணற்ற மனிதர்கள் இப்படி கூப்பாடு போடவில்லையே .அப்போ ஒருமுறை இவர்கள் பெரிய பதவியில் இருந்து விட்டால் பிறகு கடத்தல்,ஆயுதம் எது வேண்டுமானளுன் எடுத்து செல்லலாம் சோதனை செய்ய கூடாது .ஆனா ஊன சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்,நீதி அனைவர்க்கும் சமம் அது இது என்கிறீர்களே .

சரவணகுமரன் said...

நன்றி joe

Indian said...

Read this article.

...There is a difference between operating in the US and in India, and that is putting it mildly. A couple of years ago, when Sanjay Aggarwal was working as COO of Flight Options, a private jet service headquartered in Cleveland, US President Bill Clinton (after his term) was flying on one of their private jets.

He was accompanied by his wife Hillary and his security detail. The company’s policy was that all passengers should have valid photo identification cards. The pilot asked Clinton for his ID (driver’s licence), which he did not have. Hillary showed hers and asked that they be allowed to depart. The pilot refused. The couple was permitted to depart only after Aggarwal intervened. Later, says Aggarwal, the company wrote a letter to the Transportation Security Administration (TSA) for an exemption for ex-Presidents from showing their IDs when accompanied by their security detail. The request, he says, was gracefully declined by the TSA.

Compare that with India where the list of VIPs who can bypass security at airports is long and growing; where rules are rules for all except the rule makers; and where there are archaic and often inexplicable regulations, no matter which area of business you are in....

Indian said...

//பெரிய பதவியில் இருப்பவர்கள் தவறு செய்ய மாட்டார்களா? ஒருமுறை ஒரு எம்.பி. லைசன்ஸ் இல்லாமல் துப்பாக்கி கொண்டு சென்றார் என்று செய்தி வந்தது. இன்னொரு எம்.பி. தனது மனைவியின் பாஸ்போர்ட்டில் இன்னொரு பெண்ணை வெளிநாடு அழைத்து சென்று மாட்டி கொண்டார். தங்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளை துஷ்பிரயோகம் செய்பவர்கள் இங்கே இருக்கிறார்கள்.

இவர்கள் தவறு செய்பவர்களா? என்று எண்ணாமல், அனைவரும் சமம் என்னும் ரீதியிலாவது இந்த சோதனைகள் அவசியம். சில நிறுவனங்களில் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான அனுமதிகள் உண்டு. நிறுவன தலைவர் உட்பட. எது கொண்டு செல்லலாம்? எது கொண்டு செல்ல கூடாது? என்று. இது வரவேற்க்கபட வேண்டியது தானே?

இப்பொழுது கலாம் என்ற மனிதர் சம்பந்தபட்டதால், மக்கள் ஆதரவோடு அரசியல்வாதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதில் அரசியல்வாதிகள், ஆதாயம் தேட வாய்ப்புள்ளது. அடிபட போவது, சோதனை செய்யும் பணியாளர்களின் கடமையுணர்ச்சி. எங்கே, இவரை சோதனையிட்டால் பிரச்சினை ஆகுமோ? என்று யோசிக்கும் நிலை வரும். அது நல்லதற்கில்லை.
//

You are spot on. The politicians are playing to the gallery for two reasons; one to show that they are concerned (however outwardly) to Mr. Kalam and two to cover up their crimes.

One simple question that begs for an answer; why to rake up this issue two months after it happened? the govt knew the issue for two months and kept mum. Now, it was leaked somehow to media and as usual media is creating a hullabaloo over a non-issue.

ஜெகதீசன் said...

//
இந்திய விமான நிறுவனங்கள் - அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியை சோதனையிடுமா, இல்லையா? இதில் தெரிந்துவிடும் லட்சணம்.
//
ஹாஹாஹா!!!
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியின் முன்னாள் பிஏ வின் தூரச்துச் சொந்தக்காரர் வந்தால் கூட சோதனையிடமாட்டார்கள்.....
:)

நரேஷ் said...

விஷயத்தை படித்தவுடன் என் மனதில் தோன்றிய விஷயத்தை பதிவு செய்துள்ளீர்கள்....

சோதனை செய்ததையே அவமானப்படுத்தினார்கள் என்று சர்குலேஷனை உயர்த்த நினைத்த பத்திரிக்கைகள் (தொடர்ச்சியாக அதைத் தொடர்ந்து என்னமோ கேரளாவில் அவர் அவமானப் படுத்தப்பட்டார் என்று செய்திகள் வெளியிட்டார்கள்), ஆதாயம் தேடுகின்ற அரசியல்வாதிகள் இப்படி பல விஷயங்கள் கடுப்பையே உண்டு பண்ணின....

தேவையில்லாமல் சின்ன விஷயத்தை பெரிது படுத்துகின்றனர்...

சரவணகுமரன் said...

நன்றி Indian

சரவணகுமரன் said...

//அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியின் முன்னாள் பிஏ வின் தூரச்துச் சொந்தக்காரர் வந்தால் கூட சோதனையிடமாட்டார்கள்.....//

கண்டிப்பா... :-)

நன்றி ஜெகதீசன்

சரவணகுமரன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நரேஷ்

கோவி.கண்ணன் said...

மக்கள் பிரதி நிதிகளுக்கென்றே மரியாதை இருக்கிறது, அவர்களை மதிப்பது அவர்களை ஏற்றுக் கொண்ட மக்களை மதிப்பது போன்றது.

எல்லாரும் ஒன்று தான் என்றால் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி வாங்குவதும் கூட தவறு என்றாகிவிடும். வயது வேறுபாடு கூட தேவையற்றதாகிவிடும்.

என்ன தான் பெண்ணியம் பேசுபவர்கள் கூட தன் மனைவி தன்னை பொதுவில் 'ங்கள்' போட்டு மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

தனிமனிதன் அவர் யாராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டும், கூடவே மக்கள் பிரதிநிதிகள் சிறப்பாக மதிக்கப்பட வேண்டும் என்பது அவர்கள் அந்த நிலையை அடைய எடுத்துக் கொண்ட முயற்சியின் ஒரு அங்கீகாரம் தான்.

கலாமை சோதனை செய்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சரவணகுமரன் said...

//மக்கள் பிரதி நிதிகளுக்கென்றே மரியாதை இருக்கிறது, அவர்களை மதிப்பது அவர்களை ஏற்றுக் கொண்ட மக்களை மதிப்பது போன்றது.//

பிரதிநிதித்துவத்திற்கு ஏதும் காலக்கெடு கிடையாதா? ஒருமுறை பதவியில் இருந்தால், அவர்களுக்கு கடைசிவரை அதற்கான சலுகைகளை கொடுக்கவேண்டுமா?

//எல்லாரும் ஒன்று தான் என்றால் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி வாங்குவதும் கூட தவறு என்றாகிவிடும். //

மரியாதை கொடுப்பதென்பதும் சோதனை செய்வதும் வேறல்லவா? அப்படியென்றால், வயதானவர்கள் அனைவரையும் சோதனை செய்ய வேண்டாம் என்கிறீர்களா?

//தனிமனிதன் அவர் யாராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டும்//

அப்படின்னா, சோதனை என்பது மரியாதைக்குரிய செயல் இல்லை என்று சொல்கிறீர்கள். நாமெல்லாம் மரியாதை குறைவாகத்தான் நடத்தப்படுகிறோம் என்கிறீர்கள்?

//கலாமை சோதனை செய்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்//

கலாம் என்பதற்காகவா?

உங்கள் கருத்தினை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, கோவி. கண்ணன்

ராகவன் said...

//தனிமனிதன் அவர் யாராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டும்//

அப்படின்னா, சோதனை என்பது மரியாதைக்குரிய செயல் இல்லை என்று சொல்கிறீர்கள். நாமெல்லாம் மரியாதை குறைவாகத்தான் நடத்தப்படுகிறோம் என்கிறீர்கள்//

சூப்பர் பாயிண்ட்!

ISR Selvakumar said...

Frisking - சென்ற வாரம் மீடியாக்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தை. சம்பந்தப்பட்ட விமான நிறுவனம், (அமெரிக்க பிரபலங்கள் உட்பட) அனைவரையும் உடல் சோதனையிட்டுத்தான் பயணிக்க அனுமதிக்கிறார்கள் என்பதை நிரூபித்தால், இதில் நமது முன்னாள் ஜனாதிபதி அவமானப்படுத்தப்பட்டாரா? இல்லையா? என்பது தெரிந்துவிடும்.

இந்த விஷயத்தில் திரு.அப்துல்கலாம் அவர்களின் தெளிவில்லாத மௌனம் அவர் மனதால் காயம் பட்டிருக்கிறார் என்று எண்ணவைக்கிறது.

சரவணகுமரன் said...

நன்றி ராகவன்

சரவணகுமரன் said...

கருத்தினை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி செல்வக்குமார்

Anonymous said...

//சரிங்க ஆபிஸர்.

ஒண்ணு சொல்றதுக்கு முன்னாடி யோசிச்சிக்கிட்டே இருந்தா, ‘இந்த கடையில் மீன்கள் விற்கப்படும்’ கதிதான். எனக்கு தோன்றியது நியாயமாக பட்டதால் எழுதிவிட்டேன்.//

உங்களுக்கு இன்னமும் Protcol விதிமுறைகள் பற்றிப் புரியவில்லை என்றே தெரிகிறது. கலைஞர் பேருந்தில் பயனம் செய்ய முடியாததிற்கு பாதுகாப்பு மட்டும் காரணம்ல்ல. அவருடைய பணியும், அந்தப் பணியை சார்ந்து இருக்கும் மக்களும் ஒரு காரணம்.

அப்துல் கலாம் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதல்ல முக்கியம். பாதுகாப்பு சோதனைகள்ந்த அளவிற்கு சரியானபடி அமல்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதுதான் பிரச்சினையே. முடிவாக ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ஒரு பெரிய ப்ராசஸை நிறுவும்போது அதை அப்படியே வரிக்கு வரி தொடரவேண்டும். நீங்கள் எழுதக்கூடாது என்பதற்காக ‘யோசித்து எழுதுங்கள்’ என்று சொல்ல்வில்லை. செக்யூரிட்டி கேட்டகரிசேஷன் என்பது மிகவும் முக்கியம். புரோட்டாகால் மாற்றி இன்று அப்துல் கலாமை சோதனைகுட்படுத்தியவர்கள் நாளை அதே தவறால் வேறு ஒரு ‘சாதாரணரை’ சோதனைகுட்படுத்தாமல் விட்டுவிட்டால்? அதனால் ஏதும் தீங்கு ஏற்பட்டால்? இதுதான் கேள்வி.

மற்றபடி எல்லாரும் சமம் என்பது போன்ற ஐடியல் முறைகளை அவரவர் வீட்டிலேயே கடைபிடிப்பதில்லை என்பதுதான் உண்மை.

சரவணகுமரன் said...

அனானி நண்பரே, உங்களிடம் சில கேள்விகள். செக்யூரிட்டி கேட்டகரைசேஷன் ஏன் முக்கியம்? எல்லோரையும் ஒரே மாதிரியான சோதனைக்குட்படுத்தினால் என்னன்ன பாதிப்புகள் ஏற்படும்?

//கலைஞர் பேருந்தில் பயனம் செய்ய முடியாததிற்கு பாதுகாப்பு மட்டும் காரணம்ல்ல. அவருடைய பணியும், அந்தப் பணியை சார்ந்து இருக்கும் மக்களும் ஒரு காரணம்.//

மக்கள் அனைவருக்கும் உட்படுத்தப்படும் சோதனைகளை முக்கிய பிரமுகர்களுக்கும் செய்வதால், அவரது பணிக்கும், அந்த பணியை சார்ந்து இருக்கும் மக்களுக்கும், அவரது பாதுக்காப்புக்கும் என்னன்ன பாதிப்புகள் ஏற்படும்?

சரவணகுமரன் said...

//பாதுகாப்பு சோதனைகள்ந்த அளவிற்கு சரியானபடி அமல்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதுதான் பிரச்சினையே//

அனானி நண்பரே, சரியா இருக்குறதுல என்னங்க பிரச்சினை?

//புரோட்டாகால் மாற்றி இன்று அப்துல் கலாமை சோதனைகுட்படுத்தியவர்கள் நாளை அதே தவறால் வேறு ஒரு ‘சாதாரணரை’ சோதனைகுட்படுத்தாமல் விட்டுவிட்டால்? //

இது என்னங்க லாஜிக்? ஒருவன் தெரியாம நல்ல விஷயம் ஏதாவது பண்ணிட்டா, அவன்கிட்ட போயி ”நீ ஏன் தெரியாம நல்லது பண்ணின? நாளைக்கு இதே மாதிரி தெரியாம கெட்டது பண்ணினாலும் பண்ணிடுவ?”ன்னு சொல்ற மாதிரி இருக்குது.

//மற்றபடி எல்லாரும் சமம் என்பது போன்ற ஐடியல் முறைகளை அவரவர் வீட்டிலேயே கடைபிடிப்பதில்லை என்பதுதான் உண்மை.//

அது உண்மைதான்.

Anonymous said...

Wilburn, I don't think so?

Fondest regards
Bradford